ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143279 topics in this forum
-
பாதுகாப்பு உறவைப் பலப்படுத்த சீனா- இலங்கை இணக்கம்! - கூட்டறிக்கையில் தகவல் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு உறவைப் பலப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் இணக்கம்கண்டுள்ளன.அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விடயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார ரீதியான இணக்கங்கள் எட்டப்பட்டன. அத்துடன் சீன…
-
- 0 replies
- 581 views
-
-
Friday, January 21st, 2011 | Posted by admin ஐனாதிபதி மஹிந்த அமெரிக்காவுக்கு திடீர் பயணம் : பின்னணி என்ன? புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பலத்தை சோதிப்பதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டதாக லங்கா வெப் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய உதவி செயலாளர் ரிச்சட் அமிட்ராஜை சந்தித்தன் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டார். ரிச்சட் அமிட்ராஜ் தற்போது இலங்கையில் தங்கி இருக்கும் காலப்பகுதிலேயே, ஜனாதிபதியை அமெரிக்கா ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
போர் வெற்றியே தேர்தல் வெற்றிக்குக் காரணம்! - என்கிறார் கோத்தபாய ராஜபக்ச [Monday 2014-09-22 07:00] விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி கொள்ளப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டமையே ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் வெற்றிக்கான காரணம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் வெற்றி குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் கண்ட அனைத்து கனவுக்களம் சிதைந்து போயுள்ளது. ஊவா தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு வழிகளைப் பயன்படுத்தியிருந்தார். எனினும் அந்த வழிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நாட்…
-
- 0 replies
- 297 views
-
-
வியாழக்கிழமை, ஜனவரி 27, 2011 விண்வெளிப்பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக மீண்டு வந்தது போல ஜனாதிபதி செயலக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தனிப்பட்ட ரீதியில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நலமாக நாடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 822 views
-
-
உணவுக்காக இன்று இரவுவேளையிலும் கையேந்தும் நிலையில் எமது மக்கள் - யோகேஸ்வரன் எம்.பி. [ பிரசுரித்த திகதி : 2011-01-31 07:33:13 AM GMT ] உணவுக்காக இரவு 12மணிவரையில் கையேந்தும் நிலைக்கு எமது சமூகம்சென்றுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகள் வாரி வழங்கிய பணம் எங்கே போனது எனவும் கேள்வியெழுப்பினார். ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கிராண்குளம் கதிரொளியகரக் கல்விக்கழகம் நடாத்திய பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://tamilulakam.com/news/view.php?id=22495
-
- 1 reply
- 497 views
-
-
21 பீரங்கி வேட்டு மரியாதைகளுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் மைத்திரி (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்றார். அத்துடன் ஜனாதிபதிக்கு 21 பீரங்கி வேட்டுகளும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதுமாத்திரமின்றி உத்தியோகபூர்வ சபை அமர்வை ஆரம்பித்து விட்டு ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையையும் ஆற்றினார். அரசியலமைப்பின் 70 ஆவது ஷரத்துக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவ…
-
- 0 replies
- 285 views
-
-
தேர்தலுக்கு பணம் கொடுத்தால் மீண்டு வந்த பொருளாதாரம் மீண்டும் மண்கௌவும் – நிதி அமைச்சு அரச ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மட்டுமே அரசாங்கத்தினால் வழங்கக்கூடியதாக இருப்பதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுபேறுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பெறமுடியும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தலுக்கு பணம் ஒதுக்க முடியாது, பணம் ஒதுக்க வேண்டுமானால் கடந்த…
-
- 0 replies
- 179 views
-
-
பெருமளவிலான மக்களின் காணிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர் என மன்னார் மறைமாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை சந்தித்த போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு பேராயர் கருத்து வெளியிட்டுள்ளார். இராணுவத்தினர் காணிகளை கைப்பற்றியுள்ளதனால் பெரும் எண்ணிக்கையிலான மன்னார் மாவட்ட மக்கள் காணிகளின்றி வாழ்வதாகத் தெரிவித்துள்ளார். வேறும் நோக்கங்களுக்காக காணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் 4000 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு 1000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீடு உள்ளவர்களுக்கே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீட்டுத் திட்டத்திலும் வீடுகள் …
-
- 0 replies
- 394 views
-
-
தொடருந்து - படையினரின் ஊர்தி மோதல் - ஐந்து படையினர் பலி, 17பேர் படுகாயம் இன்று காலை 6.30 மணியளவில் கம்பகா மாவட்டத்தின் எதருமுல்ல பகுதியில் ஸ்ரீலங்கா படையினரின் ஊர்தி ஒன்று தொடருந்து ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும், மேலும் 17 படையினர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கை ஒன்றையடுத்து ஊர்தி ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த படையினர் தொடருந்து கடவை ஒன்றை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து எற்பட்டதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து படையினர் பலியாகியுள்ளதுடன் மேலும் 17பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். www.sankathi.org .
-
- 3 replies
- 1.4k views
-
-
புலிகளைத் தடைசெய்யுமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-12 08:30:03| யாழ்ப்பாணம்] அவுஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யுமாறு கோரும் சிபா ர்சு ஒன்றை அந் நாட்டின் பயங்கரவாதத் தடுப்பு துறைசார் நிபுணர் ஒருவர் அரசாங்கத் திடம் முன்வைத்துள்ளார். கிளைவ் வில்லியம்ஸ் என்னும் அவுஸ் திரேலியாவின் பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான நிபுணரே விடுதலைப்புலிகள் அமைப்பை அவுஸ்திரேலியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள இரகசிய அறிக்கையயான்றின் மூலம் கோரியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையை அதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தனது அறிக்கையின் மூல…
-
- 3 replies
- 962 views
-
-
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஸ, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றிஇ முப்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தலில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்திருந்தும் தேர்தலை நடத்தியதாகவும், ஆயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குப் போதிய அளவு நிதியை வழங்கியுள்ள போதிலும், அதனை மக்களுக்குப் பயன்படுத்தத் தவறியுள்ளதுடன், அரசாங்கமாகிய தாங்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களையும் அவர்கள் செய்ய விட…
-
- 5 replies
- 1.3k views
-
-
சுன்னாகத்தில் சித்திரவதை!- சிந்திக்கவுக்குத் தொடர் சிக்கல்!! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபரை சித்திரவதை செய்த குற்றத்துக்காகப் 10 ஆண்டுகள் கடுகாவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாரும் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்றும் தள்ளுபடி செய்தது. சுமணன் என்ற சந்தேகநபரைக் கொலை செய்த குற…
-
- 0 replies
- 285 views
-
-
அன்புக்குரிய சங்கதி வாசகர்களே.. சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எம் தமிழ் உறவுகளுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்துக்களும் வலுச்சேர்க்குமென எண்ணுவதால் அன்பான வாசகர்களே இவ்மனிதாபிமான உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மதிப்பக்குரிய கோபி அனான் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; அவர்களுக்கு சமாதானத்திலும் நீதியிலும் நம்பிக்கைகொண்ட தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்வது இலங்கையில் உள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களான யாழ்ப்பாணம், வாகரை ஆகிய ப…
-
- 4 replies
- 2.2k views
-
-
மன்னார் மதவாச்சி பிரதானவீதியில் பொலிஸாரின் வாகனம் ஒன்று அவ்வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அறிந்து அந்த இடத்தில் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது. இம்முறுகல் நிலையைத் தணிப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மன்னாரில் இருந்து தென்பகுதியை நோக்கி சிவில் உடை தரித்த பொலிஸாரை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பயணித்தது. அப்போது முருங்கன் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இந்த பஸ்ஸுடன் நேருக்குநேர் மோதியதால் …
-
- 0 replies
- 948 views
-
-
பிராந்திய பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு - எம்.றொசாந்த், டி.விஜிதா யாழில் இருந்து வெளிவரும் பிராந்திய பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான செல்வராசா இராசேந்திரம் (வயது 56) இன்று (28) அதிகாலை இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் கொழும்புத்துறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிளில் துணியால் முகத்தை முடிக்கட்டிக் கொண்டு வந்த வாள்வெட்டுக்கும்பல், குறித்த நபர் மீது வாள் வெட்டுத்த…
-
- 3 replies
- 758 views
-
-
களுத்துறை கடலில் மூழ்கி பிரான்ஸ் பிரஜை பலி பொலிஸ் விசாரணை தொடர்கிறது [saturday, 2011-02-26 02:54:00] களுத்துறை கடலில் நீராடச் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். வடக்கு களுத்துறை ஹோட்டலொன்றில் தங்கியிருந்த இவர், ஹோட்டலுக்கு பின்பக்கமாக உள்ள கடலில் நீராடிய போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 52 வயதான சார்ள்ஸ் ரொபட் என்பவரே இவ்வாறு இறந்துள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின்னர் இவரின் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இறந்தவரின் சடலத்தை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணை ந…
-
- 1 reply
- 577 views
-
-
இலங்கையில் ஐந்து மணி நேரத்துக்கு ஒரு கொலை மெட்ரோ இலங்கையில் ஐந்து மணி நேரத்துக்கு ஒரு கொலை இடம்பெறுவதாக போருக்கு எதிரான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. மனித உரிமைக்கான இல்லம் (Home for Human Rights) நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. . இராணுவத்துக்கும் விடுதலைப் புலிக ளுக்குமிடையில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என வும் போருக்கு எதிரான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு, ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தமது கல்வியை இழந்து முகாம்களில் சொல் லொணா துயரங்களை அனுபவித்து வரு கிறார்கள் எனவும் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் தொடருமானால்,…
-
- 0 replies
- 684 views
-
-
யாழ்.துரையப்பா மைதானத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு யாழ். துரையப்பா மைதானத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323042
-
- 7 replies
- 985 views
- 1 follower
-
-
ஊழல் மோசடிகள் மலிந்து கிடக்கின்ற இந்நாட்டில் பொருளாதார மற்றும் கடன் சுமைகள் மக்களின் மீதே ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் காங்கேசன் துறையிலும் எம்பிலிப்பிட்டியவிலும் ஜனாதிபதிக்கென மாளிகைகள் அவசியமா என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பியும் ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திசா நாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டதின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில், புதியதோர் பரம்பரையை இலக்காகக் கொண்டு அதாவது ராஜபக் ஷ என்ற அதிகாரம் நிரம்பப் பெற்ற ஒரு பரம்பரையை மையமாகக் கொண்டே 2015 ஆம் ஆண்டுக்கான வரவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
பகவான் சாயிபாபா இலங்கை வருவார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-20 08:20:49| யாழ்ப்பாணம்] உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர் களைக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார். அவருடைய பாதுகாப்பு மற்றும் பணிவிடை களுக்கென அவருடன் சேர்ந்து மேலும் ஆயிரம் பேரளவிலானோரும் இலங்கை வர வுள்ளதாகவும்,அதேநேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் அவருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. valampurii.com
-
- 30 replies
- 3.4k views
-
-
சாபம் கொடுத்து இந்து ஆலயத்தில் சிதறு தேங்காய் அடிக்கும் சர்ச்சைக்குரிய தேரர் மட்டக்களப்பு இந்து ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் வேண்டுதல் செய்துள்ளார். உண்மையை மறைக்கும் அதிகாரிகள், அவர்களுக்கு துணை போகும் பொலிஸ் அதிகாரிகளின் கால், கைகள், எலும்புகள் முறிந்து போக வேண்டும் எனவும் தெய்வங்கள் உண்மையாக இருக்குமானால், மக்களின் வேண்டுதல் நடக்கும் எனவும் கூறி சுமணரத்ன தேரர் சிதறு தேங்காய் உடைத்துள்ளார். சுமணரத்ன தேரர் இந்து ஆலயத்தில் தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மட்டகளப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே…
-
- 0 replies
- 582 views
-
-
விரைவில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதன் பின்னரே இது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் கட்சி மற்றும் மக்களது கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படுமென அவர் இதன்போது தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/35297/57//d,article_full.aspx
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்திற்கு இராஜதந்திரரீதியில் தீர்வுகளை காணவேண்டும் என இலங்கை;கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதுஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது மீனவர்கள் விவகாரம் அவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதும் மனிதாபிமான அடிப்படையிலானதுமாகும் என்ற உள்ளுணர்வுடன் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் இராஜதந்திர மார்க்கங்கள் ஊடாக தீர்க்கப்படவேண்டியதாகும் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும், மீனவர்களுக்கு எதிராக எந்த வடிவங்களிலும் பலத்தையோ அல்லது வன்முறைகளையோ பிரயோகிக்காமல் இருப்பதனை உறுதிசெய்யுமாறும் உயர் ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இந்திய மீனவர்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட …
-
- 0 replies
- 574 views
-
-
ஈழத்தமிழர் துயர் துடைக்க உதவிப் பொருட்கள் வழங்கும் மாநாடுகள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : யாழ் தமிழர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க சிங்கள அரசு முயலுகிறது. நமது சகோதரத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டும் வேலை தமிழகமெங்கும் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொருட்களை வழங்குவதில் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காட்டும் உற்சாகம் நம்மை நெகிழ வைக்கிறது. மக்கள் மனமுவந்து அளிக்கும் இப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் விழாக்கள் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளன. சனவரி - 24 மதுரை சனவரி - 28 விழுப்புரம் சனவரி - 30 ஈரோடு சனவரி - 31 வேலூர் பொருட்களைச் சே…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசிய எச்சங்களைச் சிதைக்கும் முயற்சியில் பொபி – வித்தியாதரன் கூட்டுச் சதி! April 1st, 2011 யாழ் செய்தியாளர் போராட்டப் பின்னடைவின் பின்னர் எமது தேசம் மறுமுகங்கள் பலவற்றை நாளாந்தம் கண்டுகொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அதிகாரப் போட்டி, சுயநலம், மாவீரர்களைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவது, விடுதலைப் போராட்டத்தினை விமர்சிப்பது என்ற போர்வையில் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது என்று பலரது மறுமுகங்கள் வெளிப்பட்டவண்ணமே உள்ளன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் சுவடுகளைப் பின்பற்றி அரசியல் செய்யத் தலைப்பட்ட சிலரது முகங்களை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு உணரப்பட்டமையாலும், சரியான ஆதாரங்கள் கிடைக்கப்…
-
- 0 replies
- 1.9k views
-