Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா கடற்படைக்குத் தொடர்ந்து உதவத் தயார் அமெரிக்கக் கடற்படைத் தளபதி Friday, June 10, 2011, 8:48 போருக்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா கடற்படைக்கு உதவிகளை வழங்கும் என்று அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் றொபேட் எவ்.வில்லாட் உறுதியளித்துள்ளார். சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். சங்கிரிலா கருத்தரங்கு என்ற பெயரில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த போதே, அமெரிக்க- சிறிலங்கா கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள…

  2. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகும் மாவை.சேனாதிராசாவின் கனவு மீண்டும் பொய்த்துள்ளது.மைத்திரியின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின்ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின்போது இணைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளார். இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடரமுடியாத நிலையில் அந்தப்பதவியை பிரதி அமைச்சர் விஜயகலாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அடுத்த பொதுத் தேர்தல் வரையான காலப்பகுதிவரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன், பிரதி அமைச்சர் விஜயகலாவும் இணைத்தலைவராகச் செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  3. தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை : கோவிந்தன் கருணாகரன்! தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்’ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என வெளிநாட்டு அமைச்சருக்கு தெரிய வேண்டும். கோட்டாபயவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்த வெ…

    • 2 replies
    • 420 views
  4. இலங்கை தலைமை நீதிபதி பதவி விலகவில்லை: பேச்சாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதியின் பேச்சாளர் விஜயரட்ண கொடிப்பிலிஇலங்கையின் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யென்று தலைமை நீதிபதியின் ஊடக பேச்சாளர் வழக்கறிஞர் விஜயரத்ன கொடிப்பிலி தெரவித்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் இதைத் தெரிவித்த அவர், தலைமை நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறினார். தலைமை நீதிபதி தமது பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார் என்றும் கொடிப்பிலி தெரிவித்தார். எனவே சம்பந்தப்பட்ட …

  5. பட மூலாதாரம்,DISLHA DILRUKSHI FAMILY படக்குறிப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்களது மகளை கவனித்து கொள்ள வேண்டிய சூழலால் தனது கணவரால் பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் புஷ்பலதா. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இன்றும் மக்கள் பல்வேறு விதமான துயரங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டிலுள்ள நோயாளிகள் பெரும்பாலும் இவ்வாறான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இல…

  6. கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை! Sunday, June 19, 2011, 15:33 சிறீலங்கா, தமிழீழம் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. கிளிநொச்சி பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயதுக்குழந்தையான தாயான இருபத்தியிரண்டு வயது பெண்ணொருவரே அவ்வாறு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. ஆயினும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை என்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் தற்போதைக்கு யாழ். மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டிருப்ப…

  7. யாழில் 300 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன October 3, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும் என சிரேஷ்ட பொறியலாளர் மா.இராமதாஸன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நானும் எனது நண்பர்களும் இணைந்து யாழ்.மாவட்டத்தில் இருக்கும் 8 குளங்களை புனரமைப்பு செய்துள்ளோம். கடந்த வருடம் 3 குளங்களையும், இந்த வருடம் 5 குளங்கள…

    • 4 replies
    • 1.3k views
  8. பகிடிவதையால் தூக்கில் தொங்கிய மாணவன், பெற்றோர் சந்தேகம் மட்டக்களப்பு - கல்வியற் கல்லூரியில் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் தாழங்குடாவில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து நேற்று (08/10/2018) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், கல்வியற் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த 23 வயதுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் கல்லூரியில் இணையும் போது ஏழு பேர் கொண்ட மாணவ குழுவினால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் கல்லூரிக்கு செல்லமாட்டேன் எனத் தெரிவி…

  9. Tuesday, June 28, 2011, 18:39உலகம், தமிழீழம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையில் தடைநீக்கிகளாக உயிராயுதமாகி தம்மையே அர்ப்பணித்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து வீரகாவியமாகிவிட்ட தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் “தற்கொடையாளர் நாள்” நிகழ்வுகள் எதிர்வரும் யூலை 5 ல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. காற்றிலும் நீரிலும் கலந்த கந்தகத்துகழ்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த “தற்கொடையாளர் நாள்” நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 05-07-2011 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 முதல் 9:30 வரை நடைபெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில் பிரித்தானி…

  10. இராணுவம் வெளியேறுவதை யாழ்.மக்கள் விரும்பவி்ல்லையாம்! - யாழ்.படைத்தளபதி கூறுகிறார் [saturday 2015-02-07 09:00] யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.ங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர், யாழ்ப்பாண குடாநாட்டின் சில பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதனை மக்கள் எந்த வகையிலும் விரும்பவில்லை. பொதுமக்கள் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை பிரதேச மக்கள் விரும்பவில்லை. போரின் பின்னர் மிகவும் அத்தியாவசியமான முகாம்களைத் தவிர்ந்த ஏனைய இடங்கள் பொதுமக்களுக்கு அதிகளவில் மீள வழங்கப்பட்டுள்…

    • 2 replies
    • 296 views
  11. சீனாவே இலங்கையின் மிகப்பெரியதும் நம்பிக்கைக்குரியதுமான நண்பன். சீனா எம்மை ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலகத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியது. பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்க இதைய சுத்தியுடன் செயற்பட்டது. இவ்வாறு கூறியுள்ளது சிங்கள அரசு. . ஜூலை 1 இல் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 80 வது ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதற்கு சிறிலங்காவில் இருந்து அரச குழுவொன்று சென்றது. அந்த குழுவே விழாவில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்கள். . சீனா ஆசியாவின் மிகப்பெரியதும் முதலாவதுமான சக்தி, 2020 இல் அமெரிக்காவை பொருளாதாரத்தில் சீனா தோற்கடித்துவிடும். சீனாவின் இத்தகைய வளர்ச்சி இலங்கைக்கு பாதுகாப்பைத்தரும். . 1952 இல் இருந்தே சீனா இலங்கையில் தனது உறவை வளர்த்து வருகின்றது. இந்த உறவ…

  12. இனப்படுகொலைத் தீர்மானம் – மைத்திரிக்கு ஏமாற்றமாம் FEB 12, 2015 | 1:40by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏமாற்றம் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய போதே அவர், இதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்புக் குறித்து தகவல் வெளியிட்டுள்ள, வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, “வடக்கு மாகாணசபையினால், இனப்படுகொலை குறித்து தீர்மானம், நிறைவேற்…

  13. காவற்துறைப் பாதுகாப்பு வேண்டும் அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்…. October 23, 2018 வடமாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் காவற்துறைப் பாதுகாப்பு கோரி விண்ணப்பம் செய்துள்ளார். ஏலவே வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர் எஸ் தவராசா ஆகியோரே காவற்துறைப் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து காவற்துறை மா அதிபருக்கு இது தொடர்பான கடிதங்களை அனுப்பியிருந்தனர். ஆனால் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இவ்வாறு காவற்துறை பாதுகாப்பிற்கு விண்ணப்பித்தமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு அதில் தோல்வி அடைந்த இவர் போனஸ் ஆசனத்தில் உறுப்பினராகி இருந்தார். கடந்த சில மாதங்களுக்…

  14. 10 AUG, 2023 | 09:20 PM யாழ்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி அயலவர்களினால் உடற்பாகம் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ் போதான வைத்தியசாலை சட்ட வைத்தியஅதிகாரியும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார். முதல் கட்ட விசாரணையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் இந்து மயானபகுதியில் புதைக்கப்பட்ட சடலம் விலங்குகளால் எடுத்துவரப்பட்டிருக்குமா? என்ற கோணத்தில் பொலிஸா…

  15. இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார் (2ஆம் இணைப்பு) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் சர்வதேச அளவில் பேசப்பட்ட தலைவராக காணப்படுகிறார். கடந்த 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 1970ஆம் ஆண்டு முதற்தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதிமுதல் பிரதமராக பதவி வகித்த அவர், 2005ஆம் ஆண்டு நவ…

  16. உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரான வன்முறைகள் வடபகுதியில் இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் மஹிந்த அரசு மட்டும் வடபகுதியில் அவ்வாறான சம்பவங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை என மறுத்துள்ளது. . ஆனால் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே எனப்படும் அமைப்பு தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் உண்மைதான் என நிரூபித்துள்ளது. அவர்கள் இது தொடர்பில் கூறியுள்ளதாவது. . எமது அமைப்பின் பிரதிநிதிகளுடன் நானும் நேரடியாகச் சென்று கண்காணிப்பு நடவடிக்கை களை மேற்கொண்டோம். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் இல்லாத ஒரு மூலை முடுக்குக் கூட இல்லை. அதே போன்று பொலிஸாரும் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவற்றிற்கெல்லாம் மேலாக ஜனாதிபதியின் சகோதரர், பலம்மிக்க அமைச…

  17. அமெரிக்காவின் 460 மில்லியன் டொலர் நிதியுதவி சிறிலங்காவுக்கு கிட்டுமா? சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மிலேனியம் சவால் அமைப்பு, மூலமாக சிறிலங்காவுக்கு 460 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது. சிறிலங்காவின் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக, வீதி வலையமைப்புகளை தரமுயர்த்துவதற்கும், கொழும்பு பெருநகர பேருந்து முறையை ஒழுங்கமைப்பதற்கும் இந்த நிதி செலவிடப்படவிருந்தது. இதற்கமைய 300 கி.மீ நீளமான நகர மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளை புனரமைப்ப…

    • 0 replies
    • 1.2k views
  18. 29 AUG, 2023 | 09:16 AM ( எம்.வை.எம்.சியாம்) நாட்டின் சுகாதார துறையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளது. இதே வேளை இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் முன்வைக்கவுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக மருந்து தட்ட…

  19. பயங்கரவாதப் புராணம் பயன்தரப் போவதில்லை ` சுயகௌரவத்துடன் கூடிய வாழ்வியல் இருப்புக்காக அடிப்படை உரிமைகளுக்காக இலங்கைத் தீவில் தமிழினம் நடத்தும் விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத்துக்கு மேற் குலக சமுதாயம் பயங்கரவாத முத்திரை குத்தியிருக்கின்றது. ஈழத் தமிழர்களின் உரிமைகளையும் நியாயபூர்வமான அபிலாஷைகளையும் வழங்க மறுத்து, ஆரம்பத்தில் அவர் களின் அஹிம்சை வழியிலான சாத்வீகப் போராட்டத்தை யும், பின்னர் ஆயுத வழிக்குத் திரும்பிய வலோற்காரப் போராட் டத்தையும் அடக்கி, ஒடுக்கி, தமிழர்களுக்கு எதிராகப் பெரும் சமரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தென்னிலங்கைச் சிங்களமும் தமிழர்களின் உரிமை எழுச்சியை "பயங்கர வாதம்' என்றே அடையாளப்படுத்துகின்றது. அது சரியானதா, நீதியானதா என்பவையெல்லாம் ஒருபு…

  20. மன்னார் தினச் சந்தை வியாபாரிகளை வெளியேற்ற நகர சபை அதிரடி உத்தரவு Friday, July 15, 2011, 21:26 சிறீலங்கா மன்னார் தினச்சந்தை வியாபாரம் செய்யும் இடத்தினை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முதல் மன்னார் நகரசபையிடம் ஒப்படைக்குமாறு மன்னார் நகர சபை எடுத்துள்ள முடிவுக்கு மன்னார் தினச்சந்தை வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக மன்னார் நகரசபை விடுத்துள்ள பொது அறிவித்தலின் பிரகாரம் மேலும் தெரிய வருகையில், தற்போது தினச்சந்தை வியாபாரம் செய்யும் இடமானது நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தினச்சந்தையாக குறுகிய காலப்பகுதியில் நடைமுறையில் இருந்து வந்தது. அந்தச் சந்தையானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய வாராந்த சந்தையே ஆகும். நாட்டின…

  21. வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, தாம் வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.வி.விக்னேஷ்வரன் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட…

  22. பயங்கரவாத தடை தட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசியாவின் அம்மாவுக்கு இன்றும் பிணை வழங்காத நிலையில் அம்மாவுக்காக காத்திருந்த விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா அம்மா இன்றிய நிலையில் நடந்தது. தனது பூப்புனித நீராவிட்டு விழாவுக்காக அம்மா பாலேந்திரன் ஜெயக்குமாரியை பிணையில் அனுப்புமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் எழுதியிருந்தாள். இந் நிலையில் விபூசிகாசின் தயார் ஜெயக்குமாரிக்கு இன்று பிணை வழங்க நீதிமன்றம் மறுத்திருந்தது. தனது தயார் பூப்பூனித நீராட்டு விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த விபூசிகா இன்று ஏமாற்றம் அடைந்தாள். கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சிஐடியினரால் சேர்க்கப்பட்ட விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா இன்று இடம்பெற்ற…

    • 5 replies
    • 2.8k views
  23. நிதி தொடர்பான பிரேரணைகளை எதிர்க்கட்சி முன்வைக்க முடியாது – தினேஸ் போர்க்கொடி நிதி தொடர்பான பிரேரணைகளை அரசாங்கத் தரப்பே நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்று அவைத் தலைவரான அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும், பிரேரணை ஒன்றை நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஐதேகவினர் முன்வைத்தனர். அத்துடன், இந்தப் பிரேரணை சபாநாயகரிடமும் கையளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தினேஸ் குணவர்த்தன, “எதிர்க்கட்சியினர் இந்தப் பிரேரணையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதனை பிரதி சபாநாயகரிடம் எழுத்துமூலமே சமர்ப்பிக்க ம…

  24. Published By: RAJEEBAN 28 SEP, 2023 | 08:15 PM குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு, குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்க…

  25. வெள்ளி 25-05-2007 17:04 மணி தமிழீழம் [தாயகன்] கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவி - அனுராவிடம் பறிப்பு, கருவிடம் ஒப்படைப்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் முரண்பட்டிருந்த அனுரா பண்டாரநாயக்க பதவி வகித்து வந்திருந்தார். இந்த நிலையில், அனுரா பண்டாரநாயக்கவின் பதவியைப் பறித்த அதிபர் மகிந்த ராஜபக்ஸ, அதனை அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசுடன் இணைந்துகொண்ட கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளார். இந்தப் பதவி மாற்றம் தொடர்பான எழுத்துமூல அறிவித்தல் கம்பஹா அலுவலகத்திற்கு அதிபர் மானிகையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள கம்பஹா மாவட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.