ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
ஹிஸ்புல்லாவின் சி.சி.ரி.வி. காணொளி குறித்து CID விசாரணை! முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர், சந்தேகத்திற்கிடமான சிலரை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஹோட்டல் ஒன்றிலிருந்து அழைத்துச் செல்லும் சி.சி.ரி.வி. காட்சிகள் தன்னிடம் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தகவலொன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், பாசிகுடா பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, சவுதி நாட்டு பிரஜைகள் சிலரை சந்தித்த சம்பவம் தொடர்பாக சி.சி.…
-
- 0 replies
- 717 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை காரணம் காட்டி முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இன வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பிணையில் விடுத்த நடவடிக்கையையும் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இலங்கை நீதித்துறையால் ஒருபோதும் முறையான நீதி விசாரணைகள் இடம்பெறாத என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள் தமிழ் மக்கள் பேரவை, இதனால் முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வாழும் சிறுபான்மையின சமூகங்களில் ஒன்றான முஸ்லீம்கள் முழுமையாக ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லீம…
-
- 3 replies
- 938 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர், ஆர். யசி) இலங்கையில் ஒரு சிறு குழு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி, இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்த களரியை ஏற்படுத்த பதவி ஆசை பிடித்த சிலர் முயற்சின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். அத்துடன் அதற்கு இடமளிக்காமல், சமாதானத்தை விரும்பும் இலங்கையர் என்ற ரீதியில் நாம் எமது பதவிகளை இராஜினாமா செய்கின்றோம். அந்த பயங்கர்வாத தககுதல்களுடன் முச்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைகளுக்கு அவர்கள் தமது பதவிகள் ஊடாக இடையூறு ஏர்படுத்துவதாகவும் தொடர்ச்சியாக சிலர் குற்றம் …
-
- 0 replies
- 402 views
-
-
உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாரான திருமதி சுப்பிரமணியம் சின்னம்மாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கான நிதி வழங்குமாறு கிளிநொச்சியிலுள்ள சமூக ஆர்வலர் ஒருவரின் ஊடாக வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பன் தலைவர் எஸ். சந்திரகுமாருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று வவுனியாவிலுள்ள தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து கல் மணல், பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை நிதி உதவி வழங்கி வைக்கப்பட்…
-
- 0 replies
- 424 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாட்டுவண்டி சவாரி போட்டியொன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான மாட்டுவண்டி சவாரிப் போட்டி விசுவமடு தொட்டியடி மாட்டு வண்டி சவாரி திடலில் நேற்று மாலை இடம்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இந்த மாட்டு வண்டி சவாரி காணப்படுவதோடு இந்த பாரம்பரியங்கள் அழிந்து செல்லாது இருப்பதற்காக தொடர்ச்சியாக இவ்வாறான போட்டிகள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கமானது நேற்று மாலை விசுவமடு தொட்டியடி மாட்டு வண்டி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரி போட்டி ஒன்றை நடாத்தியது. ஐந்து பிரிவுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டதோடு 48 மாட்டுவண்டிகள் இந்த போட்டி…
-
- 0 replies
- 421 views
-
-
தொடருந்து தண்டவாளத்தில் படுத்திருந்த ஒன்றரை வயதுக் குழந்தையால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்தனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் நாவலடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பிரிவு கிராம அலுவலர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் குழந்தை படுத்திருப்பதை அவதானித்து, உடனடியாகச் சென்று குழந்தையை மீட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். அங்கிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் குழந்தையின் வீடு இருந்தமை தெரியவந்தது. …
-
- 1 reply
- 831 views
-
-
தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி கி.தவசீலன்Jun 02, 2019 | 3:56 by in செய்திகள் அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக, அத்துரலியே ரத்தன தேரர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து, முதலில் கலந்துரையாடியிருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாத நிலையில், இந்த விடயத்தில் இப்போதைக்குத் தலையிடும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை” என்றும் அந்த அதிகாரி குறி…
-
- 14 replies
- 1.7k views
-
-
வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார். எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். விடுதலைப்புலிகள் கூட தமத…
-
- 92 replies
- 6.4k views
- 1 follower
-
-
அடுத்த ஜனாதிபதி மைத்திரி – பிரதமராக மஹிந்த: சுதந்திரக்கட்சிக்குள் புதிய வியூகம் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஸ்ரீ.ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனக்கு தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பிளவுபடும் நிலைகள் காணப்படுவதனால் தயாசிறி ஜயசேகர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறினார். மேலும் மஹிந்த ராஜபக்ஷவை அடுத்த பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேனவை அடுத்…
-
- 0 replies
- 484 views
-
-
ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இராஜினாமா? கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண அளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைவாக மேல் மாகாண அளுநர் அசாத் சாலி தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல், ஹிஸ்புல்லாஹ்வின் இராஜினாமா செய்துள்ளதாகவும், இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைச்சர் ரிஷா…
-
- 13 replies
- 1.7k views
-
-
உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன் முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார். இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத் பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virake…
-
- 31 replies
- 3.6k views
- 1 follower
-
-
எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்- திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார் அவர் மிகவும் அமைதியானவர். அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவரவிரும்பினார். ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது. திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் …
-
- 1 reply
- 973 views
-
-
முடங்கியது கண்டி ! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் ! உண்ணாவிரதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கண்டியில் இன்று கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கண்டியில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டி நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது கண்டியிலுள்ள தலதா மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாக…
-
- 5 replies
- 1.5k views
-
-
June 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn உயிர்த்த ஞாயிறுக் குணடுத் தாக்குதல்களின் பின்னரான பொருளாதார மீட்புத்திட்டம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமங்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜ…
-
- 0 replies
- 328 views
-
-
June 3, 2019 நாட்டுக்கானதொரு அதிர்ஷ்டான பூஜையினையே முன்னெடுத்திருப்பதாக கூறியுள்ள அத்துரலியே ரதன தேரர் 30 ஆண்டு காலம் நாட்டில் காணப்பட்ட யுத்தத்தின் போது மாவிலாறு போராட்டத்திலிருந்து வெற்றி பயணத்தை ஆரம்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே நாட்டுக்கு கடமைப்பட்டவனாக தாம் இல்லை என்றும் தனது இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க இங்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தமை அவரது ஆதரவாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியின் பதவிவிலகலையடுத…
-
- 0 replies
- 969 views
-
-
சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணை இல்லத்தில் சைவசமயம் தொடர்பாகவும், தலைமைத்துவம் தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகில் காணப்படும் சமயங்கள் அனைத்தும் இந்தியாவிலே ஆரம்பிக்கப்பட்டன. புத்த பெருமானின் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜனாதிபதி , பிரதமருக்கு அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதம் ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதமொன்றை எழுதியுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டடிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு குறித்த தீர்வினை வழங்குமாறு கோரியே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதங்களை எழுதியுள்ளனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண…
-
- 0 replies
- 349 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவினாலேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது – தயா கமகே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நீங்கள் வழங்கிய வாக்குகளால்தான் இன்று இருக்கின்ற ஜனாதிபதியும் அரசும் காணப்படுகின்றது. எனக்கு ஆரம்பத்தில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சே கிடைத்தது. அது ஓர் பெயர் பலகை மாத்திரம் கொண்ட அமைச்சாகவே இருந்தது. அதன் பின் சிறு கைத்தொழில் வாசனை பொருட்கள…
-
- 0 replies
- 258 views
-
-
ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார், உபரதன தேரர் தவறேதும் புரியாத ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றதென மொரவெவ பிரதேச சபையின் தலைவர் பொல்ஹேன்கொட உபரதன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது பொல்ஹேன்கொட உபரதன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, அவர் மீது எந்ததொரு தவறுமில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆகவே அவரை பதவியிலிருந்து நீக்குவது முறையற்ற செயற்பாடாகுமெனவும் பொல்ஹேன்கொட உபரதன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை அமைச்சர் ர…
-
- 0 replies
- 331 views
-
-
ரணில்- மஹிந்த இரகசிய பேச்சுவார்த்தை! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உதவியாளர்கள் எவருமின்றி தனியானதொரு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்தே அதிகம் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதின் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் விடயத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படலாமெனவும் கூறப்படுகின்றது. இதேவேளை ரணில்- மஹிந்தவின் இந்த சந்திப்பில் அரசியலில் புதிய ம…
-
- 0 replies
- 236 views
-
-
அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கண்டியிலுள்ள வணிக சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டுமென கோரி, கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்தன தேரர் நடத்தி வருகின்றார். மேலும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரத்தன தேரர், நீர் மாத்திரம் அருந்திப் போராட்டத்தை முன்னெடுத…
-
- 0 replies
- 179 views
-
-
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி அரசியலிலிருந்து ஒதுங்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு இடம்பெற்றது. போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை…
-
- 5 replies
- 770 views
-
-
வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள் வந்திருக்காது.எனவே இனியாவது தமிழர்கள் தங்களுக்கு பொருத்தமான தேசியத் தலைவரை எதிர்வரும் தேர்தல் ஊடாக தெரிவு செய்ய வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்ற சமூர்த்தி நிவாரண உருதி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் உள்நாட்டு போரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் வரை தமிழ் மக்களே கொல்லப்பட்டு வருகின்றனர்.இலங்கையில் எத்தனையோ சமூகம் வாழ்கின்ற போதிலும் இன்றுவரை தமிழர்களே …
-
- 0 replies
- 701 views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். அதேபோல், போர் நிறைவடைந்த 10 வருடங்கள் கடந்துள்ளபோதும் போரினால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் கட்டியெழுப்பப்படவில்லையென தெரிவித்துள்ள அவர், இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் தமிழ் மக்களின் எதிர்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்ற இந்நிகழ்வில் மாவை சே…
-
- 4 replies
- 557 views
-
-
யாழ்ப்பாணம்பொதுநூலகம் எரிக்கப்பட்டு 38 ம் ஆண்டு நிறைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்று அதிர்ச்சியில் மரணமடைந்த தனிநாயகம் அடிகளாரின் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணம் பொது நூலக எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நினைவு தினம் ரெலோ கடசியினரால் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்றது.இந்த நினைவு தின நிகழ்வில் ரெலோவின் உள…
-
- 5 replies
- 1.6k views
-