Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐதேகவை ஒருங்கிணைக்கும் கடைசி முயற்சியும் நேற்று தோல்வி by கி.தவசீலன் in செய்திகள் ஆழமாகப் பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான, கடைசி முயற்சியும் நேற்று தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் விசுவாசிகள் நேற்று இரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதிலும், இணக்கப்பாட்டுக்கு வரத் தவறிவிட்டனர், யானை சின்னத்தில் 22 மாவட்டங்களில் போட்டியிடுவோம் என்ற பிடிவாதத்தைக் ரணில் தரப்பு கைவிட மறுத்து விட்டது. இந்தச் சந்திப்பில் இருதரப்பு பிரதிநிதிகளும் சட்ட நிபுணர்களுடன் பங்கேற்றிருந்தனர். ரணி…

    • 0 replies
    • 287 views
  2. கொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு by கார்வண்ணன் in செய்திகள் கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது. கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், வழிபாட்டு நேரங்களில் இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தேவாலயங்கள் மற்றும் தேவாலயப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிக்காக, சிறப்பு அதிரடிப்படையின் உந்துருளி அணியொன்றும் ஈட…

    • 0 replies
    • 254 views
  3. சூத்திரத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் எரிபொருள் விலை 20 ரூபாயினால் குறைந்திருக்கும் – மங்கள by : Jeyachandran Vithushan ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போது செயற்படுத்தியிருந்தால் எரிபொருட்களின் விலை 20 ரூபாயினால் குறைத்திருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உலக சந்தையில் விலைகளுக்கு அமைய, நுகர்வோருக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காக எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் …

    • 0 replies
    • 457 views
  4. யாழ்.பல்கலை வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பதற்றம் by : Jeyachandran Vithushan இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் என யாழ்.பல்கலை சூழலில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும். இளைஞனார்கள் மீது பெற்றோர் கூட…

    • 0 replies
    • 383 views
  5. வௌிநாட்டில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பிற்கு அழைத்து வருவதை கண்டித்து போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் இன்று (10) ஈடுபட்டனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள், வித்தியாலய நுழைவாயிலை மூடியவாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ´வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்´, ´கொண்டு வராதே கொண்டு வராதே கொரோனாவை எங்கள் பிரதேசத்திற்கு கொண்டு வராதே´, ´இனரீதியாக அழ…

    • 0 replies
    • 247 views
  6. கொரோனா தனிமைப்படுத்தல் மையம் மட்டக்களப்பில்தான்: ஏனைய பகுதிகள் இரத்து? கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக வத்தளை, ஹெந்தலை பகுதியிலுள்ள தொழுநோய் வைத்தியசாலை, கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ஹெந்தல பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களையடுத்து, அரசாங்கம் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதையடுத்து, கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக மட்டக்களப்பு மாத்திரமே செயற்படவுள்ளதாக அறிய வருகிறது. கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஈரான், இத்தாலி, தென்கொரியாவிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். தென்…

  7. வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு மீள திரும்பியவர்கள் 14 நாட்களுக்கு வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே தங்கயிருக்க வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து விளக்கமளிப்பதற்காக கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதேநேரம், தனி நபராகவோ அல்லது குழுக்களாகவோ வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். தென்கொரியா, இத்தாலி மற்றும்…

  8. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட நால்வர் பெண்கள். தமிழர் அம்பிகா மாத்திரமே. அவர் இந்த ஆணக்குழுவின் இரண்டாவது ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தின் மத்தியிலேயே அதனை இடைநடுவில் துறந்திருக்கின்றார்.தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கம் இரண்டு பெண் வேட்பாளர்களில் இவரும் ஒருவர் என கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்…

    • 19 replies
    • 1.7k views
  9. இலங்கையின் முக்கிய செய்திகள் - 09.03.2020

    • 0 replies
    • 354 views
  10. பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்? கார்வண்ணன்i இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா அதிகாரிகளுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்க பிரித்தானியா நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என, பிரதிநிதிகள் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு எழுத்துமூலம் பதிலளித்த, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர், நைஜெல் அடம்ஸ், தடைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுவத…

    • 0 replies
    • 363 views
  11. மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு, கிரான் பிரதேசத்தில் இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி அமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள், தையல் இயந்திரம், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் அருவி பெண்கள் சிறு குழுக்களும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. மேற்படி, அமைப்பானது மாவட்டத்திலுள்ள பெண்களுக்கு பல்வேறுபட்ட தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதுடன், பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளத…

    • 2 replies
    • 328 views
  12. நடை பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவான இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து பல்வேறு விதமான சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு எனும் போர்வையில் அதிகளவான இரானுவ சோதனை நிலையங்களை இலங்கை அரசங்கம் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரமே அமைத்துள்ளது வடக்கு கடல் எல்லை ஊடாக இடம் பெறும் போதை பொருள் வர்தகத்தை குறைப்பதாக தெரிவித்து அனைத்து வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயனிக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துவதுடன் உடல் சோதனைகளும் நடத்தப்படுகின்றது . குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இருந்து மதவாச்சி செல்லும…

    • 1 reply
    • 456 views
  13. கல்வியை மேம்படுத்தும் நன் நோக்கத்தில் உண்டாக்கப்பட்ட மட்டக்களப்பு கெம்பஸானது அந் நிறுவனத்தின் எதுவித ஒப்புதலையும் பெறாது அரசு ஆக்கிரமித்திருப்பது கிழக்கு வாழ் மக்களுக்கு ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் இன்று (09)வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, இந் நிறுவனம் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்லாண்டு கால முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எடுக்கப்பட்ட தொடர் முயட்சியின் பலனாக வெளிநாட்டு நிதி அனுசரணையை பெற்று நிறுவப்பட்ட பாரிய நிறுவனமாகும். இன ரீதியிலான பல அழுத்தங…

    • 0 replies
    • 544 views
  14. பாறுக் ஷிஹான் மாவீரர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுமந்தவர்களாக நாங்கள் ஒன்றாக பயணிக்க வேண்டுமென, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், நேற்று (08) தெரிவித்தார். பெரியநீலாவணை, காவேரி விளையாட்டு கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்துரையாற்றுகையில், “அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதில் பல சக்திகள் பின்நின்று செயல்படுகின்றன. இவற்றுக்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” என்றார். “பேரினவாத சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய ஒரு தேர்தல் களமாக இத்தே…

    • 0 replies
    • 256 views
  15. அதாவுல்லா நிராகரிப்பு பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என முஸ்லிம் கட்சிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை என அறியவருகிறது. அதேவேளை முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் நேற்று மாலைவரை எந்த முடிவையும் எட்டியிருக்கவில்லை. இதேவேளை தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் இன்று மாலை தீர்மானமொன்று எட்டப்படலாம் என இரு கட்சிகளினதும் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. இது இவ்வாறிருக்க அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து இணைந…

    • 1 reply
    • 315 views
  16. கிழக்கிற்கு கொரோனாவை கொண்டு சேர்ப்பிப்பதில் ஏன் அரசிற்கு இத்தனை ஆர்வம் அதன்பேரில் மறைமுக நோக்கம் இருப்பதாக மக்கள் சந்தேகிப்பதில் நியாமிருக்கிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தின் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தை கொரோனா (கோவிட் 19) சிகிச்சை நிலையமாக மாற்றுவது குறித்த அரசின் முன்னெடுப்புக்களையிட்டு அவர் கிழக்கு மக்கள் சார்பாக தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை 09.03.2020 அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் ஏற்கெனவே இனவாத சிந்தனை நெருக்குவாரங்களால் சர்ச்சைக்குரியதொன்றாக மாறிவிட்டிருக்கும் சூழ்நிலையில் தற்ப…

    • 1 reply
    • 642 views
  17. இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வா உட்பட முக்கிய அதிகாரிகள் மீது பிரிட்டன் தடைகளை விதிக்கலாம் என தெரியவந்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள பதிலில் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் இணை அமைச்சர் நிஜல் அடம்ஸ் இலங்கையின் அதிகாரிகளிற்கு எதிராக தடை விதிக்கப்படலாம் என்பதை உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோயில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்த குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இங்கிலாந்து தன்னாட்சி உலகளாவிய மனித உரிமை தடைகள் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என அம…

    • 0 replies
    • 284 views
  18. (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சை தன்னகத்தே கொண்டிருக்க முடியாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எவ்வாறு பாதுகாப்பு துறையினருக்கு கட்டளையிட முடியும் என்று கேள்வியெழுப்பிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்களைப் போன்று மீண்டுமொரு சம்பவம் இடம்பெற்றால் நாட்டில் பொறுப்பு கூறுவதற்கும் யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டார். மீரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. நானும் அதில் அங்கத்துவம் வகித்த போதிலும் , 68 பக்கங்களில் நான் தனியாக ஒரு அறிக்கை தயா…

    • 0 replies
    • 203 views
  19. இறுதி யுத்தத்தில் இடம் பெற்ற போர் குற்ரச்சாட்டுக்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அவணங்கள் சாட்சியங்களை மனித உரிமை ஆணையாளரிடம் ;ஒப்படைத்துள்ளோம். இதன் அடிப்படையில் இலங்கையின் மீது போர்க் குற்ற விசாணை நடைபெறவே வலியுத்தி வருகிறோம் என இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்தார் உழைக்கும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தினம் நேற்று யாழ் பொது நுலகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மனிதகுலம் வாழ்கிறது என்றால் அது பெண்கள்தான் காரணம் அத்தகைய நாளில் நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்சியானது இந்த ட்டிலும் சரி…

    • 0 replies
    • 214 views
  20. இன, மத, மொழி, சாதி ரீதியில் தேர்தல்காலங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட சர்வ மத தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதேவேளை மக்கள் சுயமாக சிந்தித்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். வாக்காளர்கள் தமது வாக்குரிமையை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும்  பார்க்காமல் அதனை ஜனநாயகத்தினுடைய ஒரு அங்கமாக பார்த்து சரியான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவினர் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க …

    • 0 replies
    • 212 views
  21. தமிழ் மக்கள் மத்தியிலே எனக்கு பூரண ஆதரவு இருக்கின்றது. எதிர்வரும் தேர்தலில் நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று இலங்கை இழப்பீட்டு காரியாலத்தின் முன்னாள் ஆணையாளரும், பாராளுமன்றதேர்தல் வேட்பாளருமான கேணல் ரட்ண பிரிய தெரவித்தார். வவுனியாவிற்கு இன்றையதினம் விஜயம் செய்த அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததுடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நான் வடக்கு பகுதியிலே இராணுவத்தில் கடமையாற்றுகின்ற போது முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு தமிழ்மக்களுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருக்கிறது. தமி…

    • 0 replies
    • 1k views
  22. இலங்கையிலிருந்து அதிகமான பௌத்தர்கள் யாத்திரைக்குச் செல்லும், இந்தியாவின் புத்தகாயா யாத்திரைப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, குறித்த யாத்திரை தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்யும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை புத்தசாசன அமைச்சு முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பததகய-யததரய-இடநறதத-யசன/175-246575

    • 0 replies
    • 648 views
  23. மலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் by : Jeyachandran Vithushan மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி படி, தோட்ட தொழிலார்களுக்கான தோட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மலையக பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை தெரிவுசெய்வதற்காக ஹட்டனுக்கு இன்று (திங்கட்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்ட உயர்கல்வி அமைச்சர், தனது பணிகளை முடித்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகை…

    • 1 reply
    • 272 views
  24. சமகி ஜனபல வேகயவின் சின்னம் தொடர்பில் இன்று தீர்மானம் சமகி ஜனபல வேகயவின் சின்னம் தொடர்பில் இன்று (09) தீர்மானிக்கவுள்ளதாக அந்த கூட்டணியின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை கூறினார். எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் புதியதொரு கூட்டமைப்பை உருவாக்க அனுமதியளிக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சமகி ஜனபல வேகயவுடன் இணைந்துள்ளதாக அந்த கூட்டணியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 472 views
  25. வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானது – சி.வி. வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானதென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஷ்டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்குக் காரணம் உண்டு. பல…

    • 3 replies
    • 523 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.