Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழக முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்தமிழ் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அத்துடன் ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அத்துடன் வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசே முடிவு எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழக சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்மை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=554091931729228023

    • 11 replies
    • 1.3k views
  2. கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு – Thin…

    • 26 replies
    • 2.1k views
  3. சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் வழங்கி வரும் ஆயுத உதவிகளை நிறுத்தக்கோரியும் தமிழீழ மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கோரியும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் முன்பாக நேற்று கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 326 views
  4. கொலன்னாவை மீதொட்டுமுல்லை பகுதியில் குப்பைமேட்டில் குப்பை கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளினால் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. குப்பைமேட்டுக்கு முன்பாக காலை ஒன்றுகூடிய பிரதேசவாசிகள் இங்கு குப்பை போடுவதை நிறுத்து, இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்றும் இந்தக் குப்பையால் குழந்தைகள் தினமும் நோய்வாய்ப்படுவதாகவும் , கொழும்பு மாநகரத்தின் குப்பையை எங்களிடத்தில் கொட்டி கொழும்பு மாநகரத்தை பூங்காவாக மாற்றி எங்களைக் குப்பை தொட்டிக்குள் தள்ளுவது ஏன்? கொழும்புக் குப்பைகளை இங்கே கொட்ட விடமாட்டோம், குப்பை லொறி வருமாயின் தீயிட்டுக் கொளுத்துவோம் என கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …

  5. 05/04/2009, 06:01 [ செய்தியாளர் தாயகன்] வன்னி மக்களிற்காக கிளிமஞ்சாரோ மலை ஏறும் பிரித்தானியத் தமிழ் இளைஞன் வன்னி மக்களிற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையேறி கவனயீர்ப்பில் ஈடுபடவும், நிதி சேகரிப்பில் ஈடுபடுவதற்கும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார். கீரன் அரசரட்னம் என்ற குறிப்பிட்ட இளைஞன் சிறு பராயம் முதல் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த போதிலும், வன்னி மக்களின் அவலம்கண்டு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். 5,891.8 மீற்றர் (19,330 அடி) உயரம் கொண்ட இந்த மலை ஆபிரிக்காவின் ரன்சானியா நாட்டில் உள்ளது. தற்பொழுது அங்கு சென்றுள்ள கீரன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதில் ஏறும் நட…

    • 3 replies
    • 1.4k views
  6. கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி ? கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் பெப்ரவரி மாதத்துடன், கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்த்தன சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.இதன் பின் அவர் உயர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைய கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்…

  7. வன்னியில் நச்சுவாயு பேரழிவு அபாயமா? - அதிர்ச்சி தகவல் 8 ஏப்ரல் 2009 | 20:04 186 views No Comment Print This Post Print This Post பாதுகாப்பு வலயத்தின் மீது நச்சு வாயு வீசி மக்களை கூண்டோடு கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் பகுதியில் பல பாரிய குழிகள் தோண்டப்படுவதாகவும் இப்பணியினை சிறிலங்காவின் ஊர்காவல் படையினர் மேற்கொள்ளுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2 1/2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் பாதுகாப்பு வலயத்தில் வெறும் 60000 மக்கள் இருபது பெரும் சந்தேகத்தையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்…

  8. தெற்கிலிருந்து போலி நாணயத்தாள்கள்! எச்சரிக்கின்றது யாழ்ப்பாண வர்த்தக சங்கம்!! யாழ்ப்பாணத்தில் போலி 5000 ரூபா நாணயத்தாள்களின் புழக்கம் உயர்வடைந்துள்ளது. 5000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை ஓரு கும்பல் புழக்கத்தில் விடுவதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கம் எச்சரித்துள்ளது. தெற்கிலிருந்து வந்து இவ்வாறு பணத்தை மாற்றிக்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் வெளியிட வாகனங்களினில் வருபவர்கள் தொடர்பினில் கவனமாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், ஜவுளிக் கடைகளில் இவ்வாறு குறித்த போலி நாணயத்தாள்கள் மாற்றப்படுகின்றன.வெளியிலிருந்து வரும் நபர்கள் குறித்தும் நாணயத்தாள்களை உன்னிப்பாக கவனித்தும் கொடுக்கல் வாங்கல் செய்யுமாறு வர்த்தக சங…

  9. வெள்ளிக்கிழமை பிரதமர் முதலமைச்சர்களை சந்திப்பார் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தகவல் (ஆர்.யசி) ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு சிறப்பு அமைப்பு பத­விகள் அவ­சியம் இல்லை. அதி­கா­ரத்தை பலப்­ப­டுத்­திக்­கொண்டு நாம் ஆட்­சியை நடத்தும் திட்­டத்­திலும் இல்லை என அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தெரி­வித்தார். மாகா­ண­ ச­பை­க­ளுக்கு அதி­காரம் வழங்­கு­வது தொடர்பில் நாளை வெள்ளிக்­கி­ழமை பிர­தமர் முத­ல­மைச்­சர்­களை சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அமைச்சர் மேற்­கண்­…

  10. இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான இந்த பரீட்சையில் 37000க்கும் அதிகமானோர் பரீட்சை எழுதியதாகவும், அதில் 410 பேர் தேறியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத அரசியல் செல்வாக்குப் பெற்ற 60…

  11. மட்டு.நீதிமன்றத்துக்குள் கோடரியுடன் சென்ற வேடுவர்; உள்ளே அனுமதித்தமைக்காக நன்றி தெரிவித்தார்! 2016-12-30 12:40:14 (காங்கேயனோடை நிருபர்) மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த வேடர் ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை கோடரியுடன் ஆஜராகி யிருந்தார். இந்த வேடுவர் தனது மகனின் வழக்கு தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மேற்படி வேடர் தனது பாரம்பரிய உடையுடன் தோளில் கோடரியை சுமந்தவராக நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். நீதிமன்றத்திற்குள் நுழையும்போது நீதிமன்ற பிரதான நுழைவாயிலில் நின்ற பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை மேற் கொண்ட பின்னர் அவ…

  12. பிரித்தானிய பிரஜைகள் தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வர அனுமதி பிரித்தானியா பிரஜைகளை தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடையாது என்றும் உக்ரைன் நாட்டு பயணிகள் நாட்டுக்கு வருவதை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என குறிப்பிட முடியாது என்றும் எனவே கொரோனா தாக்கத்தினால் எழுந்துள்ள சவால்களை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் வெற்றிக்கொள்ளவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட செயலக பிரிவில் இடம்பெற்ற நகர அ…

  13. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மனிதகுல வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் பல நாடுகளில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளின் பட்டியலில், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசால் நடத்தப்பட்ட ஈழத்தமிழ் இனப் படுகொலை மிகவும் கொடூரமானதாகும். சான்றாக ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். 1958 ஆம் ஆண்டு, சிங்கள இதழாளர் தாசி வித்தாச்சி எழுதிய ‘அவசர காலச் சட்டம் 58’ என்ற நூலில், சிங்கள இனவெறியர்கள், பிள்ளைத்தாச்சியான ஒரு தமிழச்சியின் வயிறைக் கிழித்து, அவளது கருப்பையைக் குழந்தையோடு பிடுங்கி வெளியே எடுத்து, அந்தப் பச்சைக் குழந்தையைச் சுவரில் விசிறியடித்து ஒரு நொடியில் சாகடித்தார்கள் என்று கூறித் தனது கடும் கண்டனத்தைப் பதிவு …

  14. (ஆர்.யசி) மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளப்போவதுமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆணைக்குழு முழுக் கேலிக்கூத்து எனவும் அவர் விமர்சித்தார். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தகால மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும், எதிர்வரும் பெப்ரவரி -மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை சமாளிக்கவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழு குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போத…

  15. இலங்கை தமிழர்களுக்காக திரைப்பட உதவி இயக்குனர் மகேந்திரவர்மன் (35) திருச்சியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். இவர் இயக்குநர் சீமானின் பாஞ்சாலங்குறிச்சி, தம்பி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். திருச்சி புத்தூர் அருணா திரையரங்கு அருகில் ஒரு தனியார் இடத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு சார்பில் கடந்த 21ம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 4வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றார். உண்ணாவிரத பந்தலில் ஈழ தமிழர் படுகொலையை சித்தரிக்கும் காட்சிகள் மற்றும் தாய்த்தமிழகமே எமக்காகவும் கொஞ்சம் குரல் கொடுங்களேன் என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகள் கட்டப்பட்டு இருந்தன. இதேவேளை, இந்திய இறையாண்மைக்கு எத…

  16. மாயாண்டி குடும்பத்தார் என்ற தமிழ்சினிமாவில் இயக்குநர் சீமான் நடித்துள்ளார். புதுச்சேரி சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனவுடன் இரவில் நடந்த இப்படத்தின் விழாவில் கலந்துகொண்டார் இயக்குநர் சீமான். விழாவில் சீமான், ’’சிறை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். எனக்கும் பெரிய பயம் இருந்தது. ஆனால் உள்ளே போய் வந்த பிறகுதான் அந்த பயம் நீங்கியது. சிறைக்குள் எந்த பயமும் கிடையாது. ரொம்ப நல்லவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ரொம்ப கெட்டவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள். நான் 70 நாட்கள் தனிமை சிறைக்குள் இருந்தேன். உள்ளே அலைபேசியை பயன்படுத்தக்கூடாது. ஒரே ஒரு ரூபாய் நாணயம் போட்டு வெளியில் யாரிடமாவது பேசிக்கொள்ளலாம். அப்படி பேசும்போது இலங்கையில் நடப்பதையும் இங்கே …

  17. வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைந்து சிவில் நிர்வாகம் அமைந்தால் அது மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டிற்கு உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளரும், மகிந்த அரசாங்கத்தின் அரசியல் விருந்தாளியுமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் இருப்பது ஒரு வகையில் பாதுகாப்பு உறுதுணை என்றாலும் மக்கள் அச்சப்படுவர் என கே.பி. தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல்வாதிகள் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் காப்பக்தில் இருந்து இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …

  18. சம்பந்தனின் கோரிக்கைகள் என்றும் நிறைவேறாது (க.கமலநாதன்) புதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர். இருப்பினும் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார். அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்று நிறைவேறப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் மக்கள் விரும்பாத ஒரு அரசியலைமப்பினை எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பினை அடுத்த ஆட்சியிலேயே கொண்டுவர முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் …

  19. பிள்ளையானுக்கு ஒரு நீதி அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதியா :ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா பசீர் வலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி 2006 ம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கனகரத்தினம் ஆதித்தன் மற்றும் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கனகரத்தினம் ஆதித்தியன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில், முன்னாள் கிழக்கு மாகா…

  20. வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு விவாதத்துக்குள்ளாக்கப்படும

    • 0 replies
    • 518 views
  21. இலங்கையில் கொலை, கொள்ளை ஆகிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினர் சிலர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இத்தாலியில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு இடையூறு செய்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதற்குத் தீர்வுகாணப்படவில்லையெனக் கூறப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தமக்கு மிக நெருக்கமானவர் எனக் கூறி, அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு அடாவடித்தனங்களைச் செய்துவருவதாக முறையிடப்பட்டுள்ளது.தெரியவருகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ரா…

    • 0 replies
    • 835 views
  22. கிழக்கில் களம் இறங்கும் சிறிரங்கா? சக்தி டிவி ஊடகவியலாளர் பின்னணியில்! எதிர்வரும் மாகாண சபை தேர்தலை குறிவைத்து கிழக்கு மாகாணத்தில் ஊடகவிலாளர்களை இணைத்து களம் இறங்கவுள்ளார் மாகாராஜா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊடகவியலாளர் சிறிரங்கா. கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி அம்பாறை ஊடக அமையத்தில் தமிழ் தந்தி பத்திரிகையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், சக்தி தொலைக்காட்சியின் பிராந்திய செய்தியாளராக பணிபுரியும் உதயகாந் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் சிறிரங்கா இதனை தெரிவித்துள்ளார். சிறிரங்காவின் தேர்தல் அணிக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கோரப்பட்ட போது அதற்கு சில அச்சு, இலத்திரனியல், தொலைக்காட்சி மற்றும் இணையத்தள ஊடகங்களில்…

  23. ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை - சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம்! [Wednesday, 2013-05-22 16:27:37] தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சில முக்கிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும் ஆட்சியா…

    • 1 reply
    • 418 views
  24. வை.கோவின் உரை

    • 0 replies
    • 1k views
  25. போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் கொடும்பாவி எரிப்பு (படங்கள் இணைப்பு) வவுனியாவில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள இ.போ.ச. சாலை ஊழியர்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் கொடும்பாவிக்கு இறுதிக்கிரியை நிகழ்வுகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்டனர். இதற்கு முன்னதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலகா, ஆகியோர் இ.போ.ச. சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்து கலந்தரையாடியதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டேனிஸ்வரனுடனும் கலந்துரையாடி ஒரு சாதகமான முடிவினை பெற்றுத்தருவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.