ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன ஒரு உண்மையான மற்றும் விரிவான தேசிய செயல்முறை மூலம் இடம்பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இவ்வாறு கூறியுள்ளார். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் குறித்து வெளியான வீடியோ, படங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மார்டின் நெசர்க்கி, ´நாங்கள் அந்த வீடியோ, படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது´ என்றார். அங்கு அவர் மேலும் இலங்க…
-
- 0 replies
- 538 views
-
-
இலங்கை குறித்த சிறப்பு நிகழ்வுகளை மனித உரிமைகள் பேரவை நடத்த வேண்டும்: ஜெனீவாவில் கோரிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை நடத்த வேண்டும், பன்னாட்டு குற்றவியல் மன்றத்த்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து, உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கவேண்டும். இராணுவ மயமாக்குவதையும் காலனியாக்குவதையும் நிறுத்தவேண்டும்” என்று ஜெனீவாவில் கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்ட…
-
- 2 replies
- 366 views
-
-
ஐ. நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு பங்கேற்கிறது. இலங்கைக்குழுவிலுள்ள பலர் ஏற்கனவே ஜெனீவா சென்றுள்ளதோடு, நேற்று சிலர் அங்கு பயணமானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சின் இரு உயரதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை மறுதினம் ஜெனீவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின.…
-
- 0 replies
- 329 views
-
-
சிகை அலங்காரம் எனும் போர்வையில் மாணவியரை பயன்படுத்தி விபசாரம் மட்டக்களப்பு நகரில் சிகை அலங்கார நிலையங்கள் என்ற பெயரில் மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு நகர் பகுதியில் சிகை அலங்கார நிலையங்கள் என்ற போர்வையில் சில இடங்களில் பாடசாலை மாணவிகளை பயன்படுத்தி விபசார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் பெற்றோர் மத்தியிலிருந்து கிடைத்த முறைப்பாட்டினையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்க…
-
- 3 replies
- 815 views
-
-
வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 1.7k views
-
-
யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் பெண் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் முயற்சி – பின்னணியில் யார்? 28 பெப்ரவரி 2013 யாழ்.பல்கலைக்கழக பொதுபட்டமளிப்பு விழாவில் பெண் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி மற்றும் அநாகரிக செயற்பாடுகள் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. இன்றைய தினம் பொதுப்பட்டமளிப்பு விழா இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வழமை போன்று செய்தி சேகரிப்பு பணிக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மீதே பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் சி;லர் தாக்குதல் முயற்சிகளை மேற்கொள்ள முற்பட்டுள்ளனர். அதிலும் முன்னணி பெண் ஊடகவியலாளர்கள் இருவரை இலக்கு வைத்தே குறித்த பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் தாக்க முற்பட்டுள்ளதுடன் அவர்களை ஆபாச வார்த்தைகள் மூலம் மிரட்டியுமுள்ளனர். தா…
-
- 0 replies
- 494 views
-
-
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : பாராளுமன்ற கோப் குழு பரிந்துரை : 55 பக்கங்களில் அறிக்கை வெளியீடு ; 15 பரிந்துரைகள் முன்வைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப்குழு) பரிந்துரை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறிகள் தொடர்பாக விசாரணைக…
-
- 0 replies
- 224 views
-
-
இலங்கை-இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வராதவாறு சதி : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வீரகேசரி நாளேடு 2/19/2009 8:01:06 AM - நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளும் நோக்குடன் 1987 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இல்லாதொழித்து விட்டன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலை முறையாக முன்னெடுத்துச் சென்றிருந்தால் இலங்கை இனப்பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணி சங்கர் ஐயரின் புத்தக வெளியீட்டு விழா புதுடில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி…
-
- 1 reply
- 804 views
-
-
டென்மார்க்கின் மனித நூலகம் (Human Library) சம்மாந்துறையில் அறிமுகம்; வாசகர்களாக பொதுமக்களுடன் பங்கு கொண்ட பல்கலை மாணவ சமூகம்! 2016-11-02 09:08:42 (காரைதீவு நிருபர் சகா) டென்மார்க்கில் உதயமான மனித நூலகம் (HUMAN LIBRARY) எனும் செயற்றிட்டம் சம்மாந்துறை அமீர்அலி பொது நூலகத்தில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஜேர்மனிய ஜி.ஐ. இசட் நிறுவனம் இலங்கை நூலகர்கள் சங்கத்துடன் இணைந்து இம் மனித நூலகத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதம நூலகர் எம்.எம்.றிபாயுடீனின் ஏற்பாட்டில் இணைப்பாளர் எஸ்.சுதர்சனின் முன்னிலை…
-
- 0 replies
- 329 views
-
-
"வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும் மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்" என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 532 views
-
-
யாழ்ப்பாண மாநகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களை நினைவுகூரும் முகமாக கார்த்திகை மாதம் தமிழ்மக்களின் உணர்வுபூர்வமான மாதமாகவும், இம்மாதத்தில் களியாட்ட நிகழ்வுகள் எதனையும் தமிழ் மக்கள் கொண்டாடாது தவிர்த்து வந்தனர். இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி ஹோலிப் பண்டிகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலர் தமது கவலையையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தத்தொடங்கினர். இதனால், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குசெய்து, ஹோலி களி…
-
- 14 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.8k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் நேற்று முன்நாளும் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 226 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 537 views
-
-
-
- 12 replies
- 755 views
-
-
மட்டு முகத்துவார ஆற்றுவாயினை வெட்டுவது தொடர்பான கலந்துரையாடல் 30 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவகால மழை காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ள நிலைமையில் விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட 3212 ஏக்கர் தற்போது நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் விவசாய மக்கள் முகத்துவார ஆற்றுவாயினை வெட்டி நீரினை வெளியேற்றுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இக் கோரிக்கையினை கருத்திற்கொண்ட அரச அதிபர் அவசர கூட்டம் ஒன்றினை இன்று (09) கூட்டினார். இது தொடர்பாக சம்மந்தபட்ட திணைக்கள அதிகாரிகளுடன் ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பான சாதக பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இவ்வாண்டு பரு…
-
- 1 reply
- 465 views
-
-
இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலை புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கை படையினர் குழப்பம் அடைந்துள்ளனர். விசுவமடு, யாழ்ப்பாணம், கிளாலி உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. குறிப்பாக, விசுவமடு பகுதியில் இராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலை புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர். புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவத் தர…
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்தக் காணொளியில் இந்தியா ஜெனிவா மாநாட்டில் பேசியதும், அதன் திரண்ட கருத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து புதிய தலைமுறை தொலைக்கட்சி வெளியிட்டது. நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ykJfcx6Ib1M http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19714:2013-03-21-13-13-45&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 0 replies
- 791 views
-
-
நல்லூரில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி தமிழின விடிவுக்காய் தம்மை ஆகுதியாக்கிகொண்ட மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள திலீபன் நினைவுத் தூபியில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்மற்றும் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மிகவும் அமைதியான முறையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. …
-
- 5 replies
- 576 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த சிறிலங்கா படையினரில் 125 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 690 views
-
-
ஆட்சி மாற்றம் என்பது எங்களின் எதிர்பார்பும் அல்ல. ஏனெனில் கடந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி சிங்கள பௌத்த பேரினவாதினை கட்டிக்காத்தவாறே ஆட்சிக்கதிரையில் இருந்தவர்கள் தமிழர்களை திட்டமிட்ட வகையில் இனப்படுகொலை செய்தார்கள். இதில் இங்கு இடது வலதென்று வித்தியாசத்தினை சிங்கள ஆட்சியாளர்களிடையே வித்தியாசம் காண முடியாது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச்சபைக்கான இணைப்பாளர் சுகிந்தன் முருகையா அவர்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் ஞாயிறு சுடர்ஒளி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். செவ்வியின் முழுவிபரம்: கேள்வி : ஐ.நா மனித உரிமைச் சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது ? …
-
- 0 replies
- 304 views
-
-
யாழ். பருத்திதுறையில் பாரிய புயல் : மரங்கள் முறிந்து விழுந்து குடியிருப்புகள் சேதம் (காணொளி இணைப்பு) வங்கக்கடலில் உருவாகியுள்ள "நாடா" எனும் புயலின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பருத்திதுறைப் சாரையடி பகுதியில் வீசிய புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (30) இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வடக்கில் கடுமையான காற்றுடன் மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் பருத…
-
- 0 replies
- 494 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139507/IMG-20201127-WA0023.jpg அவரது இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப் கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை ஏற்றினார். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள்…
-
- 1 reply
- 389 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பக்மிட்டியா பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பக்மிட்டியா பகுதியில் வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நேற்று திங்கட்கிழமை காலை 6:40 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதலை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் பொறிவெடித் தாக்குதலையடுத்து நேற்று சிறிலங்கா படையினர் அப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதலினை மேற்கொண்டதாக அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினம்
-
- 0 replies
- 401 views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) நடாத்தவிருக்கும் கலாச்சார மாலை நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் லண்டன் வந்துள்ளார். அரசியல் கலப்பு இல்லாது தமிழீழ உணர்வுகொண்ட பாரதிராஜா அவர்கள், 2009ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் ஆற்றிய உரை இன்றுவரை ஈழத்தமிழர்களால் பேசப்பட்டுவருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் அவர் தமிழீழம் சென்று அங்கே தேசிய தலைவர் அவர்களைச் சந்தித்துள்ளார். அங்கே நடந்த விடையங்கள் என்ன , மற்றும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது போன்ற நிகழ்வுகளை, அவர் நடக்கவிருக்கும் கலாச்சார மாலை நிகழ்வில் தெரிவிக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாது அவர் இன் நிகழ்வில் தமிழீழ மக்களோடு கலந்துரையாடவும் உள்ளார். லண்டன் ஹாரோ பகுதிக்கு அருகாமையில் உள்ள ரைசிலிப் என்னும் இ…
-
- 5 replies
- 872 views
-
-
அழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுசமாக வழங்காதீர்கள்: நேற்று தமிழர், இன்று முஸ்லிம், நாளை அது உங்களையே அழிக்கும் - கஜேந்திரகுமார் தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று கூற முடியாத நிலைகூட ஏற்படலாம். எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் விட்டுச் செல்லவிருக்கும் இந்த மரபானது உங்களை அழித்தொழிக்கப்போகிறது என நாடாளுமன்றத்தில் நேற்று சிங்கள தரப்பிற்கு சுட்டிக்காட்டினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அத்து…
-
- 0 replies
- 357 views
-