ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
திடீரென மினுவாங்கொடையில் இனப்பற்று எவ்வாறு உருவானது: மக்கள் விடுதலை முன்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் தாேழர் சுனில் ஹந்துன்னெத்தி கேள்வி
-
- 0 replies
- 240 views
-
-
யுத்தத்தில் கொல்லப்பட்ட முப்படையினருக்கு, கிளிநொச்சி பள்ளியில் அஞ்சலி.. May 20, 2019 நேற்று ஞாயற்றுக் கிழமை மாலை ஏழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு மெழுகுவர்த்தி ஏந்திஅஞ்சலி செய்யப்பட்டதுடன் பிரார்த்தனையும் இடம்பெற்றது. http://globaltamilnews.net/2019/122281/
-
- 3 replies
- 901 views
-
-
மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம் வன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் பௌத்தர்களினால் நேற்று முதல் வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனைமுன்னிட்டு இலங்கை முழுவதும் என்றுமில்லாதவாறு வெசாக்கூடு…
-
- 24 replies
- 2.2k views
-
-
ஜனாதிபதி தேர்தல் வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி – மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட விடயங்…
-
- 0 replies
- 327 views
-
-
தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவுகள்… May 18, 2019 தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறப்புற உணர்வுபூர்வமாக இடம்பெற்றது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் அனுஷ்டித்து வருகின்றனர். அந்த வகையிலே யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்ற போதும் தமிழர்களுக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் நீதி கிடைக்கும் வரை தங்களுடைய உரிமைக்கான போராட்டங்கள் தொடரும் எனவும் அந்த வகையில் அதன் ஒரு அங்கமாக இந்த நினைவு நிகழ்வுகள் இடம்ப…
-
- 8 replies
- 891 views
-
-
மட்டக்களப்பில் தமிழர்களின் பாரம்பரிய நிலமான வாகரை மாதுரங்கேணி பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழ்ந்ததாக காட்டி சுமார் 3000 குடும்பங்களை குடியேற்ற அமைச்சர் அமீரலி அவர்கள் வடகிழக்கு ஜனாதிபதி செயலனி ஊடாக அனுமதி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த குடியேற்ற திட்டத்தை நிறைவேற்ற வாகரை மாதுரங்கேணி பகுதியில் முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாசல் இருந்ததாக காட்டும் போலி கடித தலைப்புடன் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் மாதுரங்கேணி பகுதியானது தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இங்கு தாங்கள் அறிந்த வகையில் எந்தவொரு பள்ளிவாசலும் இருக்கவில்லை எனவும் தமிழர்கள் யுத்தத்தில் செத்துக்கொண்டிருக்கும் போதே முஸ்லீம் அரசியல் வாதிகள் இது போன்றுபள்ளிவாசல்கள் இருந்தது போன்ற ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் பல்கலைகழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்… May 18, 2019 (யாழ்.விசேட நிருபர்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் போது உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காய் அகவணக்கம் இடம் பெற்றது அதனைத் தொடர்ந்து மாணவர்கள, ஊழியர்கள் மலர்வணக்கம் செலுத்தி சுடர்களை ஏற்றினர். மேலும் இவ்விடத்தில் தமிழர்களுக்கான நீதி வேண்டும் என்று குறிப்பிட்ட பதாகை ஒன்றும் நினைவேந்தல் தூபியில் வைக்கப்பட்டிருந்தது. #முள்ளிவாய்க்கால் #நினைவேந்தல் #மலர்வணக்கம் http://gl…
-
- 1 reply
- 481 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாமன்ற உறுப்பினர்களுக்கும், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகரவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள், தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து மீண்டு…
-
- 0 replies
- 393 views
-
-
வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு மாகான கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 79 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தார். வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு வழங்கப்பட்ட இந்த நியமனத்தில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர்களாக 57 பேரும், விஞ்ஞான ஆசிரியராக 15 பேரும், விவசாய போதனாசிரியர் பயிற்சித்தரத்தில் 7 பேரும் நியமனத்தைப் பெற்…
-
- 0 replies
- 375 views
-
-
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆரா ய்ந்தே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் நிர்மலநாதன் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான பிரேரணை தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னதாக அமைச்சு பதவியிலிருந்து விலகவேண்டும். தவறின் அந…
-
- 2 replies
- 473 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள கௌதாரிமுனை பிரதேசத்தில் மீண்டும் மணல் அகழ்வு இடம்பெறுவதனால் கிராமத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமாறு பொது மக்கள் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். பூநகரியில் அமைந்துள்ள கௌதாரிமுனை பிரதேசம் இயற்கை எழில் மிகுந்த பிரதேசம். இங்குள்ள மணல் மேடுகள் மக்களை கவரக் கூடிய சுற்றுலாத்துறைக்கு உரியதாக காணப்படுகிறது. வடக்கில் உள்ள சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றாக காணப்படும் கௌதாரிமுனையின் சிறப்பே அங்குள்ள மணல் மேடுகள் ஆகும். ஆனால் 2009 க்கு பின் அ…
-
- 0 replies
- 779 views
-
-
May 20, 2019 அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைய சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #அரசாங்கத்திற்குஎதிராக #நம்பிக்கையில்லாப்பிரேரணை #கையளிப்பு #noconfidencemotion http://globaltamilnews.net/2019/122308/
-
- 0 replies
- 318 views
-
-
10 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தான் கலந்துகொண்டிருந்த போது இராணு வமும், பொலிஸாரும் தனது வீட்டுக்குள் நுழைந்தமை தனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் எனவே ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எதிராக சபாநாயகர் கருஜெயசூரியவிடமும், சர்வதேச நாடாளுமன்ற அமைப்புக்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தான் கலந்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அண்மையில் உள்ள தனது இல்லத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனை நடத்தியமைக்கு எதிராகவே தாம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 308 views
-
-
மட்டக்களப்பில் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட் டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் வாயில் கறுப்பு துணி அணிந்தவாறு இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என கோரியே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், …
-
- 0 replies
- 679 views
-
-
இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த (இராஜதுரை ஹஷான்) அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து முப்படையினரின் சேவையினாலேயே நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு இராணுவத்தை நாம் முதலில் எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இனியாவது பெருமைப்படுத்த அரசாங்கம் பழகிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. பல உயிரிழப்புக்களுடன் வெற்றிக் கொண்ட பயங்கரவாதம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் நாம் பிறிதொரு அடிப்படைவாத தீவிரவாதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டு…
-
- 4 replies
- 658 views
-
-
பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு! யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்தோடு நாட்டுக்காக உயர்நீத்த முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை சேர்ந்தோருக்கு அஞ்சலி செத்துவதற்காக, இரவு 7 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றுமாறு கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதேவேளை தேசிய இராணுவ தினத்தை முன்னிட்டு, இராணுவ சிரேஷ்ட நிலை அதிகாரிகள் 38 பேரு…
-
- 4 replies
- 1.1k views
-
-
(இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுமடையாக்குவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். களனி ரஜமஹா இன்று விகாரையில் வெசாக் தின வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் தேசிய வெசாக் பண்டிகையினை கொண்டாடாமல் இருக்க முடியாது. அனைவரும் தைரியமாக செயற்பட வேண்டும். நிலைமைகளை வெற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரிய அகதிகள் யாழிலும் தங்க வைப்பு நீர்கொழும்பில் வசித்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை வடக்கிற்கு அழைத்துவரும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, அவர்களில் சிலர் யாழ்ப்பாணத்திற்கும் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்ட அகதிகளில் தற்போதுவரை 13 அகதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சில வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி நாட்டிலேற்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களையடுத்து அவர்களுக்கு தங்கிருந்த இடத்தில் …
-
- 3 replies
- 981 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுக்கு துருக்கியில் பயிற்சி – சூதாட்டம் ஊடாக நிதி May 20, 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, துருக்கியில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியின் பட்டிதுல்லா எனப்படும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 50 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க அண்மையில் தெரிவித்துள்ள நிலையில், குறித்தக் குழுவினர் தொடர்பில், எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. இந்தநிலையில் அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் சிங்கள ஊடகமொன்று ச…
-
- 1 reply
- 280 views
-
-
புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது… May 20, 2019 விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் உயிரிழந்தார் என்பது உறுதியானது என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆற்றிய விசேட உரையில், அமெரிக்காவின் FBI அமைப்பு உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை 2008 ஆம் ஆண்டு ஜனவரி அன்று அறிவித்தது. விடுதைலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் …
-
- 0 replies
- 529 views
-
-
முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு. தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் கத்தார் நாட்டி நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்வின் பதிவுகள் சில. அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது.பொதுச்சுடரினை.மாவீரர் லெப் கேணல் ரொசான் அவர்களின் சகோதரர் திரு. ஜெனா அவர்கள் ஏற்றினார். அத்தோடு ஈகை சுடர்களும் ஏற்றப்பட்டன. http://battinaatham.net/description.php?art=20022
-
- 0 replies
- 399 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்றுப் பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று (19) மாலை முன்னாள் போராளிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். ஒரு பயனாளிக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் 40 பேருக்குத் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உபகரணங்கள் மற்றும் பொருள் கொள்வனவிற்காக விசே…
-
- 0 replies
- 351 views
-
-
கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் கிழக்கு மாகாண ஆளுனரினால் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் வாயில் கறுப்பு துணி அணிந்தவாறு போராட்டம் நடைபெற்றது. கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டி புதைக்கும் முயற்சி, கிழக்கு மாகாண ஆளுனரின் ஒருபக்க பார்வையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் மாணவர்களே போன்ற கோசங்களுடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராள…
-
- 0 replies
- 286 views
-
-
செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞன் உயிரிழப்பு! நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயத்திற்கு எதிரேவுள்ள நீரோடையில் நேற்று இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். செல்பி எடுத்தவாறு நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இந்த இளைஞன் சிறிது நேரத்தில் சேற்றில் சிக்குண்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் நீருக்குள் மூழ்கியுள்ளார். நீண்ட நேர தேடுதலின் பின்னர் நீரோடையின் சேற்றிலிருந்து மீட்கப்பட்ட அவரை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தபோது…
-
- 0 replies
- 498 views
-
-
'ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை ஐ.தே.க., சு.க., கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேறும்' வணிகம் மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் பழிவாங்கலுக்காக கொண்டுவரப்பட்டது அல்ல. அது தேசிய பாதுகாப்பிற்காகவே கொண்டுவரப்பட்டது. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களதும் வாக்குகளுடன் பெரும்பான்மை ஆதரவுடன் அந்த பிரேரணை நிறைவேற்றப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ரிஷாத்துக்கு எதிராக சபாநாயக…
-
- 0 replies
- 253 views
-