Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை ஒழிக்­க வேண்­டு­மென பிர­தமர் கூறி­யி­ருப்­பது யதார்த்­த­மானதே: உலமாக் கட்சி தலைவர் Published by Loga Dharshini on 2019-12-19 16:11:48 இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை ஒழிக்­க­வேண்டும் என பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ கூறி­யி­ருப்­பது யதார்த்­த­மான கருத்­தாகும் என உலமாக் கட்சி தலைவர் மெள­லவி முபாறக் அப்துல் மஜீத் தெரி­வித்தார். பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷவின் கருத்து பற்­றிய உலமா கட்­சியின் நிலைப்­பாடு குறித்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­மளிக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், மஹிந்­தவின் மேற்­படி கருத்­துக்­கா­க ­முஸ்­லிம்கள் பதற்­றப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை. இதற்­காக தீவி­ர­வாதம்…

  2. சம்பந்தனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிறிகாந்தா Published by T Yuwaraj on 2019-12-19 16:22:17 தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறிய கருத்தை கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கடசியின் தலைவர் ந.சிறிகாந்தா இது எந்த வகையில் நல்ல விடயம்?யாரை திருப்திப்படுத்த இவ்வாறான கருத்தை அவர் கூறினார் என்பதையும் பகிரங்கமாக மக்களுக்கு கூறவேண்டும் என தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது கடசி அலுவலகத்திகேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் இன விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்படடமை நல்லதொரு …

    • 2 replies
    • 1.2k views
  3. யாழிற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானம்! யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/யாழிற்கு-5-மணித்தியாலங்க/

  4. கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சோகம் – முதியவர் உயிரிழப்பு கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி 155ஆம் கட்டை ஏ9 வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. தனியார் நிறுவனமொன்றின் காவல் தொழிலாளியாக பணிபுரியும் குறித்த நபர் இன்று காலை பணிக்காக சைக்கிளில் பயணித்தவேளை, தென்னிலங்கையிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் காயமடைந்த குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான சின…

  5. இலங்கையின் அம்பாரந்தோட்டம் அருகே உள்ள மாத்தளை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றும் பணிகள், இந்தியாவின் உதவியின்றி, இலங்கையே மேற்கொள்ளும் என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதையடுத்து மட்டகளப்பு விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக செயல்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்பாரந்தோட்டம் அருகில் உள்ள மாத்தளை பன்னாட்டு விமான நிலையத்தை இந்தியா கட்டித் தர உள்ளதாக வந்த செய்திகளை மறுத்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை அரசே இப்பணிய…

    • 0 replies
    • 329 views
  6. -க. அகரன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்கும் என்ற வெடிகுண்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெடிக்க வைத்துள்ளாரென, சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, பேரம் பேசலுடன் பெறுவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதும், அவை அனைத்தையும் கோட்டைவிட்டு, கடந்த ஆட்சியாளர்களுடன் சரணாகதியடைந்து, நான்கு வருடங்களாக நிஷ்டையில் இருந்து விழித்தவர் போன்று, தமிழ் மக்களை ஏமாற்றும் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார் என்றும், ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் அதில், போர் நிறைவுக்கு வந்த பின்னர், ப…

  7. அரசியல் பழிவாங்கல் ஆரம்பம் – அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் Dec 19, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட சம்பவம், புதிய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கைது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ள ஐதேகவின் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன போன்றவர்கள், புதிய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதிபரானாலும், சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்பதை இந்தளவு விரைவாக கோத்தாபய ராஜபக்ச நிரூபிப்பார் என்று நினைத்துப் பார்க்க…

    • 2 replies
    • 524 views
  8. -செ.கீதாஞ்சன் தமக்கு உதவி செய்ய மறுத்த பாலம் புனரமைக்கும் ஒப்பந்தக்காரர்களின் களஞ்சிய அறைகள், மணல் கொள்ளையர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவமொன்று, முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பிரதான வீதியில், நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது. அம்பகாமம் பிரதான வீதியில் பாலம் திருத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அவ்வீதிக்கு அருகில் தற்காலிக வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (18) இரவு, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பரொன்று, அந்தத் தற்காலிக வீதியில் நிரப்பப்பட்டிருந்த மணலில் புதையுண்டுள்ளது. இதன்போது, வீதியில் பாலம் புனரமைப்பு செய்யும் ஒப்பந்ததாரர்களிடம், டிப்பரில் வந்தவர்கள் உதவி கோரியுள்ளனர். அதற்கு ஒப்பந்ததாரர்கள் ம…

  9. வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களில் 1043 பேர் கடந்த மூன்று வருடங்களில் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில் தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் 29 நாடுகளுக்கு சென்றிருந்தார்கள். அவர்களுள் இந்த 1043 பேரும் உள்ளடங்குவதாக அந்த பணியகத்தின் பிரதி முகாமையாளர் ஜெகத் படுகெதர தெரிவித்தார். வேலைவாய்ப்புக்களுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்கு சென்று கொடுமைக்குள்ளாகும் இலங்கையர்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை கேசரிக்கு தெரிவித்தார். தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரில் பலர் விபத்துக்கள் , தற்கொலைசெய்து கொள்ளல் ,இயற்கை மரணம் , அந்த நாடுகளின் சட்டத்தை மீறி செயற்பட்…

    • 4 replies
    • 1.1k views
  10. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் பேஸ்புக் கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு வழங்குமாறு பேஸ்புக் தலைமை நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, இன்று (19) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தகவலகள-வழஙகமற-பஸபக-நறவனததகக-உததரவ/175-242735

  11. யாழ். அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் விசுவலிங்கம் கிருபாகரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் ஒரு ஜேசிபி வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஏனைய சந்தேக நபர்கள் தப்பியேடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். https://www.tamilwin.com/community/01/234119?ref=home-feed

    • 1 reply
    • 457 views
  12. முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் நடைபெற்ற விபத்தொன்றை அடிப்படையாககொண்டடே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரமே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71337

    • 30 replies
    • 3.2k views
  13. (எம்.மனோசித்ரா) இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் 4 நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார். இலங்கை - இந்திய இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும். இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் கே.கே.வி.பி.எச்.டி சில்வா உட்பட பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இலங்கை கடற்படை முகாமைத்துவ சபையையும் இந்திய கடற்படை தளபதி சந்திக்கவுள்ளார். இலங்கை கடற்படையின் 60 ஆவது பிரிவில் பயிற்சியை முடித்துக் கொண்ட புதிய கடற்படை வீரர்களை உள்வாங்கும் நிகழ்வில் திருகோணமலையில் 22 ஆம் திகதி இடம்பெறவு…

    • 0 replies
    • 375 views
  14. மருத்துவ சான்றிதழ் யாழில் இலகுவான முறைமையில் – அங்கஜன் எம்பி நடவடிக்கை யாழ் மாவட்ட மக்கள் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை இலகுவான முறையில் பெற்று கொள்வதற்காக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுத்திருந்த கோரிக்கைகளுக்கு அமைய இன்று காலை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் யாழ் மாவட்ட நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தின் மூலம் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட மக்கள் சாரதி அனுமதிபத்திரங்களை பெற்று கொள்வதற்கு ஒரு இடம் மட்டுமே காணப்படுகின்றமையினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.…

  15. குத்துக்கரணம் அடித்த வெள்ளை வான் சாட்சிகள் – ராஜிதவுக்கு எதிராக வாக்குமூலம் Dec 19, 2019 | 4:43by கார்வண்ணன் in செய்திகள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியதன் படியே, வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர், ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் தோன்றிய வெள்ளை வான் சாரதி மற்றும் சாட்சி என்று கூறப்பட்ட இரண்டு பேர், குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இத…

  16. உரிய நடைமுறைகளையே பின்பற்றுகிறோம் – சுவிசிடம் கூறிய சிறிலங்கா Dec 19, 2019 | 4:45by கி.தவசீலன் in செய்திகள் சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான விசாரணைகள் விடயத்தில், இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க, ஒவ்வொரு கட்டத்திலும் உரிய செயல்முறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என, சுவிஸ் வெளிவிவகார அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரகப் பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் தொடர்பான விசாரணையின் நிலை குறித்து, சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் நேற்று மாலை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் உடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். …

  17. இலஞ்சம் பெற்ற அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஆளுநர் முஸம்மில் உத்தரவு 2020 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம், சட்ட விரோதமான முறையில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பணம் சேகரித்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, குருநாகல் கல்வி வளையத்திற்கு உட்பட்ட பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மாகாண பிரதான செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். வடமேல் மாகாணத்திற்கு உட்பட்ட குறித்த பாடசாலையின் மதில் உள்ளிட்ட சில கட்டுமான வேலைகள் செய்யவேண்டியுள்ளதாக தெரிவித்து, அந்த பாடசாலையின் அதிபர் பெற்றோர்களிடம் பணம் சேகரித்துள்ளார். …

  18. கூட்டமைப்பு , விக்னேஷ்வரன் போன்றவர்கள் பாரம்பரிய இனவாத அரசியலிலிருந்து மாற வேண்டும்: திலும் அமுனுகம Published by Loga Dharshini on 2019-12-18 15:09:30 (இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன் ஆகியோர் இனவாதத்தை பேசியே மக்களாணையினை பெற முயற்சிக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி கிடைக்கப் பெற வேண்டுமாயின் பாரம்பரிய அரசியல் தீர்மானங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து சேவை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக…

  19. கிளிநொச்சி மாவட்டத்தின் முடிசூடா மன்னன் என அவரது தொண்டரடிப்பொடிகளால் புகழப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இப்போது ஒரே கனவு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதானாம். கனவு கண்டால் மட்டும் போதுமா அதை நனவாக்கித்தான் பார்ப்போமே என்ற நப்பாசையில் காய் நகர்த்தி அடிவாங்கி – நொந்து போயிருக்கிறாராம் அவர். அவரை விட நொந்துபோனது என்னவோ அவரது தொண்டரடிப்பொடிதானாம். அண்மைக்காலமாக மக்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் கட்சியாக மாறி வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முன்னர் கூட்டமைப்புக்கு மாற்றுத் தெரிவு இல்லாததால் தொடர் வெற்றியை ருசித்து வந்த அந்தக் கட்சிக்கு, இப்போது மாற்று அணியாக முன்னாள் வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி கொஞ்சம் நடுக்கத்தைக் கொடுத…

    • 6 replies
    • 1.8k views
  20. சர்வதேச அரசாங்கத்திடம் ஒரு நியாயத்தை கேட்கின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றோம்.சர்வதேசம் எம்மை ஏமாற்ற முடியாது சர்வதேசத்துடன் சேர்ந்து போகின்ற நிலைக்கு வந்துள்ளோம் எமது ஒற்றுமையை பலப்படுத்தி எமது இலக்கை அடைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாருகையிலே அவர் அதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்ருகையில், இனிவரும் காலங்களில் ஏற்படும் சவாலை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். யுத்தத்தின் பிற்பாடு கடந்த பத்து வருட காலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக அவர்களுடைய அபிலாசைகளை தமது அபிலாசைகளாக ஏற்று அரசியல் நீரோட்டத்தில் தமிழ்த…

  21. இலங்கையர்கள் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதை தடுப்பதற்காக அவுஸ்திரேலியஅரசாங்கம் வித்தியாசமான முறையினை கையாண்டுள்ளது.சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் இலங்கையர்கள் உள்நுழைவதை தடுக்கும் வகையில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறான சந்தர்ப்பத்தில் இதற்காக அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சு ஜோதிடத்தை பயன்படுத்தி வித்தியாசமான விளம்பர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இலங்கையர்களில் பெரும்பான்மையானோர் ராசி பலன்களை நம்புகின்றமையினால் அதனை கொண்டு இந்த சட்டவிரோத நடவடிக்கையினை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விளம்பரங்களில் ஒவ்வொரு ராசிகள் இடம்பெற்றுள்ளன. ராசிக்காரர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய வர முனைந்தால் இது…

    • 1 reply
    • 428 views
  22. கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கானியா பனிஸ்ட பிரான்சிஸின் மன நலம் தொடர்பில் பரிசோதனைச் செய்ய மூவர் கொண்ட விஷேட நிபுணர்கள் குழுவை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் நியமித்துள்ளார். விஷேட வைத்திய நிபுணர்களான லூஷான் ஹெட்டி ஆரச்சி, கபில ரணசிங்க மற்றும் புஷ்பா டி சில்வா ஆகிய வைத்திய நிபுனர்களைக் கொண்ட குழுவே இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கானியா பெனிஸ்ட பிரான்சிஸ் தற்போது விளக்கமறியலில் உள்ள நிலையில், நாளை முற்பகல் 9.00 மணிக்கு அங்கொட தேசிய உளவியல் நிறுவனத்தின் உள சார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்செய்யப்படவ…

  23. இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்க்கு டக்ளஸ் நடவடிக்கை கடந்த பல ஆண்டுகளாக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் அண்மையில் இரணைதீவில் மீளக் குடியேறியிருந்தனர். எனினும், கடற்றொழில் நம்பி வாழுகின்ற இரணைதீவு மக்களின் புனர்வாழ்வுக்கு கடந்த அரசாங்கத்தினால் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குறித்த மக்களின் பிரச்சினைகள் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, இரணைதீவு கடல் பிரதேசத்தின் சூழலியல் தன்மைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் ட…

  24. ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்! ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதனூடாக, ஜனாதிபதித் தேர்தலில், தேவையற்ற முறையில் போட்டியிடுவதை தடுக்க முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பல்வேறு தரப்பினர் தேவையற்ற முறையில் களமிறங்கியதன் ஊடாக, அரசாங்கத்திற்கு பாரிய செலவு ஏற்பட்டது. இதன்காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டே, புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளோம். அத்துடன், மாகாண …

  25. (ஆர்.யசி) யுத்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கையர்களில் 3,815 பேர் மீண்டும் இலங்கைக்கு வர இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கூடிய விரைவில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்கும் என்கிறது இலங்கை அரசாங்கம். ஏனையவர்கள் குறித்தும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு இடமுள்ளதாக கூறுகின்றனர். இலங்கையின் யுத்த சூழல் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும். 1990 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் அகதிகள் இந்தியாவிற்கு வந்தாலும் பிற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் மீண்டும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். எனினும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.