Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மக்களின் நிலங்களை அரசு அபகரிப்பு... சனிக்கிழமை, 26 பிப்ரவரி 2011 05:40 கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 300 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை அரசு அபகரித்துள்ளதாக பிரதேசவாழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நிலப்பரப்பை ராஜபக்ஸ குடும்பமும் அவர்களுக்கு நெருங்கியவர்களும் பங்கு போடுக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முருகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்திபுரம், ஆகிய பிரதேசங்களே அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு காட்டுப் பிரதேசங்களை வழங்குவதாக ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 40 வருடங்களாக வாழ்ந்து வந்த தம…

  2. யாழ்ப்பாணம், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்;ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கடந்த 20ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது கணவன் செவ்வாய்க்கிழமை (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் புதன்கிழமை (22) தெரிவித்தனர். கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார். கடந்த 20ஆம் திகதி, வீட்டிலிருந்து புறப்பட்ட மனைவி பருத்தித்துறையிலுள்ள நண்பி வீட்டுக்குச் சென்று வருவதாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.com/news/34770/57//d,article_full.aspx

  3. இலங்கைக்கு இத்தாலி ஹெலிகொப்டர்! மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (25) பிற்பகல் சந்தித்த போது இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது, மற்றும் இக்கட்டான நேரத்தில் இ…

    • 0 replies
    • 344 views
  4. 1987 ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒன்றாக இணைந்து செயற்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபையை இரு நிர்வாக அலகுகளாக பிரிந்து செயற்பட வடக்கு கிழக்கு ஆளுநர் மோகன் விஜயவிக்கிரம உத்தரவிட்டுள்ளார். இதன்படி வவுனியாவை தலமையகமாக கொண்டு வடக்குமாகாணசபை அலகு நிர்வாகமும், கல்முனையை தலமையகமாக கொண்டு திருமலை தவிர்ந்த கிழக்கு மாகாணசபை நிர்வாகமும், திருமலை மாவட்டம் நேரடியாக ஆளுநரின் கீழ் செயற்படும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : பதிவு

  5. (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவதுதிருத்தத்திற்கு அமைய …

  6. புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர் இருவரைக் காணவில்லை. புத்தளம் பகுதியில் புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இருவரைக் காணவில்லை சீனை குடியிருப்பு புத்தளம் அம்பாறை வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு வாகனத்தில் சென்ற ஆயுததாரிகளால் இரு மூத்த புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்டவர்கள் ‘மாமா’ பாக்கியராஜா எனவும் மற்றயவர் கரிகாலன் எனவும் இனம் காணப்பட்டுள்ளார். www.sankathi.com

  7. அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: பிரதமராக அண்ணன் சமல், பாதுகாப்பு அமைச்சராக தம்பி கோதபாய [sunday, 2011-03-13 05:18:34] உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுற்றதும் இலங்கை அமைச்சரவையில் மீண்டும் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் எமது செய்தி இணையத்தளத்துக்குத் தெரிய வந்துள்ளது. புதிய அமைச்சரவையில் தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படவுள்ளார். அதேவேளை, தற்போதைய பிரதமரான தி.மு. ஜயரத்ன சபாநாயகராக நியமனம் செய்யப்படவுள்ளார். இது இவ்வாறிருக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் உள்வாங்கி, அவருக்குப் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பை வழங்கவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெ…

  8. நீதிபதி மா.இளஞ்செழியன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டது! June 17, 2018 திருகோணமலை மாவட்ட மேல் நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்குரிய ஒழுக்ககோவைகளை கவனத்தில் கொள்ளாமல் நடந்தது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கம் இளஞ்செழியனிடம் கோரப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே இளஞ்செழியன் மீது, இந்த துறை ரீதியிலான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான முன் அனுமதி பெறாமல், அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு உ…

    • 1 reply
    • 906 views
  9. மட்டக்களப்பு தாழங்குடாவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாழங்குடா கல்முனை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.05 மணிக்கு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் ஒன்று கூடிய இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிரடிப்படையினரில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். மேலும் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.5k views
  10. மீரியபெத்த மண்சரிவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளை வடமாகாணசபை பொறுப்பேற்கப் போவதாக கூறியது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் தொடர்ந்தும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னதாக 75 பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது 3 பிள்ளைகள் மாத்திரமே தமது பெற்றோர் இருவரையும் இழந்துள்ளதாகவும் ஏனைய பிள்ளைகள் பெற்றோரில் ஒருவரையே இழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த பிள்ளைகளை பராமரிக்க அரசாங்கம் முழுமையான ஆளுமையை கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். http…

  11. வவுனியாவில் கிளேமோர்த் தாக்குதல்: இரு பொலிஸார் பலி. வவுனியா பாலமைக்கல்ப் பகுதியில் இன்று காலை 10:30மணியளவில் இனந்தெரியாதவாகள் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் சிறிலங்காப் பொலிஸார் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றொருவர் படுகாயமடைந்தார். சம்பவ விசாரணைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சென்ற மாவட்ட நீதிவான் எம்.இளஞ்செழியன் விசாரணைகளை மேற்கொண்ட பின் கொல்லபட்ட கொன்ஸ்ரபிள்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தவிட்டார். காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -Sankathi-

  12. அம்பாந்தோட்டை துறைமுகத்தால் இலங்கையின் பாதுகாப்பிற்கு ஆபத்தா?- பிரதமர் தெரிவித்தது என்ன? இலங்கையின் தென்பகுதி கடல் ஊடாக ஊருடுவல் இடம்பெறும் என இலங்கை அரசாங்கம் கவலையடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சில நாட்களிற்கு முன்னர் கொழும்பில் பிரதமர்ஆற்றிய உரை குறித்து தெளிவுபடுத்தும் விதத்தில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் தங்கள் தென்பகுதிக்கான கட்டளைபீடத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றுகின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்பதால் அச்சமடையதேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். பிரத…

  13. 23 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு யுவதி கைது! Published By: T. SARANYA 28 FEB, 2023 | 03:12 PM 23 கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா தெரிவித்தார். துபாயிலிருந்து எமிரேட்…

  14. யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் யாழ் ரயில் நிலையம் ஒரு மாதத்தில் ஒரு கோடி 69 இலட்சத்து 415 ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளதாக யாழ்ரயில் நிலைய அதிபர் டி. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு உட்பட தென்பகுதிகளுக்கு சுமார் 26,000 பேர் பயணம் செய்துள்ளனர். தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரை சுமார் 21,000 பேர் வரை பயணம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=7752#sthash.Ka0XsgNZ.dpuf

  15. துறை­மு­கத்தை சீனா­விற்கு வழங்­கி­யமை மேற்­குல நாடு­க­ளுக்கு அவ­மானம் : அத­னா­லேயே பொய்க் குற்­றச்­சாட்­டுக்கள்– மஹிந்த ராஜ­பக்ஷ (நா.தினுஷா) அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு வழங்­கி­ய­மையால் மேற்­கு­லக நாடு­க­ளுக்கு ஏற்­பட்ட அவ­மானம் கார­ண­மா­கவே போலி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­க­ப்ப­டு­கின்­றன என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஊடக பிரிவு நேற்று வியா­ழக்­கி­ழமை வெளி­யிட்ட விஷேட அறிக்­கை­யி­லேயே மெற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது , 2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ச…

  16. இலங்கை கிரிக்கட் துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது – ட்ரவர் பேய்லிஸ்:- 08 ஏப்ரல் 2011 இலங்கை கிரிக்கட்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக பதவிக்காலம் பூர்த்தியாகும் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரவர் பேய்லிஸ் தெரிவித்துள்ளார். கிரிக்கட் விளையாட்டுக்கு மேலதிகமான வெளி விடயங்கள் தொடர்பிலும் அணித் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையே தற்போது காணப்படுவதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணியின் வீரர்கள் கிரிக்கட் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தக் கூடிய வகையிலான நிலைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் தலையீடுகளினால் விளையாட்டு வீரர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிப் போட்டியி…

  17. புலிகளின் புலனாய்வுத் தோல்விதான் பின்னடைவிற்கு காரணம்- மனம் திறக்கின்றார் முன்னாள் புலனாய்வுப்பிரிவு போராளி விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தோவ்விதான் தமது தோல்விக்கான பிரதான காரணம் என்று கூறுகின்றார் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முன்னர் செயற்பட்ட ஒரு முக்கிய பொறுப்பாளர். தற்பொழுது ஒஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவர், இரட்டை உளவாளிகளின் செயற்பாடுகளால் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், கே.பி. கைமாறிய விவகாரம் உட்பட இதுவரை வெளிவராத பல இரகசியங்களை அவர் வெளியிட்டுள்ளார். வெகுவிரையில் இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ப…

  18. கரும்புலிகள் பற்றி கனடிய எதிர்க்கட்சித் தலைவர் எழுதிய அதிர்ச்சித் தகவல்.. [ பிரசுரித்த திகதி : 2011-04-14 05:48:04 PM GMT ] லிபரல் கட்சித்தலைவர் மைக்கல் இக்னாட்டியெவ் குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்தி கனடியத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 2004 ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட The Temptations of Nihilism என்ற நூலே பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அந்நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில் பக்கம் 126இல் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார். The Tamil Tigers Suicide bombers, mostly female, were indoctrinated to offer their sacrifice as an act of love for the Tamil Leader. Dying was reconceived as an orgasmic reunion with …

  19. இளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இந்த உத்தரவை வழங்கினார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர…

  20. இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார் Published By: Rajeeban 24 Mar, 2023 | 10:02 AM தமிழர் தேசமான ஈழத்தினை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறுதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழர் தேசமான ஈழத்தினை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இந்த அவையின் அங்கத்துவ நாடுக…

  21. ''கொக்கட்டிச்சோலைகள் இன்னும் தொடர்கின்றன'' தெ.றஞ்சித்குமார்- சிங்கள ஆட்சியளர்கள் எப்போதும் இன வெறிபிடித்த நிலையிலேயே தமழர்களை வதைத்துவருகின்றனர். கொடூரமான முறையில் தமிழர்களின் பிரதேசங்கள் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் ஏனைய இடங்களிலும் இது தொடர்கிறது. படுகொலைகள், கடத்தல்கள், பாலியல் வன்முறைகளென பலவித்திலும் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இன அழிப்பின் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது. தென் தமிழீழ மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையில் தமிழ் மக்கள் மீதான படுகொலையும் வரலாற்றில் முக்கியமானது. 1987 இல் கொலை வெறி பிடித்த இனவாதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு திட்டமிட்ட முறையில் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களை கொன்றுகுவ…

  22. இலங்கை தொடர்பில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை குறித்து, ரஷ்ய விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் கலந்துரையாடுவார் என ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் ரஷ்ய விஜயங்களின் போது கலந்துரையாட வேண்டியவை குறித்து செயலாளர் நாயகத்திற்கு அறிக்கை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டு, அவற்றுள் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் ரஷ்யாவுடன் கலந்துரையாடுவார் என கூறப்பட்டது. அந்த அறிக்கையில் நிபுணர் குழு அறிக்கை பற்றியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. My link

    • 1 reply
    • 1.5k views
  23. “யாழ்ப்பாணக் கல்லூரியின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம் என்று வலியுறுத்தி கல்லூரியின் மீது அக்கறை கொண்ட சமூகத்தால் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் நாளைமறுதினம் (24.07.18) காலை 7.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணக் கல்லூரி வாயிலில் முன்னெடுக்கப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கல்லூரியின் மீது பற்றுக்கொண்ட பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளை கலந்துகொண்டு ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். அமைதிவழியில் முன்னெடுக்கப்படும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணக் கல்லூரியி…

  24. மட்டு சந்திவெளியில் பரமேஸ்வரக் குருக்களை சுட்டுக் கொன்றது, ஒட்டுக்குழு கருணா கும்பலின் முக்கியஸ்தகர் "சந்திவெளி மாமா" எனப்படும் "வடிவேல் மகேந்திரனே". கடந்தவாரம் மட்டு சந்திவெளியில் செல்லையா பரமேஸ்வரக் குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக் கொல்லப்பட்டதை நெருப்பு ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்ததை யாவரும் அறிவீர்கள். இக்கொலை தொடர்பாக எமக்குக் கிடைத்த உறுதியான தகவலின்படி, இக்கொலையை இன்று கருணா ஒட்டுக்குழுவின் முக்கியஸ்தகராக இருக்கும் "சந்திவெளி மாமா" அல்லது "புளொட் மாமா" என்றழைக்கப்படும் "வடிவேல் மகேந்திரனே" செய்ததாக தெரிய வருகிறது. பரமேஸ்வரக் குருக்களை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற வடிவேல் மகேந்திரன், தனது கைத்துப்பாக்கியினாலேயே அவரைக் கொன்றதாக நம்பகரம…

    • 0 replies
    • 1.3k views
  25. இலங்கைத் தமிழர்கள் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்: கலைஞர் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம் என, முதல் அமைச்சர் கலைஞர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். செய்தியாளர்: இலங்கை பிரச்சினை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே? முதல்வர் கலைஞர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.