ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143671 topics in this forum
-
பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் திட்டததின் கீழான “சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்” இன்று (09) வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் உள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதற்கட்டமாக ஐநூறு குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், புசித்தாய், வெண்டி, போஞ்சி போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டதுடன், பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீட்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு…
-
- 27 replies
- 3.8k views
-
-
புத்தளத்தில் தங்கியுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், அவர்களின் விபரங்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு கோரி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் மன்னார் நகரம், முசலி, மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். புத்தளத்தில் வாழும் இந்தக் குடும்பங்கள் மன்னாரிலோ அல்லது புத்தளத்திலோ எந்தவிதமான உதவிகளும் பெறாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், புத்தளத்தில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கினால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கு மன்…
-
- 6 replies
- 700 views
-
-
வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை by : Litharsan வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள பிலதெல்பியா ஆலயத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிக…
-
- 21 replies
- 2.8k views
-
-
கொரோனாவுக்கு எதிராக போராடும் படையினரை விமர்சிப்பது கவலைக்குரியது- சங்கரத்ன தேரர் வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை சுபத்திராம விகாரையில் தொழிலாளர் தினம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “கடந்த வருடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பாரிய ஒரு உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருந்தோம். இதுகுறித்து இன்னும் சரியான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என மிகவும் ம…
-
- 1 reply
- 525 views
-
-
மயானத்தில் தீவைத்து தற்கொலை; இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு! மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. பேத்தாழையயைச் சேர்ந்த ச.புஸ்பகுமார் வயது (-22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கள் கிழமையன்று சமூர்த்தி பணத்தினை பெற்று மனைவியிடம் வழங்கிவிட்டு தானும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக இறந்தவரின் மனைவி தெரிவித்தார். குறித்த நபர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் பின்னர் மனைவியின் பொலிஸ் முறைப்பாட்டின்…
-
- 0 replies
- 464 views
-
-
யாழ்.மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டது- அரச அதிபர் by : Litharsan யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் யாழ். மக்களுக்கு 940 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன், குறித்த உதவியானது அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதியுதவி மற்றும் உலர் உணவுப் பொருட்களும் உள்ளடங்குவதாக அரசாங…
-
- 0 replies
- 493 views
-
-
(நா.தனுஜா) மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபைஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கவுள்ளது. அது குறித்த விபரங்களைத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் மன்னிப்புச்சபை, குறித்த மகஜரில் கையெழுத்திட்டு, ஆதரவை வெளிக்காட்டுமாறு பொதுமக்களிடம்கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது: யாழ்.மிருசுவிலில் கடந்த 2000 ஆம் ஆண்டு 5 வயது சிறுவன் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியென நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் சார்ஜன்ட் சுனில…
-
- 40 replies
- 2.4k views
-
-
திகன அம்பால பேரெகெட்டிய விஹாராதி மரணம்: கண்டி முஸ்லிம்கள் அனுதாபம் திகன பிரதேசத்தில் அம்பால என்னும் கிராத்தைச் சேர்ந்த பேரெகெட்டிய விஹாராதிபதியின் மரணம் சமய , சமூக நல்லிணக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும். அந்நாருக்கு கண்டி வாழ் முஸ்லிம்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர். திகன பிரதேசத்தில் அம்பால என்னும் கிராத்தைச் சேர்ந்த பேரெகெட்டிய விஹாராதிபதி உயிரிழந்துள்ள தேரருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக கண்டி மாவட்ட , நகர ஜம்மிய்யதுல் உலமா, கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம். ஆகிய அமைப்புக்களின் பிரதிதிநிதிகள் விஜயம் செய்தனர். 48 வயதுடைய இவர் 29 ஆம் திகதி மரணம் எய்தினார். இருவருடைய இறுதிக் கிரியை நேற்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை …
-
- 0 replies
- 419 views
-
-
கடற்படை வீரரின் தந்தை, சகோதரர் மீது தாக்குதல் வாரியபொல நெட்டிய பிரதேசத்தில், கடற்படை வீரர் ஒருவரின் தந்தை, அவரது சகோதரர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், வாரியபொல பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் வாரியபொல ஆதார வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் கடமையாற்றும் வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படைவீரரின் குழந்தை சுகவீனமுற்றிருந்ததால், அதற்கு தேவையான மருந்தைக் கொள்வனவுச் செய்வதற்காக குறித்த இருவரும் மருந்தகம் ஒன்றுக்கு சென்றபோதே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்விருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எனச் சந்தேகித…
-
- 0 replies
- 416 views
-
-
காரைநகரிலிருந்து யாழ்.சென்ற பேருந்து கடலுக்குள் பாய்ந்தது Leftin April 30, 2020 காரைநகரிலிருந்து யாழ்.சென்ற பேருந்து கடலுக்குள் பாய்ந்தது2020-04-30T16:23:20+00:00உள்ளூர் காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரைநகர் – யாழ் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. http://thinakkural.lk/article/39878
-
- 3 replies
- 762 views
-
-
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளில் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த 26ஆம் திகதி அனுப்பிய கடிதத்துக்கு, பதிலளித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு தேர்தலை நடத்துவதில் விரும்பமின்மை தெரிவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கொரோனாவுக்கு எதிரான போராடும் இந்த வேளையில் இவ்வாறான சுயலாப அரசியல் விடயங்கள் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கலககபப…
-
- 3 replies
- 600 views
-
-
In இலங்கை May 1, 2020 6:08 am GMT 0 Comments 1064 by : Benitlas கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறை ஊழியர்கள் இரண்டு இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் 10 முதல் 15 இலட்சம் வரை அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார். இதற்காக திரைச்சேறி பத்திரம் வெளியிட்டு 300 பில்லியன் ரூபாய் பணம் ஒதுக்க வேண்டும். அவ்வாறான நிலைமை எடுக்கவில்லை என்றால் தனியார் துறை ஊழைியர்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகுவதனை ஒரு போது தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூ…
-
- 0 replies
- 470 views
-
-
இன ரீதியாக இலக்குவைத்து பிரசாரங்கள் ; தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு - ஹக்கீம் விசனம் கொவிட் - 19 தொற்று நோய் நிலைமை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன ரீதியாக இலக்குவைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், நாட்டில் குறிப்பாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருபதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் தெரிவித்துள்ளார். உலகெங்கும் அனுஷ்டிக்கப்படும் மே தினம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்லாம் தொழிலாளர்களின் உரிமைகளை…
-
- 1 reply
- 293 views
-
-
தொழில் இழப்பால் மாற்றுத்தொழிலில் ஈடுபடும் சிகை அலங்கரிப்பாளர்கள் தற்போதைய சூழ்நிலையில் பலதரப்பட்டவர்களும் தமது தொழிலை இழந்துவரும் நிலையில் வவுனியா மாவட்ட சிகை அலங்கரிப்பாளர்களும் வேறு வருமான வழிகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மாறாஇலுப்பை கிராமத்தில் வசிக்கும் 218 குடும்பங்களில் பலரது பிரதான தொழில் சிகை அலங்கரிப்பாகும். எனினும் தற்போதைய நிலையில் சலூன்கள் மூடப்பட்டுள்ளமையால் தமது அன்றாட தொழிலை இழந்து வாழ்வாதாரத்திற்கு பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமது குடும்பத்தின் அன்றாட தேவைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிறு தோட்ட செய்கையில் தற்போது ஆர்வம் செலுத்தி வருகின்றனர். எனினும் இவ…
-
- 1 reply
- 299 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பில் மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசாரணை May 01, 20200 கடந்த வருடம் நவம்பரில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பில் பயங்கரவாதத் தடைப் பொலிஸார் நேற்று நண்பகல் கொக்குவிலில் உள்ள சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளருமான மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட இந்த விசாரணையில் அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து சென்றனர். நேற்று நண்பகல் கொக்குவிலில் உள்ள மணிவண்ணனின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். கடந்த வருடம் நவம்பரில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பிலேயே அவரிடம் …
-
- 1 reply
- 288 views
-
-
வடமாகாண ஆளுநர் மருத்துவ விடுமுறை ? May 1, 2020 வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளார். இன்று மே முதலாம் திகதி தொடக்கம் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். என ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 308 views
-
-
உலகின் கொடூரமான தீவிரவாதத்துடன் போராடி வெற்றிப்பெற்ற நாம் தற்போதைய சூழ்நிலைக்கு ஒருபோதும் மண்டியிட மாட்டோம். கடந்த காலத்தை குற்றஞ்சாட்டும் பழக்கம் எமக்கு கிடையாது. உலக தொழிலாளர் தினத்தன்று கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராக போராடும் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அனைவரும் சௌபாக்கியத்துடன். வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொழிலாளர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உலகவாழ் தொழிலாளர்கள் இம்முறை கொவிட்-19 நோய் தொற்று சவாலை எதிர்க்கொண்டுள்ள நிலையில் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய,சமய வைபவங்களை போ…
-
- 3 replies
- 628 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – ஜனாதிபதி மீண்டும் உறுதி! by : Benitlas தீவிரவாத வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காதிருப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர்…
-
- 5 replies
- 571 views
-
-
(ஆர்.யசி) கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து மக்களையும் நாட்டினையும் மீட்டெடுக்கும் போராட்டத்தில் வெற்றியை நெருங்கிவிட்டதாக கூறும் அரசாங்கம், மக்கள் கொரோனாவுடன் போராடக்கூடிய வாழ்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றது. அமைச்சரவை தீர்மாங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பதிரன இது குறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் இலங்கையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சகல வைத்திய அதிகாரிகள், பணியாளர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிசார் என அனைவருக்குமே இதற்கான நன்றிகளை கூறியாக வே…
-
- 1 reply
- 456 views
-
-
கொரோனாவிற்கு பிந்திய இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உதவ தயார் – சீனா “இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்றது. அண்மையில் நாம் கொவிட் 19 அனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளது” என்று இலங்கையின் பதில் சீன தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை நேற்று(புதன்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் சுமுகமான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்ட பதில் தூதுவர் ‘உ…
-
- 7 replies
- 696 views
-
-
அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு, இலங்கையை முற்றாக மூட வேண்டும் – துஷார ஹிந்துனில் நாட்டின் பாரத்தூரத்தன்மையை உணர்ந்துக் கொண்டு, அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு இலங்கையை முற்றாக மூட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார ஹிந்துனில் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று அதிகளவான கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க இராணுவ முகாமும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள…
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
’அரசமைப்பை மீறினால் குடியுரிமை பறிபோகும்’ இந்தத் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், அரச தலைவர் என்ற வகையில், தங்களுடைய அதிகாரத்தை செயற்படுத்துமாறும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் ஆதரவுடன், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தியுள்ள முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரசமைப்பை மீறினால், குடியுரிமைகளை ஜனாதிபதி இழக்கவேண்டிய நிலைமையேற்படுமென எச்சரித்துள்ளார். 2020 ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கல் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு சட்டரீதியாகவும் மற்றும் அரசமைப்பி…
-
- 2 replies
- 974 views
-
-
எதிர்கட்சிகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டார் சபாநாயகர்! by : Benitlas நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். நாடாளுமன்றம் மீளக் கூட்டப்படுமாயின், அதன் சிறந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவது சபாநாயகரின் பொறுப்பாகும்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின…
-
- 0 replies
- 476 views
-
-
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிற்கு கடற்படையின் குடும்பத்தினர் அழைத்துவரப்பட்டனர்! by : Litharsan வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடற்படையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று (புதன்கிழமை) அழைத்துவரப்பட்டனர். வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 200இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், வவுனியா பம்பைமடுவில் …
-
- 0 replies
- 398 views
-
-
நட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம்- சிவமோகன் ஆலோசனை by : Litharsan நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளே தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆலோசனை வழங்கியுள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்த அவர் கூறுகையில், “மாவட்டம் தோறும் கொரோனோ வைத்தியசாலை ஒன்றை அமைக்குமாறு அரசாங்கம் அவசரமாக அறிவித்துள்ளது. அந்த அறிவித்தல்கள் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கு தெரியப்படு…
-
- 0 replies
- 362 views
-