Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதி­ல­ளிக்காவிட்டால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை வரும் (லியோ நிரோஷ தர்ஷன்) சீனா­விடம் நிதி பெற்­றமை தொடர்­பான குற்­றச்­சாட்­டிற்கு மஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்கத் தவறும் பட்­சத்தில் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வரவும், அடுத்த கட்ட சட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கவும் ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். இந்த விட­யங்­களை வலி­யு­றுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­ விற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்­வா­றான நட­வ­டிக்­கைளை தேசிய அர­சாங்கம் அனு­ம­திக்­காது. எனவே தனக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்த…

  2. ஐநாவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ள நிலையில், ஐநாவின் அறிக்கையை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் கையெழுத்து வேட்டையைத் தொடங்கவுள்ளது. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழினப்படுகொலையை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்கவும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க வேண்டியும் இந்த கையெழுத்து கோரப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளிலும் மற்றும் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா உட்பட உலகத் தமிழர்களின் ஒன்றிணைக்கின்ற வகையில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து வெளிய…

  3. Published By: T. SARANYA 10 APR, 2023 | 02:07 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை (ஸ்பா) ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், பாட நெறிகளை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். நாட்டில் பல ஆயுர்வேத ஸ்பாக்கள் விபச்சார விடுதிகளாக இயங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "ஆயுர்வேத ஸ்பாக்கள், உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும், அவை மேற்பார்வைக்கு உட்பட்டவை அல்ல. ஸ்பாக்களில் காணப்பட…

  4. 'மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப, கொடுர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இன,மத,மொழி வேறுபாடின்றி மக்கள் அணிதிரண்டுள்ளனர்' என எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவின் சகோதரரும் தொழிலதிபருமான டட்லி சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் வியாழக்கிழமை(12) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2005 ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவனாக, வீரனாக மக்களின் மனங்களில் நிறைந்திருந்தார். அதன் பின்னர் அவருடைய குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியதால் ஆணவமிக்கவராக மக்களையும்…

  5. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இரகசிய உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். சிலாபத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த உடன்படிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட்டோர் வடிவமைத்தனர். இதனை தாம் உன்னிப்பாக கவனித்து வருக்கிறோம். விரைவில் அது தொடர்பான தகவல்களை வெளியிடப்படும். விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மறக்க முடியாது. வெளிநாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்னை ஹேக் நகருக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். எனினும் இலங்கை மக்கள் தம்மை ஹேக் நகருக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள…

  6. வவுனியாவில் இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை வவுனியா முதலிக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 7.40 மணியளவில் உந்துருளியில் சென்ற ஆயுததாரிகள் இரு சிறீலங்கா காவல்துறையினரை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

  7. வீரமுனைப் படுகொலைகளின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. 1990 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றிருந்தது. சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்முறைகளினால், வீரமுனையும் அதனருகே இருந்த, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாபிட்டி, சொறிக்கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலர், தங்களது குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோவில் மற்றும் வீரமுனை இராமகிருஷ்ண மிசனரி பாட…

  8. [வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 06:51 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கின் அண்மைய அறிக்கையை கண்டிப்பதாக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டப் பிரேரணை மீதான நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர், பிளேக்கின் அறிக்கையை கண்டனம் செய்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "மட்டக்களப்பிற்கு சென்றிருந்த இராஜதந்திரிகளுக்குள் அமெரிக்கத் தூதுவர் இருப்பதாக தெரிந்திருந்தால் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியிருக்க மாட்டார்கள். 2000 ஆம் ஆண்டு சந்திரிக்காவினால் பிரேரிக்கப்பட்டதைப் போல பிராந்திய ச…

    • 0 replies
    • 925 views
  9. புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது. விசேடமாக நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. எனவே, தமிழரின் பிரச்சினைக்கு 2015 இல் கெளரவமான - நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்களும் நாமும் இருக்கின்றோம். எதிர்வரும் 8ஆம் திகதி நடை…

    • 0 replies
    • 1.2k views
  10. இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டும் : ச.செ.சங்கம் -கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்திருக்கும் 120,000ற்கும் அதிகமானவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை வழங்குவதற்கு தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்திருக்கும் 120,000 பேரும் 25 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னரி.கடந்த மூன்று தினங்களில் 40,000 பேர்இடம்பெயர்ந்துள்ளனர் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்ற…

  11. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/04/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/05/ 2011. கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம். 2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம். எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம். கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப…

  12. புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமசேவை அதிகாரிகள் உதாசீனம் செய்து புறக்கணித்து வருவதாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக பெண் கிராமசேவை அதிகாரிகளே இவ்வாறு நடந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய தேவை கருதி தமது வசிப்பிடத்தை உறுதி செய்யவும் தங்களுக்கு உடல் ரீதியாக வெளியில் தெரியும் வகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உறுதிப்படுத்தி இவர்களுக்கு உதவி தேவை என்பதை சிபாரிசு செய்ய இந்த அதிகாகள் மறுப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கண்ட கண்ட கடிதங்கள் விண்ணப்பப் படிவங்களில் எல்லாம் உங்களுக்காகக் கையெழுத…

  13. படையினரால் கடத்தப்பட்ட யுவதி ஆபத்தான நிலையில் - பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:04 யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் 53ஆம் பிரிவு சிறிலங்காப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 26வயதுடைய இளம் யுவதிஒருவர் கொடூர பாலியல் வன்புணர்ச்சியின் பின் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த யுவதி 53வது சிறிலங்காப் படைப்பிரிவினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர். பலாத்காரமாகக் கடத்திச்செல்லப்பட்டிருந்தத

    • 6 replies
    • 2.1k views
  14. இலங்கையில்தான் இருக்கிறேன்: குமரன் பத்மநாபன் By dn, கொழும்பு First Published : 12 January 2015 02:29 AM IST புகைப்படங்கள் "இலங்கையில் இருந்து நான் வெளியேறும் திட்டம் இல்லை' என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவரான "கே.பி' என அழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறினார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வெளிநாட்டுக்கு அவர் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், "நான் இலங்கையில்தான் இருக்கிறேன்' என்று அவர் தெரிவித்தார். இலங்கை வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சியில் உள்ள தனது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: போரினால் பாதிக்கப்பட்ட மக்க…

    • 18 replies
    • 1.3k views
  15. குடியிருப்புக்குள் புகுந்து இடையூறு விளைவித்த இரு இராணுவ வீரர்கள் மக்களால் மடக்கிப்பிடிப்பு பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர். இன்று அதிகாலை வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளரகளின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இராணுவத்தினரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் போது, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இன்று பொதுமக்கள் ஆதாரத்துடன் இரு இராணுவ வீரர்களை…

  16. தமிழக ஊடகமான 'விடுதலை' யில் வந்த 'முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்!' முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்! ருசியாவின் `மிக்’ ரக சண்டை விமானங்களும் இசுரேலின் `கிபிர்’ ரக விமானங்களும் கடும் சேதம் அதிர்ச்சியில் உறைந்தது சிங்கள இராணுவம்! கொழும்பு, மார்ச் 26- விடுதலைப்புலிகள் முதன்முதலாக விமானத் தாக்குதலைத் தொடுத்து சிங்கள இராணுவத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். சிங்களர்களின் விமானப்படைத் தாக்குதல் அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதால், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய பதிலடி கொடுப்பார்கள் என்று உளவுத் துறையினர் கூறிவந்தனர். புலி வருகிறது, புலி வருகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், உண்மையிலேயே புலி வந்து கிலிய…

  17. நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவின் முக்கிய உறுப்பினரான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் இன்றுமாலை 5 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தமிழக முதல்வராக மூன்றாவது முறையும் தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் விடயத்தில் தற்போது தீவிர கவனம் செலுத்தியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென நேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய அவர், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டுமென இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்…

  18. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்அவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் நாடு முழுவதிலும் அவரது கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகாற்றுமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் தமது உருவப்படம் உள்ள கட்அவுட்கள் மற்றும் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவையற்ற வகையில் பேனர்கள், கட்அவுட்களை காட்சிப்படுத்த பொதுமக்கள் பணத்தை விரயமாக்கியதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப…

  19. ஒமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் படையினர் அட்டூழியம் - கூட்டமைப்புஎம்பிக்கள் படையினருடன் வாக்குவாதம கொழும்பில் இருந்து வன்னிநோக்கி வந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பயணம் செய்த வாகனம் சிறிலங்காப் படையினரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் தமது சொந்தத் தேவைகளுக்கா கொண்டுவரப்பட்ட 30 லீற்றர் டீசல் படையினர் மேற்கொண்ட அட்டகாசத்தில் வீணாக தரையில் தட்டிக்கொட்டப்பட்டது. இதையடுத்து படையினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் காரசாரமான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.. பின்னர் படையினர் மன்னிப்புக்கோரியதாகவும் தமது மேலிடத்து உத்தரவின்றி எரிபொருளை எவரும் கொண்டுசெல்ல முடியாது எ…

    • 0 replies
    • 991 views
  20. எங்களுக்கு சட்டம், ஒழுங்கை கற்பிக்கமுடியாது சர்வதேச மன்னிப்புச் சபையைச் சாடுகிறார் வீரவன்ச வெள்ளையர்கள் எங்களுக்கு சட்டம் ஒழங்கு பற்றிக் கற்பிக்க முடியாது. சட்டவரம்புக்கு உட்படாத நாடாக இலங்கையைக் காட்ட முயல்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை. இலங்கை கிரிக்கெட் அணிமீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விடுதலைப் புலிகளுக்கு உதவதேவ அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையைக் கண்டித்தார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. மேற்கிந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கட் அணி சட்ட ஒழுங்கின்படி செயற் பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப் புச் சபை தெரிவித்திருந்தது. ஜே.வி.பியின…

  21. Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறு சம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நுகெகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய, ந…

  22. புதிய கட்சி, கூட்டணி அமைக்கும் அழைப்பை நிராகரித்தார் மகிந்த JAN 27, 2015 | 0:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணி ஒன்றைத் துவங்கவோ போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவை, கட்சியின் காப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவதில் முக்கிய பங்காற்றிய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சிகள், மகிந்த ராஜபக்சவை புதிய அரசியல் கூட்டணி ஒன்றுக்குத் …

  23. [ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்பட…

    • 5 replies
    • 1.4k views
  24. சாவகச்சேரியில் எட்டு திருட்டு தேங்காய் பறித்தவரை எட்டு நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது. மட்டுவில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து எட்டு தேங்காய்களை திருடினார் எனும் குற்றசாட்டில் ஒருவரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். http://globaltamilnews.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.