ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
மாவீரர் வார நிகழ்வுகளுக்கு போராளிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ளச் செல்வர் என்பதை அறிந்து அவர்களை இலக்கு வைத்து சிறீலங்கா வான் படையும் ஆள ஊடுருவும் அணியும் வன்னியின் பல பகுதிகளிலும் தொடர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. சமீபகாலமாக இராட்ச குண்டுகளையும் அதிநவீன குண்டுகளையும் விண்ணில் இருந்து கொட்டி வரும் சிறீலங்கா விமானப்படையின் அட்டூழியம் குறைய முதல் இன்று முழங்காவில் மற்றும் ஒட்டிசுட்டானில் நடத்தப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் ஒரு மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளார். நோயாளர் காவு வண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது. இதற்கிடையே இன்று சிறீலங்கா விமானப்படை வன்னியில் நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்…
-
- 14 replies
- 3.1k views
-
-
இலங்கைக்கு ராணுவ உதவி ஏன்?-மத்திய அரசு விளக்கம் பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிக்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் ராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று பெங்களூருக்கு வந்திருந்த மத்திய ராணுவ ராஜாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எம்.எம்.பல…
-
- 5 replies
- 3.1k views
-
-
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் முன்னரே பல தரப்புகளாலும் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையிலும் முன்னாள் ராஜபக்ஷ தன்னிச்சையாக பெரும் செலவில் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.malarum.com/article/tam/2015/01/16/8124/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%…
-
- 47 replies
- 3.1k views
-
-
றோவின் நிகழ்சிநிரலில் பிபிசி தமிழோசை: புலிகளின் குரல் பிபிசி தமிழோசையில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை இந்தியாவுடனான பேச்சுக்கள் தொடர்பிலே ஒரு நேர்காணல் கண்டிருந்தது. அதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவும், கோபமாகவும், ஆவேசமாகவும் தமிழ் மக்கள் கொல்லப்படுதல், பாதிக்கப்படுதல் தொடர்பிலே தெரிவித்திருந்தார். இதில் சில சிண்டு முடிதல்களை திட்டமிட்டு பிபிசி கைக்கூலி ஊடகவியலாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்க…
-
- 11 replies
- 3.1k views
-
-
மன்னார் மாவட்டம் பேசாலையில் அமைந்துள்ள காவல்துறை நிலையம் மீது இன்று காலை கடற் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆறு படகுகளில் வந்த கடற்புலிகள் காலை 8.00 மணியளவில் காவல்துறை நிலையம் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதேவேளை தலைமன்னார் கடற்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை தாம் முறியடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ஒரு படகு சேதமடைந்ததாகவும் சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.
-
- 6 replies
- 3.1k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதுவதாகத் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதாக தொழில்துறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். இராஜினாமாச் செய்வது என்ற தனது முடிவை ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளபோதும், இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென அமைச்சர் கூறினார். தனது கடமையை நாட்டுக்குச் செய்வதற்கு இதுவொரு சிறந்தவழி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் முக்கிய பங்காற்றியிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்ளுவாரா என்பது தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியா…
-
- 8 replies
- 3.1k views
-
-
நெருக்கடி மிகுந்த காலகட்டத்திற்குள் கிழக்கு வன்னி - வன்னியன். ஞாயிறு, 30 நவம்பர் 2008, 08:18 மணி தமிழீழம் [] யாவரும் எதிர் பார்த்துக் காத்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவீவர் நாள் கொள்கைப்பிரகடண உரை பலரது எதிர்பார்ப்புக்கும் மாறாக வித்தியாசமான கோணத்தில் அமைந்திருப்பதனையும் வன்னிப் போர் நெருக்கடி தொடர்பாக அவர்கள் பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்தித்திருக்கின்ற இந்த வேளையிலும் அவரது நிதானமான போக்கினை இவ்வுரை பறை சாற்றி நிற்கிறது. வன்னிப் போர் தொடர்பாக அவர் தனது உரையில் எதனையும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெரு…
-
- 11 replies
- 3.1k views
-
-
யாலகாட்டில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக்கொண்ட புலிகளின் அணி [25 - February - 2008] யாலகாட்டுப்பகுதியில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியொன்று சுற்றித்திரிவதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த 40 பேரைக்கொண்ட விஷேட படையணியில் நன்கு பயிற்சி பெற்ற 4 பெண்புலிகளும் உள்ளடங்குவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இராணுவ புலனாய்வுத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; `யால, புத்தல காட்டுப் பகுதிகளில் விஷேட பயிற்சி பெற்ற 40 பேரைக் கொண்ட அணியொன்று செயற்பட்டுவருகின்றது. இந்த அணி ராம் மற்றும் ராகுலன் ஆகியோரின் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இந்த 40 பேரைக் கொண்ட குழ…
-
- 6 replies
- 3.1k views
-
-
படையினருக்கு அதிர்ச்சியளித்த புலிகளின் இரண்டு தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு தாக்குதல்கள் படைத்தரப்பின் பிரசாரங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டன. கிழக்கிலங்கையின் பாதுகாப்பு, தென்னிலங்கையின் பொருளாதாரம் போன்றவற்றின் மீது ஒரு தாக்குதல் காட்டமாக வீழ்ந்தபோது, மறுதாக்குதல் வடபோர்முனை தொடர்பான படைத்தரப்பின் கருத்துக்களுக்கு ஆச்சரியக்குறியை இட்டுச் சென்றுள்ளது. யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பித்த மோதல்கள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தென்னிலங்கையின் உட்பகுதியும், ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த இடமுமான அம்பாந்தோட்டை வரை விரிவடைந்துள்ளது.விபரங்களுக்கு
-
- 2 replies
- 3.1k views
-
-
TNAயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:- 23 ஆகஸ்ட் 2015 நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படாதிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது. இ…
-
- 18 replies
- 3.1k views
-
-
வட்டுக்கோட்டையில் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது. இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரி…
-
-
- 32 replies
- 3.1k views
- 2 followers
-
-
கொழும்பு இந்து காபோ.தா சாதாரணதரப்பரீட்சையில் 10A சித்திகளை 10 மாணவர்களும் 38 மாணவர்கள் 9A சித்திகளையும் பெற்று சாதனை படைத்தது இருகின்றனர்,ஒரு மாணவன் கூட அனைத்து பாடங்களிலும் சித்தியடையாமல் இல்லாமல் இருந்தது மற்றுமொரு சாதனை.கடந்த ஆண்டு 5 பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று தமிழ் மாணவர்களின் பெருமையை இலங்கையின் தலைநகரில் ஏற்படுத்தி கொடுத்துள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பழைய மாணவன் என்ற ரீதியில் நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 11 replies
- 3.1k views
-
-
விடுதலைப்புலிகளின் வானொலி அலைவரிசையை இரத்துச் செய்ய வழக்கு.10:47:11 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வானொலி அலைவரிசை ஒன்றை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த மனுமீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற உள்ளது. இந்த மனுவை பியசேன திசாநாயக்க என்பவர் தாக்கல் செய்திருந்தார். நோர்வே தூதரகம் ஊடாக இந்த வானொலி கருவிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். நன்றி :அதிர்வு.கொம்
-
- 4 replies
- 3.1k views
-
-
தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 10:36:11| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்குமாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும். உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதி…
-
- 27 replies
- 3.1k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/it-is-important.html
-
- 0 replies
- 3.1k views
-
-
Colombo வில் நடைபெரும் திரைபட விழாவில் பங்குபெரும் ஹிந்தி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு எந்தவகையான தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்றும், அவர்கள் நடித்த திரைபடங்களை தமிழ் நாட்டில் திரையிட முடியாது என்றும் தென்னிந்திய திரை பட சம்மேலனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. தென்னிந்திய திரை பட சம்மேலனம் இதை நடைமுறை படுத்தவிடாமால் தடுக்க அணைத்துவகையான் அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கலந்து கொண்ட நடிகர்களின் படங்கள் இங்கு வராதிருக்க நாம் கண்கானிப்பது அவசியம். மேரி படங்கள் வெளிவந்தள் ஆர்பாட்டங்கள் நடத்தப்படும். இதற்க்காக IIFA Colombo வில் கலந்து கொள்ளும் நடிகர்களின் முழுமையான பெயர் பட்டியல் ஒன்று தேவைபடுகிறது. ஊங்களுக்கு …
-
- 14 replies
- 3.1k views
-
-
ஆனையிறவிலிருந்து விடுதலைப்புலிகளை விலகிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவிப்பு. இல்லையேல் பாரிய அழிவை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கை.திருகோணமலை சம்பூர் பிரதேசத்தைவிட்டு விலகிக்கொண்தைப் போல முகாமாலையிலிருந்து ஆனையிறவு வரையிலான பகுதியைவிட்டு விடுதலைப் புலிகள் தமது நிலைகளை விலக்கிக்கொண்டால் பாரிய அழிவை தவிர்த்துக் கொள்ளமுடியும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தகவல் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரச பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கேஹேலிய ரம்புக்வெல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சம்பூரைவிட்டு விலகிக்கொண்ட விடுதலைப் புலிகள் ஆணையிறவு வரையிலான பகுதியிலிருந்தும் விலகிக்கொள்வதே அவர்களுக்கு நல்லது என்று தெரிவித்த அமைச்சர் கே…
-
- 8 replies
- 3.1k views
-
-
கனடாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இளைஞர்களை அந்நாட்டுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது இதுதொடர்பில் கனடா அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. கனடாவில் சுகாதாரம் கட்டத்துறை, பேக்கரி போன்றவற்றுக்கு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் இலங்கையர்களை அந்த தொழிலுக்காக இணைப்பத்கு அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கனடா தொழிலுக்காக விரைவில் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 13 replies
- 3.1k views
-
-
[size=4]ராஜபக்சே பிறந்தது, சிங்களர்கள் செய்த பாவம்![/size] [size=2][size=4]இலங்கை அரசில் இன வாதிகளை வெளியேற்றாவிட்டால் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசு எந்த நேரத்திலும் கவிழும். இவரைப் போன்றவர்கள் இங்கு பிறந்தது சிங்களர்களும், பெளத்தவர்களும் செய்த பாவம் என்று இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சியான நவசம சமாஜக் கட்சி கூறியுள்ளது.[/size][/size] [size=2][size=4]இது குறித்து நவசம சமாஜக் கட்சி தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறுகையில்,[/size][/size] [size=2][size=4]அணைந்து போக உள்ள விளக்கு மிக பிரகாசமாக எரியும். அதே போல அரசாங்கத்தில் உள்ள இனவாத அமைச்சர்களான சம்பிகா ரணவகாவும், விமல் வீரவன்சவும் நன்றாகவே பிரகாசிக்கி…
-
- 7 replies
- 3.1k views
-
-
மக்கள் குடியமராத மயிலிட்டியில் படையினரின் யோக்கட் ஆலை மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டிப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 23 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்வதற்குப் பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று மயிலிட்டிப் பகுதியில் படையினரால் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று திறந்து…
-
- 1 reply
- 3.1k views
-
-
தூக்கமில்லாத இரவுகளுடன் கரைகின்றன தமிழர்கள் பெரும்பாலோரினது இரவுப் பொழுதுகள். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் , இழப்புக்களை தாங்கிக்கொள்ள இயலாமல் விம்மிவெதும்பும் கனத்த இதயங்களுடன், விழியோரத்தில் கண்ணீருடன் கேள்விக் குறிகளாய் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள். இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம். முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல ம…
-
- 16 replies
- 3.1k views
-
-
ஏறாவூர் தமிழ் வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் க.பொ.த (சா/த).பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9-ஏ சித்தி பெற்று பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9-ஏ சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. 9-ஏ சித்தி பெற்று பாடாசாலைக்கும் பாடாசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் என்போர் தமது வெகு…
-
- 25 replies
- 3.1k views
-
-
புலிகளின் தாக்குதல் விமானமொன்று வவுனியாவில் சஞ்சரிப்பு : தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலகுரக விமானமொன்று நேற்றைய தினம் வவுனியா வான் பரப்பில் சஞ்சரித்ததாக ராடார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பிரிவினரின் ராடர் கட்டமைப்பில் குறித்த விமானத்தின் சஞ்சரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3.30 அளவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வவுனியா பிரதேசத்திற்கு குறித்த விமானம் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் விமானம் விண்ணுக்கு ஏவப்பட்டிருப்பதனை ராடார் மூலம் அறிந்து கொண்ட சில நிமிடங்களில் மன்னார், வெலிஓயா மற்றும் அனுராதபுர பகுதிகளில் உள்ள படை முகாம்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், குறித்த விமானம் சில நிமி…
-
- 12 replies
- 3.1k views
-
-
வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கேள்வி – பதில் வடிவத்தில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது…
-
- 35 replies
- 3.1k views
-
-
இலங்கை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்பதை தாங்கள் நம்பவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பது, அவரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார். தவிரவும் யுத்தம் நடக்கும் இடங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயராமல் தடுப்பதே விடுதலைப்புலிகள்தான் என்றும் ஜெ…
-
- 19 replies
- 3.1k views
- 1 follower
-