Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது - இந்துமாமன்றம். செம்மலை சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கையினை எடுக்காததையிட்டு மிகவும் கவலையடைவதாக வவுனியா இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இந்து மாமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்துத் தங்கியிருந்த நிலையில் புற்றுநோயால் உயிரிழந்த மேதாலங்க தேரரின் உடலை நீதிமன்றின் கட்டளையையும் மீறி இந்து தர்ம நெறிமுறைகளிற்கு அப்பால் முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ததுடன், இனம் தெரியாத காடையர்கள் மூலம் சட்டத்தரணிகளையும், பொதுமக்களையும் தாக்கிய சம்பவத்தினை நாம் வ…

  2. ரணிலின் அரசியல் திட்டம் இம்முறை வெற்றிப்பெறாது : மஹிந்த (இராஜதுரை ஹஷான்) ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையில் மாற்றமில்லை. நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியமைத்த மைத்திரி- ரணில் ஆகியோரது நிர்வாகத்தையே மீண்டும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஊடாக செயறபடுத்திக் கொள்ள பிரதமர் ரணில் முயற்சிக்கின்றார். பிரதமரின் அரசியல் திட்டம் இம்முறை வெற்றிப்பெறாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் உள்ள கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாரிய போராட்டத்திற்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி ஜனாத…

  3. போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியக்கூடிய 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன உபகரணங்களை சீனா அரசு இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. சீனத் தூதுவர் Chang Xueyuan நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய இந்த அதிநவீன உபகரணம் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இத்தகைய நவீன உபகரணங்களை போதைப்பொருள் தேடுதல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை பாதுகாப்புத் துறையினர் உபயோகிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 05 மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் நபர்கள் அல்லது பொர…

  4. சுமணன் கொலை வழக்கு எதிரி சிறையில் September 27, 2019 மயூரப்பிரியன் சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றம்சுமத்தப்பட்ட முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 காவல்துறையினரில் 5ஆவது எதிரி சுகவீனம் காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். 5ஆவது எதிரியின் இறப்புத் தொடர்பில் உரிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. அதனால் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து 5ஆவது எதிரியை நீக்கிய திருத்திய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அரச சட்டவாதி அனுமதி கோரினார். அதற்கு அனுமதியளித்த மேல் நீதிமன்றம், வழக்கை வரும் ஒக்டோபர் 08ஆம் திகத…

  5. முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து நிலைமையை தணிக்க முயற்சிக்காவிட்டால் மீண்டும் ஸ்ரீலங்கா நாட்டில் இரத்தம் சிந்தப்படுவதையோ, மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதையோ தடுக்க முடியாது என்றும் மல்வத்துப்பீடம் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது. முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறிச் செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் …

  6. தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் காத்தான்குடி முஸ்லிம் மையவாடியில் புதைப்பு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டது. குறித்த உடற்பாகங்களை, காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொறுப்பேற்று இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டது. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அ…

  7. மயூரப்பிரியன் “கோத்தாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலக் கட்டளை பெற்றுள்ளார். அவர் இனி ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தால் அதுதொடர்பில் கவனம் செலுத்துவதற்கான உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதியளிக்கவேண்டும். அவரது சாட்சியம் லலித், குகன் வழக்கில் முக்கியமானது” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார். எனினும் அந்த விண்ணப்பத்தை நிராகர…

  8. “இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.'' முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் மற்றும் ச…

    • 16 replies
    • 2.4k views
  9. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மீது மக்கள் முன்னணி குற்றச்சாட்டு Sep 27, 20190 தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், நினைவேந்தல் வாரம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஆரம்பமாகிய பின்னரும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். அத்துடன், கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்விலும் இதற்கான அறிவித்தலை அவர் விடுத்திருந்தார்.இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்த போதும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்ன…

  10. இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட சஜித் பிரேமதாஸவிற்கு, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்க…

  11. யாழில் சோஷலிச முன்னிலை கட்சியின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார், வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.குறித்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு…

  12. கோத்தாவுக்கு புதிய சிக்கல் Sep 27, 20190 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களித்தமை தொடர்பாகவும் அவர் அந்த காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பாகவும் தகவல்கள் மற்றும் அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு அம்பாந்தோட்டை உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கும் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு பிரதான நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கோதாபய ராஜபக்‌ஷ இரட்டை பிரஜா உரிமையை கொண்டிருந்த நிலையில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இந்த நாட்டில் தங்கியிருந்து அரசியல் செயற்பாட்ட…

  13. நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த சட்ட ரீதியாக பல தடைகள் September 27, 2019 நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த சட்ட ரீதியாக பல தடைகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சட்டத்தை பலப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்பவை இவ்வாறு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த தடையாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்த கடுமையான கொள்கைகளை கையாண்டாலும் அதில் பலன் எதுவும் இல்லை எனவும் அவர் கு…

  14. சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய ஓய்வுபெற்ற கடற்படை கொமாண்டர் கைது! அவன் கார்டின் கடல் பாதுகாப்பு பிரிவின் தலைவரும் அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் வழக்கில் சந்தேக நபராகவும் காணப்படும் ஓய்வுபெற்ற கடற்படை கொமாண்டர் விஸ்வஜித் நந்தன லியபலனகே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பணடரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு திரும்பும்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அவன்ட் கார்ட் தலைவர் உட்பட 7 பேரை கைது செய்ய சட்ட மா அதிபர் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சிங்கப்பூரிலிருந்து-நாட/

    • 1 reply
    • 438 views
  15. உகண்டாவில் எதிரொலித்த நீராவியடிப் பிள்ளையார் விவகாரம்! நீராவியடிப் பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல் குறித்து பொது நலவாய கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். உகண்டாவில் இடம்பெற்று வரும் பொது நலவாய கூட்டத்தொடரில் முன்வைத்த விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடர் இந்த முறை உகண்டா நாட்டில் நடைபெறுகிறது. இந்த பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு பதிலாக நான் தலைமை தாங்கி வருகிறேன். பல்வேறு நாட்டு சபா…

  16. September 26, 2019 வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிக்கையின் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி,சோபிதன் கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு எதிர்வரும் 4ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்குமாறு காவல்துறை தலைமையகத்தில் இருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்சவுடன் டக்ளஸ் , வரதர் …

  17. இலங்கை இறைமையுள்ள நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது – கோட்டா! இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை படையினரின் குடும்பத்தினர் மத்தியில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன. அது நடப்பதற்கு பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டைப் பிளவுபடுத்த எவரையும் அனுமதிக்கமாட்டேன். பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீ…

  18. நல்லூரைச் சென்றடைந்தது, திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி! தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் நல்லூரை சென்றடைந்தது குறித்த நடைபயணம் இன்று (வியாழக்கிழமை) காலை நாவற்குழி சந்தியிலிருந்து பயணித்த நிலையில், தற்போது நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்தது. இதனையடுத்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இன அழிப்பு மற்றும் காணாமலாக்கபட்டவர்க…

  19. நிபந்தனைகளுக்கு இணங்கமாட்டேன்- அடம்பிடிக்கும் சஜித் கி.தவசீலன்Sep 26, 2019 | 1:35 by in செய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையில் ஐதேகவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல்களை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும், ரணில்- சஜித் உள்ளிட்ட ஐதேக மூத்த உறுப்பினர்களின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் மத்துகமவில் நேற்று நடந்த பாரிய பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, தாம் எந்த நிபந்தனைக…

  20. யாழில்.பாடசாலைகள் மூடப்பட்டன… September 26, 2019 அதிபர்கள், ஆசிரியர்களின் சுகவீன விடுப்பு போராட்டத்தினால் யாழில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் முடக்கப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் – போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக தம்மை ஏமாற்றி வருவதாகவும், அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருவதாகவும், ஆசிரியர் சங்கத்தினர் கூறியுள்ளதுடன், ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது. பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்ப…

  21. கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – திருட சென்றவரே உயிரிழப்பா ? September 25, 2019 -மயூரப்பிரியன் யாழ்.நகர் பகுதியில் உள்ள வீட்டு கிணற்றுக்குள் இனம்தெரியாத நபர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். யாழ். சிறிதர் திரையரங்குக்கு அண்மையாக உள்ள வீட்டிலையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது , குறித்த வீட்டின் கிணற்றினுள் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சத்தம் கேட்டுள்ளது. அதனை கேட்ட வீட்டு உரிமையாளர் கிணற்றினுள் பார்த்த போது நபர் ஒருவர் வீழ்ந்து இருப்பதனை அவதானித்துள்ளார். உடனடியாக அது குறித்து யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். காவல்துறையினர் வந்து பார்த்த போது குறித்த நபர் கிணற்றினுள் உயிரிழந்துள்…

  22. கடற்படையில் மீண்டும் இணைந்தார் யோஷித ராஜபக்ஷ! யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, அவரை இணைத்துக்கொள்ளும் அனுமதி கடிதத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கையொப்பமிட்டுள்ளார். கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, கடற்படையில் இருந்து 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் யோஷித ராஜபக்ஷ பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கடற்படையில்-மீண்டும்-இணை/

  23. புத்தளத்தில் கரையொதுங்கியது டொல்பின் – படையெடுக்கும் மக்கள் புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேசத்தின் பள்ளிவாசல்பாடு கிராமத்தில் இறந்த நிலையில் டொல்பினொன்று கரை ஒதுங்கியுள்ளது. பள்ளிவாசல்பாடு பகுதியில் உள்ள கடற்கரைக்கு நேற்று (செவ்வாய்கிழமை) சென்ற மீனவர் ஒருவர் டொல்பினொன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளார். அதன் பின்னர் அதனை இழுத்து கரையில் சேர்த்துள்ளார். சுமார் 06 அடி நீளமுடைய டொல்பின் ஒன்றே பல காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கியுள்ள டொல்பினை பார்வையிடுவதற்காக அதிகளவிலான மக்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புத்தளத்தில்-கரையொதுங்க/

    • 3 replies
    • 1.2k views
  24. (நா.தினுஷா) எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கென தனியான அரசியல் அடையாளம் உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு நிபந்தனைகளுக்கு அடி பணியவோ, கெளரவத்தை விட்டுக்கொடுக்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நான் மற்றவர்களின் தேவைகளுக்கான செயற்படும் கைப்பொம்மையும் இல்லை. மக்களே எனது உறவினர்கள். அவர்களின் ஆணைக்கமையவே செயற்டுவேன். நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் நேர்மையாகவே களமிறக்குகிறேன். மக்களுக்கு ஏற்ற மக்களுக்கான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் புதிய யுகத்துக்கான புரட்சியை ஏற்படுத்துவதற்கும…

  25. இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக கடும் மழையுடனான வானிலையினால் 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.