ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
குளோபல் தமிழ்செய்தியாளர் மன்னார்-மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருகேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் சட்டத்தரணி ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர். அருட்தந்தை ஒருவர் உற்பட 10 பேர் இவ்வாறு சட்டத்தரணி ஊடாக மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர். இவர்களில் மூன்று பெண்களும்,ஆறு ஆண்களும் அடங்குகின்றனர்.குறித்த 10 பேரிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட மன்னார் காவல்துறையினர் பின்னர் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்;. …
-
- 1 reply
- 278 views
-
-
வியாழன் 04-10-2007 19:10 மணி தமிழீழம் [மயூரன்] வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள் மன்னார் மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் விளாத்திகுளத்தில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர்: 2 ஆம் லெப். தீக்கவி என்றழைக்கப்படும் பூலோகநாதன் சிவாகர் (சொந்த முகவரி: 155 ஆம் கட்டை, தொண்டமான் நகர், கிளிநொச்சி. தற்காலிக முகவரி: மணியன்குளம், விநாயகர் குடியிருப்பு, கந்தபுரம்) வீரவேங்கை பெருநம்பி என்றழைக்கப்படும் சக்திவேல் சங்கரலிங்கம் (இன்பன் கடை, செல்வா நகர், கிளிநொச்சி) …
-
- 6 replies
- 2.5k views
-
-
மூதூர் ஆசிரியை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காயங்களுடன் இளம் ஆசிரியையொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை சம்பூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கட்டைபறிச்சானைச் சேர்ந்த குருகுலசிங்கம் சிறிவதனி (வயது 27) என்ற ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திலுள்ள சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவ் ஆசிரியை வழமைபோன்று இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல…
-
- 4 replies
- 1.2k views
-
-
2005ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா செய்ததனைப் போன்றே தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்வதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஸ்ரீலங்கா மிரருக்கு தெரிவித்துள்ளார். ''மைத்திரி இதுபோன்று கருத்து வெளியிடுவார் என்பதனை நான் எதிர்பார்த்திருந்தேன். இது குறித்து பதற்றம் அடைய வேண்டியத் தேவையில்லை. 2005ஆம் ஆண்டு மகிந்த வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் சந்திரிக்கா இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்டிருந்தார். யார் மீதும் குரோம் கொள்ளக் கூடாது எனக் வந்த மைத்திரியின் குரோதம் எவ்வளவு கடுமையானது என்பதனை மக்கள் நேற்று புரிந்து கொண்டார்கள். கட்சித் தலைவர் என்ற ரீதியில் மைத்திரி பலவீனமடைந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. …
-
- 0 replies
- 263 views
-
-
நிதி ஒதுக்கீடு தோல்வி : ஐந்தரை லட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் பிரச்சினை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான முழுப் பொறுப்பை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே ஏற்க வேண்டும் எனவும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையினால் பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கும் அவர்களுடன் தொடர்புள்ள மாகாண சபைகளுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட…
-
- 1 reply
- 478 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 APR, 2024 | 08:45 AM (நா.தனுஜா) உடலியல் ரீதியான தண்டனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 1.3 பில்லியன் சிறுவர்கள் உடலியல் ரீதியான தண்டனைகளால் பல்வேறு விதங்களிலும் பாதிப்புக்களுக்கு உள்ளாவதாக தரவுகள் கூறுகின்றன. இலங்கையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதை முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை எதிர்பார்க்கப்பட்ட பலனைத் தரவில்லை. எனவே இலங்கையில், குறிப்பாக பாடசாலைகளில் உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படும் போக்கை முற்றாக முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் வைத்திய கலா…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
மாளிகாவத்தையில் இன்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன்போது வெளியே வந்த தரப்பினர் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சில வாகனங்கள் சேதமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் மாளிகாவத்தையில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் உடனடியாக பொலிஸ், அதிரடிப்படை, இராணுவ வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் எமது செய்தியாளர் மேல…
-
- 0 replies
- 412 views
-
-
மரண தண்டனை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய வேண்டுகோள் மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசாங்கம் தொடரவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது இலங்கையிலுள்ள பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து நோர்வே சுவிட்சர்லாந்து பிரிட்டன் மற்றும் கனடா அவுஸ்திரேலியா ஆகியநாடுகளின் தூதரகங்களுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது இலங்கை அரசாங்கம் போதைப்பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக 43 வருடங்களின் பின்னர் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்…
-
- 0 replies
- 364 views
-
-
08 MAY, 2024 | 02:34 PM வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் …
-
-
- 7 replies
- 661 views
- 1 follower
-
-
தெற்கில் யுத்தத்திற்கு ஆதரவைத் திரட்ட கிராமங்கள் தோறும் ஆயுதக் கண்காட்சி தென் பகுதியில் கிராமப் புற மக்களிடையே யுத்தத்திற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. வடக்கு- கிழக்கில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதாயின் தெற்கில் அனைத்து மக்களதும் ஒருமித்த ஆதரவு தேவையெனக் கோரும் பாரிய பிரசார நடவடிக்கை இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிலேயே யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தேடும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதற்கமைய கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஆயுதங்களும் தென்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜனாதிபதியின் ஐ.நா உரையை எழுதியதாக பிரித்தானிய நிறுவனம் தெரிவிப்பு 06 டிசம்பர் 2011 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஆற்றிய உரையை எழுதியதாக பிரித்தானிய மக்கள் தொடர்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையை தாமே எழுதியதாக குறித்த மக்கள் தொடர்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட உரையை விடவும் தமது உரைக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்ததாக பெல் பொட்டிங்கர் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேச சமூகத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமையும் என ஐரோப்பிய பாராளுமன்ற பாதுகாப்புச் செயலாளர் ஜெப்ரி வேன் ஒடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் கடப்பாட்டை அவர்களிடமே ஒப்படைத்தல் சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய எதிர்பார்ப்புக்களுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியை இலங்கையில் காணக்கூடியதாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார். தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் அவதானித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்ற பாதுகாப்புப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்…
-
- 0 replies
- 761 views
-
-
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122388/language/ta-IN/article.aspx பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் வீட்டில் காணாமல் போனர்களின் உறவினர்கள், இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் , வாழும் மக்கள், வேலையில்லா பட்டதாரிகள் , தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளை சந்தி…
-
- 0 replies
- 239 views
-
-
மட்டக்களப்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் – இறுதி நேரத்தில் இலக்கு மாற்றப்பட்டதா? மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கான இலக்கு இறுதி நேரத்தில் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு – சியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி, முதலில் புனித மரியாள் தேவாலயத்தையே இலக்கு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மட்டக்களப்பு – புனித மரியாள் கத்தோலிக்கத் தேவாலயத்தின் ஆராதனைகள் விரைவாகவே முடிவடைந்ததால், தற்கொலைக் குண்டுதாரி தனது இலக்கை மாற்றியுள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு – புனித மைக்கேல் ஆண்கள் பாடசாலைக்கு எதிரில் அமைந்த…
-
- 0 replies
- 492 views
-
-
கருணா OUT… பிள்ளையான் IN… தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் ஒன்றை வழங்க ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிள்ளையான் தோல்வியைத் தழுவினால், தேசியப் பட்டியல் ஊடாக அவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்க இணங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலை புலிகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முன்னதாக தீர்மானித்திருந்தது என கட்சிய…
-
- 0 replies
- 643 views
-
-
யாழில் முப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முப்படையினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 51ஆவது படைப்பிரிவு இராணுவம், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் இணைந்து இன்று அதிகாலை 4 மணிமுதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியாக தீவிரவாதிகள் உள்நுழையலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றது. குருநகரின் சுமார் 300 வீடுகள் இவ்வாறு சோதனையிடப்பட்டது. எனினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைப்பெறவில்லையென தெரிவிக்கப்படுகிறது. கடந்த உயிர்த்த …
-
- 0 replies
- 439 views
-
-
03 JUN, 2024 | 01:00 PM (எம்.நியூட்டன்) ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (02) விஜயம் செய்ததுடன் பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டார். நல்லை ஆதீனத்துக்குச் சென்ற ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ ஸ்ரீ சோமசுந்தர பரம்மாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் கலந்துகொண்டார்கள். அதனை தொடர்ந்து, நல்லூர் கந்தசுவாமி கோவிலும் வழிபாடுகளில் ஈடுபட்டதுட…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
இயேசு பிறந்த நாளில் மறைந்தார் மாமனிதார் யோசப்பரராசசிங்கம்-ஆய்வு நினைவேந்தல்கட்டுறை. அன்பும் அறமும் தன்னீய்கையும் கொண்ட தெய்வ மகன் பிறந்த நாளாகிய யேசு எமக்காய் பாவங்களையும் இந்த மானிட குற்றங்களுக்கு பாவ மன்னிப்புக்களை அவசியப்படுத்தி இந்த உலகில் மனித இனத்தவர்கள் அனைவருக்கும் அன்பின் வளியில் இறைமையாக செல்ல வேண்டும். என்பதை எளிதான முறையில் காண்பிக்க உதித்த தந்தைதான் எங்கள் யேசுபிரான். இந்த புனிதமான நாளில் புனிதங்களை சிதைக்கவும் மதங்களையும் மத தலங்களையும் நசுக்கி அரக்கத்தனமாகன முறையில் நடந்த இனப்படுகொலை நடந்த நாளில் இயேசு பிறக்கின்றான் இங்கே உயிர்கள் நரபலி எடுக்கின்றது அரக்கத்தனவாதிகள். இந்த நாளில் தான் இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பார…
-
- 0 replies
- 635 views
-
-
சிறிலங்கா தேர்தல்: வெற்றி பெறப்போவது யார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோAUG 08, 2015 | 13:44by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா தேர்தல் வரலாற்றின் பிரகாரம், தோற்கடிக்கப்பட்ட எந்தத் தலைவர்களும் அல்லது தோற்கடிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. 1994ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்ற பின்னர், இதற்கு சில மாதங்களின் பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் காமினி திசநாயக்க போட்டியிடத் தீர்மானித்தார். இது அன…
-
- 0 replies
- 573 views
-
-
நேற்று இரவு நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்களுடைய, வாகனங்கள் வீடுகள், வீட்டு பாவனை பொருட்கள் , கடைகள் என பல பெறுமதிமிக்க பொருட்கள் தாக்கி நாசம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடைய சொத்துக்களை தாக்கி. சேதம் ஏற்படுத்துவதிலேயே வன்முறையாளர்கள் குறியாக செயற்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://www.madawalaenews.com/2019/05/yt.html
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை குற்றம் சுமத்திக்கொண்டிருப்பதால் மாத்திரம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது என்று நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் வேண்டுமானால், போரின் போது ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க வேண்டும். அத்துடன் அரசியல் பேதங்களை களைய வேண்டும். இவற்றை மேற்கொள்ளாத போது இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை, சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் பலர் அவையவங்களை இழந்துள்ளனர். ஆனால், இலங்கை அரசாங்கம் போரினால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை என்று ம…
-
- 5 replies
- 863 views
-
-
TNA Canada 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள்!- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள் என கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை அப்படியே வருமாறு, மே 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்மக்களுக்கு இருக்கிற ஓரே அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) விளங்கி வருகிறது. 2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் நடந்த தேர்தல்களிலும் தமிழ்மக்கள் ததேகூ க்கே ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறார்கள். இந்த…
-
- 0 replies
- 395 views
-
-
யாழில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட குழு சிக்கியது யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 33 தங்கப் பவுண் நகைகளும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன” என்று பொலிஸார் குறிப்பிட்டனர். “யாழ் குடாநாட்டில் அண்மைய நாட்களாக திருட்டுக்கள், கொள்ளைகள் மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம்,கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களின் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு…
-
- 0 replies
- 672 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னுதாரணம் காட்டி இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசினது மக்கள் தொடர்பு மற்றும் பொதுவிவகார அமைச்சராகவுள்ள சர்ச்சசைக்குரியவரான மேர்வின் சில்வா மீது களனி பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதேவேளை எந்த ஒரு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் எனவும் தம்மீதான குற்றச்சாட்டுக்கு ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிக்குமாறு தானே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கேட்டுக்கொண்டதாகவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பௌத்த மத தலைவர்கள் மாத்திரமல்லாது களனி மக்களும் தன்னுடயே இருப்பதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். http:/…
-
- 4 replies
- 764 views
-