Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக சத்தியமூர்த்தி- மக்கள் மகிழ்ச்சி யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய யாழ்.போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக்கடிதம் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இவர் சிரேஷ்ட வைத்திய நிர்வாக சேவை வைத்திய உத்தியோகத்தர் ஆவார். அவரின் நியமனத்தையிட்டு யாழ். மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வைத்தியர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் இந்ந நியமனத்தை வரவேற்றுள்ளனர். வைத்தியர் சத்தியமூர்த்தி, வைத்திய நிர்வாகியாக யாழ்.போதானா வைத்தியசாலையில் செய்த சேவை அளப்பரியது. பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பான சேவைகள…

  2. அம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். “வடமராட்சி கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் ஊரனி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட…

  3. முன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (18) வியாழக்கிழமை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். முகநூல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெ…

  4. 52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை கடுமையான வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 52 நாட்களின் பின்னரே இப்பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்தும் அப்பிரதேசத்துக்கு கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் அபாயம் உள்ளதனால், இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது. http:/…

  5. முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிாிழந்துள்ளார். மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவா்கள் மீது தாக்கியுள்ளது. சம்பவத்தில் தா்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிாிழந்துள்ளார். மேலும் எஸ்.கிாிஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளார்உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/118659/

  6. வடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்துள்ளார். அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் ஒரு வீடு நிர்மாணிக்கப்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  7. “ "கோத்தா" பயத்தை காட்டுகின்றனர் : மஹிந்த களமிறங்கினாலும் அச்சமில்லை ; விரைவில் ரஜபக்ஷவினர் சிறைக்குச்செல்வர்” (ஆர்.யசி) கோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அடக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முயற்சித்து வருகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ அல்ல மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் களமிறங்கினாலும் எமக்கு அச்சம் இல்லை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கடந்த ஆட்சியில் செய்த குற்றங்களில் வெகுவிரைவில் ராஜபக்ஷவினர் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷவை அடையாளப்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேல…

  8. கல்முனையில் நடைபெறும் நடைபவனியில் மக்களனைவரும் கலந்துகொள்ள வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடைபெறவிருக்கும் நடைபவனியில் உண்மையையும் நியாயத்தையும் சமாதானத்தையும் விரும்பும் சகல மக்களையும் கலந்துகொள்ளுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி. வி விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நடைபவனியில் தானும் பங்கேற்ப இருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு…

  9. இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019 இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார். இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக, இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இரணைதீவு மக்களின் வாழ்வியல் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்க…

  10. ஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா 2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. பாரிசை தலைமையிடமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில், சிறிலங்கா 126 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 131 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது. ஊட்க சுதந்திர சுட்டியில் இம்முறை நோர்வே முதலிடத்…

    • 0 replies
    • 235 views
  11. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும், போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. USS Spruance என்ற நாசகாரி கப்பலும், USNS Millinocket என்ற போக்குவரத்துக் கப்பலும் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, CARAT-2019 எனப்படும், “கப்பல் தயார்நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு” என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிறிலங்கா வந்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்களை சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் ஆகியோர் வரவேற்றனர். சிறிலங்கா கடற்படையின் சயுரால மற்…

    • 0 replies
    • 261 views
  12. கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள றோய் சமாதானத்துடன் பொன்சேகா, விக்கி அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். ”கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார். கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல…

    • 0 replies
    • 220 views
  13. (எஸ்.அஷ்ரப்கான்) தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வட மாகாணத்தை தமிழீழம் என்று பெயரிட்டு அம்மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்தார். இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பிரிக்கப்படாத இலங்கைக்குள் இன பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு குறித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:- ஈழம் என்பது இலங்கையின் பெயர்களில் ஒன்றாகும். தமிழ் மக்களின் இன உணர்வோடு பின்னி பிணைந்த பெயராக தமிழீழம் உள்ளது. பிரிவினை இல்லாத இலங்கையில் தமிழீழம் என்கிற பெயருடன் உச்ச பட்ச அதிகாரங்களுடன் கூடிய அலகாக வட மாகாணத்தை தமிழ் மக்களு…

  14. மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன் மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார். தேசிய பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாட்டுக் காரணங்களால், முப்படைகள் மற்றும் பொலிஸாரைத் தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்குச் செல்லுமாறு கேட்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்றிற்கு …

    • 2 replies
    • 924 views
  15. வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க (ஆர்.யசி) ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பல கருத்துக்கள் உள்ளன ஆனால் குழப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரதான நபர்கள் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் நகர்வுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் க…

  16. பதுளை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில்10 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் 12 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.3 குழந்தைகள் உட்பட 10 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வேன் ஓட்டுனருக்கு நித்திரை …

  17. வல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. April 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர். கிராம சேவையாளர் பருத்தித்துறை பிரதேசசெயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி…

  18. நெடுந்தீவில் கடும் வறட்சி April 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு வன ஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன என நெடுந்தீவு பிரதேச செயலகம் தெரிவித்தது. நெடுந்தீவில் கடுமையான வறட்சி காணப்படுகின்றது. அதனால் குதிரைகள் குடிநீர் இல்லாது தவித்து வந்த நிலையில் , குதிரைகள் நீர் அருந்துவதற்கு என கட்டப்பட்டு உள்ள தொட்டிகளில் தினமும் வணஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நீர் ஊற்றப்படுகின்றது. அதேவேளை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடர் முகாகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் சாராப்பிட்டியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்தும் , தேசிய குடிநீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார ச…

  19. தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வட மாகாணசபை முன்னள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தவிசாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள…

  20. மாங்குளம் பகுதியில் பாரிய பஸ் விபத்து மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து பாரியளவில் இடம்பெற்றுள்ள போதிலும், தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக குறித்த பஸ் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது. பாதையை விட்டு விலகிய பஸ் ஏ9 வீதியில் அமைந்த…

  21. இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுப்போவது கவலையளிக்கின்றது - இந்திய பாடகி ஸ்ரீநிதி இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஒழுங்கமைத்துள்ள இசை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வவுனியா வந்துள்ள நிலையில் இன்று ஊடகங்களுக்காக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை கலைஞர் கடின உழைப்பாளிகள். குறிப்பாக இந்தியா…

  22. மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணை பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ஏனைய நிலம் வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பல ஏக்கர்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவ…

  23. அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் (ஆர்.யசி) இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் "மில்லிநோகேட் "மற்றும் யு.எஸ்.எஸ் "இஸ்ப்ருவன்ஸ் "ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்து வந்தடைந்தன. வருடாந்தம் இடம்பெறும் கடற்படை பயிற்ச்சிகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு இவ்வாறு வருகை தந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் இரண்டையும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன. யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர்க்கப்பலானது 2…

  24. கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அப்பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளதாகவும், இதனால் மதுபானசாலை அமைப்பதில் தமக்கு உடன்பாட…

  25. சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை… April 15, 2019 யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு யாழ்ப்பாண காவற்துறையினர் தடை விதித்துள்ளனர். மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வு எனவும் , அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் யாழ்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். குறித்த முறைப்பாட்டில் , குறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.