ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா In இலங்கை April 26, 2019 6:30 pm GMT 0 Comments 1073 by : Litharsan இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜனா…
-
- 13 replies
- 1.4k views
-
-
April 27, 2019 இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்தில்கொண்டு தேசிய பாதுகாப்புக் குழுவொன்றை அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது இந்தியா இலங்கைக்கு உதவ திட்டமிட்டுள்ளது அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இந்த குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள் பயங்கரவாத விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் உத்தரவு கிடைத்ததும் இவர்கள் இலங்கை பயணமாவார்கள் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றர்போ…
-
- 0 replies
- 494 views
-
-
1 Min Read April 27, 2019 அம்பாறை – நிந்தவூர் பகுதியில், சற்றுமன்னர் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என, காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. #Ampara #srilanka #Nintavur #eastersundayattacklk http://globaltamilnews.net/2019/119657/
-
- 0 replies
- 882 views
-
-
April 27, 2019 இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றன. இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தது. இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கான ஒத்திகை, கடந்த 16 ஆம் திகதி, மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் இடம்…
-
- 0 replies
- 446 views
-
-
மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 50 கத்திகளும் 2 கோடரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.இன்று மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா காவற்துறையினர் பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின் தலையிலான காவற்துறையினர் மஸ்கெலியா பள்ளிவாசலை திடீர் முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்து 50 கத்திகளும் 2 கைக்கோடரிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டடுள்ளார்.மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருவதாக மஸ்கெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதேவேளை, மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான தோட்ட விடுதியொன்றிலிருந்து வோக்கிடோக்கிகள் சில…
-
- 0 replies
- 270 views
-
-
வவுணதீவு பொலிஸார் கொலையும் சஹரான் குழுவினரின் கைவரிசை! – பயங்கரவாதி சிக்கினார்? மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் எனும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய சஹரானின் வாகன சாரதியான 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும், மட்டக்களப்பு தேவாலய தற…
-
- 2 replies
- 912 views
-
-
யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படு கின்றன. இந்த சுற்றிவளைப்பில் இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் முஸ்லிம் என கூறப்படுகின்றது. https://www.ibctamil.com/srilanka…
-
- 1 reply
- 769 views
-
-
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற அன்மைய இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல் பற்றிய கலந்துரையாடல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி நீங்களும் கேட்கலாம் <iframe width="100%" height="400" src="https://www.mixcloud.com/widget/iframe/…" frameborder="0" ></iframe>
-
- 0 replies
- 422 views
-
-
திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது திருகோணமலை இரக்கண்டி பகுதியில் வெடிபொருட்களுடன் சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நபரிடமிருந்து 51 வோட்டர் ஜெல் வெடிபொருள் , 215 டெட்டனேடர்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினரால் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54812
-
- 0 replies
- 748 views
-
-
கிளிநொச்சி தேவாலயத்தை இலக்கு வைத்த பயங்கரவாதி! – வெளிவரும் உண்மைகள் உயிர்த்த ஞாயிறன்று கிளிநொச்சி தேவாலயத்திலும் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலய பங்கு தந்தை அருட்பணி ஏ.ஜே.ஜேசுதாஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அசாதாரண சூழலில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சர்வமத ஒன்று கூடல் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த ஒன்றுகூடல் இன்று காலை 9.30 மணியளவில் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஒன்று கூடலில் சர்வ மத தலைவர்கள் பலரும் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் கலந்துகொண்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து …
-
- 0 replies
- 660 views
-
-
வவுனியாவில் தொடரும் சோதனை நடவடிக்கை: அச்சத்தில் மக்கள் (2ஆம் இணைப்பு) வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்நிமித்தம் வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பயணிகளை இறக்கி இராணுவத்தினரால் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே வாகனங்களில் பயணம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். பயணிக…
-
- 0 replies
- 455 views
-
-
சாய்ந்தமருது துப்பாக்கிச்சூடு – குழந்தைகள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு கல்முனை- சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸ் …
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச் சந்தித்த விடயமானது தமக்கு அதிர்ச்சியளித்திருந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மேலும் இது கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரிந்துதான் நிகழ்ந்திருக்குமா என்பதும் தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தொடர் தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து நாடாளுமன்ற உருப்பினர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநரை நேரில்சென்று சந்தித்திருந்தார். இது கூட்டமைப்பு சார்பானோரிடத்தில் கடும் எதிர்ப்பு நிலையினைச் சந்தித்திருந்த நிலையில், நாடாளுமன்றில் சுமந்திரன் அதுகுறித்த விளக்கத்தினைக் கொடுத்திருந்…
-
- 9 replies
- 1.9k views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணமென ஜனாதிபதியின் ஆலோசகர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார். அத்தோடு இறுதி யுத்தக் காலத்தில் கூட இதுபோன்ற தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நைஜீரியாவிலும், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போலவே இந்த தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என அவர் கூறினார். எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் …
-
- 7 replies
- 2k views
-
-
பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜுதின் மற்றும் அவரது உறவினர் மற்றும் மெளலவி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 40க்கும் மேற்பட்ட வாள்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் பள்ளிவாசலிலிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/118753
-
- 0 replies
- 518 views
-
-
நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை – பிரதமர் விசேட அறிக்கை நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் பயங்கரவாதிகள் இயங்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இந்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தனக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் சர்வதேசத்தின் உதவியுடன் சேதமடை…
-
- 4 replies
- 974 views
-
-
குண்டு தாக்குதலால் சுற்றுலாத்துறை 30% வீழ்ச்சி? 26,000 கோடி நட்டம்? தொடர் குண்டு வெடிப்புகளால் நாட்டின் சுற்றுலாத்துறையில் 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றபோதும் சர்வதேச பயங்கரவாதத்தின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஏனைய நாடுகளின் அனுபவங்களை பாடமாகக் கொண்டு விரைவில் இத்துறையை மீளக் கட்டியெழுப்புவோமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார். இதனால் இலங்கைக்கு சுமார் ஒன்றரைக் கோடி பில்லியன் டொலர்கள் (26,000 கோடி) நட்டம் ஏற்படலாமென நிதி அமைச்சு மதிப்பிட்டுள்ள போதும் அரசாங்கம் இக்காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டிய கடன்களை தவறாது செலுத்த முன்வருமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன் இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தை காரணமாக…
-
- 1 reply
- 631 views
-
-
24 மணித்தியாலங்களில் 20 சந்தேகநபர்கள் கைது…. April 27, 2019 நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை, மாவனெல்லை மற்றும் கொம்பனித் தெரு ஆகிய காவல்துறைப் பிரிவுகளில் தலா மூன்று பேரும் மிரிஹான மற்றும் தெஹிவளையில் தலா இரண்டு பேரும் கொள்ளுப்பிட்டி, பண்டாரவளை, காத்தான்குடி, அளுத்கம, புரவசன்குளம் ஆகிய பிரதேசங்களில் தலா ஒவ்வொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 378 views
-
-
கிளிநொச்சியில் திடீர் சுற்றிவளைப்பு கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் படையினர் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த தேடுதல் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்ற காணிகள் என்பன படையினரால் சோதனையிடப்பட்டது. இதேவேளை அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்டவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கிளிநொச்சியில்-திடீர்-சு/
-
- 0 replies
- 473 views
-
-
இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நடவடிக்கை – முன்னாள் ஜனாதிபதி நாட்டின் அனைத்து பிரதேச செயலகத்திலும் அடுத்தவாரம் முதல் சமாதானக் குழுக்கள் ஊடாக இனங்களுக்கிடையில் ஐக்கியத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். பேராயர், கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகையை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சம்பவங்களானது மிகவும் கவலையளிக்கிறது. நடக்கக்கூடாத ஒன்று நடந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக நாம் மிகவும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய, இனங்களுக்கிடையிலான ஐக்க…
-
- 0 replies
- 515 views
-
-
தீவிரவாதிகளின் தோற்றத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்: சாள்ஸ் நிர்மலநாதன் அரசியல் பலத்தின் ஊடாகவே தீவிரவாதிகள் தோற்றம் பெற்றுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே சாள்ஸ் நிர்மலநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மனிதர்களை அழிக்க வேண்டுமென்ற கொடூர சிந்தனையோடு மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த தாக்குதல் சம்பவம் முஸ்ஸீம் தீவிரவாத அமைப்புக்கள் கடந்த 10 ஆண்டுகளாக இதற்காக ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளன. இவர்கள் மனித வெடி குண்டுகளாக மாறி மக்கள் மத்தியில் வெடிக்கடிச் …
-
- 0 replies
- 517 views
-
-
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அம்பாறை பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக…
-
- 18 replies
- 1.4k views
-
-
இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு Getty Images கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு. இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல…
-
- 11 replies
- 1.8k views
-
-
படத்தின் காப்புரிமை NurPhoto "இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்" என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் 'பத்வா' குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை…
-
- 7 replies
- 1.5k views
-
-
வெள்ளவத்தையில் சி-4 வெடிபொருட்களுடன் மூவர் கைது! கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு கிலோகிரேம் நிறையுடைய சி-4 வெடிபொருட்களை இலங்கை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர். குறித்த வெடிபொருட்களை முச்சக்கர வண்டியொன்றில் எடுத்துச் செல்லும்போதே மேற்கொண்ட சோதனையின் போது மீட்டுள்ள கடற்படையினர் முச்சக்கர வண்டியையும் தடுப்புக் காவலின் கீழ் கொண்டு வந்துள்ளளனர். அத்துடன் இந்த கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய மூவரையும் இதன்போது படையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54777
-
- 0 replies
- 561 views
-