Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்றையதினம் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்திப்பதற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா செல்லவிருந்தார். இந்த நிலையில் அவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செல்லவிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் எதிர்ப்பால் குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சுமந்திரன் இந்த கூட்டத்தில் பங்குப்பற்றினால் தான் பங்குப்பற்ற மாட்டேன் என கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பகுதிக்கான தமிழரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சுமந்திரன…

    • 5 replies
    • 925 views
  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார். அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இ…

    • 16 replies
    • 1.7k views
  3. மைத்திரி, ரணிலிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது. இதேவேளை, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது மேலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மததர-ரணலடம-வககமலம-…

    • 0 replies
    • 446 views
  4. ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் சின்னாபின்னமாக்கிவிட்டார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மைத்திரிபால சிறிசேன இல்லாது செய்தது போல, ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க சின்னா பின்ன மாக்கிவிட்டார். எனவே, மலையக மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவு வழங்கவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தலவாக்கலையிலேயே அதிகளவு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். மலையகத்தின் இதயம் இந்த நகரம்தான். தலவாக்கலையை அடையாளப்படுத்திய பெருமை அமரர் சந்திரசேகரனையே சாரும். எனவே, இங்கு தேர்தல் பிரசாரத்த…

    • 0 replies
    • 768 views
  5. வடக்கில் வளர்ச்சிக்கான துறைசார் திட்டங்களைத் தயாரிக்க ஆளுநர் வலியுறுத்து!- விவசாயம் குறித்தும் அவதானம் by : Litharsan வடமாகாண வளாச்சிக்கான உரிய துறைகள் சார்பில் பொருத்தமான கொள்கைத் திட்டங்களை தாமதமின்றித் தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தேசிய கொள்கைகளிலிருந்து விலகாமல் வட மாகாண வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் அனைத்து மாகாண அமைச்சுக்களும் துறைசார் கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாகாண அமைச்சுகளின் செயற்பாடுகள் தொடர்பான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் செயலகத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் நேற்று (ப…

    • 0 replies
    • 362 views
  6. ’இதுவரை 10ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்பு’ -என்.ராஜ் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படையினரால் 10ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார் நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பில், இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி முப்படை உயர் அதிகாரிகள் தலைமையில் பல…

    • 0 replies
    • 306 views
  7. தமிழ் அரசியல்வாதிகள் காணாமல் போனவர்களை விளம்பரம் செய்து தங்களது இருப்பினை உறுதி செய்து கொள்ள முயற்சிப்பதாக மட்டக்களப்பைச் சேர்ந்த அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்து வாழும் சிரேஸ்ட ஊடகவியலாளரொருவரின் முகநூல் பக்கத்தில் நேரலையாக இணைந்து கொண்டு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொக்கட்டிக்சோலை, வெல்லாவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் எவ்வளவு பேர் வாழ்ந்தார்கள் அவர்களது வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருந்தது என்பது தமக்கு நன்றாகத் தெரியும். போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பு…

    • 3 replies
    • 873 views
  8. ஆவா குழு தலைவரின், பிறந்த நாளுக்கு... கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்கள் கைது ஆவா குழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/ஆவா-குழு-தலைவரின்-பிறந்த/

    • 2 replies
    • 1.3k views
  9. அலெக்ஸ்சான்டாராக மாறினார் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான சிங்கப்பூரில் தலைமறைவாக உள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்ஸ்சான்டனர் என்று மாற்றியுள்ளதாக இன்ரர்போல் (சர்வதேச பொலிஸ்) தெரிவித்துள்ளது. இதனை நிரந்தர மேல் நீதிமன்றில் இன்று (16) சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். https://newuthayan.com/அலெக்ஸ்சான்டாராக-மாறினா/

  10. “1000 ரூபாய்” குறித்து 25ம் திகதி பிரதமருடன் பேச்சு – மருதபாண்டி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ம் திகதி நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (18) அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளம் தொடர்பாக ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

  11. வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட குளங்கள் விடுவிப்பு! வவுனியாவில் குளத்து காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சட்டவிராேத வேலிகள் மற்றும் கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை கமநல அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதனால் இரண்டு குளங்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து நிரந்தர மற்றும் தற்காலிக வேலிகளை அமைத்தவர்களுடைய வேலிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, குளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு கோவில்குளம் மற்றும் ஆசிகுளத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் ஆகிய இரு குளங்களின் காணிகளை அபகரித்து …

    • 1 reply
    • 431 views
  12. நீர்வேலி குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்! நீண்டகாலமாக புனரமைக்கப்பட்டாமல் இருந்த உரும்பிராய் – நீர்வேலி குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் வீதியானது நீர்வேலி சந்தியில் இருந்து அச்செழு மூன்று சந்தி இணையும் 4.33 கி.மீற்றர் வரை காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. சீன நிறுவனம் ஒன்று இந்த புனரமைப்பு வேலைகளை இன்று ஆரம்பித்துள்ளது. https://newuthayan.com/நீர்வேலி-குறுக்கு-வீதியி/

  13. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியாக தேர்தலில் களமிறங்கியுள்ளது – அனந்தி சசிதரன் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளை அல்லது முன்னாள் போராளிகளை நான் அரசியலுக்குக் கொண்டுவர விரும்பினேன்.இவ்வாறிருக்க, சுமந்திரன் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வந்ததாகக் கூறி, இன்றும் தமிழ் அரசியல் கைதிகளாக புனர்வாழ்வு பெற்று அரசியல் கைதிகளாக இருந்த முன்னாள் போராளிகள் இன்றைக்கும் தடுப்பில் இருக்கின்றார்கள்.ஆனால், தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப் புலிகளுடைய அனுதாப வாக்குகளைப் பெறுவதற்கு மாறுபட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்த சுமந்திரன் திடீர் அக்கறை கொண்டுள்ளார்.விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஆயுதப்…

  14. கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல் சந்தியில் நேற்று (புதன்கிழமை) மாலை அடையாளந்தெரியாத மூவர் கூரிய ஆயுதங்களால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கஞ்சிபானை இம்ரானின் தந்தை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது உடல் பூராகவும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர…

  15. -விஜயரத்தினம் சரவணன் ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள - முஸ்லிம் கட்சிகள், தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப்பெறுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் கூறினார். முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில், நேற்று (16) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/உணர்வின்றி-வாக்களிப்பதை-கைவிடவும்/72-252068

    • 0 replies
    • 451 views
  16. -எம்.றொசாந்த் சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லையெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், பதவியால் கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் மக்களிடமே வழங்குவோமெனவும் கூறினார். வாகன வரிச் சலுகை அனுமதிப்பத்திரம் கிடைத்தால், அதனால் கிடைக்கும் நிதியையும் மக்களுக்கே வழங்குவோமெனவும், அவர் தெரிவித்தார். நல்லூரில், இன்று (17) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மக்களிடமே-சலுகைகளை-வழங்குவோம்/71-252066

    • 0 replies
    • 372 views
  17. கடற்படையை தாக்கியதாக கைதானவர்களில் மூவருக்கு பிணை! யாழ்ப்பாணம் – அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு, இன்று (17) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றநிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 9ம் திகதி யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகத் தெரிவித்து அப்பிரதேசத்தை, கடற்படையினர் சுற்றிவளைத்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 10ம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையி…

  18. எழுதுமட்டுவாழில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலை தரப்பினரால் கொடிகாமம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாகவும், இதனைப்பயன்படுத்தி…

  19. (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படமாட்டாது. பொது காரணிகளின் நிமித்தம் தீர்வு வழங்கப்படும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் புதிய அரசாங்கத்தில் பரிசீலனை செய்யப்படும். அனைத்து இன மக்களும் புதிய அரசாங்கத்தில் உரிமைக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமோக வெற்றிப் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட…

  20. - Abu Zainab - ஜேர்மன் நாட்டின் University of Cologne யினால் ஏற்பாடு செய்யப்பட்ட Tilbury House World Schools Debate Championship எனும் சர்வதேச பாடசாலை மட்ட விவாத மேடையில் இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய Champion பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்த ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். இவ்வெற்றி 1996 உலகக் கிண்ண வெற்றிக்கு சமாந்தரமான ஒரு வெற்றியகும். குறித்த விவாத அணிக்கு தலைவராக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் குறித்த தொடரில் உலகளாவிய ரீதியில் சிறந்த விவாதப் பேச்சாளருக்கான முதலாம் நிலையையும் றோயல் கல்லூரியின் மாணவன் Shalem Sumanthiran (ஜனாதிபதி சட்டத்தரண…

    • 54 replies
    • 6.3k views
  21. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றுவேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17) நீர்கொழும்பில் நடைபெற்ற கட்சியின் பிராந்திய காரியாலய திறப்பு நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “தவறான நிர்வாகம் காரணமாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் லீசிங் கம்பனிகள் வாகனங்களை கடத்துகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை. அரசாங்கம் மாபியாக்களுக்கு அடிப்பணித்துள்ளது. டின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அறிவித்த …

    • 1 reply
    • 881 views
  22. (எம்.ஆர்.எம்.வஸீம்) அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கையால் அமைச்சர்களுக்குள் மாத்திரமன்றி ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளும் முரண்டுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பொதுத் தேர்தலில் மொட்டு கட்சியே எமக்கு சவாலாக இருக்கப்போகின்றது. 26 வருடங்கள் நிராகரிக்கப்பட்ட தலைவர் தற்போது சிறந்தவராக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொத்மலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரங்களை தனக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக…

  23. இ.தொ.காவின் பொதுச் செயலாளராக ஜீவன் நியமனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று கொட்டகல சீ.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது தேசிய சபை,நிர்வாக சபை ஆலோசனையின் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் பொதுச் செயலாளர் பதவியை வகித்த அனுசா சிவராஜா அவர்கள் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.-(3) http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-காவின்-பொதுச்-செயலாள/

    • 1 reply
    • 715 views
  24. தாமும் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள் - ஆனந்தசங்கரி . தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் என சொல்லி பிரிந்து நிற்கிறார். தாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் பிரித்தாள்கிறார்கள் இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்கள். என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலின் யாழ். தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மற்றவர்களை வேதனைப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ , அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் சொல்லி வ…

    • 1 reply
    • 529 views
  25. காணிகளை அபகரிக்கும் நில அளவை திணைக்களம்: மக்கள் எதிர்ப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தண்டுவான் பகுதியில் நில அளவைத் திணைக்களத்தின் நடவடிக்கை இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ35 மற்றும் ஏ9 தர வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகளில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட நில அளவைத் திணைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.