ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
முதலை கடித்து, உயிரிழந்த நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்னது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (03.04.2020) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் இளைஞனை முதலை கடித்து இழுத்து சென்றதாக இவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர். புனாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (வயது 15) எனும் இளை…
-
- 12 replies
- 1k views
-
-
“கொரோனா உங்களை அணுகாது” என்ற தலைப்பில் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை யொன்று விளம்பரம் ஒன்றை கடந்த 15ஆம் திகதி பிரசுரித்திருந்தது. இதனைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர் மகிந்த இப்படி பொறுப்பற்ற விதத்தில் விளம்பரம் பிரசுரித்ததற்கு தனது கண்டனத்தை வெளியிட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டமானது நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே குறித்த விளம்பரம் தொடர்பில் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கிறிஸ்தவ மதபோதனை ஒன்று தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்று விளம்பரம் செய்துள்ளது . “கொரோனா உங்களை நெருங்காது” என்ற அந்த விளம்பரத்தில் இலக்கம் – 14 ராசாவத்தை, சுதுமலை வீதி, மானிப்பாய் பகுதியில் இடம்பெற…
-
- 1 reply
- 415 views
-
-
கொரோனா வைரஸின் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் உள்ள 24 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சுகாதாரம், பாதுகாப்பினை உறுதி செய்யும் முகமாக சர்வதேச செஞ்சிலுவை குழுமத்தின் இலங்கை பேராயம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை குழுவின் (ஐ.சி.ஆர்.சி) இலங்கை பேராயமானது பொதுமக்களையும், தடுத்து வைக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன், நீதி அமைச்சு. சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் மா அதிபர், ஏனைய அதிகாரிகள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதுதொடர்பில், ஐ.சி.ஆர்.சியின் இலங்கைக்கான பேராயத்தின் தலைவர் லுக்காஸ் பெட்ரிடிஸ் கூறு…
-
- 0 replies
- 547 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்று மாலை மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் 11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 8 பேரும், இன்று மட்டும் புதிதாக மூன்று தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 11 தொற்றாளர்களில் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி, கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள…
-
- 3 replies
- 474 views
-
-
(தி.சோபிதன்) யாழ்ப்பாணம், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவா்கள் எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவே ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தாவடியில் 163 குடும்பங்கள் மற்றும் காங்கேசன்துறை தனிமை…
-
- 81 replies
- 6k views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் சகோதரரின் சடலத்தை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த சடலத்தை தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படு…
-
- 21 replies
- 1.5k views
-
-
உலமா சபை அல்ல எந்த அனுமான் சபை சொன்னாலும் கேட்க மாட்டோம் என்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் பேச்சு கண்டிக்கத்தக்க ஒன்றாகும் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்பதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், அண்மையில் சிங்கள மொழியிலான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இடைவேளையின் போது முஸ்லிம்களின் சமய உயர் சபையை கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகித்திருந்தார். பின்னர் அது பற்றி அவர் அளித்த முகநூல் வீடியோவில் முஸ்ல…
-
- 5 replies
- 649 views
-
-
Report us Steephen 1 hour ago நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை - மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இன்று மதியம் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கொட்டுவை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் மற்றும் தங்கொட்டுவை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதார துறையினர் மற்றும் பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனைகளை மீறி இவர்கள் ஜெபக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்ததாக தங்கொட்டுவை சுகாதார அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மோருக்குளிய பிரதேசத்தை சேர்ந…
-
- 1 reply
- 462 views
-
-
(ஆர்.யசி) நாட்டின் தேசிய உற்பத்தியை பலப்படுத்தி உணவு தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் சிறகவரை, பைற்றங்காய், வெண்டிக்காய், கறிமிளகாய், மிளகாய் ஆகியவற்றிகான விதைகள் வெறுமனே 20 ரூபாய்க்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. இன்று தொடக்கம் நாட்டில் சகல பகுதிகளிலும் விவசாயிகள் 20 ரூபாவில் விதைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இவற்றைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள பாரிய உணவுத் தட்டுப்பாடு இப்போது உலகில் சகல நாடுகளிலும் நிலவுகின்றது. அனைத்து நாடுகளில் தமக…
-
- 1 reply
- 380 views
-
-
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காகச் சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விவரங்களைத் தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – உலகை இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று இலங்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அத்தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஊரடங்குச் சட்ட நடைமுறையையும் மேற்கொண்டுள்ளதால் பலர் பல அச…
-
- 0 replies
- 249 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட, பேருவளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர் பிரசவித்த குழந்தையுடன் , மேலதிக சிகிச்சைகளுக்காக மாலபே, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு ( சைட்டம்) மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பதிவானது, கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இன்றி, பிரசவத்துக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த 28 வயதான தாய், பிரசவ சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தாதியர், அத்தாயின் ஊர் பெயரைக் கோரி, அதில் ஏற்பட்ட சந்தேகத்தில் செய்த பரிசோதனையின் போதே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என…
-
- 0 replies
- 232 views
-
-
(நா.தனுஜா) தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கட்டுப்பட்டுத்துவதற்கு அவசியமான சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருக்கிறார். இதுகுறித்து சஜித் பிரேமதாஸவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் மிகவும் விசனமடைந்திருக்கின்றனர். இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு சுகாதாரப்பிரிவினர், பாதுகாப்புப்பிரிவினர், அத்தியாவசிய சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருகின்றனர். எவ்வாறிருப்பினும் இந்த நெருக்…
-
- 0 replies
- 358 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை மாத்திரமல்லாது முழு உலகும் பாரியதொரு சுகாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பதற்றமும் அவசரமும் ஏற்றுக்கொள்ள கூடியதொன்றல்ல.நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனைகளை முன்னெடுக்காது தேர்தலுக்கான சூழலை ஏற்படுத்த முடியாது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்யப்பட வேண்டும். அநாவசியமாக இந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டால் மத வாத பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.தே.கவின் பாராளுமன்ற குழு மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்…
-
- 0 replies
- 195 views
-
-
தங்கொட்டுவ- மோருக்குள்ளி பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகளில் கலந்துகொண்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சமூக ஒன்று கூடலைத் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகள் இடம்பெறுவதாக தங்கொட்டுவ பொது சுகாதார பரிதோகர்களுக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், அதற்கமைய, குறித்த இடத்துக்கு பொது சுகாதார பரிசோதகர்களுடன் தங்கொட்டுவ பொலிஸாரும் சென்ற போது, அங்கு எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளுமின்றி ஆராதனைகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதில் கலந்துகொண்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டு, கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார…
-
- 0 replies
- 321 views
-
-
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று ஆய்வின் முடிவுகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி பெண்களை விட மூன்று மடங்கு ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையின் கணக்கின்படி பார்த்தால் 71% ஆண்கள்தான் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்றும் 29% தான் பெண்கள் பலியாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகம் ஆண்களை தாக்குவதற்கு என்ன காரணம் என்று இந்த ஆய்வு முடிவின்படி பார்த்தபோது…
-
- 0 replies
- 352 views
-
-
இரணைமடுவில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைப்பு கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனனர்.குறித்த அனுப்பிவைக்கும் நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் இரணைமடு விமானப்படை முகாமில் இடம்பெற்றதுடன் குறித்த அனைவரும் இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்த இடத்தினைப் பார்வையிட்டு வழிபடுவதற்காக சுற்றுலாப் பயணிகளாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 21ஆம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.அவர்கள் குறித்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் ஆகியுள்ள…
-
- 0 replies
- 254 views
-
-
கொரோனா குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் April 4, 2020 பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் சுகாதார துறையினர் ,அதிகாரிகள் பாடுபட்டு வருகின்றனர் என கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். நாட்டில தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றமை தொடர்பாக சனிக்கிழமை(4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் இந்த நாட்டிலே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் பொறுப்புள்ள பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலை பயன்படுத்தி தொற்று நோய் குறித்து பலர் …
-
- 0 replies
- 407 views
-
-
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தங்களது கிராம உத்தியோகத்தரையோ அல்லது சமூர்த்தி உத்தியோகத்தரையோ சந்தித்து புதிய சமூர்த்தி குடும்பங்களாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து சமுர்த்தி பயனாளிகளுக்கும் பல்வேறு உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் சமூர்த்தி கிடைக்கப்பெறாத, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தங்களது கிராம உத்தியோகத்தரையோ அல்லது சமூர்த்தி உத்தியோகத்தரையோ சந்தித்து புதிய சமூர்த்தி குடும்பங்களாக தங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் ம…
-
- 0 replies
- 319 views
-
-
In இலங்கை April 4, 2020 3:03 am GMT 0 Comments 1423 by : Benitlas நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையைக் கருத்திற்கொண்டு, தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாணத்தில் நடமாடும் வங்கிச் சேவையினை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய இன்று(சனிக்கிழமை) நடமாடும் வங்கிச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியூடாக இருபாலை, கோப்பாய், நீர்வேலி, புத்தூர், கைதடி ஆகிய பிரதேசங்களில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. எந்தவொரு வங்கிக் கிளை அட்டைகளையும் பயன்படுத்தி பயன்பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/யாழில்-இன்று-நடமாடும்-வங/
-
- 0 replies
- 308 views
-
-
இலங்கைக்கு உலக வங்கி 128 மில்லியன் டொலர் நிதியுதவி கொவிட் 19 நோய் தொற்றை எதிர்த்துப் போராட இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு உலக வங்கி முன் வந்துள்ளது. இதன்மூலம், இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் வைரஸ் பரவுவதை நிறுத்துவதற்கு அல்லது குறைக்க முன்னுரிமை அளிக்கும், நோய் தொற்று எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் சமூகங்களில் பரவலை தடுக்க உதவும். மேலும், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் திறனை வலுப்படுத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், மற்றும் கை கழுவுதல்,சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை பேணல் (Social Distance) பற்றி பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கும் உதவும்" என்ற…
-
- 6 replies
- 942 views
-
-
Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:38 - 0 - 15 கே.எல்.ரி.யுதாஜித் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கனடா பாடுமீன் அமைப்பால், 1,000 குடும்பங்களுக்கான அரிசி பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில், 300 குடும்பங்களுக்கும் கரடியனாறு பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் 521 குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில், ஆலயடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலும் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ள 521 குடும்பங்களுக்கு, 900 ரூபாய் பெறுமதி…
-
- 0 replies
- 489 views
-
-
சுன்னாகம் ஐயனார் கோவிலால் வறுமைக்குட்பட்ட மக்களுக்கான ரூபா 2 லட்சம் பெறுமதியில் உலர்உணவுப்பொருட்கள் இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டன. j/198,J/199,J/212 ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 150 பயனாளிகளுக்கு. ஒரு கிழமைக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் அம்மக்களின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் உடுவில் பொதுச்சுகாதார உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் அவர்கள் மூலமாகவும் பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அடியவர்கள் நிதிப்பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 5 replies
- 651 views
-
-
கோரோனா பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் – வீடியோக்களைப் பார்வையிடுவது ஆபத்து; மருத்துவர் சத்தியமூர்த்தி அறிவுரை அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்த நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும். மன உளைச்சல், பசி, தூக்கம் என்பவற்றை பா…
-
- 3 replies
- 445 views
-
-
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று இன்று (03) காலை முற்றுகையிடப்பட்டது. பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலதிகமாக வெற்று பரல்களும் அங்கிருந்து மீட்கப்பட்டன. அத்தோடு, பொன்னாலைக்கு வெளியே இருந்து வந்தவர்களே இங்கு கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டனர். முற்றுகையின்போது குறித்த நபர்கள் சிறு பற்றைகள் வழியாக தப்பிச்சென்ற போதிலும் பொலிஸார் அவர்களை அடையாளப்படுத்தியுள்ளனர். மேற்படி பிரதேசத்தில் இயற்கையாக உள்ள தாழ்வான இடத்தில் நீர் தேங்…
-
- 0 replies
- 351 views
-
-
(எம்.மனோசித்ரா) உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அதாவது இம் மாத நடுப்பகுதிக்குள் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறு அபாய கட்டத்திற்கு செல்லாமலிப்பதற்கு 3 காரணிகளை அரசாங்கத்திடம் முன்மொழிந்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் , கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 - 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும். எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கட…
-
- 3 replies
- 536 views
-