Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐங்கரநேசன் பதவி இழந்தது தமிழ்மண்ணுக்கே பெரும் பாதிப்பு – தீபச்செல்வன் வேதனை அண்மையில் வடமாகாண அரசில் நடந்த குழப்பங்கள் காரணமாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகினார். அதையொட்டி எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள முகநூல் பதிவில், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த ஐங்கரநேசன், முன்னெடுத்த சிறந்த திட்டங்களில் ஒன்று அம்மாச்சி உணவகம் – வடக்கின் பாரம்பரிய உணவகம். ஓராண்டுக்கு முன்னர் முதன் முதலாக முல்லைத்தீவில் அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டபோது எடுத்த படங்கள் இவை. முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றிய நினைவுகள். கார்த்திகைப் பூக்களைச் சூடியபடி கார்த்திகை மாத மரநடுகைத் திட்டத்தையும் முன்னெடுத்த ஐங்கரநேசன், சீரியதொரு சூழலியளானும் தமிழ்த் தேசியவாதியும்…

    • 0 replies
    • 414 views
  2. ஆறு புதிய கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92 கட்சிகளின் அனுமதி கோரியிருந்த நிலையிலேயே ஆறு கட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/21584

  3. எனக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவே... ஞானசாரரை நியமித்தேன் – ஜனாதிபதி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை அமைந்தமை தனக்கு ஆலோசனைகளை வழங்கட்டுவதற்காக மட்டுமே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயலணிக்கு ஞானசாரதேரரை நியமித்தமை நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த செயலணி தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தன்னால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு கட்சித்தலைவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தனது நண்பர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி கோரவேண்டிய நிலை ஏற்படும் என கூறிய…

    • 12 replies
    • 756 views
  4. இலங்கையின் பெற்றோலியம், நீர்வழங்கல், துறைமுக அதிகார சபை, மின்சார சபை ஊழியர் தொழிற் சங்கங்கள் இன்று சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை மீழஆரம்பித்தன. அரசாங்கத்தால் தமக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட 22% சம்பள உயர்வை தாம் நிராகரிப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். தாம் தற்போது சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். ஆனால் அவசர கால நிலைமையினை கருத்தில் கொண்டு ஆயுதப்படைகள் இந்த வேலைகளை செய்ய தயாராக இருப்பதாக இராணுவ பேச்சாளர் உதய நாணய கார தெரிவித்துள்ளார். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்கத்தின் தலைவர் நிஹால் லிய…

  5. கோத்தாபயவை கண்டிப்பாராம் - நாராயணசாமி 27 அக்டோபர் 2013 கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிடில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனக் கூறிய இலங்கைத் தூதர் கரியவசத்துக்கு மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்திய உள்விவகாரங்களில் தலையிட அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் காரைக்காலில் நேற்று (26.10.13) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் 'இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர் பிரச்னை தொடர்பாக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும் இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் விரிவாக பேசப்படும். இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப…

  6. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கை பற்றியது மட்டுமல்ல – பிரித்தானியா 03 நவம்பர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கை பற்றியது மட்டுமல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தை, முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளதாகவும் அவருக்கு ஆதரவாக பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் பங்கேற்க உள்ளதாகவும் சிரேஸ்ட அமைச்சர் ஹியூகோ செவர் (Hugo Swire) தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகள் தொடர்பிலும் அமர்வில் கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தங்க வெளிச்சத்தில் குளிப்பாட்டும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போத…

  7. நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு! தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் ஒருசிலர் உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், மற்றவர்கள் கனரக வாகனத்தை கொண்டு வந்து அள்ளிச் செல்வதாகவும், பல்வேறு இடங்களிலும் இவ்வாறு மணல் ஏற்றப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஒரு பாரிய த…

  8. மாவீரர் நாள்: அகதிகள் முகாமில் போலீசார் குவிப்பு மாவீரன் தினத்தை முன்னிட்டு மண்டபம் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர் 26. ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாளுக்கு மறுநாள், மாவீரன் தினத்தில் உரையாற்றுவார். இந்த ஆண்டு மாவீரன் தினத்தில் (இன்று) இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது, உலகெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், மாவீரர் தினத்தை கொண்டாடுகின்றனரா என்பதை கண்காணிக்க, கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமை யில் சிறப்பு குழு, மண்டபம் கேம்ப் பகுதிக்கு வந்துள்ளது. மேலும் அகதிகளுக்கென இயங்கும் எஸ்.எல்.ஆர். போலீச…

  9. இலங்­கைக்கு அனைத்து வகை­யிலும் ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் இலங்­கையின் வட பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கண்­ணி­வெ­டி­களை அகற்றும் பணி­க­ளுக்­காக ஜப்பான் மேலும் 91 மில்­லியன் ரூபாவை வழங்­கி­யுள்­ளது. போரில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களின் மீள்­கட்­டு­மா­னங்கள் மற்றும் மீள்­கு­டி­யேற்றம் போன்ற நட­வ­டிக்­கை­க­ளிலும் தற்­போ­தைய நல்­லி­ணக்க பொறி­மு­றை­களில் இலங்­கைக்கு அனைத்து வகை­யிலும் ஜப்பான் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கும் என இலங்­கைக்­கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­னுமா தெரி­வித்தார். இலங்­கையில் செயற்­படும் சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­ன­மான கண்­ணி­வெடி ஆலோ­சணை குழு­விற்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் வடக்கில் கண்­ணி­வெ­டி­களை அகற்­று­வ­…

  10. கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது . குறித்த நிகழ்வு மாலை 3 மணியளவில் அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்த்திடபத்தில் இடம்பெற்றது. குறிதத் நிகழ்வில் பிரதம விருதந்தினராக வடமாகாண முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான சி வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களிற்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. வடம…

  11. புலிகளை நினைவு கூருவது தண்டனைக்குரிய குற்றம் – மிரட்டுகிறது சிறிலங்கா அரசாங்கம் Posted by tamil24 on November 26th, 2013 06:53 AM | ஊடக சுதந்திரம் என்ற பெயரில், விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதோ நினைவு கூருவதோ, அவர்களின் பெருமைகளைப் புகழ்பாடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ, ஊக்குவிப்பதோ, நினைவு கொள்வதோ, சட்டவிராதமானது. இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த எச்சரிக்க…

    • 0 replies
    • 376 views
  12. குத்தகைக்கு மத்தளை விமான நிலையம் மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசு என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். மத்தளை விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 40 லட்சம் ரூபாய். அதற்கான செலவு 250 லட்சம் ரூபா. ஒரு நாளைக்கு 3 விமானங்களே பறக்கின்றன. ஒரு மாதத்துக்கு கடன் செலுத்துவதற்கு மாத்திரம் 3 ஆயிரம் லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. வருடத்துக்கு 360 கோடி ரூபா வீதம் …

  13. (இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் வருடம் நிச்சயம் முழு நாடும் உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும். அதனால் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது. நல்லாட்சி அரசாங்கத்திலும் சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட்டது. ஒரு தடவையில் இரசாயன உரம் தடை பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதனால் விவசாயத்துறை பாரிய சவாலை எதிர்க் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார மற்றும் துறைசார் நிபுணர்களின் எதிர்வு கூறலை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன்.…

  14. வடக்கு, கிழக்கு மக்களின் சுகாதாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை ! வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு சுகாதார வசதிகள் முறையாக கிடைக்கப்பெறுவதில்லை. அங்குள்ள வைத்தியர்கள் கஷ்ட பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறுவதுமில்லை. இதில் அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன. இவற்றுக்கெதிராக அரசாங்கம் துரிதமாக செயற்படாவிட்டால் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த சேவைப்புறக்கண…

  15. தமிழர் நில வளங்களைச் சூறையாட எடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளைத் தடுக்க மூத்த தமிழ் குடிமக்கள், தொழிலதிபர்கள், கல்விமான்கள், ஊடகத்துறையினர் முன்வர வேண்டும் என்று யாழ்.மாநகரசபை உறுப்பினர் றெமிடியஸ் அவசரமாய் வேண்டுகின்றார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45fT2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 498 views
  16. (பழுலுல்லாஹ் பர்ஹான்) காணாமல் போனோர் தொடர்பான தகவல்களைத் திரட்டி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கை கடந்த இரு வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டுதலுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போனோர் சம்மந்தமாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், தங்களுக்கு 112 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதென்றும் இது காத்தான்குடி மற்றும் காத்தான்குடியைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களில் காணாமல் போனோரின் முறைப்பாடுகள் மாத்திரம் என்றும் குறிப்பிட்ட…

  17. 20ஆம் திருத்­தத்தை எதிர்த்து 10 வழக்­கு­கள் தாக்­க­லா­கும் நாடா­ளு­மன்­றுக்கு திருத்­தம் வர முன்பே முடக்­கத் திட்­டம் நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வ­ரத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 20ஆவது திருத்­தச்­சட்ட வரை­வுக்கு எதி­ராக, உயர் நீதி­மன்­றத்­தில் 10 மனுக்­க­ளைத் தாக்­கல் செய்ய அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சிவில் அமைப்­பு­கள் திட்­ட­மிட்­டுள்­ளன. அனைத்து மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை ஒரே நாளில் நடத்­தும் வகை­யில் அர­ச­மைப்­பில் திருத்­தம் செய்­வ­தற்­கான 20ஆவது திருத்­தச்­சட்ட வரைவு முன்­வைக் கப்­பட்­டுள்­ளது. இதற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத் தில் மனுக்­க­ளைத் தாக்­கல் செய்­வ­தற்கு, பவ்­ரல் மற்­றும் கபே அமைப்­பு­கள் தயா…

  18. திடீரென இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட பாக்லே – தமிழ் தரப்புடனான கலந்துரையாடல் இறுதி நேரத்தில் இரத்து!! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு இறுதி நிமிடத்தில் இரத்தாகியுள்ளது. நேற்று நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் கோபால் பாக்லே திடீரென இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் இறுதி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் திட்டமிடப்பட்ட சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அவர் நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள…

  19. இன்­றைய கூட்­டத்தில் தெளி­வான தீர்­மா­னங்­களை எதிர்­பார்க்­கின்றோம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்கும் பிர­தான வழி­ந­டத்தல் குழு என்­பன தொடர்பில் தெளி­வான தீர்­மா­னங்­களை எதிர்­பார்க்­கிறோம் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார். பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு சில கட்­சிகள் தமது யோச­னை­களை இது­வரை முன்­வைக்­காமல் இருக்­கின்­றமை தொடர்­பாக எமக்கு பாரிய சந்­தேகம் எழு­கி­றது. எனவே இவை தொடர்பில் நாம் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்பி எமது சந்­தே­கங்­களை நிவர்த…

  20. Published by T. Saranya on 2022-01-21 15:12:54 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது சரத் வீரசேகர சிகிச்சைகளுக்காக நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார தரப்பினர் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று | Virakesari.lk

  21. ஈழத் தமிழர்களுக்கு எதிரானப் போரில் இலங்கை ராணுவப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத் தீர்ப்பளித்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஐரிஸ் தலைநகர் டப்ளினில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தப் போரில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், இனப் படுகொலை ஆகியன குறித்து விசாரணை செய்தது. இந்த விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர…

    • 3 replies
    • 692 views
  22. இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு தமிழ் மக்களின் வாக்குகளில் மோசடிகளை மேற்கொள்ள மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மற்றும் ஒரு நடவடிக்கையாக இன்று வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்ஹே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான பொலிஸ் மா அதிபரின் கடிதம் இன்று மாலை தமக்கு கிடைத்ததாக நிமால் லிவ்ஹே குறிப்பிட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இந்தநிலையில் இவர் நாளை காலை முதல் பொலிஸ் தலைமையகத்தின் கடமைகளை பொறுப்பேற்குமாறு பொலிஸ் மா அதிபரால் பணிக்கப்பட்டுள்ளார். எனினும் …

  23. ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­தா­விட்டால் பொரு­ளா­தா­ரத்­த­டையை தவிர்க்­க­மு­டி­யா­தி­ருக்கும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்­டத்­தொ­டரில் இலங்­கையின் மனித உரி­மைகள் விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வி­ருக்­கின்ற நிலையில் அதற்கு முன்­ப­தாக நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். தவறும் பட்­சத்தில் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கு­லக நாடு­களின் பொரு­ளா­தார தடையை எதிர்­கொண்­டே­யாக வேண்டும் என லங்கா சம­ச­மாஜ கட்­சியின் செய­லா­ளரும் சிரேஷ்ட அமைச்­ச­ரு­மான திஸ்ஸ வி­தா­ரண தெரி­வித்தார். கட்­சியின் 78ஆவது வரு­டாந்த கூட…

  24. கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில் எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இன்று (09) கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர் படகுகள் கொழும்பில் மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பூநகரியில் 8 இந்திய மீன்பிடி றோலர்கள் ஏலத்தில் | Virakesari.lk

    • 5 replies
    • 395 views
  25. ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. எவ்வாறெனினும், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சலுகை வழங்கியிருந்தது. எனினும், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு உலகத் தலைவர்கள் அண்மையில் இணக்கம் வெளியிட்டிருந்தனர். எனினும், மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரானுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.