Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை October 28, 2018 பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதன் மூலம் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை உறுதிப்படுத்தி; ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பிரதமர் பதவியில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளையும் முற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்கா…

  2. கொழும்பு: இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று சபாநாயகர் கருஜெயசூர்யா கூறியுள்ளார். பிரதமராக ராஜபக்சேவை, அதிபர் சிறிசேனா நியமித்ததை சபாநாயகர் கருஜெயசூர்யா நிராகரித்துள்ளார். ராஜபக்சே பிரதமராக பதவியேற்ற நிலையில் சபாநாயகர் அதிரடி அறிவிப்பால் இலங்கையில் குழப்பம் நீடிக்கிறது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=446298&fbclid=IwAR3VpYS2alKA7jK9xJlFSf0efS-1W0OWDHi5bEpMx6jUUMoxHznFM-mzuZA

  3. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images Image caption மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஐபக்ஷ இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது புதிய அமைச்சரவை நாளை (அக்டோபர் 29) நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதனிடையே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், பெரும்பான்மையை நிரூபிக்க நாடாள…

  4. பிரதமராக மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதிவேற்றுள்ள நிலையில், யாழில் வெடி வெடித்து மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் பிரதமராக பதவியேற்றிருந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/108109

    • 18 replies
    • 2.3k views
  5. தமிழ் அரசியல் கைதிகளை ஒரு மாத காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கும் தரப்புக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பில் இடம்பெறுகின்ற புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். தற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கா அல்லது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புக்கா ஆதரவு வழங்குவது என்ற விசயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறும் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக எடுக்கும் முடிவுக்கு தமது அமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூறியதுடன், இருந்தபோதிலும்,…

  6. பிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு! ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குஆதரவு தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பிரதமர் மஹிந்தவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த வடிவேல் சுரேஷ், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றுள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கட்சி தாவல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபித்தால் மா…

    • 1 reply
    • 951 views
  7. நாடாளுமன்றத்தை கூட்டும்வரை ரணில் வெளியேறமாட்டார்: ஐ.தே.க. நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேறமாட்டாரென ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், ஏற்கனவே பிரதமராக பதவிவகித்துவந்த ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென மஹிந்த ஆதரவு அணியினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், புதிய பிரதமர் நியமனம் சட்டத்திற்கு முரணானதென்றும், அரசியலமைப்பின் பிரகாரம் ரணிலே பிரதமர் என்றும் ஐ.தே.கவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவதாக ரணில் ந…

  8. கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்கள் மாறவில்லை! – மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் கூறப்போகும் கருத்து தொடர்பாக பாரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்தவகையில், நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய கருத்தொன்றை முன்வைத்துள்ளார். கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்களில் மாற்றம் ஏற்படவில்லையென அவர் கூறியுள்ளார். அதாவது பதவிநிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, அவற்றின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லையென்பதே அவரது கருத்தாக அமைந்துள்ளது. மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மைத்திரி அமைச்சுப் பொற…

  9. மைத்திரி, ரணிலை தனித்தனியாக சந்திதார் சம்பந்தன் : மஹிந்தவுடனும் பேச்சு (ஆர்.ராம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார். புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகிய பிரதான இரு விடயங்களை முன்னிலைப்படுத்தி கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. மேலும் கூட்டமைப்பு நபர்களை முன்லைப்படுத்தவில்லை என்பதோடு அரசியலமைப்பு மீறப்படாது பாராளுமன்ற ஜனநாயகம் பாதுக…

  10. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டு அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஆனந்த அளுத்கமகே, சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேயின் நெருங்கிய உறவினரான இவர், சற்று முன்னர் ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஐதேகவைச் சேர்ந்த பலர் மகிந்தவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை கூட்டு அரசாங்கத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த வசந்த சேனநாயக்கவும், மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். அத…

  11. இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்த ஜனாதிபதிசிறிசேனவின் திடீர் அறிவிப்பு நாடாளுமன்றத்திற்கோ அமைச்சரவைக்கோ அறிவிக்காமல் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் ரணல் விக்கிரமசிங்க இது அரசமைப்பையும் நாடாளுமன்ற நடைமுறைகளையும் மீறிய நடவடிக்கை என தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதி வழங்கப்படாத நிலையில் ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்…

  12. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் குறித்த விசாரணைகளின் போது முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு தொடர்புள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியிருந்தன எனினும் அரசியல் தலையீடுகள் காரணமாக அதனை மறைத்துவிட்டனர் என சிறிசேன தெரிவித்து…

  13. அமைச்சரவை கலைப்பு October 27, 2018 இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த அறிவிப்பு தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரசிலமைப்பு சபை மற்றும் அரச வங்கிகளின் தலைவர்கள் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார் http://globaltamilnews.net/2018/100967/

  14. ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் அந்த எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால…

  15. நாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்!!! இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாட்டின் அரசியல் நிலைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன், "இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது, நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். பாராளுமன்றின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் கருத்தில் கொண்டே எங்க…

  16. இலங்கைக்கு மிக விரைவில் வருகிறாராம் சுப்ரமணியன் சுவாமி !!! புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதற்கு இந்தியாவின் பிரதான கட்சியான பா.ஜா.கவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து டுவிட்டியுள்ளார். சுப்ரமணியன் சுவாமியின் டுவிட்டில், “மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்த்துக்களை மஹிந்தவிற்கு தொலைபேசி மூலமும் தெரிவித்துள்ளேன். இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து தக்க தீர்வை எடுப்பதாக மஹிந்த கூறினார். இலங்கைக்கு மிக விரைவில் நான் செல்லவுள்ளேன். எனது இலங்கைக்கான விஜயத்தின் போது தமிழக மீனவர்கள் எல்லை பிரச்சினை தொடர்பில் கலந்தாலேசித்…

  17. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி நாளை விசேட உரை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவூட்டுவதற்காகவே இந்த உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவையின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டார். http://athavannews.com/நாட்டு-மக்களுக்கு-நாளை-வ/

  18. நானே முதலமைச்சர் வேட்பாளர்: சீ.வி.கே.சிவஞானம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர் என வட.மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். பேரவைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை வேட்பாளர் யார் என கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும…

  19. “விக்கியுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை” October 25, 2018 கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை. என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார். தமிழ்தேசிய கூட்ட மைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றார். இந்த கட்சி அறிவிப்பு கூட்டம் நேற்று நல்லூர் ஆலய சுற்றாடலில் உள்ள நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் …

  20. மகிந்தராஜபக்ச சற்று முன் பிரதமராக நியமிக்கப்பட்டார் என ஆங்கில டெய்லி மிரர் தெரிவித்துள்ளது Former President Mahinda Rajapaksa has sworn in as the Prime Minister before President Maithripala Sirisena a short while ago. http://www.dailymirror.lk/article/MR-sworn-in-as-Prime-Minister-157434.html

  21. சிறிசேனவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன? இந்து நாளிதழ் தகவல் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள் காரணம் என இந்தியாவின் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றும் மறுப்பொன்றும் செய்தியாளர் மாநாடொன்றுமே சிறிசேன இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது தேசிய அரசாங்கத்தின் முடிவு ஒருவார காலத்திற்கு முன்னரே நிச்சயமாகி விட்டது என சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர…

  22. நீங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை நீங்களே இல்லாமலாக்கிவிடாதீர்கள்: ராஜிதவின் உருக்கமான உரை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் பெற்றுக்கொண்ட ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் உரிமைகளை இல்லாமல் செய்துவிட வேண்டாமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது செயற்பட்டுள்ள விதமானது நாட்டின் ஜனநாயத்திற்கு முற்றிலும் முரணானதென தெரிவித்துள்ள அவர், உடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார். இது தொடர்பாக அலரி மாளிகையில் சற்றுமுன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ராஜித இவ்வாறு குறிப்பிட்டார…

  23. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மஹிந்த நிரூபிப்பார்: எஸ்.பி.திஸாநாயக்க புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகளவான ஆதரவு கிடைக்கப்பெற்று வருகின்றமையால் நாடாளுமன்றத்தில் பெருபான்மையை அவரால் நிரூபிக்க முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை தொடர்ந்து, அவருக்கு பெரும்பாலானோர் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர். மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பி…

  24. “ரணில் சொன்னால் பாராளுமன்றை நீங்கள் கூட்ட முடியுமா – பாராளுமன்றை, 2 வாரத்திற்கு நான் மூடுகிறேன்” October 27, 2018 பாராளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்றை ஒத்திவைத்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் ஆராய நாளை உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அறிவித்திருந்தார். இந்த நிலையில் திங்கட் கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்திருந்தார். எனினும் ஜனாதிபதி தலையிட்டு பாராளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்…

  25. நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை – அனைத்து காவல்துறை அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து October 27, 2018 நேற்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து காவல்துறை அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், பிரதி காவல்துறை மா அதிபர்கள், வலயத்துக்கு பொறுப்பானவர்கள், காவல்துறை பரிசோதகர்கள் உள்ளிட்ட அனைத்து காவல்துறை உத்தியோத்தர்களினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையில் இருக்கும் அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாக கடமைக்கு சமூகமளிக்குமாறு காவல்துறை மா அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.