Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். பரிசுத்த பாப்பரசரைசந்திப்பதற்கு முன்னர் ரோமில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தனது உணர்வுகளை கண்ணீருடன் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கணவர் ஒருவர் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்துள்ளார், நான் அவரை சந்திக்கசென்றவேளை தான் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் பிள்ளைகள் ஓடிவருவதை அவர் நினைவுகூர்ந்தார் இன்று அந்த வீடு வெறுமையாக உள்ளது என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளன எ…

    • 2 replies
    • 473 views
  2. இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்.! இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நி…

    • 9 replies
    • 1.5k views
  3. மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி! அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர். இது தொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவ…

    • 11 replies
    • 1.4k views
  4. தீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். கிழக்கு மாகாண சங்கைக்குரிய தேர்கள் அனைவரும் இவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டுமென ஒன்றிணைத்துள்ளோம் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தின் 6 ஆம் நாளாகிய இன்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட பல தேர்கள் கலந்து கொண்டு வாக்ககுறுதிளித்ததனை தொடர்ந்து போராட்ட வடிவம் மாற்றப்பட்டுள்ளத…

  5. (நா.தனுஜா) நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகக் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதியின் செயலை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி குற்றவாளியாகக் கண்டது. அவருக்கு ஆறு வருடங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது. எட்டு மா…

  6. June 22, 2019 நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என்று வவுனியா காவல் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். குறித்த சிறுவர்கள் நேற்று முந்தினம் முதல் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் …

  7. புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’ தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா …

    • 27 replies
    • 3k views
  8. கல்முனை உண்ணாவிரத்துக்கு பின்னால் இருப்பது அரசியல் சூத்திரதாரிகளே – ரவூப் ஹக்கீம் நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், கல்முனையில் உண்ணாவிரதம் இருப்பதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றதாகவும், அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் தெரிவிக்கையில், அத்துரலிய ர…

    • 3 replies
    • 951 views
  9. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்…

    • 4 replies
    • 1.3k views
  10. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறை அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். http://www.dailyceylon.com/184896/

    • 3 replies
    • 848 views
  11. அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வருமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்வதென காத்தான்குடி நகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை. அவ்வாறு வருமானால் அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காத்தான்குடி நகர சபையின் 15வது மாதார்ந்த அமர்வு வியாழக்கிழமை இன்று காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமை…

    • 6 replies
    • 1.3k views
  12. பாரா­ளு­மன்­றத்தில் இரு நாள் விவாதத்தை கோரு­வ­தற்கு தமிழ்க் கூட்­ட­மைப்பு தீர்­மானம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் பேச்சு நடத்­து­வ­தற்­காக புது­டில்லி செல்­வ­தற்கு முன்னர் இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தாம­த­மா­வது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோரு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்மா­னித்­தி­ருக்­கின்­றது. நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் இத்­த­கைய முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நடை­பெறும் பாரா­ளு­மன்றக் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இந்த இரண்டு நாட் கள் விசேட விவா­தத்­துக்­கான கோரிக்­கையை கூட்­ட­மைப…

    • 2 replies
    • 757 views
  13. கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நாளை மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகாசபை அறிவித்துள்ளது. கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி சைவ, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமாரும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினைக்கு விரைந்து…

    • 2 replies
    • 553 views
  14. மன்னார் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி மீண்டும் இடை நிறுத்தம் June 22, 2019 மன்னார் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு மன்னார் பிரதேச சபை வழங்கி இருந்த அனுமதியை மன்னார் பிரதேச சபை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது. குறித்த தோரண நுழைவாயில் அமைக்கும் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்,,,,, மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையினால் கடந்த 14 ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியின் பின்னர் ப…

    • 1 reply
    • 642 views
  15. மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உள்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய…

    • 2 replies
    • 497 views
  16. யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள் யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது. அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். மேலும் நட்சத்திர விடுதிகள் மூன்றின் உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அவர்களில் இருவருக்கு முறையே 21 ஆயிரம் ரூபா மற்றும் 15 ஆயிரம் ரூபா தண்டம் வ…

    • 5 replies
    • 1.6k views
  17. June 17, 2019 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,அளகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்…

  18. கோத்­த­பாய வேட்­பாளர் என்­ப­தனை ஆகஸ்ட் 7 இல் மஹிந்த அறி­விப்பார் - கெஹெ­லிய ரம்­புக்­வெல (ரொபட் அன்­டனி) பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக் ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். அதற்கு முன்னர் நாடு முழு­வதும் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் நாடு முழு­வதும் மக்கள் மத்­தியில் தெ ளிவு­ப­டுத்தும் கூட்­டங்கள் நடத்­தப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் ஆற்­றிய உரையின் ஊடாக சில விட…

  19. ரயிலுடன் மோதி பெண் பலி - யாழில் சம்பவம் யாழ்.மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிருசுவில்- ஒட்டுவெளி பகுதியை சோ்ந்த 50 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை கடந்து ஆலயத்திற்கு சென்று வழிபட்டுவிட்டு மீண்டும் ரயில் பாதையை கடந்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோதே விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய பெண்மணின் உடல் சிதைவடைந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த பொலிஸாா் பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு சிதைவடைந்த உடல் பாகங்களை அங்கிருந்து உடனடியாக மீட்டுள்ளனா். குறித்…

  20. Batticaloa Campus நிறுவனத்தின், வங்கிக் கணக்கு விபரங்களை, வழங்குமாறு உத்தரவு… June 19, 2019 மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கை வங்கிக்கு அறிவித்துள்ளது. குறித்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்தின் வங்கி கொட…

  21. இஸ்லாமிய மார்க்கத்தை துறப்பவர், கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்று சாட்சியமளித்தபோது, பொதுமகனான ரிஸ்வின் இஸ்மத் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது சாட்சியம் வழங்கிய அவர், தான் பிறப்பால் முஸ்லிம் என்றபோதும், 2013 ஆம் ஆண்டளவில் மதத்திலிருந்து விலகியதாகவும், தற்போது மதத்தை பின்பற்றாத ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார். தனது வாழ்நாளில் தான் நீண்டகாலம் பினபற்றிய சமயம் என்றபடியினாலும், அது சரி என்று நம்பிக்கைகொண்டு, பல விடயங்களை அர்ப்பணித்திருந்தமையினால், ஏனையவர்களுக்கும் இத…

  22. மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது – டக்ளஸ் கௌதம புத்தரின் சிலைகளை சேதப்படுத்துவது என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கச் செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அது, பௌத்த மதத்தினரை உணர்வு ரீதியாகப் புண்படுத்துகின்ற செயலுமாகும். அதே போன்று ஏனைய மதத்தவர்களது மத வழிபாட்டுத் தலங்களை, மத அடையாளங்களை அழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும். அது ஏனைய அந்தந்த மதத்தவரையும் உணர்வு ரீதியாக புண்படுத்தவே செய்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்ட…

  23. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், உலக யோகா தினத்தை முன்னிட்டும்பாரம்பரிய இயற்கை முறையிலான உணவுத் திருவிழா யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. சேதனப்பசளைகள் எதுவும் இடப்படாது இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் அங்கு வைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது. https://newuthayan.com/story/16/யாழ்ப்பாணத்தில்-உணவுத்-த.html

  24. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பிரமுகர்களிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு ஏற்பட்ட முரண்பாடு தள்ளுமுள்ளுவரை சென்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திப்பதற்கு இன்று மாலை மேற்படி பிரமுகர்கள் சென்றனர். கல்முனையை மூன்று மாதத்தில் தரமுயர்த்தும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவிப்பை பிரமுகர்கள் வெளியிட்டனர். மூன்று மாத கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பொதுமக்களும், போராட்டக்காரர்களும் கருத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.