ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்படும் வரை கீதா குமாரசிங்கவின் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இடைநிறுத்தம் (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை - சுவிட்சர்லாந்து இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ள காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பதவி வகிக்க தகுதியற்றவர் என மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, அது தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனு விசாரணை செய்து தீர்ப்பளிக்கப்படும் வரையில் அமுல் செய்வதில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலை இன்று இரு வேறு மாறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியில் மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர…
-
- 0 replies
- 195 views
-
-
உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனை கடுமையாக எதிர்கின்றோம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் நேற்று புதன்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனை கடுமையாக எதிர்ப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இவ்வாறு தெரிவிகப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனையும் தனியார்மயமாக்குவதனையும் எதிர்…
-
- 1 reply
- 387 views
-
-
http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg...player_embedded இந்த வீடியோ கிளிப் உண்மையா பொய்யா என்பதை விட இதன் பின்னணியில் பல உண்மைச்சம்பவங்கள் உள்ளன. போர் நடந்து கொண்டிருந்த போது அப்பகுதிகளுக்கு சுதந்திரமான ஊடகவியலாளர்களோ கண்காணிப்பாளர்களோ எவரும் செல்ல முடியாததாக தடுக்கப்பட்டிருந்தார்கள். அப்பிரதேசத்திலிருந்து இப்போது இவ்வாறான ஒரு வீடியோ கிளிப் வந்திருக்கிறது. இரண்டாவது இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு. இதனை வெறுமனே நிராகரிப்பதை விட்டு விட்டு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு இது போலியானதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டும். இது போலியானது என்று சொல்லி விடுவது மட்டும் போதுமான பதிலாக இருக்காது. வன்னியில் கடந்த நவம்பரில் இறுதியில் இறுதிப் போர் ஆரம்பமாகியதில் இரு…
-
- 1 reply
- 757 views
-
-
சிறிலங்காவில் பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத முஸ்லிம் அமைப்புகள்! - பொதுபலசேனா குற்றச்சாட்டு!! இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளான ஹமாஸ் மற்றும் அல் குவைதா அமைப்புகளுக்கு பெரும் நிதியுதவி வழங்கிவரும் யூசுப் அல் கர்த்தாவுடன் முக்கியமான சிறிலங்காவின் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் முஸ்லிம் அமைப்பொன்றின் தலைவரும் தொடர்பினை மேற்கொண்டு வருவதாகவும், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துவரும் யூசுப் அல்கர்த்தாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் இவர்கள் தொடர்பிலான தகவலை தேவை யேற்படின் வெளியிடுவோமென சிறிலங்காவின் இனவாத அமைப்பான பொதுபலசேனா தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தாம் வழங்கிய தகவல்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயற்பட்ட சிறிலங்க…
-
- 0 replies
- 324 views
-
-
அவசரகாலச் சட்ட விதிகளே சிறிலங்கா அரச தலைவரின் உயிரைப் பாதுகாத்தது என்பதால் அதனைத் தொடர்ந்தும் நீடிக்க வேண்டி இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 427 views
-
-
வெள்ளம் வடிந்தபோதும் நீடிக்கிறது மக்களின் அவலம் : 196 பேர் பலி, 6,22,510 பேர் பாதிப்பு நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனுடன் இணைந்ததாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்கள் காரணமாக 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 93 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகா மைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களை பாதிக்கும் விதமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 287 views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டனம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டமுறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்னால் உதவ முடியும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர ஆளுகைக்குள் உள்ள மின்மயான தகனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொற்றுக்கு உள்ளாகி மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்கள…
-
- 1 reply
- 341 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய மிகக் குறைந்த தண்டனையே ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்திற்கு வழங்கப்பட்டதாக சட்ட மா அதிபர் மோகன் பீரிஸ் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 279 views
-
-
சிறிலங்காவின் வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அனந்தி சசிதரன் ஒரு ஆசிரியராவார். இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராகக் கடமையாற்றி 2009 இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமற் போன எழிலனின் மனைவியாவார். மூன்று பிள்ளைகளின் தாயாரான அனந்தி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார். போர் இடம்பெற்ற வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இடம்பெறும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அனந்தி வேட்பாளாராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முன்னாள் புலிப் போராளிகளும், இனப்போரின் போது படுகொலை செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமி…
-
- 0 replies
- 277 views
-
-
இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேசம் சதி செய்தால் அதை ஐ.நாவில் சொல்ல ஏன் தயங்குகிறார் மஹிந்த – லக்ஷ்மன் கிரியெல்ல இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேசம் சதி செய்கிறது என்று கூறுகின்ற ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று அம்பலப் படுத்த ஏன் தயங்குகிறார்? இந்தக் குற்றச் சாட்டுகளை அவர் அலரி மாளிகையில் இருந்தபடி புலம்புவதில் என்ன பலன் கிட்டப்போகிறது?இப்படிக் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல. யுத்தத்திற்குப் பின்னர் ஜனாதிபதி தன்னை சர்வதேச சண்டியராகக் காட்ட முயல்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: யுத…
-
- 0 replies
- 705 views
-
-
மாகாணசபைத் தேர்தலின் நிறைவில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் பிரதி சபாநாயகர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஓய்வு பெற்றுக்கொள்ளக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் பிரதமரின் மகன் அனுராத ஜயரட்ன அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். இதன்படி, அனுராதவிற்கு மத்திய மாகாண முதலமைச்சர் பதவி வழங்கி, பிரதமரை ஓய்வு பெற வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, முதலமைச்சராக பதவி வகித்த சரத் ஏக்கநாயக்க, பிரதமர் பதவி விலகுவதன் மூலம் ஏற்படும் நாடாளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு தெரிவு செ…
-
- 3 replies
- 454 views
-
-
பொது பல சேனாவின் இருவர் கைது : மேலும் நால்வரைத் தேடி வலை வீச்சு குருநாகல் மல்லவபிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் பொது பல சேனாவின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நால்வரைத் தேடி பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20910
-
- 0 replies
- 191 views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்குமாறு கோரி அனைத்துலக மட்டத்தில் பரப்புரை நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா பொதுவுடமை சமத்துவக் கட்சியும் உலகப் பொதுவுடமை இணையத் தளமும் இணைந்து தொடங்கி உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 540 views
-
-
முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பான ஆராய்வு வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பில் இன்று நாம் ஆராய்கின்றோம். 38 உறுப்பினர்களை கொண்ட வடமாகாண சபையில் 30 உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாவர். மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் மேற்கொண்ட சில தீர்மானங்கள் காரணமாக மாகாண சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையே வெளிப்படையாக பிளவு ஏற்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 538 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்தை ஏற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தமையானது அரசாங்கம் செய்த மிகச் சிறந்ததொரு அரசியல் நடவடிக்கையாகும். வடக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்து அரசாங்கம் செயற்படுமானால் அதை நாம் வரவேற்கின்றோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார். விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் ஜனாதிபதி விரித்த வலையில் விழுந்துவிட்டார்கள் என பிரிவினைவாதிகள் நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனமாகும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அஸாத் சாலி தொடர்ந் தும் தெரிவிக்கையில், சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம்…
-
- 0 replies
- 445 views
-
-
தாமதிக்காது காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குங்கள் : சர்வதேசம் வலியுறுத்தல் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஏகமனதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தை பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்திருந்தார். காணாமல் போனோர் பற்றிய உண்மைகளைக் கண்டறிவது மற்றும் தேவை ப்பட்டால் காணாமல் போனோருக்கான சான்றிதழ்களை வழங்குவது உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் சட்ட தேவைகளை பூர்த்தி செய்வது பணியகத்தின் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 284 views
-
-
கடந்த 24 மணி நேரத்தினுள் இரு அகதி படகுகள் அவுஸ்ரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கருகில் சுமார் 7 நோட்டிகல் மைல் தொலைவில் அவுஸ்ரெலிய கடற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று இலங்கை தமிழர்கள் 32 பேர் இருந்ததாகவும் இவர்களை கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு நிலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த படகில் 22 அகதிகளும் இரு மாலுமிகளும் உள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு தேர்தல் முடிவினால் சிறிலங்கா படையினர் குழப்பத்தில் – ஒப்புக்கொள்ளும் தளபதியின் உரை [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 00:48 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக குழப்பமடையக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா இராணுவத் தளபதி, வடக்கில் பயணம் மேற்கொண்டு படையினரை சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், நேற்று வவுனியாவில் உள்ள வன்னிப் படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு படையினருடன் நடத்திய கலந்துரையாடலின் போதே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவ…
-
- 4 replies
- 836 views
-
-
தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை - சிவத்தம்பி ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1, 2009, 12:33 [iST] கொழும்பு: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. அவர் மீது புலம் பெயர்ந்த தமிழர்கள் [^] அதிருப்தியுடன் உள்ளனர் என்று ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் போக்குக் குறித்து தமிழ் மக்கள் [^] அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே பலத்த எதிர்ப்பை இது தோற்றுவித்துள்ளது. நான் இம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தீர்மானிக்க க…
-
- 1 reply
- 746 views
-
-
5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: கடற்படை கப்பக் குழு பயன்படுத்திய வெள்ளை வேன் சி.ஐ.டி.யினரால் மீட்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை வேன் ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்ப்ட்டு மீட்கப்பட்டுள்ளது. 2008/2009 ஆம் ஆண்டுகளில் இத்தகைய கடத்தல்கள் தொடர்பில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் , மாணவர் கடத்தலை பிரதான சந்தேக நபர்களான தற்போது கைதாகியுள்ள லெப்டினன் கொமாண்டர் சுமித் ரணசிங்க, கை…
-
- 0 replies
- 249 views
-
-
இலங்கையை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம் : இந்திய உயர்ஸ்தானிகரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு ஆர்.ராம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை ‘இலங்கை பௌத்த குடியரசாக’ பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் பாணுபிரகாஷ் மற்று…
-
- 5 replies
- 733 views
- 1 follower
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர். 09 November 09 02:12 pm (BST) வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர். இன்று மாலை 5.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமுன்னிலையில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செய…
-
- 7 replies
- 1.2k views
-
-
கொழும்பில் நடக்கும் பொதுநலவாய உச்சி மாநாட்டை தென்னாபிரிக்கா புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்து ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பொதுச்செயலாளர் க்வெட் மந்தாசெ அவர்களுக்கு கடிதம் ஒன்றை உலகத் தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் வண. ஜே. இம்மானுவல் அடிகளார் அனுப்பி வைத்துள்ளார். 2009இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்ததில் இருந்து, இலங்கையில் நடந்த மனிதவுரிமை மீறல்கள் மற்றும் பொறுப்பு கூறலிலும் மீளிணக்கத்திலும் இருந்த குறைபாடுகள் என்பவற்றை உலகின் கவனத்துக்கு கொண்டுவருவதில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெரிதும் சேவையாற்றி உள்ளது. அதன் பொதுச் செயலாளர் என்ற வகையில் இந்த விடயத்தை ஜனாதிபதி உட்பட தென்னாபிரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களிடம் வலியுறுத்துமாறு அவர் கடிதத்தில் வேண்டு…
-
- 0 replies
- 330 views
-
-
அருட்தந்தை சிறில் காமினி... கைது செய்யப்படமாட்டார் – நீதிமன்றில் அறிவிப்பு அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக அரச புலனாய்வுப் பணிப்பாளர் சி.ஐ.டியில் முறையிட்டிருந்தார். அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்பு…
-
- 0 replies
- 197 views
-
-
இசைப்பிரியாவுக்கு நிகழ்த கொடூரம் சர்வதேச சமூகத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கம் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்று விடுமுறை. ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் அவருக்கு இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூமும் வெளிவந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை தொடக்கம் சர்வதேச சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக கடும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. இந்த காணொளி வெளிவந்ததால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள முக்கியமான தமிழ் அமைப்புகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளும் எதிர்வரும் 25ஆவது கூட்டத்…
-
- 12 replies
- 1.7k views
-