ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய கோசம் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் கோத்தாபாய ராஜபக்ஸவின் பெயரும் இன்னொரு பக்கம் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன் மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்காலும் முளைக்கின்றது. ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரும் போது தமிழ் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் ஜோசவாஸ் நகர் மற்றும் ஜோசப் நகர் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களில் உள்ள வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (8) இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்ற…
-
- 0 replies
- 523 views
-
-
வடக்கில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி வடக்கின் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை காக்கப்படும் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குலத்தை புனரமைக்க கோரிய அனுமதியை நான் வழங்கியுள்ளேன். ஏப்ரல் மாதமே அதற்கான அனுமதி வழக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்து குறித்த ஜனாதிபதியின் கூட்டத்திலும் நடவ…
-
- 8 replies
- 1.3k views
-
-
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வடக்கு, வட மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களுக்கு சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படி பகுதிகளில் எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசும் என்றும், இங்கு காற்றின் வேகம், 70 – 80 கி.மீ வரை செல்லக் கூடும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 – 65 கிமீ வேகத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளைகளிலேயே இந்த நிலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை …
-
- 0 replies
- 473 views
-
-
ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் தயாசிறியை திட்டித் தீர்த்த டிலான் பேரேரா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டுமாக இருந்தால் அக்கட்சியின் பொறுப்புக்களிலுள்ள மாட்டுக் கூட்டத்தை வெளியேற்றிவிட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பேரேரா தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நாம் கட்சியில் இருக்கும் போது ஒரு மாட்டை விலக்கியே அந்த இடத்துக்கு ரோஹண பியதாசவைக் கொண்டு வந்தோம். பின்னரும் அந்த இடத்துக்கு பதில் செயலாளராக இப்போதும் ஒரு மாடு வந்துள்ளதாகவும் அவர் சாடினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு ராஜபக்ஸாக்களில் ஒருவர் வந்தால…
-
- 0 replies
- 537 views
-
-
கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஓகஸ்ட் 6ஆம் நாள் தொடங்கம் 16ஆம் நாள் வரை அவர் பாகிஸ்தான், சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள அலிஸ் வெல்ஸ், அடுத்த வார தொடக்கத்தில், சிறிலங்காவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று நாடுகளுக்கான பயணங்களின் போது, பரஸ்பர நலன்கள் தொடர்பாக மூத்த அரசாங்க …
-
- 0 replies
- 265 views
-
-
வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப முயற்சிகள் எடுப்பேன் - சுரேன் ராகவன் வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் நாகரீகம் கல்வியை சார்ந்த நாகரீகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று வீழ்ந்துபோயுள்ளோம் . எனவே வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என தெரிவித்தார். அருள் கல்வி வட்டம் நடத்தும்…
-
- 1 reply
- 712 views
-
-
யாழில் கோர விபத்து ; ஒருவர் பலி யாழ். உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது. சம்பவத்தில் இயக்கச்சியைச் சேர்ந்த க.செந்தமிழ் (வயது-22) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் (எம்டி90) ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் (பல்சர்) மோதி நிலைகுலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையட…
-
- 0 replies
- 576 views
-
-
ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் த.தே. கூ.வினால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை - கோத்தா போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவ…
-
- 0 replies
- 383 views
-
-
"நீர்கொழும்பில் திருச்சுசொரூபம் சேதப்படுத்தப்பட்டமைக்கும் முஸ்லிகளுக்கும் எந்த தொடர்புமில்லை" (ஆர்.விதுஷா) நீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சொரூபம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை எனக் தெரிவித்த நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், இந்த தாக்குதலின் பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள் உள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பொதுஜனபெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினர். மேலும், நீர்கொழும்பு பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உறவுகளை இழந்த கத்தோலிக்க மக்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான நல்லிண…
-
- 0 replies
- 392 views
-
-
மட்டக்களப்பு கெம்பஸ் சட்டவிரோதாக உருவாக்கப்பட்ட ஒன்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, இதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சுமத்தினார். மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியல்-பண-பலத்தை-ஹிஸ்புல்லாஹ்-பயன்படுத்தினார்-நலிந்த-ஜயதிஸ்ஸ/175-236428 பட்டிகளோ கம்பஸ் விவகாரம் ; ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உறுப்புரிமையை பறிக்கவும் முடியும் - ஜே.வி.பி. சட்டத்துக்கும் அரசியல் அமைப்பிற்கும் முரணாக அங்கீகாரம் இல்லாத வகையில் உர…
-
- 1 reply
- 776 views
-
-
குருதி மாற்றியேற்றிய சம்பவம்: விசாரணையை சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவு குருதி மாற்றியேற்றியதில் உயிரிழந்த 9 வயது சிறுவனின் மரணம் தொடர்பான வழக்கை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ. றிஸ்வான் கட்டளையிட்டுள்ளார். குறித்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உட்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் தவறியமையினாலேயே இந்த வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறு நீதவான் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் முன்னைய அமர்வில் எதிர்வரும் 7ஆம் திகதி சந்தேகநபர்களை ஆஜர்படுத்துமாறும் அதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்த நீதவான், தவறும் பட்சத்தில்…
-
- 2 replies
- 770 views
- 1 follower
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இன்று மாலை 4 மணியளவில் கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடு இன்றுவரை நீடித்த நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு வெளியில் கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் மாணவர்களின் மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். என அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளை இந்த மோதலை தனது தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த பொதுமகன் ஒருவர…
-
- 0 replies
- 741 views
-
-
பள்ளிவாசல்களில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கம்பளை வெலம்பொட பிரதேச பள்ளிவாசல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான வாள்கள், கத்திகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்படி 76 வாள்கள், கத்திகள் 13 கோடாரிகளுமே வெலம்பொட பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன. எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு கால் நடைகளை அறுத்து சுத்தம் செய்ய இவைகள் தேவை என குறித்த பள்ளிவாசல் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அவை மீள ஒப்படைக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். https://newuthayan.com/story/15/பள்ளிவாசலில்-கைப்பற்றப…
-
- 1 reply
- 394 views
-
-
August 7, 2019 இந்தியாவில் லடக் பிரதேசத்தை தனியான மாநிலம் என்ற ரீதியில் பெயரிடுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், லடக் பிரதேசத்தில் 100 க்கு 70 சதவீதமான பௌத்த மக்கள் வாழ்வதானால் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த உள்ளக தீர்மானத்துடன் பௌத்தர்களை பெரும்பாண்மையாக கொண்ட முதலாவது இந்திய பிராந்தியமாக லடக் இடம்பெற்றுள்ளது. தாம் லடக் பிரதேசத்திற்கு பயணம் செய்திரு…
-
- 1 reply
- 534 views
-
-
சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என பளை காவற்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் 72 வயதுடைய சுப்ரமணியம் கங்கேஸ்வரி என்பவரே கொல்லப்பட்டார். வீட்டில் மூத்த சகோதரரும் இளைய சகோதரனுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுப்பதற்கு அவர்களது அம்மம்மா முயற்சித்துள்ளார். அப்போது மூத்த சகோதரனுக்கு கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்ற போது கத்தி அம்மம்மாவின் நெஞ்சில் பாய்ந்தது. அம்மம்மாவுக்கு கத்தியால் குத்தியதையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள் அவரை…
-
- 0 replies
- 720 views
-
-
August 7, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய நால்வர் மீது இராணுவப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு,…
-
- 0 replies
- 297 views
-
-
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட , முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் தமது பதவி நிலைகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (06.08.19) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை கடற்படைத் தளபதியாக பணியாற்றிய வசந்த கரன்னாகொட, கடற்படையின் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேவேளை, 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய ரொஷான் குணதிலக, விமானப்படை சீப் மார்ஷலாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார். http://globaltamilne…
-
- 0 replies
- 341 views
-
-
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டபேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அவர்களால் மேற்கொள்ளபட்டுவரும் சுழற்சிமுறையிலான உணவு தவிர்பு போராட்டம் இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளமையை முன்னிட்டே குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டது. காலை11.30மணியளவில் போராட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து கண்டிவீதி வழியாக பேரணியாக சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழர்கள் 1976 இல் சிங்கள அரச…
-
- 1 reply
- 521 views
-
-
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். சஹ்ரானை நேரில் சந்திக்காத பலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், சஹ்ரான் ஹாஷிமின் போதனைகள் அனைத்தும், தமிழ் மொழியில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், போதனைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றமையினால் அது தமிழ்நாட்டிற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படு…
-
- 0 replies
- 315 views
-
-
சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர்கள் மீது இராணுவத்தினர் 15 தடவைகள் துப்பாக்கிச்சூடு! முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய நால்வர் மீது இராணுவப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு, குறித்த நால்வரில் மூவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் மீது 15 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும் அவர் உயிர் தப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் அம்பகாமம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக நால்வர் மணல் ஏற்ற முற்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சென…
-
- 0 replies
- 595 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு நிச்சயம் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தீர்வு முன்வைக்கப்படும். தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் வினவிய போதே ஜனநாயக மக்கள் காங்கிரின் தலைவர் பிரபா கனேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 3 replies
- 675 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் எதிரக்கட்சி தலைவர் மாத்திரமே இருந்துள்ளதுடன் சமகால அரசியல் விடயங்கள் மற்றும் தேர்தல்கள் குறித்து முக்கியமாக பேச்சப்பட்டிருக்கலாம் என கூட்டு எதிக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/62034
-
- 1 reply
- 534 views
-
-
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் , பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதனையும் ஆட்சேபித்து மௌன பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவரும் , இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. குறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் , இந்து சமய பேரவை…
-
- 9 replies
- 903 views
-
-
பொதுமக்களின் காணியை அபகரிக்கவா? பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் கிழக்கு பக்கத்தில் இருந்து மேற்குப்பக்கமாக மாற்றப்படுகிறது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பலாலி வீதிக்குக் கிழக்குப்பக்கமாக இருந்த பலாலி விமான நிலைய நுழைவாயிலைத் தற்போது மயிலிட்டிப் பக்கமாக (மேற் குப்புறம்) மாற்றும் நடவடிக்கைகள் திரைமறைவில் நடந்து வருவதாக அறிய முடிகிறது. இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வடக்கு மக்களுக்கு ஓர் நற்செய்தியாக அமைந்தாலும் குறித்த விமான நிலையத்தின் முன்பிருந்த கிழக்குப்பக்க நுழை வாயிலை மேற்குப் பக்கமாக மாற்றும் செயற்பாடு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாய் அமைகிறது. தெல்லிப்பளை பி…
-
- 2 replies
- 1.2k views
-
-
13ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரம் வலுவற்றது என இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனீஸ்வரன் வழக்குத் தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி தொடர் பில் ஊடகங்களுக்கு விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த கேள்வி-பதிலிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள கேள்வி -பதில் வருமாறு, நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகின்றது. அதாவது, டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத் திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். முன்னைய அமைச்சரை நீக…
-
- 1 reply
- 456 views
-