ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதி அபகரிப்பு – நாளை போராட்டம்…. June 21, 2019 யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியினை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , அவ்வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறும் கோரியும் நாளைய தினம் சனிக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளின் மத்தியில் குறித்த வீதி காணப்படுகின்றது. அதனை வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர் அபகரித்து அதனை தனது கடையுடன் இணைத்துள்ளமையால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. எனவே குறித்த வீதியினை பொது போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் என கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னண…
-
- 0 replies
- 341 views
-
-
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிட்டார் தலதா அதுகோரல நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்படுவாரென நீதியமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். கடுறோதகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தலதா அதுகோரல இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நல்லாட்சி உருவாக்கப்பட்டது. மேலும், இதற்கு முன்னைய ஆட்சியில் தனியார் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் பொதுமக்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டது. இவ்விடயங்களை அனைத்து மக்களும் நன்கு அறிவார்கள். இதேவேளை எதிர்வரு…
-
- 0 replies
- 800 views
-
-
வடமாகாண ஆளூநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் தாம் இல்லை என ஆவா குழுவின் பெயரில் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. வடமாகாண ஆளூநர் கலாநிதி சுரேன் ராகவன் கடந்த வாரம் ஆவா குழுவை சந்தித்து பேச்சு நடத்த தயார் எனவும் , அதற்காக தான் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவர்கள் கூறும் இடத்திற்கு சென்று பேச்சு நடத்த தயார் எனவும் அறிவித்திருந்தார். அந்நிலையில் ஆவா குழுவின் பெயரில் , வடமாகாண ஆளூநருக்கு 17ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் இன்றைய சூழ்நிலையில் எங்களை உங்கள் மத்தியில் அடையாளம் காட்டிக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம். என குறிப்பிடப்பட்டு உள்ளது. #ஆவாகுழு #சுரேன்ராகவன் …
-
- 1 reply
- 545 views
-
-
ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மீண்டும் இலங்கைக்கு அச்சுறுத்தல்: இந்தியா இலங்கை மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை ஐ.எஸ்.அமைப்பு நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய உளவுப்பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் குறித்து மூன்று எச்சரிக்கை கடிதங்களை இந்திய உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளுக்கு றோ அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் றோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி இஸ்லாமிய தேசத்தை பிரகடனப்படுத்தி செயற்பட்டுவந்த ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பிரதேசங்கள் தற்போது அவர்களிடம் இல்லை. ஆகையால், இந்து சமுத்திர நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளன. கேளரா…
-
- 0 replies
- 349 views
-
-
தற்கொலைத்தாரிகள் ஐ.எஸ் உறுப்பினர்கள்: உறுதிப்படுத்தியது ரஷ்யா இலங்கையில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள் சிரியா- ஈராக் ஆகிய நாடுகளில் முன்னர் தீவிரமாக செயற்பாட்டில் ஈடுபட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் உவா நகரில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சர்வதேச கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது யூரிகொகோவ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிரியா- ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு, இலங்கை திரும்பிய உள்ளுர் தீவிரவாத குழுவொன்றே குண்டுவெடிப்புகளை திட்டமிட்டது மேலும் குறித்த அமைப்பு, வெளிநாடுகளிலுள்ள ஐ.எஸ…
-
- 0 replies
- 262 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரங்களிலும்; தாமாகவே ஒவ்வொன்றைக்; கூறி மக்களை ஏமாற்றும் வகையில் கண்கட்டி வித்தை நடாத்தி மக்களை ஏமாற்றி வருவதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை அமைச்சருமான அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ் சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.. நாட்டில் ஆளும்; கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. அதே நேரம் பிரதமராக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்களாக அக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இருக்கின்றனர். ஆக இந்த அரசிற்கு முண்டு கொட…
-
- 0 replies
- 1k views
-
-
படத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இல…
-
- 35 replies
- 4.1k views
-
-
யுத்த காலத்தில் கள்ளத்தனமாக ,கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் எங்கள் மக்களுக்குச் சொந்தமான 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடும் காணிகள் கையகப்படுத்தலினால், தமிழ் மக்களின் படுக்கை அறைகளில்கூட எமது நிலம் என எல்லைக்கல்லை வைக்குமளவுக்கு நிலை உள்ளது என்றார். தூங்கும் நிலைக்குச் சென்றுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும். கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு இனம்,மதம் கடந்து உண்ணாவிரத போராட்டம் நடக்கின்றது. இந்நிலையில், மக்களிடையே வக்கிரத்தன்மையையும் மோதல்களையும் ஏற்படுத்துக…
-
- 0 replies
- 597 views
-
-
சோபா உடன்பாட்டினால் சிறிலங்கா பிளவுபடும் – உதய கம்மன்பில அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம் போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக சிறிலங்கா மாறி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், “அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான மிலேனியம் சவால் நிதிய ஒத்துழைப்பு உடன்பாடு ஒரு பொருளாதார தாழ்வாரத்தை உருவாக்கி விடும். அது பனாமா கால்வாயைப் போன்று சிறிலங்காவைப் பிளவுபடுத்தி விடும். அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர்…
-
- 1 reply
- 594 views
-
-
அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர உதவுங்கள்.. June 20, 2019 இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர ஐ.நா உதவி புரியவேண்டும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோர்ன் சேரேன்செனிடம் ( Joern Soerensen) கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். அதன் போதே ஆளூநர் அக் கோரிக்கையை முன் வைத்தார். மேலும், இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்காலத்தில் ஐ.எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்படுமென இந்தியப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியப் புலனாய்வு பிரிவு இந்தியாவின் பொலிஸ் பிரதானிகளுக்கு 3 கடிதங்கள் ஊடாக இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈராக், சிரியாவில் தமது பலங்களை இழந்துள்ள ஐ.எஸ் அமைப்பின் கவனம் இந்து சமுத்திர வலயத்தை நோக்கி திரும்பியுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள குறித்த எச்சரிக்கை கடிதம் ஊடாக, இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் தாக்குதல் நடத்தப்படக்கூடிய இடங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவின் கேரளா மாநில…
-
- 2 replies
- 979 views
-
-
June 20, 2019 கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை தந்துள்ளார். இன்று(20) குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது சுகநலன்களை விசாரித்து அறிந்து கொண்டார். மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, பெரு வரவேற்புடன் அவர் போராட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உடன் வந்தார். அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். …
-
- 0 replies
- 399 views
-
-
அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் ஆலோசனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில், நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பரஸ்பரம் ஆர்வமுள்ள விடயங்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா கடற்படைத் தலைமையகம், தெரிவித்திருந்தது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா பயணம், ரத்துச் செய்யப்பட்ட சூழலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. முன்னதாக, மைக் பொம்பியோ, சிறிலங்கா பயண…
-
- 0 replies
- 318 views
-
-
பொம்பியோவின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும் ‘சோபா’வுக்கும் தொடர்பு இல்லை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா பயணம் ரத்துச் செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வரும் 24ஆம் நாள் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, சிறிலங்காவுக்கு எதிர்வரும் 27ஆம் நாள் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும், தவிர்க்க முடியாத திட்டமிடல் முரண்பாடுகளால், அவரால் சிறிலங்காவுக்கான பயணத்தை இம்முறை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று அறிவித்திருந்தது. அமெரிக்…
-
- 0 replies
- 477 views
-
-
பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது. நாளை(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாக முறைப்பாடு ஒன…
-
- 3 replies
- 594 views
-
-
வைத்தியர் ஷாபி விவகாரம் : முறைப்பாடளித்த தாய்மாருக்கு கொழும்பில் மருத்துவ பரிசோதனை (எம்.எப்.எம்.பஸீர்) வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் நேற்று வரை 758 பேரின் வாக்கு மூலங்கள் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். கருத்தடை விவகாரத்தால் தாம் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடளித்துள்ள பெண்களில் 601 பேர், மகப்பேற்று மற்றும் பிரசவ விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேர் உள்ளிட்ட 758 பேரின் வாக்கு மூலங்களே இவ்வாறு பதிவு செய்யப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ர…
-
- 0 replies
- 289 views
-
-
அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) எச்சரித்துள்ளார். அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டக்களத்திற்குச் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த பிரச்சினை நீண்டகால பிரச்சினையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களின் உரிமை சார்ந்த மற்றும் நலன்களை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்களும் வரலாறும் அவர்களை மன்னிக்காது என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தமிழினப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணை நடத்துவது இறைமையைப் பாதிக்கும் எனக் கூறும் அரசாங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு மாத்திரம் எவ்வாறு சர்வதேச நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கியது என்றும் அவர் சபையில் கேள்வியெழுப்பினார். வடக்கிலும், கிழக்கிலும் அரசாங்க படைகளாலும், பல்வேறு அரச நிறுவனங்களாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்கே அகிம்சைப் போராட்டங்கள் முன்…
-
- 1 reply
- 429 views
-
-
ருஹுனு பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பெருந்தொகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார். இரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு 15 வருடங்களாக எந்தவொரு பீடாதீபதியும், பேராசிரியர்களும் சென்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக காணப்பட்டதாகவும், அதனுள் மிகவும் கொடூரமான முறையில் பகிடிவதை செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மாணவர்களை பலவந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை …
-
- 2 replies
- 513 views
-
-
Colombo to Jaffna கீரிமலை கேணி... @17.00 டில்க்கோ மூனா, திலகராஜ் தலை காட்டுறார்.
-
- 0 replies
- 635 views
-
-
வனவளத்திணைக்களத்தின் காணிகள் கையகப்படுத்தல் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தலைவிரித்தாடுகின்றது. தமிழ் மக்களின் வீடுகளின் படுக்கை அறைகளில் கூட எல்லைக்கல்லை வைத்து உரிமை கொண்டாடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். காணி மீட்டல் என்பது யாரிடமிருந்து யார் காணியை மீட்பது என்ற கேள்வியை வடக்கு கிழக்கு பகுதியை மையமாகக்கொண்டு கேட்க வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பல்வேறு விதமான அதிகாரசபைகளால், திணைக்களங்க…
-
- 0 replies
- 406 views
-
-
முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றனர் Editorial / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 11:31 அமைச்சுப் பதவிகளில் இருந்து அண்மையில் விலகிய, முஸ்லிம் பிரதிநிதிகளில் இருவர், இன்று (19) மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதற்கமைய, கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோரே, இவ்வாறு அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/முஸ்லிம்-அமைச்சர்கள்-இருவர்-மீண்டும்-பதவியேற்றனர்/175-234369
-
- 4 replies
- 1.1k views
-
-
June 19, 2019 கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு வேளை நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதிகளில் திடீரென வந்த குழு ஒன்று ரயர்கள் மரக்கட்டைகளை வீதியின் குறுக்காக இட்டு தீயிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் அவசர அழைப்பின் பிரகாரம் அவ்விடத்திற்கு வந்த க…
-
- 0 replies
- 535 views
-
-
June 19, 2019 கிளிநொச்சி கண்டாவளை ரங்கன்குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் பாதிப்புக்களிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.இன்று(19) காலை பத்து மணிக்கு மேற்படி குடியிருப்பு மக்கள் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலாளரிடம் தங்களின் பிரச்சினைகளை கூறியிருந்தனர். பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு காட்டு யானைகளின் அழிக்கப்பட்ட பயிர்களின் எச்சங்களுடன் வருகைதந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதோடு, மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை கடிதத்தையும் வழங்கியிருந்தனர். …
-
- 0 replies
- 855 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இப்பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இந்து- பசுபிக் வலய மாநாட்டின் ஜப்பானில் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இராஜாங்க செயலாளரும் கலந்துக்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில், இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-இராஜாங்க-செயலாளரின்-இலங்கைப்-பயணம்-இரத்து/175-234374
-
- 0 replies
- 372 views
-