ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் மறைந்தார். பத்திரிகைத்துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சுத் துறைக்கு வந்து கோலோச்சியவர். சிரேஷ்ட ஊடகவியலாளரான சிவம் பாக்கியம் தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் இன்று மாலை காலமானார். இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான தில்லைநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். 1944 ஆம் ஆண்டு பிறந்த தில்லைநாதன் வீரகேசரி பத்திரிகையின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவில் பல வருட காலங்களாக பணியாற்றினார். பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிய காலம் சென்ற தில்லைநாதன் இலங்கை பத்திரிகை பேரவையின் தன…
-
- 0 replies
- 410 views
-
-
மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ (எம்.மனோசித்ரா) நாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது. இதனை நோக்காகக் கொண்டு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அரச கரும மொழிகள் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார். அரச கரும மொழிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகவும், ஆ…
-
- 3 replies
- 454 views
-
-
விசேட அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் வெளிநாட்டு பெண்ணொருவரின் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெலயில் பிலிப்பைன்ஸ் பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் முல்லேரியா பொலிஸ் பிரிவின் கல்ஹேன வீதி பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனுமதியற்ற தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை நடத்தி செல்வது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் மற்றும் அவரது இலங்கை கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவரும் 36 வயதான இந்திரா குமார என்பவரும் அவரது மனைவியான 36 வயதான அம்ரு…
-
- 0 replies
- 556 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டதாகவும் இதையிட்டு தான் வெட்கமடைவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்துகொண்டபோது, இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடனும், துறைசார் அமைச்சருடனும், கடுமையாக வாக்குவாதப்பட்ட அம…
-
- 3 replies
- 538 views
-
-
ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (25) 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 11ஆம் திகதி குற்றப் பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் கொ…
-
- 1 reply
- 493 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எங்களை நம்புவதை விட முஸ்லீம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பிர்களையுமே நம்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா பாலமோட்டையில் அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டிடத்தினை திறந்துவைத்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக செயற்பட்டிருந்தது. ஆனால் இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோரையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். …
-
- 1 reply
- 686 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்யும் தமது வழக்கத்தை கைவிட வேண்டும். கல்முனை விடயத்தில் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து காலஅவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன். கனடா “வாணிபம்” வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் என்ற மூதாளர் மாதாந்த உதவித்திட்டம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 35 பேருக்கு இன்று உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இப்படி காட்டமாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என…
-
- 14 replies
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆயுதமேந்திப் போராடியதை போன்று இன்று நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கருணா ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் என்ற ரீதியில் போராடி பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இதற்கு ஒரு தலைப்பட்சமாக ஆதரவு வழங்கும் பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் தூரநோக்குடன் ஆராய்ந்து பொறுப்புடன் செயற்படுதல் அவசியமாகும் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார். ஏப்ரல் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உள்ளடக்கிய 10 கோரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர…
-
- 4 replies
- 871 views
-
-
அமெரிக்கா முன்மொழிந்துள்ள ‘சோபா’ ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப்பிரதானிகள் உடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை தவிர அமெரிக்க படைகள் நாட்டுக்குள் வரும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தினையும் தான் ஆதரிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமெரிக்காவுடன் ‘சோபா’ உடன்பாட்டைச் செய்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மேலும் ‘சோபா’ உடன்பாடு குறித்து முதன் முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடனேயே அமெரிக்கா பேச்சு நடத்தியதென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். அத்தோடு அன்று அமெரிக்காவுடன் பேச்சுவார…
-
- 1 reply
- 425 views
-
-
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை என இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகி சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிஷாத் தன்னுடன் மிகவும் சிறந்த முறையில் உரையாடியதாகவும், அது ஒரு போதும் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையவில்லை எனவும் பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவது போன்ற ஒரு உரையாடலே இடம்பெற்றதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார் ht…
-
- 2 replies
- 361 views
-
-
Image caption இரண்டாவது குழந்தைக்காக 12 ஆண்டுகளாக பல மருத்துவர்களை அணுகியதாக கூறுகிறார் இந்தப் பெண் இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் வைத்தியர் ஒருவரினால் 7,000 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் …
-
- 0 replies
- 421 views
-
-
June 26, 2019 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் அனாதைகளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகளில் 258 பேர் உயிரிழந்திருந்ததுடன் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதிகள் சிலர் காவற்துறையினரின் சுற்றிவளைப்பில் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிககமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தக் குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இ…
-
- 0 replies
- 275 views
-
-
June 26, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை , பிரதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தியுள்ளார். சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இவ்வாறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/125294/
-
- 0 replies
- 309 views
-
-
அரசமைப்பின் 19ஆவது திருத்தமென்பது நாட்டின் சாபக்கேடு. 2020இல் சுபீட்சமான நாடொன்றைக் கட்டுயெழுப்ப வேண்டுமானால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19ஐ இல்லாதொழிக்க வேண்டும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதித்-தேர்தலுக்கு-முன்னர்-19ஐ-இல்லாதொழிக்க-வேண்டும்/175-234600
-
- 2 replies
- 436 views
-
-
இன்னும் 4 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதென்றும் இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய, நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துயைராடலின் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் எந்தவொரு கட்சியும் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை. கட்சிகளுக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. கட்சிகளுக்குள் காணப்படும் உட்பூசல்களும் பிரச்சினைகளும் இப்போது போன்று முன்னெப்போதும் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கட்சியின்-தீர்மானத்துக்கு-அமைய-செயற்படுவேன்/175-23460…
-
- 1 reply
- 318 views
-
-
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை ஒரு மாத காலத்துக்குள் தீர்த்து வைக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டில் இருந்து நீடித்து வருகின்ற ஒரு நீண்ட காலப் பிரச்சினையாக இது இருந்து வருகிறது என, அமைச்சரவைக் கூட்டத்தில், உள்நாட்டு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். இதையடுத்து, உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக…
-
- 0 replies
- 335 views
-
-
Comments - 0 Views - 16 உள்நாட்டலுவல்கள் அமைச்சு, கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீண்டும் திருத்தி வெளியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால், முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனரெனத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார். இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க, முஸ்லிம்களின் கலாசார உடையில் அபாயா அணிவதை அனுமதித்து, புதிய சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடுமாறு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 1.3k views
-
-
வடக்கு மாகாணத்துக்கான சிறுவர் வைத்தியசாலையை இணுவில் மக்லியயாட் வைத் தியசாலை வளாகத்தின் ஒரு பகுதியில் அமைப்ப தெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை ஏலவே தெரிந்ததே. சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான காணி தெரிவு செய்யப்பட்டு, அதற்கான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு மதில் சுவர்கள் அமைக்கப்பட்ட நிலையில், குறித்த காணியின் உரிமம் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளது. இதனால் சிறுவர் வைத்தியசாலையை நிர்மாணிக்கின்ற பூர்வாங்க நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. வட பகுதி மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறுவர் வைத்தியசாலையை கைநழுவவிடுவ தென்பது எமது இனத்துக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய பாதகமாகும். அதேநேரம் இணுவில் மக்லியயாட் வைத்தியசாலை வளாகத்தில் வடபகுதிக்கான சிறுவர்…
-
- 2 replies
- 996 views
-
-
தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சு ஊடக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சமூக நலன்புரி இணைப்பு காரியாலயம் மாவட்ட செயலகம் இணைந்து முன்னாள் போராளிகள் 12 பேருக்கு தலா 4 ஆடுகள் வீதம் 48 ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வு அரியாலைப் பகுதியில் இடம் பெற்றிருந்தது. நிகழ்வில் வன்னி மாவட்ட புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அசேல ஒபயசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/முன்னாள்-போராளிகளுக்கு-வாழ்வாதார-உதவி-வழங்கப்பட்டது/71-234578
-
- 2 replies
- 677 views
-
-
“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ” Published by T. Saranya on 2019-06-26 09:37:04 முகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அரச அலுவலகங்களுக்கு அண்மையில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் பெண்கள் சேலையும் ஆண்கள் முழுமையான உடையும் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பியிருந்தனர். இதனையடுத்தே பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று புதிய அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். …
-
- 0 replies
- 622 views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய கண்டிக்கு வரவும் – ஞானசாரர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அனைத்துத் தரப்பினரும் ஜுலை, 7ஆம் திகதி கண்டிக்கு வருகைத் தருமாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “அரசியல் பிரிவினை என்பது தீவிரவாதத்தைவிட பயங்கரமான ஒன்றாகும். தேசியம் தொடர்பில் கருத்து வெளியிட்டால் எம்மையும் சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். உண்மையில் தற்போது நாடு எங்கு சென்றுக்கொண்டிருக்கிறது என்று எமக்குத…
-
- 0 replies
- 330 views
-
-
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தில் அரச தரப்பு பிரதிநிதியாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அதேபோன்றதொரு சம்பவம் அங்கு சென்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கும் (கருணா) இடம்பெற்றுள்ளது. எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள், விநாயகமூர்த்தி முரளிதரனின் பாதுகாவலர் அணி அந்த விடயத்தை, வெளியில் கசிய விடாமல் அமுக்கி விட்டது. கடந்த 19ம் திகதி கல்முனை போராட்டக்களத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் சென்றிருந்தார். போராட்ட ஏற்பாட்டு தரப்பில் முரளிதரன் தரப்பும் இருந்ததால், முரளிதரன் அங்கு சென்றிருந்தார். …
-
- 13 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா மீதான பயண எச்சரிக்கை: நீக்கியது சீனா – தளர்த்தியது அமெரிக்கா சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கையை சீனா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நாள் தொடக்கம் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஏப்ரல் 21ஆம் நாள், சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பயண எச்சரிக்கையை சீனா வெளியிட்டிருந்தது. பின்னர் இந்தப் பயண எச்சரிக்கையில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், ஜூன் 22 ஆம் நாளில் இருந்து அந்தப் பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. பயண எச்சரிக்கையை முழுமையாக முதல் நாடாக சீனா இருக்கிறது எ…
-
- 1 reply
- 435 views
-
-
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரமான உதவி முகவர் நிறுவனமான மிலேனியம் சவால் நிறுவனம், பூகோள வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், ஐந்து ஆண்டு காலப்பகுதியில், நகர போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பொது போக்குவரத்து முறைகளை நவீனமயப்படுத்துவது, காணி முகாமைத்துவத்தை மே…
-
- 0 replies
- 780 views
-
-
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பலர் மீது இன்றும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கொழும்பைச் சேர்ந்த முத்தையா சகாதேவன் சுகயீனமுற்ற நிலையில், கடந்த 22ஆம் தேதி சிறைச்சாலையிலேயே உயிரிழந்திருந்தார். …
-
- 1 reply
- 546 views
-