ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142758 topics in this forum
-
-
இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமிழருக்கு பெரிதும் உதவா இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சவால்களை வென்றெடுப்பதற்கு இந்தியா உட்பட உலக நாடுகளின் பங்களிப்பை சமகால பூகோள அரசியலில் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்று வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். இந்தியப் பயணத்தின்போது இதனை உணரக் கூடியதாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஓ.பி ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகத்தின் அரச மற்றும் பொதுத்துறைக் கொள்கையாக்கல் கல்லூரியால் வடக்கு ம…
-
- 6 replies
- 818 views
-
-
Published on 2022-05-06 16:54:56 அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் கொழும்பும் முடங்கியது. தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டு காணப்படுகின்றன. வத்தளைப் பகுதியில் அமைந்துள்ள பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையம் மற்றும் மொத்த மரக்கறி விற்பனை நிலையம் ஆகியன வெறிச்சோடிக்காணப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பு குணசிங்கபுர பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் ஆ…
-
- 3 replies
- 445 views
-
-
வடமாகாண சபையினர் கையாலாகாதவர்கள் என்பதனை மக்கள் மனதில் விதைக்க அரசாங்கம் முனைகிறது: மகிந்த அரசாங்கத்தை துகிலுரித்துக் காட்டும் விக்னேஸ்வரனின் வியத்தகு உரை:- வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால் வடமாகாணத் தமிழ்ப்பேசும் மக்களுக்கு உருப்படியான ஒரு அரசியல் சமிஞ்ஞையை வெளிக்காட்டியிருக்க முடியும் என நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீரகேரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கத்தின் ஷஷதரிசனம்||; நூல்வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற போதே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெர…
-
- 2 replies
- 1.5k views
-
-
இன்று அகவை 78 யார்க்கும் அஞ்சா ஞானச்செருக்குடன்…. துடுப்பில்லாத ஓடம்போல எடுப்பார்கைப் பிள்ளைகளாக அலையும் எம்மின விதியை நொந்தோம். நிலை தளர்ந்தோம். தொலைத்த கொள்கைகள் மீது வித்துவம் பேசிப் பேசி விலைபோகும் தலைவர்கூட்டம் சுதந்திர வாழ்வுக் கனவுகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே அடைமானமாச்சு. தறிகெட்ட மந்தைகளின் மேய்ப்பனாய் நெறிபிசகாத் தமிழினத் தலைவனாய் விலைபோகாத் தன்மானத் தலைவனாய் இறை தந்த வரமாய் வந்தீர் விக்கினங்கள் தீர்த்திடு “விக்னேஸ்வரனாய்’ நேர்கொண்ட பார்வை, யார்க்கும் அஞ்சா ஞானச்செருக்கு, நீதியும் நேர்மையும் கண்ணெனக் கொண்ட சத்திய வாழ்வு. “தலைவா’ தமிழினம் உன்பின்னால் காலத்தின் கட்டளைய…
-
- 0 replies
- 358 views
-
-
பிரதமர் பதவிக்காக... மூவரின் பெயர்களை, பரிந்துரை செய்தது... மைத்திரி தரப்பு! பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 11 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவினால் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக இதுகுறித்த அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்றத்திலுள்ள சுயேட்சை எம்.பி.க்கள் குழுவினைச் சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1281509
-
- 0 replies
- 188 views
-
-
பயங்கரவாதத்தினை ஒழித்தவர்கள் தண்டிக்கப்படக்கூடாதாம் - மஹிந்த கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மே 28, 2010 மஹிந்த அவர்கள் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு கொடுத்த உரையாடலில் பயங்கரவாதத்தினை ஒழித்தவர்களை யாரும் தண்டிக்க கூடாது என கூறியுள்ளார். கூடவே தமது தரப்பில் யாரும் குற்றம் இழைத்தால் அதனை தான் தண்டிப்பேன் எனவும் மாறாக வெளி நாடுகள் தண்டிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். உரையாடலின் முக்கியவிடயங்கள் வருமாறு: கடந்த வருடம் நடந்த போரின் போது குற்றம் ஏதும் இழைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர். அவர் கள் எனது உறவினர்களாக இருப்பினும், இராணுவத் தளபதியாக இருப்பினும் தண்டிக்கப்படுவர். குற்றத்தை எவர் இழைத்தாலும் அவர் குற்றவாளி…
-
- 3 replies
- 703 views
-
-
பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்! – மிரட்டுகிறது ஹெல உறுமய. [saturday, 2014-03-22 08:35:57] விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நிசாந்த ஸ்ரீவர்னசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், பிரபாகரன் ஆயுதங்களை ஏந்தி யுத்தம் செய்தார். விக்னேஸ்வரன் அரசியல் சாசனத்துடன் யுத்தம் புரிகிறார். முதலமைச்சர் என்ற வரப்பிரசாதங்களை அனுபவித்து வரும் விக்னேஸ்வரன் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து வருகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது…
-
- 0 replies
- 285 views
-
-
பிரதி சபாநாயகர் பதவிக்கான... வாக்கெடுப்புக்கு, "9 மில்லியன் ரூபாய்" செலவாகும் – விமல் பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்ப்பு தெரிவித்ததுடன், பணத்தை வீண் விரயம் செய்யாமல் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். தேர்தலை நடத்துவதற்கு சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டன. அதன்படி, ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்தார். இதனையடுத்து, பணம் மற்றும் நேரத்தை வீணடிப்பதை விடுத்த…
-
- 0 replies
- 154 views
-
-
உடையார்கட்டு “இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்” பாரிய வெடிப்பு சம்பவம்! இராணுவ ஆயுத களஞ்சியமாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் ஊர்ஜிதம்! முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குரவயல் பக்கமாக காடுகளை அண்மித்துள்ள பகுதியில் நேற்று மாலை 6.42 மணியளவில் பாரிய வெடிப்புச்சத்தம் ஒன்றை கேட்க முடிந்ததாகவும், வெடிப்புச்சத்தத்தை அடுத்து அப்பகுதியில் கரிய புகை படலங்கள் மேலெழுந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் நடமாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே குறித்த வெடிப்புச்சத்தத்தை உணர முடிந்ததாகவும், வெடிப்புச்சத்தத்தின் அதிர்வுகள் பல நூறு மீற்றர்கள் வரை எதிரொலித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். வெடிப்புச்சம்பவ…
-
- 1 reply
- 507 views
-
-
இலங்கையில் ஐ.நாவின் தோல்வியை மீண்டும் ஒப்புக்கொள்கிறார் பான் கீ மூன்! [Tuesday, 2014-04-08 18:43:46] இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோல்வி கண்டதை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் ஒப்புக்கொண்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்ததனை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரூவான்டா இனச் சுத்திகரிப்பு இடம்பெற்ற 20 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவும், அதனை தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய பொறிமுறைமையை உரு…
-
- 0 replies
- 327 views
-
-
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு வவுனியாவில் உள்ள வன்னி இன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளார். இந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் விசேடமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் எழுந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும், இடைக்கால …
-
- 1 reply
- 253 views
-
-
மிக விரைவில் வேலை இழப்பு, மூன்று வேளை உணவுக்கே நிச்சயமற்ற தன்மை உருவாகும் என்கிறார் ரணில் அத்துடன் இலங்கை பிரச்சனையுடன் உக்ரேன் சிக்கலை கூட்ட (add) வேண்டாம், இலங்கை பிரச்சனையை, உக்ரேன் பிரச்சனையால் பெருக்குங்கள் (multiply) என்றும், செப்டெம்பர்/ அக்டோபர் வரையே உணவு கையிருப்பு உள்ளது எனவும், பெரும் போகத்துக்கு உரம் இல்லை எனவும், அதை தருவிக்க முயல்வதாயும் ரணில் கூறினார். இப்படி உரத்தை எடுத்தால், பெர்ரவரிக்கு பிறகு நாடு தன்னிறைவு அடைய முடியும் என்கிறார் ரணில். இடைபட்ட காலத்தில் மூன்று வேளை உணவு இல்லாத நிலை, சிறு வியாபாரங்கள் திவாலாகும் நிலை, வேலை இழக்கும் நிலை ஏற்படும் எனவும், இதை தனியே இலங்கை சமாளிக்க முடியாது, முன்னர் நிராகரித்த இடங்களில் கூட உதவியை இலங்கை …
-
- 1 reply
- 235 views
-
-
இதுவும் ஒரு கெட்டித்தனமே...! அரசாங்க ஊழியருக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பள உயர்வு அடுத்த வருடத்திற்கான, 2011 ஆம் ஆண்டுக்கான, வரவு செலவுத் திட் டத்திலும் சேர்க்கப்படமாட்டாது என்பதற்கான சமிக்ஞை காட்டப்பட்டுவிட்டது! கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 139 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பேசு கையில் இந்தச் சமிக்ஞையைக் காட்டி உள்ளார். மறைமுகமாகத் தகவல் வெளியிட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான இந்த வருடத்திற் குரிய அரசாங்கத்தின் உத்தேச வரவு செலவு விவரம் சென்ற வருடம் நவம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களைக் காட்டி அது கடந்த மாதம் 29ஆம் திகத…
-
- 1 reply
- 1.6k views
-
-
இணைய குற்றச் செயல்கள் தொடர்பிலான 500 சம்பவங்கள் விசாரணை? 15 ஏப்ரல் 2014 இணையக் குற்றச் செயல்கள் தொடர்பிலான 500 சம்பவங்கள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 5 வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றில் ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.மாவட்ட நீதிமன்றங்களில் 30 குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இணையத்தை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குற…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழ் இளைஞர்கள் சித்தரவதை மறுப்புக்கு யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்! இலங்கைப் படையினர் பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன மறுப்பு வெளியிட்டமைக்கு உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச அமைப்பின் ( International Truth and Justice Project) தலைவர் யஸ்மின் சூக்கா கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அசோசியேட் பிறஸ் (Associated Press) என்ற செய்தி நிறுவனத்திற்கு கனடா வன்கூர் மாநிலத்தில் வைத்து வழங்கிய சிறப்பு நேர்காணலில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன மறுப்பு வெளியிட்டுள்ளார். …
-
- 2 replies
- 363 views
-
-
அரசியலமைப்பு மாற்றங்கள் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் என்கிறது சிறீலங்கா அரசு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சி முறைமை தொடர்பான திருத்தங்கள் மட்டும் இவ் வருடம் ஆண்டில் செய்யப்படும் எனவும், ஏனைய திருத்தங்கள் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் எனவும் சிறீலங்கா அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கிடையில் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் மூன்று கட்டமாகசெய்யப்பட இருப்பதாகவும், இந்த நடவடிக்கைகள் அடுத்த வருடம் வரையில பிற்போடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்வதா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்வதா என்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரு…
-
- 0 replies
- 496 views
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் சில ஐரோப்பாவில் நுழையத் தடை! - பயணத்துக்கு ஏற்றவையல்லவாம். [sunday, 2014-04-20 19:38:11] ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் சில விமானங்கள், பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்பதால், ஐரோப்பாவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சர்வதேச விமான போக்குவரத்து தரத்திற்கு அமையதாக பழைய விமானங்களை இலங்கை விமானச் சேவை பயன்படுத்தி வருவதே இந்த தீர்மானத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 4- ஆர். ஏ.டி.ஏ. என்ற ஏ. 340 ரக விமானம் ஐரோப்பிய வான் பரப்பிற்குள் நுழைய அண்மையில் தடைவிதிக்கப்பட்டது. 24 வருடங்களுக்கு முன்னர் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அது பயணிகள் போக்குவரத்து…
-
- 9 replies
- 895 views
-
-
புளியம்பொக்கணையில் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு; அந்தப் பிரதேச மக்கள் பெரும் அச்ச நிலையில்! கட்டளைத் தளபதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு திகதி: 26.07.2010, புளியம்பொக்கணை, கலவெட்டித்திடல், நாகேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் உத்தியோ கப்பற்றற்ற ஊரடங் குச் சட்டம் அமுல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந் தப் பிரதேச மக்கள் இராணுவ அச்சுறுத்தலால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். இதற்கு உடனடித் தீர்வுகாண வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற் கண்டவாறு கோரிக்கை முன்வைத்துள் ளார். கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இராஜகுருவுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற சந்திப்பிலேயே இக்கோரிக்கையை அவர் முன்வைத்தார். * சாந்தபுரம் ப…
-
- 1 reply
- 737 views
-
-
தேசியக் கொடியை அவமதிக்கும் இனவாதிகளை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் சிவாஜிலிங்கம் பைத்தியம் பிடித்தவர் என்கிறார் ஜயசேகர ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ் ''தேசியக் கொடிக்கு மதிப்பளிக்க முடியாவிட்டால் அது யாராக இருந்தாலும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். தேசியக் கொடியை அவமதிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. வடக்கில் அடிப்படைவாதிகள் இருக்கும் போது அரசியலமைப்பின் ஊடாக தீர்வு வழங்குவது தொடர்பில் எப்படிப் பேச முடியும்'' என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார். அத்துடன் சி.வி.விக்கினேஸ்வரனை ஒருபோதும் தமிழர்களின் தலைவராக நாம் ஏற்க மாட்டோம். அதே போன…
-
- 1 reply
- 272 views
-
-
சட்ட விரோதமாக... குடியேற முயற்சித்த, 41 இலங்கையர்கள்... நாடு திரும்பினர் – 37 பேருக்கு பிணை. அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள்,அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிக்கும் 16 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் மற்றும் 35 பெரியவர்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட அவுஸ்ரேலியப் படை வீரர்கள் அடங்கிய விமானத்தில், கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு குறித்த 41 பேரும் நாடு கடத்தப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் ந…
-
- 1 reply
- 267 views
-
-
தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே! தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சனிக்கிழமை, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா! - தொடர்ந்து இயங்குவதாகவும் கூறுகிறது. [Thursday, 2014-05-01 09:12:12] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித…
-
- 28 replies
- 2k views
-
-
வடமாகாண, வைத்தியர்களின்... சம்பளம் குறைப்பு! பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள் தற்போது நாட்டில் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகின்றனர். நாம் பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு முன்வைத்த போதும் அதனைக் கருத்தில் கொள்ளாது வடமாகாணத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதுடன் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. …
-
- 5 replies
- 287 views
- 1 follower
-
-
பிரபாகரன் போன்ற மாவீரன் இனிப் பிறக்கப் போவதில்லை! - கேணல் ஹரிகரன் புகழாரம். [Thursday, 2014-05-08 10:14:44] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் தமிழர்களிடத்தில் இனிப் பிறக்கப் போவதில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையில் சிறந்த மாவீரன். அவரால்தான் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இந்தளவுற்கு வந்துள்ளது. பிரபாகரனைப் போன்று மீண்டுமொருவர் தமிழர்களிடத்தில் பிறக்கப் போவதில்லை எனவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள…
-
- 11 replies
- 1.7k views
-