ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
கண் ஊடாக உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ்! by : Yuganthini கொரோனா வைரஸ் கண்களில் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் 23 நாடுகளில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையிலேயே கொரோ வைரஸ் தொற்று தொடர்பாக கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் தும்மினால், இருமினால் அல்லது எச்சில் துப்பினால் ஆரோக்கியமாக இருக்கும் நபரொருவ…
-
- 0 replies
- 787 views
-
-
284 இலங்கையர்கள் மாத்திரமே சீனாவில் தற்போது உள்ளனர் சீனாவின் வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விசேட விமானத்தை அனுப்புவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை சீன அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ இதுதொடர்பாக தெரிவிக்கையில் Hubei வெளிநாட்டு அலுவலகமும் வுஹான் நகர சபையும் பேஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகமும் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார். சீனாவில் 284 இலங்கையர்கள் மாத்திரமே தற்போது உள்ளனர். சீனாவிலிருந்து 580 பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேல…
-
- 0 replies
- 332 views
-
-
கூட்டணி பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பங்காளிக்கட்சிகளுடன் ஐ.தே.க.பேச்சுவார்த்தை! by : Yuganthini கூட்டணியின் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பங்காளிக்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விஜேயபால ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக செயற்படுவார…
-
- 0 replies
- 295 views
-
-
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற இளம் பெண் கடந்த 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.குறித்த யுவதி 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த போதிலும் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(15) …
-
- 0 replies
- 308 views
-
-
புதுக்குடியிருப்பு பகுதியில் கை குண்டுகள் மீட்பு புதுக்குடியிருப்பு பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் 18 கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் மீட்கப்பட்ட கை குண்டுகள் யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன், கைப்பற்றப்பட்டுள்ள கைக் குண்டுகள் அனைத்தும் கிளிநொச்சி விசேட குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.எஸ்.எப்.ஜி. 87 ரக கைக் குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக் குண்டுகள் இரண்டும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.(15) …
-
- 0 replies
- 347 views
-
-
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்க கூட்டமைப்பு தீர்மானம்! யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்ற அதேவேளையில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின…
-
- 2 replies
- 547 views
-
-
சிங்கள மொழியில் தேசிய கீதம்- அரசாங்கத்தின் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கினார்சி.வி சிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இந்த வாரம் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறித்து வினவப்பட்டது. இதற்கு பதிலளித்து விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள பிரதியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் நிலம் ஆகியன இருந்த போதும் அதனை விட்டுக்கொடு…
-
- 5 replies
- 803 views
-
-
எப்போதும் சம்பந்தன்தான் கூட்டமைப்பின் தலைவர்.! – மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று சுமந்திரன் திட்டவட்டம் .! “இரா.சம்பந்தன், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் – சுகதேகியாக இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அவரே செயற்படுவார். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. அவருக்குரிய ஆற்றலும் அனுபவமும் இப்போது வேறு எவரிடமும் இல்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘சக்தி’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘மின்னல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இரா.சம்பந்தனுக்குப் பின்னர் தமி…
-
- 6 replies
- 843 views
-
-
இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருக்கக் கூடாது: சித்தார்த்தன் by : Dhackshala புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசாங்கத்தில் நாம் எதிர்பார்த்ததை போலவே பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தேர்தலை மையப்படுத்தியோ அல்லது தேர்தலிற்கு பின்னரோ மாற்றங்கள் ஏற்படலாம். ஜனாதிபதி கோட்டாவை பொறுத…
-
- 5 replies
- 976 views
-
-
ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுத்தார் ரத்ன தேரர் (எம்.நியூட்டன்) ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என எந்த கட்சிக்கும் நிலையானதொரு கொள்கை கிடையாது. நாட்டிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எந்த கட்சிக்கும் அக்கறையும் இல்லை என்று விசனம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்கினேஷ்வரனுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார். இந்து பௌத்த கலாச்சாரப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றபோது விருந்தினராக கலந்துகொண்டு …
-
- 3 replies
- 584 views
-
-
ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் - சஜித் உள்ளிட்ட 35 பேர் அதிரடி தீர்மானம்! இன்று (30) பிற்பகல் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார். இதேவேளை…
-
- 2 replies
- 590 views
-
-
மன்னாரில் இருந்து யாழ். நோக்கி சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம் by : Dhackshala மன்னாரைச் சென்றடைந்துள்ள ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணம் தற்போது யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. இந்த பயணத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இன்று (வியாழக்கிழமை) காலை 8.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த ஜீ.எச்.பீரிஸ் என்பவர் கடந்த 28ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம்’ நேற்று மாலை மன்னாரை சென்றடைந்தது. இ…
-
- 1 reply
- 305 views
-
-
தடயவியல் கணக்காய்வு 5 குறித்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கை இடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மத்திய வங்கியினால் தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், 5 அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றுடன் தொடர்புபட்ட பின்னிணைப்புக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் பாராளுமன்றத்துக்கு கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளுடன் பின்னிணைப்புக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. சகல தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு வழங்கு…
-
- 0 replies
- 207 views
-
-
'உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை' நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்ட பூர்வமாக எந்தவொரு அதிகாரமும் இல்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். குறித்த ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக இன்று (28) அவர் இதனை அறிவித்துள்ளார். ஆணைக்குழு விசாரணைகள் நிறைவடையும் வரை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்த ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு நேற்று (27) இது தொடர்பான அறிவித்தலை முன்வைத்திருந்தாக தெரிவிக்கப்ப…
-
- 1 reply
- 427 views
-
-
கடத்தல் வழக்கு: ‘தலையீட்டுக்கு எதிராக சட்டநடவடிக்கை’ -சொர்ணகுமார் சொரூபன் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இருந்து, முன்னால் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, கடற்படையின் முன்னால் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி ஆணைக்குழு பணிப்புரை வழங்கியிருப்பது சட்டவிரோதமானதெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதற்கு எதிராக சட்டநடவடிக்கைக்குச் செல்லவுள்ளதாகவும் கூறினார். யாழ்ப்பாணத்தில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் …
-
- 1 reply
- 418 views
-
-
மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த இந்தியாவிடம் உதவிகோரினார் ரணில்! நாட்டு மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக முகக்கவசங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். அத்தோடு சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது கோரிக்கை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்து ஏற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கான நடவடிக்…
-
- 1 reply
- 277 views
-
-
முகக் கவசங்களை துரிதமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை! முகக்கவசங்களை துரிதமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், முகக்கவசங்களின் உற்பத்தியையும் துரிதப்படுத்துமாறு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, முகக்கவச விற்பனை சந்தையில் தற்போது மாஃபியாவாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். எவ்வாறாயினும், முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.…
-
- 10 replies
- 937 views
-
-
’வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’ -க. அகரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செல்வாக்கு, வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. ஆகையால், டெலோவிலிருந்து விலகிச் சென்றவர்களால், இவ்விரு இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தமுடியுமென நான் நினைக்கவில்லையென, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். டெலோவின், வவுனியா மாவட்ட தலைமை அலுவலகத்தை கோவில்குளத்தில் இன்று (28) திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சிங்களத் தேசிய வாதம் பேசப்படுவதுடன…
-
- 1 reply
- 363 views
-
-
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது! by : Benitlas இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடால் திறந்து வைக்கவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த…
-
- 13 replies
- 1.9k views
-
-
போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு! பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, கோரக்கோவில், உதயபுரம் பிரதேசத்தில் நேற்று (26) சமூக சேவகர் வெ. மோகன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன், முஸ்லிம் அரசியல்வாதிகள் கருணா அம்மான் என்றால் நட்பாகத் தான் இருக்கின்றனர். சாதாரண மக்கள் நான் சண்டைக்கு வருவதாக நினைக்கின்றனர். அலிசாஹிர் மௌ…
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நியாயமான விசாரணையையும் நீதியையும் வலியுறுத்தி ‘கருப்பு ஜனவரி’ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை 6.00 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்று. போராட்டத்தில் பங்குகொண்ட ஊடகவியலாளர்கள், படுகொலைச் செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயமான நீதியை வழங்குவதன் அவசியம் மற்றும் முறையான விசாரணையின் அவசியத்துவத்தை எடுத்துத்துரைத்தனர். கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட, படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சண்ட லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, சிவராம், நிமலராஜன்…
-
- 1 reply
- 328 views
-
-
சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் கையில் இருக்கும் பொறிமுறையை தெப்பொன்று போட்டுவிட்டு செய்யமுடியாத ஒன்றை செய்வோம் என்று கூறுவது எங்கள் மக்களுக்கு நியாயமானது அல்ல என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியளார் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கால அவகாசம் எங்களுக்கு எவரும் கொடுத்தது கிடையாது ஊடகங்களுக்கும் மூன்று நான்கு வருடங்களாக விளங்கப்படுத்தியும் அதனை விளங்கமாட்டோம் என்று தலைகீழாக நிற்கின்றார்கள். சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது…
-
- 5 replies
- 1k views
-
-
பாட்டலியின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரின் சாரதி துசித திலும் குமார கொழும்பு நீதவான் முன்னிலையில் இரகசிக வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட…
-
- 2 replies
- 820 views
-
-
அடுத்த தேர்தலில் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை! by : Jeyachandran Vithushan சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர். சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கஃபே மற்றும் மனித உரிமைகள் மத்திய நிலையம் ஆகியன இந்த கோரிக்கையினை எழுத்து மூலமான கடிதத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள. ஒருவர் சிறையில் இருப்பதால் அவருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகில் உள்ள பல நாடுகளில், கைதிகளுக்கும் தேர்தலில் வாக்…
-
- 2 replies
- 1k views
-
-
விக்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு! நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து, மீண்டும் அவரை அமைச்சர் பதவிக்கு நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. …
-
- 3 replies
- 475 views
-