ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
தமிழ் மக்களின் வாக்குகளாலேயே நான் இத்தனை வருடகாலம் பாராளுமன்றத்திற்குத் தேர்வாகி சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான எனது கௌரவத்தை வெளிப்படுத்துவதுடன், நாமனைவரும் இன,மத பேதமின்றி ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்று சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அருண் பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகத்தினால் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலைக்கான காணி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுதலும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் அப்பாடசாலைக்கு வழங்கப்படும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று …
-
- 0 replies
- 371 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இந்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஆராய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளரால், பிரதேச சபைக்கான பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, சபையில் உள்ளவர்களுடைய கருத்துகளுக்காக இடமளிக்கப்பட்டது. இந்நிலையில் சபையில் இடம்பெற்ற வாதப்…
-
- 0 replies
- 322 views
-
-
சோபா உடனபடிக்கையில் கைச்சாத்திடுவதனூடாக, 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர், எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமம் என, ஜனாதிபதியின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, சோபா, அக்சா, மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டபோதே, மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். அரசாங்கம் இந்த சோபா உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவம், சீருடை தரித்து ஆயுதத்துடன் நடமாடும் நிலைமை உருவாகும் என்றும் பயங்கரவாதிகளும் எந்ததொரு தடைகளும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்…
-
- 6 replies
- 1.3k views
-
-
டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரிகையாளர் பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பதிவிட்டுள்ளார் வக்கிர மனோபாவம் கொண்ட நபர் ஒருவரின் ஆபாசமான வார்த்தைபிரயோகங்களை இலங்கை வீதிகளில் எதிர்கொள்ளவேண்டியுள்ளதை சுட்டிக…
-
- 0 replies
- 292 views
-
-
மக்களின் காணிகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் நாளை பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான காணிவிடுவிக்கப்படவுள்ளது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சியில் கருத்து தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக ஆளுநர் ஊடகங்களிற்கு தெரிவித்தார…
-
- 0 replies
- 570 views
-
-
யாழ்.மிருசுவில் - ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கர் காணியை தன்னிடமே திருப்பி தருமாறு காணி உரிமையாளரான தம்பிராசா மகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளதுடன் மாற்றுக் காணி மற்றும் இழப்பீடு வேண்டாம் என நிராகரித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு சுமார் 5 இலட்சம் ரூபா செலவு செய்து எனது காணியை துப்புரவு செய்தேன். 2012ஆம் ஆண்டு எனது காணிக்குள் அடாத்தாக புகுந்த இராணுவத்தினர் காணிக்குள் நுழைய கூடாது என கூறியதுடன் காணியை சுவீகரித்து விட்டனர். இதன் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக வழக்கு தொடர்ந்தபோதும் தென்னம் தோட்டத்தை விடவும் தே…
-
- 2 replies
- 557 views
-
-
அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை ஏற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/220118/முஸ்லிம்-நாடாளுமன்ற-உறுப்பினர்களது-தீர்மானம்
-
- 1 reply
- 464 views
-
-
மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது ? (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமே உருவாகும். அவர்களின் அரசாங்கத்தில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நாம் மறக்கவில்லை. ஆகவேதான் இந்த அரசாங்கத்தை வீழ்த்தாதுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார். இன்னும் சிறிது காலத்தில் பொதுத் தேர்தல் வரும். அதில் மக்கள் தமக்கான அரசாங்கத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பி கொண்டு…
-
- 2 replies
- 1.1k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர்ச்சியாக போராட்டம் நடாத்திவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், ‘தமிழ்தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எதனையும் செய்யப்போவதில்லை. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரண…
-
- 0 replies
- 316 views
-
-
கன்னியா பிள்ளையார் ஆலயம் மீண்டும் உடைப்பு திருகோணமலை கன்னியா வெந்நிருற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த குருமாருடன் கலந்துரையாடி உடைக்கப்படும் வேலைகள் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கள் முதல் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயங்கள் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.என கன்னியாவில் இயங்கி வருகின்ற தென் கையிலை ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிடம் வினவிய போது உடைப் பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அதற்கான அனுமதிக்கடிதத்தை தமக்கு காட்டுவதனாக குருமுதல்வர் தெரிவிக்கின்றார். …
-
- 1 reply
- 857 views
-
-
திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீச்சர அலங்கார வளைவிற்கு பிரதேச சபையினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைக்கண்டித்து இன்று காலை 9.30மணியளவில் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், ஏனைய பொது அமைப்புக்களாலும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் ஆயரே பிரதேச சபையை ஆட்சி செய்யாதே ஆட்களை வெருட்டாதே, எம்மவரைப் பங்கு போடாதே , வீடு வீடாத்திரியாதே, அன்பு செய்வதுபோல் ஆணவம் காட்டாதே, மன்னார் ஆயரே புராதனமான பாரம்பரியத்தை சிதைக்காதே திருக்கேதீச்…
-
- 0 replies
- 717 views
-
-
சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் – ட்ரம்ப் உறுதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு, கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொட்னி பெரேரா கடந்த திங்கட்கிழமை அமெரிக்க அதிபரைச் சந்தித்து நியமன ஆவணங்களை கையளித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றியுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயற்படுவதன…
-
- 0 replies
- 411 views
-
-
அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு ரணிலுக்கு ஆலோசனை பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது. 21/4 தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள் சிறிலங்கா பிரதமருக்கு விளக்கியுள்ளனர். கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோர…
-
- 0 replies
- 630 views
-
-
‘’ஐ.எஸ் தாக்கவில்லை, அனைத்துலக சக்தியின் சதி வேலை” – என்கிறார் தயாசிறி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருக்கவில்லை என்றும், இது அனைத்துலக சக்தி ஒன்றின் வேலையே எனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வில் சாட்சியளித்த போது, அவர் இவ்வாறு கூறினார். “சில நாடுகள் சிறிலங்கா விவகாரங்களில் தலையிடுகின்றன என்பது பொதுவான விடயம்.. இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் அமைப்பு இருந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. சில அனைத்துலக சக்திகள் சஹ்ரானை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளன. எனவே, தாக்குதல்…
-
- 1 reply
- 540 views
-
-
அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதம் நாளை மாலை வரை தொடரும். உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தையடுத்து நாளை மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பொது எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அ…
-
- 9 replies
- 1.6k views
-
-
1981 இல் அச்சிடப்பட்ட புத்தகத்தில் இஸ்லாமிய மதத்தை விட்டு செல்பவர்களுக்கு மரணமே தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக வாழ்வியல் கட்டமைப்பை சிதைப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றி கூறப்பட்டுள்ளன இந்த தண்டனைகளால் தவறுகளை செய்யாத சமூக கட்டமைப்பை ஒன்றை உருவாக்குவதே இஸ்லாம் மதத்தின் நோக்கமாக உள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது என பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட கல்வி அமைச்சின் செயலாளர் – இ.எம்.எம். ரணசிங்கவிடம் தெரிவுக்குழு நடத்திய விசாரணைகளின் போதே அவர் இதனை தெரிவித்தார். கேள்வி – கல்வி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் 1982-84 வரையில் மதமாற்றத்துக்கு என்ன தண்டனை கூறப்பட்டுள்ளது? பதில்:- 1981 இல் அச்சிடப்பட்ட …
-
- 0 replies
- 767 views
-
-
சீயோன் தேவாலய குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த யுவதி உயிரிழப்பு கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி (22 வயது) எனும் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கிழக்கு பல்கலை கழகத்தில் கல்வி பயிலும் மாணவியாவார். இவரோடு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தகது. https://www.virakesari.lk/article/60312
-
- 0 replies
- 465 views
-
-
மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது. கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இதன்போது கலந்து கொண்டனர். இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசா…
-
- 2 replies
- 578 views
- 1 follower
-
-
எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்கவேண்டும் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் முக்கிய உறுப்பினரான ஆ. லீலாதேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘காணாமல் போன உறவுகள் தம்மிடம் சரணடையவில்லை எனவும் அது தொடர்பாக அரசாங்கத்திடமே கேட்க வேண்டும் எனவும் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறான நகைச்சுவையை வேறு எந்த ஒரு நாட்டிலும் கேட்க முடியாது. இராணுவம் வேறு அரசாங்கம் வேறு என்று கூறக்கூடிய விடயம் அல்ல. அத்துடன் யு…
-
- 0 replies
- 446 views
-
-
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 858 பணிப்பெண்கள் வெளிநாடுகளில் உள்ள தூதரங்களின் தொழிலாளர் பிரிவின் கீழ் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பணிப் பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதில் அதிகமானோர் குவைட் தூதுவராலயத்தின் பாதுகாப்பு வீடுகளில் தங்க வைக்கப்பட்டவர்களில், 588 பேர் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அத்தோடு சவுதியிலிருந்து 18 பேர், ஜோர்தானிலிருந்து 12 பேரும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 95,908 பேர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளதுடன், அதில் 56,526 பேர் ஆண் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 718 views
-
-
5ஜி என்ற விடயம் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்? என யாழ்ப் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) அமைக்கும் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக கடந்த வருடம் நவம்பர் மாதமளவில மாதிரி ஸ்மார்ட் லாம் போல் ஒன்று யாழ்ப்பாணம் நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேரு…
-
- 0 replies
- 571 views
-
-
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பிரதேசத்தில் மீண்டும் புத்த விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருவதாக தென்கயிலை ஆதீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் கருத்து தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை முதல் கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் அதனை அகற்றி அங்கு புத்த விகாரை அமைக்கும் பணி தொடர்வதாகவும் நேரடியாக அங்கு சென்று தாம் அதனை ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டபோது திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஒரு புத்த விகாரை அமைக்கும் பணியை ஆரம்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு மாவட்ட ஒருங்கிணைப்…
-
- 0 replies
- 482 views
-
-
பருத்தித்துறை மணற்காடு பகுதியில் இளைஞர் ஒருவர், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பில் அவரது தாயாரால் 50 லட்சம் ரூபா இழப்பீடு கேட்டு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரிடமே இந்த இழப்பீட்டுத் தொகையை கொல்லப்பட்ட இளைஞனின் தாயார் கோரியுள்ளார். 2017ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி பருத்தித்துறை மணற்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினரின் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான யோகராசா தினேஷ் உயிரிழந்தார். து…
-
- 1 reply
- 727 views
- 1 follower
-
-
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் பகுதிகளில் நன்னீர் மீன் பிடியில் பல வருடங்களாக ஈடுபட்ட தமிழ் மீனவர்கள் நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரனமாக இடம் பெயர்ந்து தற்காலிகமாக முகாமில் தங்க வைக்கப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்ட சுமூகமான சூழலின் பின்னர் மீண்டும் தம் சொந்த நிலங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். மீள் குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்த நிலையில் குறித்த ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் பகுதி நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்களை இது வரை பெரிய மடு மீனவர் சங்கத்தை சேர்ந்த சகோதர இன மீனவர்கள் பெரிய மடு குளத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட் அனுமதிக்கவில்லை. …
-
- 0 replies
- 381 views
-
-
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி தனியார் வீடு ஒன்றின் வளவில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று (11) இன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதி போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை தனியார் ஒருவரின் காணிக்குள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் பொலிஸாரின் பாதுகாப்பு போடப்பட்டு வந்த நிலையில் (11) இன்று அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி ஸ்கேனர்…
-
- 0 replies
- 931 views
-