ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143672 topics in this forum
-
இலங்கையில் ஒரு அரசியலமைப்பு சிக்கல் இலங்கையில் அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியால் கலைக்கப்படாதிருந்தால், கடந்த 15வது பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் செப்டம்பர் 1, 2020 வரை இருந்திருக்கும். கடந்த பாராளுமன்றின் புதிய உறுப்பினர்கள் 63 பேர், அந்த காலவரை தொடர்ந்திருந்தால் மட்டுமே ஓய்வூதியத்துக்கு உரித்துடையவர்கள் என்பது வேறு கதை. தேர்தல் திகதியாக 25 ஏப்ரில் ஆகவும், புதிய 16வது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு 14 மே எனவும் ஜனாதிபதியின் பிரகடனம் தெரிவித்திருந்தது. கொரோனா வைரசு காரணமாக தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுள்ளது. ஆகவே வரும் 25, தேர்தல் திருவிழா, நடக்காமல் கடந்து போகப்போகின்றது. மார…
-
- 0 replies
- 387 views
-
-
வெஸ்டன் யூனியனர் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல் Editorial / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 11:21 - 0 - 32 சர்வதேச பணப்பரிமாற்ற, செலுத்துகை துறையில் உலகபுகழ் பெற்ற நிறுவனமான வெஸ்டன் யூனியன் நிறுவனம் (Western Union), இலங்கையின் முன்னணி வெஸ்டன் யூனியன் முகவரான எம்.எம்.பி.எல் மணிமாஸ்டர் (MMBL Money Master) நிறுவனம் நாடளாவிய வெஸ்டன் யூனியன் வாடிக்கையாளர்களுக்கான பணத்தை அவர்களது விட்டுக்கே கொண்டுசென்று வழங்கிடமோர் சேவையை ஆரம்பித்துள்ளது. COVID - 19 சவாலுக்கிடையே அனைத்து இலங்கையரினதும் பாதுகாப்புக்கு அரசாங்கத்தால் நாடளாவிய ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதோர் சந்தர்ப்பத்தில் உலகளாவிய ரீதியில் உங்கள் அன்பானவர்கள் அனுப்பிடும் பணத…
-
- 7 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில், சிறுவர்கள் இருவர் கிணற்றில் வீசப்பட்டு கொலை – தந்தை கைது மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களது தந்தையினால் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் முறையே 10, 07 ஆகிய வயதுகளையுடைய இரு குழந்தைகளின் சடலங்களையும் பொலிஸார் கிணற்றிலிருந்து கண்டெடுத்துள்ளனர். அஷீமுல் ஹக் (வயது 10) என்ற சிறுவனும், அஷீமுல் ஷாஹியா (வயது 07) என்ற சிறுமியுமே சடங்களாக கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம…
-
- 4 replies
- 696 views
-
-
இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தேசிய பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள் சம்பந்தமாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன,; நேற்று(15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடமைகளை தடையின்றி மேற்கொள்ளக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்காது, உரிய…
-
- 1 reply
- 324 views
-
-
நாடாளுமன்றத்தை மழுங்கடிக்கும் வகையிலே அரசாங்கம் செயற்படுகிறது -சுமந்திரன் குற்றசாட்டு ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றம் இன்றிய ஆட்சியை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றமே ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானதாகும்.எனினும் நாடாளுமன்றம் இன்றி தனது சர்வாதிகார ஆட்சியையே ஜனாதிபதி முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நாடாளுமன்றம் செயற்படாமலிருக்கவும் முடியாது. ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றமே முக்கியமானதாகும். எனவேதான் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். அதன்பின்னர் பொது சுகாதார நிலைப்பாட்டினைப் பெற்று மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாள…
-
- 3 replies
- 425 views
-
-
வடக்கில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை: தேவையற்ற அச்சம் வேண்டாம்!- பணிப்பாளர் சத்தியமூர்த்தி by : Litharsan வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லையெனவும் ஓரளவு பாதுக்கப்பாகவே வட மாகாணம் உள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்பதுடன் விழிப்புடன் இருப்பதும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிக…
-
- 1 reply
- 389 views
-
-
ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 07:48 - 0 - 0 முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளையடுத்து, இவர் இன்று (14) புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ரஷட-பதயதனன-சகதரர-கத/175-248544
-
- 7 replies
- 1.5k views
-
-
(எம்.மனோசித்ரா) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் மதத்தையோ அல்லது இனத்தையோ தொடர்புபடுத்தத் தேவையில்லை எனத் வலியுறுத்திய அஸ்கிரியபீடம் இறுதி சடங்குகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை தெரிவித்துள்ளதே தவிர அது கட்டளையல்ல என்றும் குறிப்பிட்டது. இறுதி சடங்குகள் குறித்த உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் மதம் மற்றும் நம்பிக்கை இ சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் மேலும் கூறுகையில் கொரோனா வைரஸானது இனஇ மத பேதமின்…
-
- 3 replies
- 642 views
-
-
பருப்பு, டின்மீன்களை, சாதாரண விலையில் விற்பனை செய்யவுள்ளதாக, சில்லறை வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மார்ச் மாதம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில், பருப்புக்கும் டின்மீனுக்கும் அதிகபட்ச சில்லறை விலையைக் குறிப்பிட்டிருந்தது. இதன்பிரகாரம், மைசூர் பருப்பின் ஒரு கிலோகிராமின் 65 ரூபாயாகவும் 425 கிராம் டின்மீனின் விலை 100 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கடந்த வாரம் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கிவிட்டு, பருப்பு மற்றும் டின்மீனை, செதொர மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு, அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, பருப்பு மற்றும் டின்மீனை, சாதாரண விலையில் விற்பனை செய்வதற்குத் தீர்மானித்துள்ள…
-
- 1 reply
- 422 views
-
-
கொரோன வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நபர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பூர் நோக்கி சுமார் 100 நபர்களை ஏற்றிச்சென்ற மூன்று பஸ்களில், இரண்டு பஸ்கள் கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தனமபபடததல-நலயததகக-சனற-பஸகள-வபதத-ஒரவர-பல-29-பர-கயம/150-248619
-
- 0 replies
- 338 views
-
-
ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. குறித்த பகுதிகளுக்கு பி.ப 4.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஊரடங்கு நீக்கப்படும் காலப்பகுதியில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 260 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இடமில்லை…! கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள சகல நாடுகளும் செயற்பட்டு வருகின்ற நிலையில் வளர்சிகண்டுவருகின்ற நாடுகளுக்கு உதவும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நெருக்கடிகளை சந்திக்கும் நாடுகளுக்கு கடன் உதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நாடுகளில் இலங்கை உள்வாங்கப்படவில்லை. இதில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மறுசீரமைக்கப்பட்ட பேரழிவு கட்டுப்பாடு மற்றும் நிவாரண அறக்கட்டளையின் கீழ் அதன் உறுப்பு நாடுகளில் சிரமப்படும் நாடுகளுக்கான நிதி நிவாரண உதவிகளை வழங்க நேற்ற…
-
- 0 replies
- 262 views
-
-
முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுட்டிருந்த 15 பேர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுவருட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த 15 பேர் மீது முள்ளியவளை பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆலயங்களில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலயங்களில் திருவிழா உள்ளிட்ட பூஜை நடத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.newjaffna.com/2020/04/14/13700/
-
- 4 replies
- 648 views
-
-
பாறுக் ஷிஹான் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா நோயினால் மரணிப்போரை அடக்கவும் முடியும், எரிக்கவும் முடியுமென இரு தெரிவுகளை வழங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் கொவிட்-19 இனால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை வலியுறுத்திக் கேட்டுள்ளது. இது விடயமாக மேற்படி சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி, செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர்கனி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (14) கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; "தற்போது சர்வதேச நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொவிட்-19 இலங்கை திருநாட்டையும் விட்டுவைக்கவில்லை. இந்நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை…
-
- 2 replies
- 695 views
-
-
சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்துங்கள் தமிழ் , சிங்கள புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டினுள் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் நிலைமையால் நாடு பூராகவும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்றது. இதனால் புத்தாண்டு சம்பிரதாயங்களையும் வீட்டுக்குள்ளேயே செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நிலைமையை கருத்திற்கொண்டு முடிந்தளவுக்கு தமது வீட்டுக்குள்ளேயே தமது குடும்ப உறுப்பினர்களுடன் அவற்றை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அந்த காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியில் செல்வோ , நிகழ்வுகளை நடத்தவோ வேண்டாமெனவும் மக்களுக்கு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3) …
-
- 16 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தனர். அரசினால் அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் இன்று (13) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது. அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியினால் பாதிக்கப்படாமலிருக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப்…
-
- 5 replies
- 827 views
-
-
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்.சாவகச்சேரி மண்டுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த வயோதிபர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சாவகச்சேரி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 5 replies
- 648 views
-
-
பருத்தித்துறையில் கஞ்சாவுடன் பிடிபட்ட படகு! கப்பல் ஒன்றிலிருந்து மாற்றப்பட்டதா? நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இலங்கை கடல் பகுதி முழுவதும் ரோந்துப் பணிகளை வலுப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ரோந்துகளின் விளைவாக, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் நேற்று (13) பருத்தித்துறை மணல்காடு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி ஒன்றைக் கண்டுபிடித்தனர். குறித்த படகு மேலும் சோதனை செய்த போது 05 சாக்குகளில் இருந்த 133 கிலோ மற்றும் 57 கிராம் கஞ்சாவைக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் கஞ்சா பொதி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 22, 26 மற்றும் 37 வயதுடைய பருத்…
-
- 1 reply
- 459 views
-
-
நாம் வாழும் வீட்டை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வறட்சியான காலநிலை காரணமாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் குறைவாக காணப்பட்டது. தற்போது பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்கள், தூய்மையான நீர் இருக்கும் பகுதிகள், மழைநீர் வழிந்தோடும் குழாய்கள் மற்றும் வீட்டை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருங்கள். …
-
- 0 replies
- 459 views
-
-
மக்களின் வாக்குகளைப் பெற்ற மலையக அரசியல் தலைமைகள், தங்களது அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள அவர், 'கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், எம் மக்கள் வருமானத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருகிறார்கள். எம் மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள், இதுவரையில் பாதிக்கப்பட்ட எம் மக்களை சரியான முறையில் சென்றடையாமல், மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 'இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் என்னை நாடி இருந்தார்கள்…
-
- 0 replies
- 431 views
-
-
கிளிநொச்சி மலையாளபுரம் கிராம மக்களுக்கு யேர்மனி தமிழ் மன்றம் பிராங்போட் உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. Posted on April 13, 2020 by சகானா 97 0 தாயகத்தில் கொரோனாவின் ஊரடங்குச் சட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அன்றாடம் தொழில் புரிந்து வாழ்கை நடத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த 51 குடும்பங்களுக்கு யேர்மனியில் பிராங்போட் நகரத்தில் உள்ள “தமிழ் மன்றம் பிராங்போட்”எனும் அமைப்பு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. இவ் உலர்வுணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் தமிழ் மன்றத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். https://www.kuriyeedu.com/?p=248413
-
- 3 replies
- 571 views
-
-
"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பில் நெருக்கடிகளை சந்திக்கும் நாடுகளுக்கு கடன் உதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தைந்து நாடுகளில் இலங்கை உள்வாங்கப்படவில்லை. "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள சகல நாடுகளும் செயற்பட்டு வருகின்ற நிலையில் வளர்சிகண்டு வருகின்ற நாடுகளுக்கு உதவும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மறுசீரமைக்கப்பட்ட பேரழிவு கட்டுப்பாடு மற்றும் நிவாரண அறக்கட்டளை (சி.சி.ஆர்.டி) இன் கீழ் அதன் உறுப்பு நாடுகளில் சிரமப்படும் நாடுகளுக்கான நிதி நிவாரண உதவிகளை வழங்க நேற்று திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியம் ஒப்…
-
- 3 replies
- 563 views
-
-
சீனத்தூதகரத்தின் டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தம் தவறுதலாக இடம்பெற்றது என டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டிருக்கும் தூதரகம், கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு நேற்று திங்கட்கிழமை டுவிட்டர் நிர்வாகத்தினால் இடைநிறுத்தப்பட்டது. அதற்கான விளக்கங்கள் எவையும் நேற்று வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே இதுகுறித்து சீன தூதரகம் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: டுவிட்டர் நிர்வாகம் பிரத்தியேக காரணங்கள் எதனையும் கூறாமல் 13 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கான சீனத்தூதரகத…
-
- 0 replies
- 472 views
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எம்.எஸ்.சி மாக்னிஃபிகா எனும கப்பலில் இருந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 75 வயதுடைய ஜேர்மனிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜேர்மனிய-பெண்-உயிரிழப்பு/175-248527
-
- 0 replies
- 305 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் 11ஆம் திகதியிடப்பட்ட 2170/8 என்னும் இலக்க விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது. குறித்த வர்த்தமானியில் 4ஆம் சரத்தில், 61அ பிரிவின் பிரகாரம், 'கொறோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள ஆளொருவரின் பூதவுடலின் தகனம்' என்ற பகுதியில் பின்வரும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. (1) அறுபத்தோராம் மற்றும் 62ஆம் ஏற்பாடுகள் எதுஎவ்வாறிருப்பினும், கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடல், சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்…
-
- 12 replies
- 2.3k views
-