ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டபேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அவர்களால் மேற்கொள்ளபட்டுவரும் சுழற்சிமுறையிலான உணவு தவிர்பு போராட்டம் இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளமையை முன்னிட்டே குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டது. காலை11.30மணியளவில் போராட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து கண்டிவீதி வழியாக பேரணியாக சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழர்கள் 1976 இல் சிங்கள அரச…
-
- 1 reply
- 526 views
-
-
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். சஹ்ரானை நேரில் சந்திக்காத பலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், சஹ்ரான் ஹாஷிமின் போதனைகள் அனைத்தும், தமிழ் மொழியில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், போதனைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றமையினால் அது தமிழ்நாட்டிற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படு…
-
- 0 replies
- 317 views
-
-
சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர்கள் மீது இராணுவத்தினர் 15 தடவைகள் துப்பாக்கிச்சூடு! முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய நால்வர் மீது இராணுவப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு, குறித்த நால்வரில் மூவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் மீது 15 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும் அவர் உயிர் தப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் அம்பகாமம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக நால்வர் மணல் ஏற்ற முற்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சென…
-
- 0 replies
- 598 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு நிச்சயம் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தீர்வு முன்வைக்கப்படும். தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் வினவிய போதே ஜனநாயக மக்கள் காங்கிரின் தலைவர் பிரபா கனேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 3 replies
- 678 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் எதிரக்கட்சி தலைவர் மாத்திரமே இருந்துள்ளதுடன் சமகால அரசியல் விடயங்கள் மற்றும் தேர்தல்கள் குறித்து முக்கியமாக பேச்சப்பட்டிருக்கலாம் என கூட்டு எதிக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/62034
-
- 1 reply
- 542 views
-
-
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் , பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதனையும் ஆட்சேபித்து மௌன பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவரும் , இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. குறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் , இந்து சமய பேரவை…
-
- 9 replies
- 906 views
-
-
பொதுமக்களின் காணியை அபகரிக்கவா? பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் கிழக்கு பக்கத்தில் இருந்து மேற்குப்பக்கமாக மாற்றப்படுகிறது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பலாலி வீதிக்குக் கிழக்குப்பக்கமாக இருந்த பலாலி விமான நிலைய நுழைவாயிலைத் தற்போது மயிலிட்டிப் பக்கமாக (மேற் குப்புறம்) மாற்றும் நடவடிக்கைகள் திரைமறைவில் நடந்து வருவதாக அறிய முடிகிறது. இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வடக்கு மக்களுக்கு ஓர் நற்செய்தியாக அமைந்தாலும் குறித்த விமான நிலையத்தின் முன்பிருந்த கிழக்குப்பக்க நுழை வாயிலை மேற்குப் பக்கமாக மாற்றும் செயற்பாடு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாய் அமைகிறது. தெல்லிப்பளை பி…
-
- 2 replies
- 1.2k views
-
-
13ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரம் வலுவற்றது என இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனீஸ்வரன் வழக்குத் தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி தொடர் பில் ஊடகங்களுக்கு விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த கேள்வி-பதிலிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள கேள்வி -பதில் வருமாறு, நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகின்றது. அதாவது, டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத் திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். முன்னைய அமைச்சரை நீக…
-
- 1 reply
- 460 views
-
-
இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் தகவல் 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை …
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் உட்பட முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான இரண்டு அமைச்சர்களும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் சாட்சியங்களை வழங்கினர். தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு படையினர் தனக்கு தகவல் தெரிவிக்கவில்லையென குறிப்பிட்டார். இதையடுத்து முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சில் மத்தும பண்டார ஆகியோர் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்…
-
- 1 reply
- 334 views
-
-
கட்டுவாபிட்டிய தேவாலயம் மற்றும் ஏனைய தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உண்மையை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை நான் நன்கு அறிவேன் எனத் தெரிவித்த, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நான் எந்தவொரு சக்திக்கும் பயப்படமாட்டேன். நான் எப்பொழுதும் உங்களுடனேயே உள்ளேன் என தெரிவித்தார். கட்டுவாபிட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்த்தியார் சிலை மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலையடுத்து, ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அங்கு வருகைத் தந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதேசவாசிகள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/எந்தவொரு-சக்திக்கும்-பயப்படமாட்டேன்/175-236363 …
-
- 0 replies
- 529 views
-
-
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு சந்தேகத்துக்கு இடம…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் ; சுரேன் ராகவன் அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே வடமாகாண நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.+ வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், குடிநீர் தேவை என்பது வடமாகாணத்திற்கு எவ்வளவு சவாலானதாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கிணங்க பல்வேறு வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து கொண்டிருக்கிறோம். எனவே அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இர…
-
- 1 reply
- 401 views
-
-
கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும் தொலைபேசி சிம் அட்டை அவருடைய தந்தையின் பெயரில் உள்ளமையால் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக இன்று(06) கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை கிளிநொச்சி அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தத…
-
- 0 replies
- 444 views
-
-
கூட்டணி உதயமாகிறது ! ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்வதே ஒரே இலக்கு - ரணில் (எம்.மனோசித்ரா) தனிக்கட்சியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் உள்ள கடின தன்மையினை கடந்த கால அரசியல் குறித்து அவதானத்தில் கொள்ளும் போது அனைவராலும் உணரமுடியும். எனவே தான் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து வெற்றிப்பெற கூடிய வகையில் அதனை வலுப்படுத்தும் பணிகளில் முழு அளவில் ஈடுபட்டுள்ளோம். இந்த இலக்கிலிருந்து நானோ எனது பங்காளி கட்சிகளின் தலைவர்களோ விலக போவதில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே எமது ஒரே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க …
-
- 1 reply
- 873 views
-
-
அமைதி காக்கும் படைக்காகச் செல்லும் விமானப்படையின் ஹெலிகொப்டர் Editorial / 2019 ஓகஸ்ட் 05 திங்கட்கிழமை, பி.ப. 05:01 Comments - 0 ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை நடவடிக்கைகளுக்காக, மத்திய ஆபிரிக்கா நோக்கி பயணிக்கவுள்ள, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டருக்கான பிரியாவிடை நிகழ்வுகள் , விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் தலைமையில், இன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைக்காக, இலங்கையிலிருந்து 2014ஆம் ஆண்டு முதலாவது ஹெலிகொப்டர் மத்திய ஆபிரிக்கா நோக்கிச் சென்றுள்ளதுடன் இன்று 5ஆவது ஹெலிகொப்டர் புறப்படவுள்ளது. குறித்த ஹெலிகொப்டரில் 18 அதிகாரிகள் உள்ளிட்ட 92 பேரும் கட்டளையிடும் அதிகாரியாக விங்க கமான்டர் கே.எம…
-
- 1 reply
- 495 views
-
-
பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (IATA) அனுமதி அளித்துள்ளது என சிவில் விமான சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை விமான நிலையம் என்றே சர்வதேச விமான சேவைப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளது. தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தமாதம். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசவட்டாரங்கள் கூறுகின்றன. இந்தநிலையில், வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை பலாலி…
-
- 1 reply
- 496 views
-
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மடு மாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது. பெருநாளை முன்னிட்டு மடு ஆலயப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலய வழிபாட்டிற்கு வந்த மக்களைய…
-
- 4 replies
- 967 views
-
-
படுவான்கரை பிரதேசத்தில் தொடரும் அவலம்! முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து போனாலும் அதன் பாதிப்பு இன்னும் காணப்படுகின்றது. எமது நாட்டில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் மிகப் பாரியதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் கூடியளவு பெண்கள் கணவனை இழந்து விதவைகளாகினர்.இங்கு 2010க்கு மேற்பட்ட விதவைகள் உள்ளதாக பிரதேச செயலக அறிக்கை மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது. இவர்களில் அநேகமானோர் இளவயதினராகக் காணப்படுகின்றனர். திடீரென கணவனை இழந்த அவர்கள் எந்தவிதமான முன்னனுபவங்களும் இன்றி குடும்ப தலைமைத…
-
- 0 replies
- 433 views
-
-
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினார் ரஞ்சன் ராமநாயக்க! In இலங்கை August 5, 2019 9:29 am GMT 0 Comments 1608 by : Benitlas பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(திங்கட்கிழமை) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்ச…
-
- 2 replies
- 853 views
-
-
வெற்றியடையக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு: ரிஷாட் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடையக் கூடிய கட்சிக்கே நாம் எமது ஆதரவினை வழங்குவோமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் மேலும் கூறியுள்ளதாவது, “2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது ஆதரவினை வழங்கினோம் அவர் வெற்றிப்பெற்றார். அதேபோன்று 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு எங்களது ஆதரவினை வழங்கினோம். அந்தவகையில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றியடையக்கூடிய வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம்” என ரிஷாட் தெரிவித்துள்ளார். http://athavannews.com/வெற்றிய…
-
- 1 reply
- 560 views
-
-
ஆயிரம் வருட அபிவிருத்தியை ஒரு வருடத்தில் செய்துள்ளோம் என அமைச்சர் சம்பிக ரணவக்க குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, இந்த வீடமைப்பு வேலைத்திட்டத்தினால் அரசாங்கம் எந்த விதத்திலும் கடன் சுமைக்குள் தள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் ' மெட்ரோ ஹோம்ஸ் ' வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்க…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம், செவ்வாய்க்கிழமை (6) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக, திங்கட்கிழமை (5) மதியத்திலிருந்து 01 ஆம் திகதி நள்ளிரவு வரை, வீதி தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அறிவுறுத்தியுள்ளார். வீதித்தடையின் போது, வாகனப் போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள், கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், உற்சவ காலத்தில், சாதாரண காவடிகள், பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன, பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக…
-
- 4 replies
- 1.1k views
-
-
புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது – ஹக்கீம்! In இலங்கை August 5, 2019 8:37 am GMT 0 Comments 1312 by : Benitlas முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அவசியமில்லை. நிரந்த தடைக்கான அமைச்சரவ…
-
- 3 replies
- 504 views
-
-
சஜித்துடன் இணையவுள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தது சுதந்திர கட்சி! In இலங்கை August 5, 2019 9:52 am GMT 0 Comments 1275 by : Benitlas சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கவுள்ளதாக வெளியான தகவலினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முற்றாக மறுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டிய அவசியம் சுதந்திர கட்சிக்கு கிடையாது. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சாத்தியமாவதற்கு வாய்ப்பில…
-
- 0 replies
- 429 views
-