ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
மட்டக்களப்பு கல்லடியில் இரு காவல்துறையினர் சுட்டுக் கொலை. முச்சக்கர வண்டியில் இவர்கள் சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இவர்கள் கைவசமிருந்த ஆயுதங்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Two policemen shot in Kalladi Two policemen were shot dead in Kalladi, Batticaloa this evening. They were traveling in a three wheeler at the time of the incident. Their weapons were also stolen. ஆதாரம் Daily mirror
-
- 0 replies
- 787 views
-
-
நிலம்-புலம்-தமிழகம் இணைந்த பெரும்பரப்பில் தமிழ்த் தேசியசக்திகள் ஒன்றிணையவேண்டும்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தமிழ் இனத்தின் இருப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அரசியல் வேணவாவினை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க நிலம்-புலம்-தமிழகம் இணைந்த உலகத்தமிழர் பெரும்பரப்பில் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியசக்திகள் அனைத்தும் பிறக்கின்ற தமிழ்ப் புத்தாண்டில் உறுதியேற்க முன்வரவேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளது. இந்த வாழ்த்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத் திங்கள் முதல் நாள் தமிழர் திருநாள் என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சமுதாயம் கொண்டாட…
-
- 0 replies
- 471 views
-
-
தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு! June 21,2008 தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவுமில்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமலிருக்கும் வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியேற வேண்டுமென விளம்பரப்படுத்துங்கள். இந்த விளம்பர அறிவிப்புகளுக்கு பின்பும் வெளியேறாம…
-
- 7 replies
- 2.1k views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]எனினும், இதனை நவநீதம்பிள்ளை மறுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இவ்வாறு பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 576 views
-
-
உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த சுவையூட்டி களைநாசினியாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது என பாலித மஹிபால இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி உணவு ஆலோசனை சபையின் பரிந்துரையின் அடிப்படையில் சோடியம் குளுமேட் எனப்படும் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி…
-
- 0 replies
- 477 views
-
-
மிருசுவிலில் காயங்களுடன் சடலம்! [Wednesday 2020-01-22 15:00] யாழ்ப்பாணம் – மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில், இன்று காலை, காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வீதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு கூறியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டனர். சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்…
-
- 2 replies
- 829 views
-
-
புலிகளின் 1-4 தளம் மணலாறில் தற்போது இல்லை: ஜனக பெரேரா [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 01:07 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காப் படைத்தளபதிகள் கூறுவதனைப் போன்று விடுதலைப் புலிகளின் 1- 4 தளம் மணலாறில் தற்போது இல்லை. அது 1991 ஆம் ஆண்டில் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் நடைபெற்ற "இடிமுழக்கம்" படை நடவடிக்கையிலேயே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. புலிகளின் அந்தத்தளம் தற்போது இடம்மாற்றப்பட்டு விட்டது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: மணலாறு காட…
-
- 0 replies
- 1.7k views
-
-
தென்னிலங்கையில் ஆடுகளை அறுக்க வேண்டாம் என்றும், மாடுகளை வதைக்க வேண்டாம் என்றும், கட்டாக்காலி நாய்களை சுட்டு கொல்ல வேண்டாம் என்றும் மிருக வதை தடுப்பு இயக்கம் நடத்துகிறார்கள். ஆனால், தமிழர்களை அரசின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் சிறைச்சாலை வளாகத்திற்கு உள்ளே வைத்தே அடித்து கொல்லுகிறார்கள். இலங்கை குடிமகன் என்று சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது. இலங்கையில் நான் ஒரு தமிழன் என்று சொல்லி முடிப்பதற்குள் எனது நெஞ்சம் கொதிக்கிறது. இங்கே கொல்லப்பட்ட இந்த அரசியல் கைதி ஒரு தமிழன் என்பதால்தான் கொல்லப்பட்டார் என்ற உண்மை என் இதயத்தை தாக்குகிறது என கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி மரியதாஸ்தில்ரொக்சனின் மரணசடங்கின் போது உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணி…
-
- 0 replies
- 585 views
-
-
கைதிகள் விடுதலையில் சர்ச்சை : ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இன் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் சோதனைக…
-
- 0 replies
- 147 views
-
-
சிறிலங்கா அரசாங்கமானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருக்கும் அரச திணைக்களங்களில் மூன்றுக்கு மட்டும் டீசல் எரிபொருளை மட்டுப்படுத்திய அளவுக்கு அனுமதிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால், விடுக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு, கலைப்பீடத்திலுள்ள மாணவிகள், எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியால் கொண்டுவரப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு, கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அதற்குச் சில நாட்களின் பின்னர் கூடிய கலைப்பீட மாணவர் ஒன்றியம், குறித்த ஆடைக்கட்டுப்பாட்டைப் தொடர்வதற்கு முடிவெடுத்தது. இதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இதற்கே எதிர்ப்ப…
-
- 0 replies
- 312 views
-
-
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தடை போடாதீர்கள்:ரட்னசிறி விக்ரமநாயக்க உரை! மனித உயிர்களைப் பாதுகாத்துக்கொண்டு பயங்கரவாதத்தை எமது நாடு ஒழித்துக்கட்டும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இவ்வேளையில் அதற்கு தடைகளை ஏற்படுத்தாமல் அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும் என சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க கூறியுள்ளார். அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையைச் சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கூறியதாவது..... அரசியலில் பல்வேறுபட்ட கருத்துக்கள், முரண்பட்ட கொள்கைகள், விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் இரு…
-
- 1 reply
- 798 views
-
-
தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினத்தில் தலைவரின் பெயரில் பழச்சாறுக்கடை .எங்கள் தமிழீழ ஆதரவு எங்கள் உணர்வோடு கலந்த ஒன்று…. நாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் …. எந்த சட்டமும் , தண்டனையும் எங்களின் இன உணர்வை துளி அளவு கூட குறைத்து விட முடியாது…. பழ வியாபாரி …நாகப்பட்டினம்…. http://thaaitamil.com/?p=29564
-
- 0 replies
- 949 views
-
-
மைத்திரி அரசுக்கு ஆபத்து! மஹிந்த அணிக்கு தாவ தயாராகும் அமைச்சர்கள் [ புதன்கிழமை, 23 மார்ச் 2016, 03:32.20 AM GMT ] ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஐவர் மற்றும் பிரதி அமைச்சர் மூவர் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த இருவருடன் ரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது அமைச்சு பதவியை கைவிட்டு செல்வதற்கு, குறித்த உறுப்பினர்கள் ஆயத்தமாக இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதற்கமைய எதிர்வரும் நாட்களில அரசியல் ரீதியில் தீர்மானமிக்க தினத்தில் இந்த கட்சி தாவல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இதற்கு முன்னர் முன்னணி…
-
- 0 replies
- 282 views
-
-
பகிடிவதைக் குற்றச்சாட்டு: இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீடு மீது தாக்குதல்! பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய மாணவன் ஒருவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் . இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. வீட்டுக்குள் நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த…
-
- 1 reply
- 757 views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதான படை நடவடிக்கைகள் குறித்த சிங்கள ஆய்வாளர்களின் தொனிகள் மாறத்தொடங்கியிருக்கின்றன. படையினர் வழங்கும் புலிகளின் இழப்புத் தொகைகளைப் பாடுகின்ற முன்னைய தெனாவெட்டு கொஞ்சம் அடங்கி, புலிகள் வலிந்த தாக்குதல் செய்யும் சூழல் பற்றிய ஆய்வுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். படை நகர்வின் தொடக்க வேகம், படையினரின் சராசரி இழப்புக்கள், காலத்திற்குக் காலம் மாறுபடுவதாகத் தெரியும் அவர்களின் கால வரம்புகள் என்பன சிங்களப் படைய மூலோபாயத்தை நியாயப்படுத்தும் தென்னிலங்கை ஆய்வாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ~தமிழ்த் தேசியவாதத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் அங்கே இருக்கிறார்கள். ஒரு ஆயிரம் போராளிகள் மட்டில் இன்னமும் இரண்டு தசாப்தங்களுக்கு (அதாவது, இருபது வரு…
-
- 4 replies
- 1.8k views
-
-
வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட யோசனை எதிர்வரும் 7 ஆம் திகதி வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் யாப்பு மறுசீரமைப்பு ஒன்றிற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் வடமாகாண மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில், குறித்த குழுவினர் நேற்று இது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினர். அந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் தீர்வு திட்ட யோசனை தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்ப…
-
- 0 replies
- 347 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை…
-
- 0 replies
- 227 views
-
-
19 JUL, 2025 | 10:07 PM உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளது. நிலந்த ஜெயவர்தனவை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் பணிப்புரையை, பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளது. நிலந்த ஜெயவர்தன தனது கடமையை புறக்கணித்ததாகவும், குற்றவியல் குற்றத்தைச் செய்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைத்திருந்தது. அதன்படி, நிலந்த ஜெயவர்தன, மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவர்…
-
- 2 replies
- 261 views
- 1 follower
-
-
திடுக்கிட வைக்கும் மர்மம்: படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரின் தந்தையார் September 4, 2012, 8:48 pm[views: 455] தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய இராஜபக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்று பரிஸ்தமிழ்.கொம்மின் கொழும்புக்கான புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். வேலுப்பிள்ளை அவர்களை துப்பாக்கியால் படுகொலை செய்வது சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகுப்பதோடு, தம்மை சர்ச்சைகளுக்குள் மாட்டிவிடும் என கருதிய கோத்தபாய அணி, குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் மரணமடையக்கூடிய ஒருவித நச்சு ஊசியை அவருக்கு ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
போர் நிறைவடைந்த பின்னர் இதுவரை 313 தற்கொலை அங்கிகளும் லட்சக்கணக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை பற்றி பெரிதுபடுத்தாத ஊடகங்கள் சாவகச்சேரியில் மீட்ட தற்கொலை அங்கிக்கு முக்கியத்துவமளிப்பது விந்தையாகவுள்ளதென்றும் பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்கொலை அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளே இன்னும் நிறைவுறாத போது அது ஒரு புதிய அங்கி என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை பெருமளவு தற்கொலை அங்கிகள் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. …
-
- 2 replies
- 467 views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர் - அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தல் 30 JUL, 2025 | 02:10 AM (நா.தனுஜா) புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்த…
-
- 0 replies
- 97 views
-
-
39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையரான கீர்த்திவாசன் கந்தசாமி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஒருவர் பதக்கமொன்றை வெல்வது இதுவே முதன் முறையாகும். 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இம் மாதம் 20 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பௌதிகவியல் கோட்பாடுகள் மற்றும் செய்முறைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 82 நாடுகளைச் சேர்ந்த 370 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பௌதிகவியல் நிறுவகத்தால் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான கீர்த்…
-
- 7 replies
- 1.5k views
-
-
[size=4]என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், 'நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை எந்தவிதத்திலாவது தோற்கடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அப்படியிருந்தும் ஐக்க…
-
- 1 reply
- 859 views
-
-
மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சித் தலைவர் முல்லைத்தீவு விஜயம்! முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி கொக்குளாய் மற்றும் கேப்பாப்புலவு ஆகிய பிரதேசங்களுக்கு இன்று பிற்பகல் அவர் விஜயம் செய்யவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் அழைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்கின்றார். http://onlineuthayan.com/news/13113
-
- 2 replies
- 436 views
-