ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும், மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் கருணாதாசவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச, முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகம உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் விஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 242 views
-
-
(எம்.எம்.எஸ். ஸாகிர்)இலங்கையிலுள்ள மலாய இனத்தை மதித்து மலாய இனத்தவர் ஒருவரை காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதிஆர். பிரேமதாஸ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நியமித்து மலாயர் சமூகத்துக்கு கௌரவம் அளித்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்கே எந்தவித பக்கச் சார்பும் இல்லாதிருந்த இலங்கை வாழ் மலாய இனத்தவர், முதன்முறையாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக துனிய மலாய் துனிய இஸ்லாம் (DMDI) அமைப்பின் இலங்கைத் தலைவர் டாக்டர் அன்வர் உலுமுத்தீன் தெரிவித்தார்.மலாய இனத்தவர்கள் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சம்பந்தமாக கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,இலங்கையில் மலாய இனத்தவர்…
-
- 0 replies
- 243 views
-
-
பாறுக் ஷிஹான்சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவினை ஆதரித்து புதன்கிழமை(13) மதியம் கல்முனையில் தமிழர் ஐக்கிய முன்னணி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.மேலும் தனது கருத்தில்எல்லோரும் சனாதிபதி தேர்தலில் நன்றாக பேசி வருகிறார்கள்.உங்களுக்கு தெரியும் இந்த சனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக களமாக ஒருபோதும் இல்லாத வகையில்…
-
- 0 replies
- 295 views
-
-
5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த? – சம்பிக்க சவால் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, ஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் (900 மில்லியன் ரூபா) கையூட்டுப் பெற்றதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டு நாமல் ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளனர் என்றும், அவர் கூறியுள்ளார். அவ்வாறு கையூட்டப் பெறவில்லை என்று வரும் 16ஆம் நாளுக்கு முன்னதாக மகிந்த ராஜபக்சவினால் பிரகடனம் செய்ய முடியுமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். “மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, 2010…
-
- 5 replies
- 522 views
- 1 follower
-
-
ராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் நோக்கம் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவரே கோத்தாபய ராஜபக்ஷ எனவும் இம்முறை தேர்தலில் அவரை நிராகரிக்காவிட்டால் நாட்டில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துவார் எனவும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் அன்னம் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா, க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். குகதாசன…
-
- 0 replies
- 622 views
-
-
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு Nov 13, 20190 ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறவுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் எந்தவொரு பிரசார நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது எனவும் இதனை மீறி யாரேனும் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேர்தல்-பிரசார-நடவடிக்க-4/
-
- 0 replies
- 254 views
-
-
தூக்கிலிட வேண்டும் எனக் கூறும் ஜனாதிபதி ஏன் கொலையாளியை விடுதலை செய்கிறார்- பிம்மல் ஒரு பெண்ணை கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயல் மட்டுமல்லாது சட்டம் நீதியை மீறும் செயற்பாடு ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(11) விளையாட்டில் சூதாட்டம் தவிர்ப்பதற்கான விசேட சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் மூலம் ஒரு நாடு என்றவகையில், நாம் பாரிய பின்னடைவை சந்திக்கின்றோம். நாட்டின் சட்ட- நீதித்துறை மீதான நம்பிக்கை இல்லமால் போயுள்ளமை மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் நா…
-
- 2 replies
- 737 views
- 1 follower
-
-
12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. கடந்த ஆட்சியில் 12 போராளிகள் புனர்வாள்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர். இந்த நிலையில் மொட்ட…
-
- 21 replies
- 1.8k views
- 2 followers
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “பிரபாகரனுக்கு பின், கோட்டாபயவிற்கே நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை உள்ளது” - ரிஷி செந்தில் ரன்ஜன் அருண் பிரசாத்கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSTR நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழர்கள் முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தல…
-
- 0 replies
- 705 views
- 1 follower
-
-
இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுமாறு கோரியது தொடர்பாக கேட்டபோதே அவர்இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து 71 ஆண்டுகள் கடந்த நிலையில் சிங்களத் தலைவர் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றியே வந்துள்ளார்கள்…
-
- 12 replies
- 1.6k views
-
-
(எம்.மனோசித்ரா) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ' ஒற்றையாட்சி ' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று சிலரால் முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு சஜித் பிரேமதாச கடிதம் மூலம் விளக்கமளித்திருப்பதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். குறித்த கடிதத்தை மகா சங்கத்தினரிடம் சமர்பித்து விளக்கமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், நாட்டில் ' ஒற்றையாட்சியை பாதுகாப்பதாக ' சஜித் பிரேமதாச அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை என்று சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். எனினும் அவரது விஞ்ஞாபனத்தில் 16 ஆம் பக்கத்தில் ஒற்றை…
-
- 1 reply
- 384 views
-
-
வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் வாக்குரிமையை அனுபவிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை தயார்படுத்துவதற்கான காலம் வந்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்- ''இலங்கையைச் சேர்ந்த இலட்சக்கணக்கான வாக்காளர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இவர்களுக்கு இல்லாமல் போகின்றதை அவதானிக்கக்கூடியவாறுள்ளது. இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை செலுத்திவரும் இவர்கள், அதாவது எமது நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த வாக்காளர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருப்பது மிகவும் ப…
-
- 0 replies
- 273 views
-
-
படகின் வெளி இணைப்பு இயந்திரத்தில் இருந்து உடைந்த தகடு வெட்டி குடும்பஸ்தர் பலி முத்தரிப்புத்துறை கடலில் பழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இளம் குடும்பஸ்தர் இயந்திரத்தின் கூறிய கம்பி கழுத்தில் குத்தி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான றெஜினோல்ட் (வயது-28) என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த மீனவர்களின் படகு இயந்திரம் கடலில் பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் குறித்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்தி அவர்களுக்கு உதவி செய்யும் மு…
-
- 0 replies
- 475 views
-
-
கடந்த 2015ம் ஆண்டு மஹிந்த என்ட் கோவை சிம்மாசனத்திலிருந்து இறக்கி விட்டு மக்களின் அட்மோஸ்ட் நம்பிக்கையோடு ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசின் இன்று வரையான செயற்பாடுகளை சற்று ஊன்றி அவதானித்தால் ஒரு விஷயம் புரிபடும். மாத்திரமன்றி கடந்த நல்லாட்சி முழுவதுமாக ஒரு தலையாட்டி பொம்மையைப் போல மைத்திரியை எப்படி ஆட்டி வைக்க முடிந்தது என்பதனையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அதற்கெல்லாம் மாஸ்டர் மைன்டாக இருந்த ரணிலின் அதிகார வெறியும் பதவி மோகமும்தான் இதற்கு இந்த நாடு இது வரை கொடுத்த ரொம்ப ரொம்ப என்பதனை விடவும் அதற்கும் மேலான விலை. மைத்ரி ஜனாதிபதியானதும் ரணில் ஏற்கெனவே தான் போட்டு வைத்திருந்த நிகழ்ச்சி நிரலின் முதலாம் அம்சமான அரசியலமைப்புக்கு பத்தொன்பதாம் திருத்த…
-
- 0 replies
- 543 views
-
-
வவுனியாவில் இன்றுடன் 997ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். ஒற்றையாட்சி அரசுக்குள் சமஸ்டி மறைந்திருப்பதாக சம்பந்தன் பொய் சொல்லும்போது தமிழ் புத்தி ஜீவிகள் மற்றும் பல்கலைக்…
-
- 1 reply
- 813 views
-
-
உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு Editorial / 2019 நவம்பர் 07 , மு.ப. 10:17 - 0 - 121 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஏகமனதாக ஆதரிப்பதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்று (07) வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமது தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (07) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வ…
-
- 19 replies
- 1.8k views
-
-
வெள்ளை வேன் கடத்தல் குறித்து பொது மகன் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் : மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பது என்ன? Published by R. Kalaichelvan on 2019-11-12 14:40:17 (எம்.ஆர்.எம்.வஸீம்) இராணுவத்தில் இருக்கும் எவரும் தன்னிச்சையாக எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடப்போவதில்லை. யாராவது அவ்வாறு செயற்பட்டிருந்தால் அது யாருடையதாவது கட்டளைக்கமையவே செயற்பட்டிருப்பார்கள். அத்துடன் யாராவது ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதாக இருந்தால் அது விசாரணைக்குழு ஒன்றின் முன்னிலையில் மேற்கொள்ளப்படவேண்டுமென மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். மாறாக ஊடகங்களுக்கு முன் அதனை வெளிப்படுத்துவது முறையல்ல எனவும் ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்…
-
- 0 replies
- 334 views
-
-
எமது அரசாங்கம் கூட்டு ஆலோசனையின் படி செயற்படும்- அனுர குமார நாம் ஆட்சிக்கு வந்தால் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளதாகவும், அரசாங்கமாக தீர்மானம் எடுக்கும் வேளையில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு செயற்படும் எனவும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார். மக்கள் சொத்துக்களை களவெடுத்த கள்ளர்களிடம் இருந்து மக்களுக்கு அவர்களின் சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொடுப்பதே எமது முதல் பணியாக உள்ளது. அதேபோல் மக்களுக்கு முதலில் சலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்ததுடன் ஆட்சியாளர்கள் எவ்வளவு சொத்துக்களை சுருட்டிக்கொள்ளலாம் என முயற்சிக்கும் கலாசாரத்தை நாம் முற்றாக நிறுத்துவோம். சுகபோக வாழ்கையை நாம் வாழ …
-
- 0 replies
- 349 views
-
-
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் வாபஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட ஏனைய அமைச்சர்களின் தனிப்பட்ட நிருவாகக் குழுவினரை அரச சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டி முன்வைக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரங்கள் இரண்டு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பத்திரங்கள் இரண்டும் முன்வைக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது ஜனாதிபதியினாலேயே வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களில் ஒன்று ஜனாதிபதியினாலும் மற்றது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவி…
-
- 0 replies
- 438 views
-
-
தொடங்கியது யாழ். – சென்னை விமான சேவை Nov 12, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான முதலாவது பயணிகள் விமான சேவை நேற்று ஆரம்பமாகியது. சென்னையில் இருந்து நேற்றுக்காலை 10.35 மணிக்குப் புறப்பட்ட எயர் இந்தியா, அலையன்ஸ் எயர் விமானம், நேற்று மதியம் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், அந்த விமானம், பிற்பகல் 12.45 மணியளவில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது. முதல் விமானத்தில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும் சென்னைக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த விமான சேவை, திங்கள், புதன், சனி என, வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறி…
-
- 0 replies
- 713 views
-
-
‘கோத்தா இன்னமும் அமெரிக்கரே – வென்றாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’ Nov 12, 2019 | 1:30by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடிமகனாகவே இருக்கிறார் என்று, சட்டவாளர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘ ‘கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான எந்த ஆவணங்களையும் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை. அதிபர், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்குமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் முன்னதாக …
-
- 0 replies
- 413 views
-
-
சஜித்தின் பரப்புரை மேடையில் சுயேட்சை வேட்பாளர் இலியாஸ் Nov 12, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும், இலியாஸ் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் ஏறி ஆதரவு தெரிவித்தார். புத்தளம்- ஆனமடுவவில் நேற்று நடந்த சஜித் பிரேமதாசவின் பரப்புரைக் கூட்டத்தில், மேடையில் ஏறி சஜித் பிரேமதாசவுக்கு, சுயேட்சை வேட்பாளர் இலியாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். புத்தளம்- அருவக்காடு குப்பை முகாமைத்துவத் திட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இந்த மேடையில் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார். சிறிலங்கா அதிபர் தேர்தலில் இம்முறை போட்டியிட…
-
- 0 replies
- 288 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன்- சஜித் உறுதி Nov 12, 2019 | 1:35by கி.தவசீலன் in செய்திகள் தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன். யாருடைய பேச்சுக்கும் செவிசாய…
-
- 0 replies
- 321 views
-
-
( எம்.ஆர்.எம்.வஸீம்) இராணுவத்தில் இருக்கும் எவரும் தன்னிச்சையாக எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடப்போவதில்லை. யாராவது அவ்வாறு செயற்பட்டிருந்தால் அது யாருடையதாவது கட்டளைக்கமையவே செயற்பட்டிருப்பார்கள். அத்துடன் யாராவது ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதாக இருந்தால் அது விசாரணைக்குழு ஒன்றின் முன்னிலையில் மேற்கொள்ளப்படவேண்டுமென மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். மாறாக ஊடகங்களுக்கு முன் அதனை வெளிப்படுத்துவது முறையல்ல எனவும் ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக…
-
- 1 reply
- 423 views
-
-
காணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிபோராடிய இரு தந்தையர்கள் உயிரிழப்பு Published by T Yuwaraj on 2019-11-12 12:31:10 காணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த தந்தையர் இருவர் மரணமடைந்துள்ளனர். முல்லைத்தீவு -முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு தந்தையர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். முள்ளியவளை நாவற்காடுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையான வெள்ளையன் அழகன் (வயது - 69) என்பவர் நேற்று முன்தினம் (10) திடீர் மரணமடைந்துள்ளார். இவரது மகளான அழகன் கலைச்செல்வி முள்ளிவாய்க்காலில், படையினரின் கட்டுப்பாட்டில்வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டார். தனது காணமல் ஆக்கப்பட்ட மகளைத் தேடி போராடி வந்தநிலையில் நோயினால்…
-
- 2 replies
- 300 views
-