Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாறுக் ஷிஹான் அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால் மக்கள் குறித்த பாதையில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அண்மை காலமாக பெய்து வரும் மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான சுமார் 9, 5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர். . மேலும் அம்பாறை மாவட்டத்தில் கிட்டங்கி அன்னமலை மாவடிப்பள்ளி இறக்காமம் சின்ன முகத்துவாரம் சாகாமக்குளம் கஞ்சி குடிச்சாறு தாம…

  2. 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:19 -எஸ்.நிதர்ஷன்- நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தங்களிடம் இல்லாததாலேயே புதிய அரசமைப்பு முயற்சி இப்போது தடைப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், “அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கின்ற அதே நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். ஆகையினால் தீர்விற்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளோடு சேர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசமைப்பை நிறைவேற்றி இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவோம்” என்றார். யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு ஊடகவியலாளர்களை நேற்றிரவு (16) சந்தித…

    • 4 replies
    • 1.2k views
  3. பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால் Published by T. Saranya on 2019-10-23 15:05:08 நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார். இது குறித்து சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் கோத்தாபய ராஜபக்ஷவை தொலைக்காட்டியொன்றில் நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றேன். அதனால் அச்சமின்றி வாக்காளர்கள் எம…

    • 0 replies
    • 382 views
  4. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 200 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.dailyceylon.com/191226/

    • 0 replies
    • 449 views
  5. தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் – அஸ்கிரிய மகாநாயக்கர் கடும் எதிர்ப்பு Oct 23, 2019 | 2:19by கி.தவசீலன் in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கில் உள்ள ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள, 13 கோரிக்கைகளைக் கொண்ட ஆவணத்துக்கு, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொடசிறி ஞானரத்தன தேரர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனைகள் பிரிவினைவாத கருத்துக்களுடன் இருப்பதாக, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் மற்றும் அதன் குருமார் தெரிவித்துள்ளனர். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர், ரஞ்கிரி தம்புள்ள ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொடகம மங்கள தேர…

    • 0 replies
    • 417 views
  6. கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ் Oct 23, 2019 | 2:17by கி.தவசீலன் in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கின்ற முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்ய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘இதே போன்று சிலர் இங்கும், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.எனினும், நீதிமன்றம் அந…

    • 0 replies
    • 660 views
  7. சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா Oct 23, 2019 | 2:25by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் மோசமான மனித உரிமை மீறல் குற்றம்சாட்டுகளுக்கு உள்ளானவரை, இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, சிறிலங்காவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான றொபேர்ட் டெஸ்ரோ தெரிவித்துள்ளார். இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலரான றொபேர்ட் டெஸ்ரோ, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூ…

    • 0 replies
    • 253 views
  8. -செல்வநாயகம் ரவிசாந், எஸ்.நிதர்ஷன் ஒக்டோபர் 13ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்தொழிலாளர்கள் 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், இன்று (23) மாபெரும் பேரணி இடம்பெற்றதுடன், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனமும் எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த பேரணியும், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக, யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்துக்கு முன்னால், முற்பகல் 10.15 மணியளவில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் மனைவிமார், தாய்மார், சகோதரர்…

    • 0 replies
    • 660 views
  9. மீண்டும் மருத்துவமனையில் மகேஸ் சேனநாயக்க – மாரடைப்பா? Oct 23, 2019 | 2:27by கார்வண்ணன் in செய்திகள் தேசிய மக்கள் இயக்கத்தின் அதிபர் வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று நாட்களாக வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில், பதுளை, பண்டாரவளை,ருவன்வெல்ல, பலாங்கொட, இரத்தினபுரி ஆகிய இடங்களில் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தீவிரமான பரப்புரைகளிலும், கூட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முற்பகல் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, பலாங்கொட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அன…

    • 0 replies
    • 257 views
  10. சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா Oct 23, 2019 | 2:32by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் விவகாரம் குறித்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் ஜி. வெல்ஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின், ஆசியா-பசுபிக்கிற்கான துணைக்குழுவில் நேற்று உரையாற்றிய போது இவ்வாறு கூறினார். “லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக, அமெரிக்கா ஏமாற்றமடைந்திருப்பது குறித்து பகி…

    • 0 replies
    • 258 views
  11. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்து,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்னால், இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ். மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.-எஸ்.நிதர்ஷன் - TM https://www.madawalaenews.com/2019/10/blog-post_769.html

  12. அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக உழைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். கடந்த நான்கரை வருடகாலமாக வேலையற்ற பட்டதாரிகளை செல்லாக்காசாக மதித்து அதிலும் குறிப்பாக வெளிவாரிபட்டதாரிகளை மிகவும் கேவலமான முறையில் புறக்கணிப்புச் செய்த ஐ.தே.கட்சி ஆட்சியாளர்களை எதிர்த்தே இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளனர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச அமைப்பாளர் ப. சர்மில் ஜஹான் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து கல்முனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கருத்தரங்கில் உரையாற்றும் போது நல்லாட்சியை செய்கின்றோம் என்று மார்தட்டிப் பேசியவர்கள் எதனை ச…

    • 0 replies
    • 466 views
  13. (ஆர்.யசி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பினை அடுத்து 13 அம்சக் கோரி க்கைகளை முன்னிறுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும் பேச்சு வார்த்தை நடத்த பிரதான ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானம் எடுத்துள்ளன. அதன்படி இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டமும் வெள்ளிக்கிழமைமைக்கு முன்னர் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத…

    • 0 replies
    • 238 views
  14. (எஸ்.அஷ்ரப்கான்)சாய்ந்த‌ம‌ருது மக்களுக்கான ச‌பையை நாம் நிச்சய‌ம் பெற்றுத்த‌ருவோம் என்று உலமா கட்சித் தலைவர்மெளலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.இது விடயமாக அவர் இன்று (23)விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சாய்ந்தமருது சபை பெறும் விடயத்தில் அவ‌ச‌ர‌ப்ப‌ட‌ வேண்டாம். தேர்த‌ல் கால‌த்தில் அங்கும் இங்கும் ஓடினால் எல்லோரும் த‌ருகிறோம் என்றே சொல்வார்க‌ள்.இது விட‌ய‌த்தில் உல‌மா க‌ட்சி மிக‌ச்சிற‌ந்த‌ தீர்வை முன் வைத்து வ‌ருகிற‌து. அதுதான் க‌ல்முனையை இன‌ ரீதியாக‌ பிரித்து வைத்துள்ள‌ க‌ல்முனை உப‌ செய‌ல‌க‌த்தை ர‌த்து செய்து, மூவின‌மும் வாழும் க‌ல்முனையை வ‌ட‌க்கு, தெற்கு என‌ பிரிக்காம‌ல் ஒரே செய‌ல‌க‌மாக‌ க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் இருக்க‌ வேண்டும். …

    • 0 replies
    • 311 views
  15. யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம் யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் விமான நிலையம் ஒன்றை அமைக்கத் தொடங்கி விட்டார். இதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்துவிட்டார்களோ என்ற தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. …

  16. பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி Oct 22, 2019 | 2:30by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், ‘கொழும்பு ரெலிகிராப்’ இணையத்தில் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ள…

  17. 3 பரிந்துரைகளை மாத்திரமே இலங்கை அமுல்படுத்தியுள்ளது -ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல்கள் தொடர்பாக தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள 26 பரிந்துரைகளில் மூன்று பரிந்துரைகளை மாத்திரமே இலங்கை அமுலாக்கி இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று ஆரம்பித்தது. கொழும்பைத் தளமாக கொண்டு நாட்டின் 9 மாகாணங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அந்த குழு மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், நேற்று இலங்கைக்கு வருகைத் தந்த 30 பேர் அடங்கிய குறித்த குழு கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டது. இதன்போது உரையாற்றிய ஐர…

  18. புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசினார் வடக்கு ஆளுநர்! பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசியுள்ளார். வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம், இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறான முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம் அவற்றிற்கு புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது ஆர…

  19. அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் தூண்டப்படுகின்றது – மகேஷ் சேனாநாயக்க அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் தூண்டப்படுகின்றது என ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். பலாங்கொடையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேசிய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையிலான பல பதிவுகளை காண முடிருந்தது. ஆனால், அவற்றை தற்போது காண முடியவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றமையே அதற்கு காரணம். அவற்றை நவம்பர் 17ஆம் திகதியின் பின்னர…

  20. வேட்பாளர் ஒருவரை, மற்றுமொரு வேட்பாளர் ஊக்குவிப்பதை தடை செய்ய தீர்மானம்! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரை, மற்றுமொரு வேட்பாளர் ஊக்குவிப்பதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று(செவ்வாய்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே இது தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஒரு வேட்பாளருக்காக இன்னொரு வேட்பாளர் பரப்புரைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த கலந்துரையாடலின் போது தேர…

  21. யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மாநகர சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றுரைத்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையானார். மனுவில…

    • 5 replies
    • 1.1k views
  22. பேரின்பராஜா சபேஷ், அ.அச்சுதன், பொன்ஆனந்தம் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன், தேர்தல் பற்றிய எவ்விதப் பேச்சுவார்த்தைகளையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்னம் இராஜேந்திரா திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் செய்கின்றோம் என்ற போர்வையில், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களின் அழிவுக்கும் யுத்தமீறல் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூற கோட்டாபய ஆளாகியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை, கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்த…

    • 1 reply
    • 380 views
  23. ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப் கோரினார். அவர் நேரத்தை வழங்கியதும் அவரைச் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், ”முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிப்பதால், தமிழ் கட்சிகள் மன…

    • 5 replies
    • 674 views
  24. வன்னி மக்கள் சார்பாக, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட 20 அம்சக் கோரிக்கைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் உடனடியாக முன்னெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதையடுத்தே, கோட்டாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம் எனத் தெரிவித்தார். பிரபா கணேசனால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம பாதைகள் செப்பனிடல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் விடயத்தில் மனிதாபிமான முறையில் தீர்வு உள்ளிட…

    • 0 replies
    • 469 views
  25. நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்துடனேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்காக 13 அம்ச கோரிக்கைகளை ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து முன்வைத்திருப்பதாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை பரப்பிவரும் அமைப்புக்களில் ஒன்றான புதிய சிங்களே அமைப்பு குற்றம்சாட்டியிருக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டுவதற்கு முயற்சித்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நந்திக்கடலிலே இறுதி முடிவு கட்டியது போல் சிங்களவர்கள் இணைந்து இறுதி முடிவை கொடுப்பார்கள் என்றும் புதிய சிங்களே அமைப்பின் தலைவர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் டேன் பிரியசாத் கடும் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் உட்பட 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இம்முறை ஜ…

    • 1 reply
    • 610 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.