Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன- மக்கள் உரிமைகளிற்கான குழு கவலை Rajeevan Arasaratnam June 1, 2020சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன- மக்கள் உரிமைகளிற்கான குழு கவலை2020-06-01T08:11:01+00:00 தன்னிச்சையான கைதுகள் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் உரிமைகள் குழுவென்ற அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் குறித்த பரப்புரைகளை மேற்கொண்டுள்ள மக்கள் உரிமை குழு அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் உரிய நடைமுறைகளை பின்பற்றப்படுதல் நியாயமான விசாரiணைகள் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளிற்கு …

  2. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சன்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று சுகாதர இடைவெளியை பேணி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் அக்னியுடன் சங்கமமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144385

    • 1 reply
    • 883 views
  3. 2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு Bharati May 28, 20202021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு2020-05-28T22:06:40+00:00 2021 ஆம் ஆண்டு முதலாந் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை 15 ஆம் திகதி ஜுலை மாதம் 2020க்கு முன்னர் பூர்த்தி செய்து பதிவுத்தபாலில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் ஜுன் மாதம் 30 ஆம் திகதி 2020 க்கு பொருத்தப்பாடு உடையதாக இருப்பதோடு உரிய ஆவணங்கள் யாவும் இணைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  4. எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, மலையக மக்களுக்காக பல திட்டங்களை மகிந்தவுடன் சேர்த்து, வழக்கத்தினை விட மிக நீண்ட நேரம் ஒன்றாக இருந்து பேசி, நிறைவேற்றி வீடு திரும்பிய ஆறுமுகம் தொண்டைமான் மரணச்செய்தி கிடைத்ததும், முதலில் நம்ப மறுத்த மகிந்த, மிகுந்த மனக்கிலேசத்துக்கு ஆளானார். உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று, பார்த்த மகிந்தா, மிகவும் மனக்கவலையில், உணர்வு பூர்வமாக இருந்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது. சில மணிநேரங்களுக்கு முன்னர், தன்னுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர், இறந்து போனதை அவரால் நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லையாம். பல மலையகத்தலைவர்கள், அங்கும், இங்கும் பாய்ந்தாலும், என்றும் தனது உறுதியான, அரசியல் ஆதரவாளராக, வடக்கில் டக்ளஸ் போல, இருந்த…

    • 4 replies
    • 861 views
  5. வடமேற்கு மாகாணத்தில் குருணாகலில் மாவத்தகம பகுதியிலுள்ள பல விவசாய நிலங்களை இலட்சக்கணக்கான வெட்டுகிளிகள் தாக்கியுள்ளன. இலங்கையில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இந்தியா, பாகிஸ்தானை தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்றும் அவை உள்ளூர் வெட்டுக்கிளிகளே என்றும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார். மேலும், வெட்டுக்கிளிகளின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாலைவன வெட்டுக்கிளிகள் மிகப்பெரியது மற்றும் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா போன்ற பலவீனமான உணவுப் பாதுகாப்பு உள்ள நாடுகளில் பயிர்களை அழித்துள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகள் மிகவும் அழிவுகரமான புலம்பெயரும் பூச்சிகளில் ஒன்றாக கருதப…

    • 0 replies
    • 377 views
  6. கனகராசா சரவணன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சரியானது என விளங்கிக் கொண்டு, வடக்கு, கிழக்கை இணைக்க முஸ்லிம்கள் இனியாவது ஒத்துழைக்க வேண்டுமென, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் இருப்புக்கு கேள்விக் குறியான நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார். கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியால் அமைக்கப்பட் செயலணியை கண்டித்து, ஊடகங்களுக்கு நேற்று (30) அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். “கிழக்கிலே தமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமப்பை மேற்கொள்ளுவதற்காகவே தொல்லியல் திணைக்கள அனுசரனையுடன், இந்த ஜனாதிபதி …

    • 0 replies
    • 509 views
  7. தரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்

    • 7 replies
    • 871 views
  8. கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் நெற்செய்கை காணி தொடர்பில் நீண்ட கால பிரச்சினை காணப்படும் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனத்தையும், பிரதேசவாசிகள் சிலரையும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்ய முற்பட்டபோதே குறித்த பதற்றமான நிலை தோன்றியுள்ளது. கைது செய்து ஆட்களை ஏற்றியவாறு புறப்பட்ட வாகனத்தை பிரதேச மக்கள் ஒன்று கூடி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது குறித்த பகுதிய…

    • 0 replies
    • 641 views
  9. தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனிற்கு, இரா.சம்பந்தன் மேற்படி ஆலோசனையை வழங்கினார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன. இந்த நிலையில் நேற்று தமிழ்…

    • 18 replies
    • 1.2k views
  10. படுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.. May 31, 2020 மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இதேவேளை யாழ்.ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் காவற்துறையினர் சீருடையிலும், சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், காவற்துறை அதிகாரியொ…

    • 2 replies
    • 501 views
  11. யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம் Bharati May 23, 2020 யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்2020-05-23T07:48:26+00:00Breaking news, உள்ளூர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென பல்கலைக்கழக பேரவையினால் மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிறப்புப் பேரவைக் கூட்டத்திலேயே மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நேற்று நடைப…

    • 10 replies
    • 1.3k views
  12. கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை Bharati May 31, 2020கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை2020-05-31T13:38:06+00:00 யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தம்மை சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த குழு அங்கிருந்து 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் சென்று, அட்டகாசம் புரிந்தனர். பின்னர் வீட்டில…

    • 4 replies
    • 987 views
  13. எச்.எம்.எம்.பர்ஸான்- மட்டக்களப்பு, வாகனேரி பகுதியில் வியாழக்கிழமை (28) மணல் அகழ்வுக்குச் சென்ற நபர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறி வாகனேரிப் பகுதியைச் சேர்ந்த ஐவர் காயங்கள் அடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறித்த சம்பவத்தின் பின்னர் சுமூகமான முறையில் தமிழ், முஸ்லிம் உறவுகள் பேணப்பட்டு வரும் நிலையில், அதில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பிரச்சினை தொடர்பில் இரு சமூகங்களும் சுமூகமான முறையில் வாழ வேண்…

    • 1 reply
    • 350 views
  14. குருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு… May 31, 2020 சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புக்கு எதிராக அவரால் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை வரும் ஜூன் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் ஜூன் 30ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டது. சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் …

  15. இன்று இடியுடன் கூடிய மழை தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் . கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அ…

  16. மலையகத்துக்கு விடுதலை கோரி இளைஞன் போராட்டம்! மலையக மக்கள் இதுவரை பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று, மலையகத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி தனி நபரொருவர் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (30) காலை முதல் ஈடுபட்டார். நுவரெலியா – பூண்டுலோயாவைச் சோ்ந்த சண்முகம் மகேஸ்காந் (26 வயது) என்ற இளைஞரே, மட்டக்களப்பு ஒளவையார் சிலைக்கு கீழ் அமர்ந்து, “மலையகத்தின் ஒரு குரல்”, “விடுதலை வேண்டும்” ஆகிய சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். போராட்டம் தொடர்பாக குறித்த இளைஞன் தெரிவிக்கையில், ‘பூண்டுலோயா டன்சன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான், எனது த…

  17. இது குறித்து ஏஎவ்பி மேலும் தெரிவித்துள்ளதாவது- அரசாங்க அமைச்சரும் தொழிற்சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமானிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். கடந்த செவ்வாய்கிழமை காலமான அமைச்சரின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்படவுள்ளது. தொண்டமானின் உடலை பார்வையிடுவதற்காக பெருமளவு மக்கள் திரள்வதை தடுப்பதற்கா அதிகாரிகள் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்துள்ளனர். அமைச்சரின் உடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்வேளையும் பெருமளவானவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதிசடங்குகள் காரணமாக வைரசினை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மக்களின் நம்பிக்கைகள் பாதிக்கப்பட…

  18. ஜூன் முதலாம் திகதி முதல் ரயில்கள் சேவையில்…! ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 19,593 பேர் வேலைக்காக பயணிக்க ரயில்வே திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். https://newuthayan.com/ஜூன்-முதலாம்-திகதி-முதல்/

  19. வாழைச்சேனை கடதாசி ஆலை பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிப்பு! கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிப்பட்டுள்ளது என்று அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமையவும் பிரதமர் மஹிந்தவின் வழிகாட்டலிலும், பல வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சார்த்த நடவடிக்கையாக அட்டை தயாரிக்கும் இயந்திரத்தை இயங்க வைக்கும் நிகழ்வை விமல் வீரவன்ச ஆரம்பித்து வைத்திருந்திருந்தார். இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்கடதாசி ஆலையின் தலைவர் விமல் ரூபசிங்க, அமைச்சின் உயர் அதிகாரிகள்,…

  20. வவுனியாவில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு Bharati May 30, 2020வவுனியாவில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு2020-05-30T21:48:41+00:00 வவுனியா- ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் காணியிலிருந்து வெடிபொருட்களை இன்று சனிக்கிழமை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியிலுள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் ஊடாக பண்படுத்தியுள்ளார். இதன்போது பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த வீட்டு உரிமையாளர், ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியை சோதனை செய்து பார்த்தபோது இரண்டு மோட்டார…

  21. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் சுமந்திரனால் களமிறக்கப்பட்டவர் அம்பிகா. இவர் கடந்த ஜெனீவா பயணத்தின் போது அங்கு சிவில் சமூக பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார். அங்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர்களரோடு சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அப்போது இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை ஏனையோருக்கு வேடிக்கையாவே இருந்தது என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளரான சுதா தெரிவித்திருந்தார். லங்காசிறிய…

    • 38 replies
    • 4.3k views
  22. (ந.தனுஜா) கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்குக் கிடைத்த நிதி, பொருள்சார் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் சுயமாக முன்வந்து வெளிப்படுத்த வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்குக் கிடைத்த நிதி, பொருள்சார் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் தொடர்பான தகவல்களை சுயமாக முன்வந்து வெளிப்படுத்துவதனூடாக கொவிட் - 19 தொற்றுநோயைக் கையாள்வதிலான பிராந்திய மற…

    • 3 replies
    • 948 views
  23. கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவு கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கொடுப்பனவு விடயத்தில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படுமாயின், www.auditorgeneral.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. https://www.ibctamil.com/srilanka/80/…

    • 6 replies
    • 575 views
  24. இணையத்தில் ஒரு கேள்வி. சிங்கள மாணவர்கள் பாடசாலைகளில் தமிழ் மொழியினை படிக்க வேண்டுமா? சாயா திசாநாயக்க என்னும் பெண் அளித்துள்ள பதிலில், ஆம், 1 - 9 வகுப்பு வரை மாணவர்கள் மூன்று மொழிகளையும் படிக்க வேண்டும். மூன்றினையும் GCE க்கு எடுக்க முடியாவிடில் ஒரு பாடத்தினை விடுத்து தாய் மொழியினை எடுக்கலாம். பின்னர் அந்த ஒரு பாடத்தினை தனியாக முடிக்கலாம். இப்போது இலங்கையில் அரச, தனியார் வேலைகளுக்கு மூன்று மொழியும் தேவைப்படுவதால் மாணவர்களும் படிக்கின்றனர் என்கிறார் அவர். (யாழ் புகையிரத நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் இருந்த சிங்கள இளைஞர்கள் பேசிய தமிழால் வியந்தேன். பின்னர், சிங்களவர்கள் அரச வேலை எடுக்க, தமிழ் மொழி பயில்வது உண்மைதான் என அறிந்து கொண்டேன்.) அத்துடன் …

    • 28 replies
    • 3k views
  25. அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், அதிருப்தியடைந்த ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்துமாறு, உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பூதவுடல் வேவல்டனிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு பெருந்திரளான மக்கள் கூடியதுடன், பேரணியாக எடுத்துச் சென்றபோது ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களின் பின்னர், நிலைமையை அவதானித்த ஜனாதிபதி, க…

    • 1 reply
    • 585 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.