ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
கிழக்கு தொல்பொருள் செயலணியில் இணைய தயார் - மருத்துவர் முரளி பகிரங்க அறிவிப்பு.! கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழ் புத்திஜீவிகள் இணையத் தயாரில்லை என கூறப்பட்ட நிலையில் தாம் இணைந்து செயற்பட தயராக இருப்பதாக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். தொல்பொருளியல் துறையை நான் சாராதவனாக இருந்த போதிலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் தொல்பொருளியல் துறை சாராத மகப்பேற்றியல் நிபுணர் கபில குணவர்தன உட்பட பலர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் சமுதாய மருத்துவ நிபுணராக கடமையாற்றிவரும் எனக்கு ஒரு துறை சார் நிபுணராக செயலணியில் கடமையாற்ற முழுமையான தகுதி இருக்கிறது. இதை விட நான் கட்சி அரசியலுக்கு அப்பால் பட்டவன் என்பதையும் 2015 யாழ் மருத்துவச் சங்கத்…
-
- 14 replies
- 1.3k views
-
-
’மட்டு. பல்கலைக்கழகத்தை மீட்பேன்’ - ஹிஸ்புல்லாஹ் (எச்.எம்.எம்.பர்ஸான்) கடந்த நாடாளுமன்ற தேர்தலை வெற்றிக்கொள்ள தன்னால் முடிந்த சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தாக தெரிவிக்கும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விரைவில் மட்டு. புனானையிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தை தெரிவித்தார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வில்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, அமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டிருந்தால் இருக்கின்ற மனோநிலையிலேயே தான் தற்போதும் இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் தான் தோல்வியை தழுவியதாக கருதவில்லை எனத் தெரிவித்த அவர், தன்னைப் பொறுத்தவ…
-
- 7 replies
- 707 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 174 தமிழர்களுக்கு என்ன நடந்தது? - இரா.துரைரத்தினம் கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்களும் செப்டம்பர் 23ஆம் திகதி 16பொதுமக்களும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற…
-
- 6 replies
- 725 views
-
-
புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள்: ஜனாதிபதி, பிரதமரிடம் மனோ கோரிக்கை September 5, 2020 புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்குமாறு தமுகூ தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இது தொடர்பில் இன்று காலை அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய சிங்கள நபர் கைது: கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என உளவுத்துறை தீவிர விசாரனை September 5, 2020 தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய இலங்கையை சேர்ந்த சிங்கள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் போதை பொருட்கள்,கடத்தல் தங்கம் அல்லது சட்ட விரோத ஊடுருவல் போன்ற சட்ட விரோத நடவடிக்கை நடைபெற உள்ளதாக ராமேஸ்வரம் கடலோர காவல் குழம ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலயடுத்து தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்ஆபோத…
-
- 0 replies
- 352 views
-
-
மசகு எண்ணை கப்பல் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை September 4, 2020 மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிகின்ற நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு இன்று(4) அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்தது. மேலும் இவ்வெச்சரிக்கை திருக்கோவில்இ தம்பிலுவில், உமிரி, பொத்துவில் ,கல்முனை,ஆலையடிவேம்பு ,அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்களை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே …
-
- 4 replies
- 802 views
-
-
(நா.தனுஜா) மஹிந்த ராஜபக்ஷ 1978 ஆம் ஆண்டில் எதிர்ப்பை வெளியிட்ட ஜே.ஆர்.ஜெயவர்தனவின் விரும்பத்தகாத கூறுகளைக்கொண்ட வலுவான நிறைவேற்றதிகாரப் பதவி, தற்போது கோத்தபாய ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்ற பெயரில் மீள அறிமுகம் செய்யப்படுகின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் தெரிவித்திருக்கிறார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகார…
-
- 1 reply
- 392 views
-
-
கட்டுவன் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் கடந்த மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்தவர். குழந்தைகள் நால்வரும் முழுமையான ஆரோக்கியத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை பராமரிப்பு பிரிவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அவர்களை வளர்ப்பதில் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகப் பெற்றோர் தெரிவித்தனர். அதனால் தமக்கு அரச உதவி வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து பெற்றோர் தெரிவிக்கையில், “நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதில் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து உதவிகளை பெறுவதற்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ வல்லுநர் சிவலிங்க…
-
- 0 replies
- 429 views
-
-
(நா.தனுஜா) அரசியலமைப்பின் 18 வது திருத்தத்திற்கு எதிரான 2010 செப்டெம்பரில் பாராளுமன்றத்தின் தன்னால் ஆற்றப்பட்ட உரையை மீள நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது அதே வரலாறு மீளத்திரும்பப்போகிறதா? என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார். அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழ…
-
- 1 reply
- 525 views
-
-
(செ.தேன்மொழி) 20 ஆவது அரசியலமைப்பு சீர் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியினால் ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, சர்வாதிகார செயற்பாடுகளை தடுப்பதற்காகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்பட்டது. இதனை நீக்குவதால் மீண்டும் அந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கும். தனி நபரொருவரிடத்தில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் கூறுவதைப…
-
- 0 replies
- 302 views
-
-
’உலகின் மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு ஏற்படலாம்’ இலங்கைக்குக் கிழக்கே சங்கமன்கந்தை பிரதேசத்திலிருந்து 38 கடல் மைல் தூரத்தில் தீப்பற்றிய கப்பல், இன்று (05) அதிகாலை 5 மணியளவில், கரையை 25 கடல்மைல் தூரம் அண்மித்துள்ளது. இது, இந்த வலயத்துக்குள் மாத்திரமல்ல, இந்த உலகத்திலேயே ஏற்படக்கூடிய மிகப்பெறிய சுற்றாடல் அழிவாகவே பார்க்க முடியுமென்றும் அந்தளவுக்கு இந்தப் பிரச்சினை உருவெடுத்துள்ளது என்றும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். http://www.tamilm…
-
- 3 replies
- 661 views
- 1 follower
-
-
பிரேமலால் ஜயசேகர குறித்த தீர்ப்பு திங்கட் கிழமை அறிவிப்பு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணியால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் கடந்த தினம் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே அவரது சட்டத்தரணியால் பாராளுமன…
-
- 0 replies
- 416 views
-
-
வயலுக்குள் செல்ல முயன்ற விவசாயிகளை அடித்து துரத்திய பிக்கு.! திருகோணமலை – குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏக்கர் காணிக்குள் செல்ல கிழக்கு தொல் பொருள் செயலணி உறுப்பினரான பிக்கு ஒருவரால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆத்திக்காடு, நீராவிக்கண்டல், பள்ளப்பாவங்கை, பட்டாணிபாதி, பாவலங் கண்டல், கந்தப்பன் வயல் ஆகிய வயல் காணிகள் புதை பொருள் சார்ந்த இடங்கள் என்பதாகக் கூறி இந்த முறை பெரும் போகச் செய்கைக்கு மேற்படி வயல்காரர் இனி இறங்கக்கூடாது. அப்படி இறங்கினால் அனைவரையும் சிறையில் அடைப்பேன் என்று அரிசிமலைப் பிக்கு கூட்டம் போட்டு விவசாயிகளை மிரட்டியுள்ளார். மிரட்டி…
-
- 7 replies
- 760 views
-
-
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழ், முஸ்லீம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் குறித்த ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், பொருத்தமான இருவரை சிபாரிசு செய்யுமாறு …
-
- 6 replies
- 689 views
-
-
20 ஆவது திருத்த சட்டமூலம்: உயர் நீதிமன்றத்தை நாடும் சஜித் தரப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “19 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒவ்வொரு சரத்திற்கும் திருத்தங்களை முன்வைத்தார். அதேபோன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் அவரைப்போ…
-
- 0 replies
- 270 views
-
-
விக்னேஸ்வரனுக்கு அங்கஜன் சவால். தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவேக தாம் தயாராக உள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அண்மையில் யாழ். மாவட்டத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன், சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்து வெளி…
-
- 0 replies
- 367 views
-
-
இரணைமடு விசாரணை அறிக்கையை மறைத்த பெருச்சாளிகள் யார்..? தெருவில் எறியப்பட்ட 340 கோடி, அதிகாரிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்.. 2018ம் ஆண்டு இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்வினால் வடிநிலப்பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அழிவுகளுக்கான காரணம் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பிரதம செயலரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாணத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் பெருக்கெடுத்த மையால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களும் பயிர்களும் அழிந்து நாசமாயின. உலகவங்கி…
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கையில் தனது இராணுவதளத்தை உருவாக்க சீனா முயற்சி- பென்டகன் September 4, 2020 இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது. சீனா வலுவான வெளிநாட்டு விநியோக தள உட்கட்டமைப்புகளை உருவாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் தொலைதூரங்களில் சீனா இராணுவத்தின் வல்லமையை வெளிப்படுத்துவதும் அதனை தக்கவைப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவித்துள்ளது. மியன்மார் தாய்லாந்து சிங்கப்பூர் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் சீனா தனது இராணுவஉட்கட்டமைப்புகளை உருவாக்க முயலக்கூடும் என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது முப்படைக்களுக்காக மேலதிக இராணுவவிநியோக உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்த…
-
- 37 replies
- 3.7k views
- 1 follower
-
-
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசாங்கத்துடன் இணைய முயற்சியா? அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பு திருத்தத்தின் போது எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவதற்கு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்களில் 13 பேர் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பிக்களை அரசாங்க பக்கத்திற்கு எடுப்பதில்லையென்று அரசாங்க தரப்பினர் உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகின்றது. ஆனால் பழனி திகாம்பரம் , இராதாகிருஷ்ணன் , மனோ கணேசன் ஆகியோர் ஆளும் தரப்புக்கு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல்களை ஆதாரம் காட்டி, சிங்கள ச…
-
- 0 replies
- 377 views
-
-
சாதாரண அரசியல்வாதிகளுக்கு, எழுந்து நிற்க.. வாய்ப்பு வழங்காமல் இருப்பது கொடுமை- ஹிருணிகா நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மனங்களில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அத்துடன் இன்று ஜனாதிபதி, கிராமப்பகுதிகளுக்கு சென்றால், கடவுள் வருகிறார் எனக் கூறும் நாடு இது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை ப…
-
- 0 replies
- 341 views
-
-
20 வது அரசியல் யாப்புத் திருத்த வரைவு தயார் – 19 இல் பாரிய மாற்றங்கள் இலங்கையின் அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவு தயார் செய்யப்பட்டு நீதியமைச்சினால், வர்த்தமானி மூலம் இன்று பொது அறிவிப்பிற்கு விடப்படுகிறது. இதில், 19 வது திருத்தத்திலுள்ள முக்கிய அம்சங்கள் பல மாற்றப்படுகின்றன என அறியப்படுகிறது. இவ் வரைவில் முன்மொழியப்பட்ட முக்கிய மாற்றங்கள்: அரசியலமைப்புச் சபை (Constitutional Council) அரசியலமைப்புச் சபை (Constitutional Council) பாராளுமன்றச் சபை (Parliamentary Council) எனப் பெயர் மாற்றப்படுகிறது. தற்போது இருக்கும் அரசியலமைப்புச் சபையில் 10 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரும் எதிர்க்கட்சித் …
-
- 2 replies
- 426 views
-
-
ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள…
-
- 15 replies
- 2k views
-
-
5 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய பிள்ளையான் September 3, 2020 சிவநேசத்துரை சந்திரக்காந்தன் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் இன்று காலை 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் வாக்குமூலம் வழங்கியன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி அவர் இன்று முற்பகல் 9.45 அளவில் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவ…
-
- 3 replies
- 599 views
-
-
19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியை கூட்டமைப்பு எதிர்க்கும்; சுமந்திரன் அறிவிப்பு September 3, 2020 ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்- “எமக்கு முன்பாக பாரிய சவால் உள்ளது. எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமென மார்தட்டினோமோ, அவர்கள் அதைவிட மோசமான விதத்தில், அதிக பலத்துடன…
-
- 4 replies
- 600 views
-
-
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது. குறித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் 19 ஆவது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. 19 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் புதிய அரசால் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. அதன் முதலாவது வரைபு தற்போது அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கேட்கப்பட்ட போது அதனை ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் …
-
- 2 replies
- 536 views
-