ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
ஜெனிவா தீர்மானத்தை ஸ்ரீலங்காவுடன் இணைந்து அமுல்படுத்துவோம் [ Friday,13 May 2016, 02:53:34 ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுவதாக தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் அனைத்து ஸ்ரீலங்கா மக்கள…
-
- 1 reply
- 550 views
-
-
Published By: Vishnu 15 Oct, 2025 | 09:08 PM தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர்மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பில் அறிந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குருந்தூர்மலைப்பகுதிக்கு 15.10.2025இன்று நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேல…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
இலங்கையில் இராணுவத்துக்கு உதவியாக இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் பொறியியலாளர்கள் கடமையாற்றுவது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மத்திய அரசு தமிழ் மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும். இலங்கையில் பசி பட்டினியால் தமிழர்கள் வாடுகின்றனர். ஆனால் இந்தியா இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப பொறியியலாளர்கள் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் இலங்கை அரசின் கூலிப்படையாக செயற்படுகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். அண்மையில் வவுனியா நகரிலுள்ள கூட்டுப் படை தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் இரு இந்திய பொறியியலாளர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடுக…
-
- 0 replies
- 896 views
-
-
இன்றைய அரசின் தூர நோக்கற்ற தன்மை காரணமாக எதிர்காலத்தில் உலக வரைபடத்தில் இலங்கை என்ற பெயர் அழிக்கப்பட்டு அந்தப் பெயருக்குப் பதிலாக சீனாவின் “யங்கிங்“ மாகாணம் என அந்த இடத்தில் எழுதப்படும் என வடமேல் மாகாண சபை உறுப்பினரான ஜயந்த கன்னங்கர தெரிவித்துள்ளார். சீனாவின் இன்றைய தேவையானது இலங்கைக்கு உண்மையாக உதவ வேண்டும் என்பது அல்ல.. தனது பொருளாதாரத்தை மேம்படுத்தி அதன் ஸ்திரத்தன்மையைப் பேணுவதேயாகும். இன்றைய அரசாங்கம் இன்று சீனாவை முழுமையாக நம்பியே தனது ஒவ்வாரு அடியையும் முன்வைக்கிறது. இதேவேளை, மேற்குலக நாடுகள் இன்று இலங்கையைப் புறந்தள்ளி விட்டன. இவற்றுக்கு எல்லாம் காரணம் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையே என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=35676
-
- 1 reply
- 724 views
-
-
சொல்வதைச் செய்கிறார்கள் இல்லை -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் இங்கு வைத்து வழங்கும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டினார். யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அமைச்சர்கள் இங்கு வருகின்றனர். உறுதிமொழிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அவற்றை நடைமுறைப்படு…
-
- 0 replies
- 253 views
-
-
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இன்று(12) உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள் உயிர்ப்பு பெருவிழா வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். கடந்தாண்டு உயிர்ப்பு பெருவிழா தினத்தன்று, நாட்டில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உயிர்த்த-ஞாயிறு-இன்றாகும்/175-248422
-
- 2 replies
- 689 views
-
-
Nov 18, 2025 - 06:07 PM நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது. ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன் - சரத் ஏக்கநாயக்க நாட்டின் இறைமை, ஒருமைப்பாட்டின் பிரகாரம் அரசியலமைப்புக்கு அமைவாக நான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன்’ என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். 13ஆவது திருத்தத்தின் நகல் உண்மையிலேயே மாகாணசபைகளில் அமுல்படுத்தப்படவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த திருத்தம் மாகாணசபைகளுக்கு கொண்டுவரப்பட்டது. வட, கிழக்கில் இந்த முறைமை உண்மையாக நடைமுறையில் இல்லை. தற்பொழுது கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டுள்ளது. எனினும் அங்கும் 13ஆவது திருத்தம் முறையாக அமுல்படுத்துவதில்லை. இது அரசாங்கத்தினத…
-
- 0 replies
- 439 views
-
-
அழியா வடுக்களை ஏற்படுத்தியுள்ள சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் (கதை சொல்லும் படங்கள்) அழியா வடுக்களை ஏற்படுத்தியுள்ள சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் (கதை சொல்லும் படங்கள்) http://www.virakesari.lk/article/7400
-
- 2 replies
- 917 views
-
-
வன்னிப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதநேயப் பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் உதவிசெய்ய வேண்டுமென கிளிநொச்சி வைத்திய சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கப் படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களாலும், அதிர்வுகளாலும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கியிருப்பதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். “வன்னிப் பிராந்தியத்தில் பெரும்பாலானவர்கள் வயல் நிலங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தாழ் நிலங்களில் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். ஏற்கனவே, பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்திருப்பதால், இடம்பெயர்ந்து தற்காலிக…
-
- 0 replies
- 794 views
-
-
இந்தியாவின் நிதியுதவியில் சர்வதேச தரத்தில் புனரமைக்கப்பட்டுவரும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை வடக மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் குரே பார்வையிட்டார். விளையாட்டரங்கிற்கு நேற்று மாலை விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன் இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜாவிடம் புனரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடினார். இந்திய நிதி உதவியினூடாக 146 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இப்பணிகள் பூர்த்தியாகியுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர். இந்திய பிரதமர் இந்த மைதானத்தை டெல்ல…
-
- 0 replies
- 372 views
-
-
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா! நவம்பர் மாத இறுதியில் டித்வா சூறாவளியால் தீவு நாடு தாக்கப்பட்ட பின்னர், ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான இலங்கை தூதர் ஷோபினி குணசேகரவை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் இன்று (10) அதிகாலை செய்தி வெளியிட்டது. 35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் ஏற்கனவே இலங்கைக்கு புறப்பட்டு விட்டது என்று ஷோபினி குணசேகர RIA செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தினார். மேலும், அது இன்று இலங்கையைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர், இலங்கையின் மிக மோசமான இயற்கை பேரழிவாக…
-
- 3 replies
- 324 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது! [Wednesday, 2012-11-07 20:11:09] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நொச்சிமுனை ஆறாம்குறிச்சி பகுதியில் வைத்து குறித்த காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தது.இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக அவர் தலைமறைவாகியிருந்துள்ளார். பால்குடியன் அல்லது கிளியரசன் என்ற இயக்கப் பெய…
-
- 0 replies
- 628 views
-
-
இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் , கோட்டா மீதும் விசாரணை-மக்ஸ்வெல் பரணகம கோரிக்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, சவேந்திர சில்வா போன்ற இரண்டாம் தரப்பினரையும் விசாரணை செய்ய வேண்டும் என்று மெக்ஸ்வல் பரணகம கோரிக்கை விடுத்தார். காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை மட்டுமே தமது ஆணைக்குழு விசாரணை செய்தது. எனினும் அவர்களால் குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை விசாரணை செய்வதற்கான கால அவகாசம் தங்களுக்கு இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே இந்த விவகாரத்தில் தீர்வொன்றை பெற வேண்டுமாயின் காணாமல…
-
- 2 replies
- 247 views
-
-
கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்களின் பட்டியலின் பிண்ணனியில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவதாக தேசியமக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(20.12.2025) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கிளிநொச்சியில் கட்டப்பஞ்சாயத்து நடாத்திக் கொண்டு பல அரசியல்வாதிகள் நல்லவர்கள்போல் நடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள் எப்படி சொத்துக்கள் சேர்த்தனர் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தம்மைத் தாக்கிய கூலித்தொழிலாளியிடம் எப்படி சொத்து வந்தது என்பனையும் கணக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவ…
-
- 0 replies
- 167 views
-
-
மாவீரர்கள் காலத்தால் அழிக்க முடியாதவர்கள்
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கைக்கு தலையிடியாக மாறியுள்ள இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்களை குழுவின் சிறப்புக் கூட்டம் ஜெனீவா இடம்பெறுகின்றது. இலங்கை தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29ம் நாளன்று மனித உரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்கள் சபையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்த பன்னாட்டு நிபுணர் குழுவின் கூட்டம் முக்கியத்துவம் உள்ளதாக ஜெனீவாவில் மாறியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதியில் இலங்கை உண்மையுடன் இருக்கிறதா? (Is Sri Lanka living up to its commitment to the UN Human Rights Council? ) என தலைப்பில் இன்று மதியம் 1மணிக்கு IV இலக்க அறையில…
-
- 0 replies
- 446 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை 30 Dec, 2025 | 04:45 PM இன்று நீதி அமைச்சில் ஒன்றுதிரண்ட இலங்கையின் சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்" (PSTA) குறித்துத் தமது ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் வலுப்படுத்தும் ஒரு அடக்குமுறை கருவியாகவே இந்தப் புதிய சட்டமூலம் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். இந்தச் சட்டமானது குடிமக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகம் …
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் திரளாக தமிழகத்தில் சரணடைந்து வருவதாகவும் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ குறிப்பிட்டுள்ளார். அரச படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக சிக்கியுள்ள அகதிகளின் இன்றியமையாத தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் சரணடைவதாகவும், இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள அயல் நாடுகளின் …
-
- 0 replies
- 906 views
-
-
எங்கள் ஜனாதிபதிக்கு மாகாத்மா காந்தியின் குணவியல்புகள் உள்ளன - டக்ளஸ் 17 நவம்பர் 2012 எங்கள் ஜனாதிபதி மாகாத்மா காந்தி போன்று இல்லாவிடினும் அவருக்கு மகாத்மா காந்தியின் குணவியல்புகள் இருப்பதாக கூறியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டப்பட்டு 22 வருட பூர்த்தியை முன்னிட்டு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் எற்பாடு செய்திருந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அங்கு பேசிய ராவய வார இதழ் பிரதம ஆசிரியர் விக்டர் ஜவன் மகாத்மா காந்தியைப்போல் ஒரு தலைமைத்துவம் இங்கு இல்லாமை காரணமாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பேணப்படாது போயி;விட்டது என குறிப்பிட்டிருந்தார். அ…
-
- 11 replies
- 773 views
-
-
குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகளுக்கு நேர்மையாக சுமந்திரன் பதிலளித்துள்ளார் ; சம்பந்தன் அறிக்கை “பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் இந்த நாட்டு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் எற்படுத்தும் நோக்கத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். சுமந்திரனால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ நேர்காணல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
-
- 3 replies
- 938 views
-
-
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில் மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது. நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர் மயக்கமடைந்தும், 04 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நான்காம் ஆண்டில் (2019/2020 கல்வியாண்டு) பயிலும் மாணவர்கள், தமக்குக் கற்பிக்கும் விரிவுரையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறித்த விரி…
-
- 0 replies
- 122 views
-
-
யாழ் திருநெல்வேலி முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் அவரையும் அவரது மனைவியையும் வாளால் வெட்டிக் காயப்படுத்திய பின்னர், அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் மின்வெட்டு அமுலில் உள்ள நேரங்களில் இவ்வாறான கொள்ளைகள் இடம்பெறுவதுடன், இது சம்பந்தமாக முறையிட்ட பலர் கொள்ளைகளில் ஈடுபடுவோரால் தாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் ஜனநாயகம் அல்ல! நல்லாட்சி என்பது போலி நாடகம்!- ஜெனிவாவில் அனந்தி இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் என்ற தேசிய இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டு வருகின்ற இன அழிப்புக்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. இந்த இன அழிப்புச் சித்தாந்தம் இலங்கை அரச இயந்திரத்தினுள் பல அடுக்குகளில் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இன்று நடைபெற்ற உபகுழுக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், இதை நியாயப்படுத்தும் வகையில் இலங்கையில் அரசியல் பெரும்பான்மை சிறுபான்மை என்ற வகைப்படுத்தல் இன ரீதியாகவே…
-
- 2 replies
- 531 views
-
-
ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்... இன்று 2௧1௨008 ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள், மேலதிக செய்திகள் உள்ளே..... http://www.tamilseythi.com/tamilnaadu/peri...2008-11-02.html
-
- 0 replies
- 853 views
-