ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.! "தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும். அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "சர்வதேச சமூகம் இன்று தமிழர்களின் பக்கமே நிற்கின்றது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றபடியால்தான் அது எங்கள் பக்கம் நிற்கின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திருகோணமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவி…
-
- 7 replies
- 774 views
-
-
நல்லூர் திருவிழாவுக்கான காளாஞ்சி கையளிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை, வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி (கலசம்) கையளிக்கும் நிகழ்வு இன்று (16) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. நல்லூர் ஆலயத்தில் இருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந் திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், ஆலய கணக்குபிள்ளையும் ஆலய பிரதம சிவச்சாரியரும் துணைக்குருவும் கலந்து…
-
- 0 replies
- 356 views
-
-
யாழ்ப்பாணத்த்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் ஒரே நாளில் மரணம் July 16, 2020 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்திலேயே இவர்கள் இருவரும் உயிரிழந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக ஒருவரும் மாரடைப்பால் மற்றவரும் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிடும் வேட்பாளர் அகஸ்தீன் மக்டொனால்ட் என்ற 58 வயதுடைய நபர் மாரடைப்பால் காலமானார். கடந்த 8ஆம் திகதி பூநகரியில் இடம்பெற்ற டிப்பருடனான விபத்தில் சிக்கிச் சிகிக்சை பெற்றுவந்த பிரியதர்சன் என்ற சுயேச்சைச்குழு 3 இல் போட்டியிடும் வேட்பாளர் ச…
-
- 0 replies
- 478 views
-
-
2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி ( சாரா) என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தகப்பட்டுள்ளன ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தகவலுக்கமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சாராவின் சிறிய தந்தை மற்றும் அம்பாறை உப கராஜின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் ஆகியோரைய…
-
- 1 reply
- 603 views
-
-
சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா தற்போது உலக நாடுகளை நிலைகுலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை மக்களும் கொரோனா பீதியில் உறைந்து போயுள்ளனர். கொரோனா தாக்கம் இலங்கையில் ஏற்பட்டதையடுத்து தற்போதுவரை 21 பேர் அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரச விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என்று அரச திணைக்களங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் கொரோனாவின் நிலவரம் என்ன? பொது மக்களின் கருத்து தொடர்பில் எமது இணையத்தளம் ஆராய்ந்தது. அதன் முழுமையான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139128?ref=home-imp-parsely
-
- 134 replies
- 11.7k views
-
-
கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/ஊரடங்குச்-சட்டம்-நீடிப்ப/
-
- 111 replies
- 10k views
-
-
கொழும்பு மறைமாவட்ட துணை பிஷப்பாக அருட்தந்தை ரஞ்சித் பிள்ளைநாயகம் போப்பாண்டவரால் தெரிவு கொழும்பு ஜூலை 13, 2020: இலங்கை கத்தோலிக்க சபை, கொழும்பு மறை மாவட்டத்தின் துணை பிஷப்பாக அருட் தந்தை ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை போப்பாண்டவர் நியமித்துள்ளதாக வத்திக்கன் செய்தி தெரிவித்துள்ளது. 53 வயதையுடைய மறை மாவட்ட அருட் தந்தை பிள்ளைநாயகம், கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் தலைமையின் கீழ் பணிபுரியவிருக்கும் மூன்றாவது துணை பிஷப்பாகுவார். இதற்கு முன்னர் 2011 இல் அருட்தந்தை மக்ஸ்வெல் சில்வாவும், அடுத்ததாக 2018 இல் அருட்தந்தை ஜே.டி. அந்தனி ஜயக்கொடியும் துணை பிஷப்புகளாக நியமிக்கப்பட…
-
- 4 replies
- 783 views
-
-
புளொட்டின் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு! ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அக்கழகத்தில் உயர்நீத்த வீரர்களின் வீரமக்கள் தினத்தின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (15) நாவற்குடாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய மு.ஞானப்பிரரகாசம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் உபதவிசாளரும் டெலோ அமைப்பின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம், புளொட் அமைப்பின் மட்டக்களப்பு செயற்பாட்டாளர்களான மண்மு…
-
- 1 reply
- 742 views
-
-
“ராஜபக்ஷக்களுக்கு அடிபணிந்து போகாமல் தேர்தலை உடனே ஒத்திவையுங்கள்” – சஜித் “கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்துக்குள் ஊடுருவி விட்டது என்பதை கொரோனாத் தடுப்புக்கான தேசிய மையத்தின் தலைவரான இராணுவத் தளபதியே ஒப்புக் கொண்டுள்ளார். கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் பணியாற்றுபவர்கள் விடுமுறையில் தங்கள் வீடுகளுக்குச் சென்றமையால் கொரோனா சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது. எனவே, எதிரணியின் கருத்துக்களை புறந்தள்ளியுள்ள அரசு, தேர்தல் ஆணைக்குழு, இராணுவத் தளபதி மற்றும் சுகாதார அமைச்சு கூறிய அறிவுரைகளையாவது கடைப்பிடித்து மக்களைக் காக்க முன்வர வேண்டும். கொரோனாத் தாக்கம் முடியும்வரை தேர்தலை பிற்போட வேண்டும்” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார…
-
- 0 replies
- 846 views
-
-
ஈஸ்டர் பயங்கரவாத எச்சரிக்கை கடிதம் 268 பிரபுக்களுக்கு அனுப்பப்பட்டது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் 268 பிரமுகர்களின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்கள் குறித்து தாக்குதலின் பின்னர் வெளிக்கொணர வேண்டாம் அறிவிக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அப்போது பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட பிரியலால் தசநாயக்க நேற்றைய (14) தினம் சாட்சி வழங்கிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, நீதிமன்ற பாதுகாப்ப பிரிவு, தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜன…
-
- 0 replies
- 555 views
-
-
ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் by : Yuganthini முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாக உள்ளனர். குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்கவால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவ்விடயம் தொடர்பான விசாரணைகளுக்காகவே ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். …
-
- 0 replies
- 430 views
-
-
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு! பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது கலாசாரங்களை முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது. ஒற்றையாட்சியில் நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும். எமது ஆட்சியில் விகாரை, கோயில், …
-
- 11 replies
- 2k views
-
-
கள்ள வாக்கு விவகாரம் – சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ? வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச பிரிய தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட, பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள வாக்குகள் போட்டது தொடர்பில், பேசியிருக்கிறார். இது தொடர்பில் எமக்கு முறைப்ப…
-
- 1 reply
- 816 views
-
-
பத்திரிகையாளர் சந்திப்பில் ஹூல் – மஹிந்த இடையே முரண்பாடு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய – தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹூல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. “வேட்பாளர்கள் செல்லும் வாகனங்களில், வேட்பாளர்களின் படங்கள் தவிர, வேட்பாளரின் தலைவரினதோ வேறு வேட்பாளர்களினதோ படங்களும் காட்சிப்படுத்த முடியாது” என ஹூல் தெரிவித்ததுடன், இந்த விதிமுறையை மீறி செயற்பட்ட வாகனம் ஒன்றும் மன்னாரில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசப்பிரிய, “வேட்பாளர்கள் தமது வாகனங்களில் தம் தலைவர்களின் படங்களை காட்சிப்படுத்த முடியும். இதுதொடர்…
-
- 2 replies
- 569 views
-
-
ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள் தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக…
-
- 6 replies
- 1.3k views
-
-
கடல் புலிகளுக்கு அதிநவீன படகுகளை வழங்க இணங்கினோம் என பசில் என்னிடம் தெரிவித்தார் - சரத் பொன்சேகா அதிரடி கருத்து (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டு இருந்த வேளையில் ராஜபக் ஷக்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.தமிழர்களின் வாக்குகளை நிறுத்தியதற்காக கடல் புலிகளுக்கு அதி நவீன படகுகள் வழங்கப்பட்டதாக பசில் ராஜபக் ஷ என்னிடம் கூறினார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று வத்தளை பலகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர…
-
- 4 replies
- 1k views
-
-
வடமாகாண கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழிக்கற்கை வகுப்புக்கான அறிவிப்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் பாடசாலைகள் அனைத்தும் 13-17 ஆம் திகதி வரை மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண மாணவர்களுக்கான இணையவழிக் கற்கைநெறிகளை வடமாகாண கல்வித் திணைக்களம் ஒருங்கிணைத்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தரம் 6-13 வரையான மாணவர்களுக்கான இணைய வழிக்கற்கை நெறிகள் இடம்பெற்று வருகின்றன. பாட நேரசூசி மற்றும் பாட அட்டவணைகளை, வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், முகப்புத்தகம் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முகப்புத்தகம், வைபர் குழுமம் மூலம் அறிந்து கொள்ள முடியும். …
-
- 0 replies
- 335 views
-
-
சுமந்திரனின் கருத்துக்கு வியாழேந்திரன் பதிலடி
-
- 0 replies
- 514 views
-
-
அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் கூறினார். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டுவரப்பட்…
-
- 0 replies
- 370 views
-
-
கிழக்கை சிங்கள பௌத்த மாநிலமாக அடையாளம் காட்டவே கிழக்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல்ல மேதானந்த தேரரின் கூற்று நிரூபித்துள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், https://newuthayan.com/கிழக்கை-பௌத்த-மாநிலமாக்க/
-
- 3 replies
- 748 views
-
-
இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்- சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் by : Yuganthini இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட அறிக்கையாளரினால், அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளுக்கான சர்வ…
-
- 3 replies
- 755 views
-
-
கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், சுமந்திரன் தனக்கும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். புத்தூரில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் ” தமிழ் தேசிய கூட்டமைப்புக்…
-
- 13 replies
- 1.3k views
-
-
அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ by : Jeyachandran Vithushan புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் கூறினார். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசி…
-
- 4 replies
- 1k views
-
-
பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த என்னை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுகின்றனர்- சசிகலா ரவிராஜ் வேதனை July 13, 2020 நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு என்பது குறித்து எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். அந்த ஒற்றுமை என்பது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் இரு…
-
- 2 replies
- 610 views
-
-
ஆட்சியை மாற்றியே சம்பூரை மீட்டோம் - இரா.சம்பந்தன் சம்பூர் நிலங்களை கடந்த அரசாங்கம் அனல் மின் நிலையம் என்ற போர்வையில் கபளீகரம் செய்திருந்த பொழுது எமது மக்கள் வழங்கிய ஒரு ஆணையின் அடிப்படையில் ஆட்சி மாற்றத்தை செய்தன் மூலம் சம்பூர் மண்ணை மீட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றைய தினம் 13ம் திகதி சம்பூரில் நடைபெற்ற த.தே.கூ. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தலைமை வேட்பாளர் உரையில் இவ்வாறு தெரிவித்தார். இக் கூட்டத்தில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும் வேட்பாளருமான க.குகதாசன் மற்றும் வேட்பாளர்களான கந்தசாமி ஜீவரூபன் செல்வராஜா பிரேமரதன் இரா.சச்சிதானந்தம,; சு…
-
- 3 replies
- 678 views
-