ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்! அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் இன்று மாலை (08-07- 2008) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். பிரேரணைக்கு ஆதரவாக 111 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத் தரப்பு கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஐ.தே.கட்சி இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/sri-la...2008-07-08.html
-
- 1 reply
- 691 views
-
-
இலங்கையுடன் முறுகல் போன்று கட்டிக்கொள்ளும் இந்தியா இவ் விடயம் 21. 08. 2012, (செவ்வாய்), தமிழீழ நேரம் 11:36க்கு பதிவு செய்யப்பட்டது சீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்படுகின்றமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. நன்றி - நெருடல்
-
- 1 reply
- 660 views
-
-
தீமையளிக்கக் கூட நினைக்காத தமிழ் சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது- வடக்கு ஆளுநர் மற்றவர்களுக்குத் தீமையளிக்கக் கூட நினைக்காத எமது சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். அத்துடன், யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பாக தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாண மக்களுக்கான சேவைகளை என்னால் மாத்திரம் தனியே முன்னெடுக்க முடியவில்லை. எல்லோருடைய ஒத்துழைப்ப…
-
- 1 reply
- 568 views
-
-
30 JUN, 2025 | 09:52 AM குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதே…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்! சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கும் கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் “சாய்ந்தமருது தனி பிரதேச செயலக பிரிவாக பிரித்தமை உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதுதொடர்பில் இன்று பலரும் அச்சமடைந்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எதிர்ப்பினை வெள…
-
- 0 replies
- 464 views
-
-
10 Jul, 2025 | 12:24 PM இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் "அருண குமார திசாந…
-
- 0 replies
- 129 views
-
-
சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் என்பன புலிகளினால் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த வெடிபொருட்கள் தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு தற்பொழுது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முன்னாள் புலி உறுப்பினர் என தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர், கொழும்பு தலைமையகத்தில் தடுத்து வைத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தபட்டு வருவதாகவும் குறிப்பிட்…
-
- 0 replies
- 522 views
-
-
19 JUL, 2025 | 04:23 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு வெள்ளிக்கிழமை (18) சென்றிருந்த அமைச்சர் மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். அதன் பின்னர் நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே முடியாது. ஊழல் அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவே நாம் …
-
- 3 replies
- 160 views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசாங்கம் கூறுவது போன்று இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பொட்டம்லைன் என்ற ஆங்கில நாளேட்டுக்கு அவர் கருத்துரைக்கும் போதே அவர் இக்கருத்தினைதத் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற சிறீலங்கா அரசாங்கத்தின் கூற்று சாத்தியப்படாது. யுத்தத்தை முடிவுக்குள் கொண்டுவருவது தொடர்பில் சிறீலங்கா இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றார். எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கில் நடைபெறும் பொதுத் தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களிலும…
-
- 1 reply
- 906 views
-
-
நாட்டில் போதைப்பொருட்கள் பாவனை அதிகரித்துள்ள ஒரு சூழலில் அதற்கேற்ற வகையில் தற்போது வடக்கிலும் போதைப்பொருட்களின் பாவனை படிப்படியாக அதிகரித்து வருகின்ற நிலைமையே காணப்படுகின்றது. இலங்கைக்கு போதைப்பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா போன்றவற்றைக் கடத்துபவர்கள் வடக்கு கடல் மார்க்கத்தைப் பிரதானமாகக் கொண்டுள்ளதால், இப்பொருட்களின் பாவனைக்கு வடக்கு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்ற சூழ்நிலை அதிகம் காணப்படுகிறது. எனவே, இதனை தடுத்து நிறுத்த எமது சமுதாயம் சார்ந்த அக்கறையுள்ள அனைவரும் ஓரணி திரள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், வடக்கில் தற்…
-
- 0 replies
- 468 views
-
-
பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப்பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிங்குராக்கொட தியாபெதும் வனப்பகுதியிலேயே இப்புதைகுழி இனம்காணப்பட்டுள்ளது. தியாபெதும் வனப்பகுதிக்கு வேட்டைக்குச்சென்றிருந்தவர்
-
- 0 replies
- 863 views
-
-
பெண்ணொருவருடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்ற பொலிஸார் ஒருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று யாழ்ப்பாணம், அராலி கரப்பிட்டி பிள்ளையார் கோவிலடி இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thaaitamil.com/?p=31714
-
- 0 replies
- 515 views
-
-
தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் இப் புது வருடத்தில் ஐ. நா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி தொடர்பான பொறிமுறை நம்பகரமானதகவும் சுதந்திரமானதகவும் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுடன் தமிழர்களின் அரசியல் தொடர்பான அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் மைத்திரி அவர்கள் தமிழர்களின் நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் இரா…
-
- 0 replies
- 456 views
-
-
11 Aug, 2025 | 05:16 PM கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத் தவறென குறிப்பிடுவது தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை என தெரிவித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசியலில் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலில் அடிக்கடி கச்சதீவு விவகாரம் சூடு பிடிப்பது வழமை. தேர்தல் காலங்களிலும் மற்றும் எல்லைதாண்டி இலங்கைகடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வந்து இலங்கை மீனவர்களது வளங்களை சூறையாடி, வலைகளைச்சேதமாக்கும் போதும் இலங்கைக்கடற்படையால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படும் போதும் தமிழக முதல்வர் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது போல திரும்பப்பெறு…
-
- 0 replies
- 77 views
-
-
மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு மே.ம.மு.தலைவரான கொழும்ப மாவ. எம்.பி. மனோ கணேசனுக்கு விடுத்;த அழைப்பை அவர் தவிர்த்துக் கொண்டார். கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த மன்மோகன் சிங்கை பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்த போதும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தச் சந்திப்புபக்காக குறுகிய நேரமே ஒதுக்கபட்டது. மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு தங்களுக்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஒதுக்க வேண்டுமெனவும் இந்திய வம்சாவளி மக்களினதும் பிரச்சினை குறித்து மட்டுமல்லாது நாட்டில் இடம் பெறும் இனப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணமால் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்காக தாங்கள் மக்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைத்திருப்பதால் அத…
-
- 8 replies
- 2.5k views
-
-
[size=4]'நிமலரூபன், நில்ருக்ஷன் பாணியில் சதீஸ்குமாரின் நிலையும் ஏற்பட அரசு பகீரத பிரேயத்தனம் செய்து கொண்டிருக்கிறது' என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதி சுந்தரம் சதீஸின் தற்போதைய நிலைமையை விளக்கி கொழும்பிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னணியின் ஊடகச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா, சுந்தரம் சதீஸின் மனைவி கவிதா, கைதியின்…
-
- 4 replies
- 735 views
-
-
தாஜுதீன் கொலை : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/5390
-
- 0 replies
- 449 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானது – சி.வி. வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானதென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஷ்டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்குக் காரணம் உண்டு. பல…
-
- 3 replies
- 522 views
-
-
பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள் பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்க…
-
- 0 replies
- 105 views
-
-
குடும்பிமலை பகுதியில் நேற்றும் கிளைமோர்த் தாக்குதல்: 5 படையினர் காயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிக்கலப் பிரதேசத்துக்குட்பட்ட தாராவில்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் ஐந்து படையினர் காயமடைந்தனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் தாராவில்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரையும்இ படையினரையும் இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரமொன்றில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமோர்க் குண்டே வெடிக்க வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஐவரும் ம…
-
- 0 replies
- 852 views
-
-
யாழ். மாவட்ட கலாசார அதிகார சபையினால் நடத்தப்படவுள்ள பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுயதொழில் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் யாழ். மாவட்டத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களினையும் விற்பனை செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்கள் உற்பத்திகளை காட்சிப்படுத்த விரும்புபவர்கள் மாவட்ட கலாசார உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் பங்குகொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் மே மாதம் 5ஆ…
-
- 0 replies
- 364 views
-
-
வவுனியா, பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். குறித்த பரிசோதனைத் தடுப்பு முகாமுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில் 265 வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முதல்பகுதியில் சிலர் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 5 பேருந்துகளில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதேவேளை,…
-
- 3 replies
- 776 views
-
-
Published By: Vishnu 04 Sep, 2025 | 04:02 AM (நா.தனுஜா) உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதன் ஊடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் பற்றிய ஐ.நா …
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
போரியலின் புதிய பரிமாணம் செய்மதி தொலைக்காட்சி செய்மதித் தொலைக்காட்சி இன்று போரியலின் ஒரு புதிய பரிமாணமாகக் கொள்ளப்படுகிறது. பெரும் படையெடுப்புகளுக்கான திட்டமிடலின் இன்றியமையாத அங்கமாக இதை மேலைத்தேயப் போரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 1991 இல் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈராக்கின் மீது படையெடுத்த காலத்திலிருந்து இவ்விடயம் தொடர்பாக நிரம்ப ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. போரியலின் இப்புதிய பரிமாணத்தை சி.என்.என். விளைவு (C.N.N.Effect) என அழைப்பர். சி. என். என். என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளில் துரித வளர்ச்சி கண்ட ஒரு அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பு. (Cable Television Network என்பதன் சுருக்கம்) இதை 24ஃ7 வகைத் தொலைக்காட்சி என்பர். அதாவது, ஒரு நாளில் 24 மணித்தியா…
-
- 4 replies
- 3.5k views
-
-
இன்று கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. மக்களால் கையளிக்கபட்ட மகஜர் வருமாறு: கிளிநொச்சி. 2012.09.27. பொதுச்செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் அமையம், ஜெனீவா. அடிப்படை மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துங்கள். இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நில ஆக்கிரமிப்புக்கும் இன ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்நிலை 2009 அரசு, புலிகள் இறுதிப்போரின் பின்னர் அதி…
-
- 3 replies
- 568 views
-