ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி உள்ளிட்ட அரசுடனான உறவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அரசின் ஆட்சிக் காலம் முடிவடையவுள்ளதாலேயே, தமது போக்கில் வழிமுறையில் சற்று மாற்றம் செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் கடந்த தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பருத்த…
-
- 9 replies
- 1.8k views
-
-
அரசியல் கைதிகளின் விடயம் காளிகோவில் திருவிழா அல்ல…. September 29, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கொழும்பில் பிரதமர், சம்மந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன் என தீர்மானம் எடுக்க கூடியவர்கள் பலர் கூடி பேசிய போது அங்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை இந்த நிலையில் பிறிதொரு தினத்தில் கூடி பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிறிதொரு தினத்தில் பேசுவதற்கு இதுவொன்றும் காளி கோவில் திருவிழா அல்ல உயிர்களோடு சம்மந்தப்பட்ட விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று கிளிநொச்சியில் ஊட…
-
- 0 replies
- 446 views
-
-
மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின் மாவனல்ல இல்லத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுபற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்ற…
-
- 7 replies
- 1.4k views
-
-
வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி இன்னமும் இராணுவத்திடம் Editorial / 2018 செப்டெம்பர் 28 வெள்ளிக்கிழமை, பி.ப. 12:32 Comments - 0 சொர்ணகுமார் சொரூபன் வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள கூட்டுறவுச் சங்கக் காணி விடுவிக்கப்பட்டதாக, எழுத்துமூலமாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் தெரிவித்த இராணுவத்தினர், தொடர்ந்தும் அக்காணியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, காணியின் நில அளவை வரைபடத்தைக் கோருவதாகவும், கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கு பிரதேசமானது, கடந்த 28 ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரின் பாவனைக்கு உட்பட்டிருந்தது. ஆட்சிமாற்றத்தின் பின்னர், இப்பகுதிகள் பிரிவு பிரிவாக மக்கள் பாவனைக்கு…
-
- 0 replies
- 371 views
-
-
இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்தி, தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார். சந்தைக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது தீர்வல்ல எனவும் டொலரை சேமிப்பதே முக்கியம் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அடுத்த வருடம் அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்கப் போவதில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்தார். ஆடம்பரப் பொருட்களை சில நாட்களுக்கு இறக்குமதி செய்வதை நிறுத்துவது இந்த சந்தர்ப்பத்தில் ச…
-
- 0 replies
- 576 views
-
-
இதுவரைகாலமும் மௌனத்தை பேணிவந்த தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரான அருந்தவபாலன் அக்கட்சியில் காணப்படும் குறைபாடுகளை பற்றி வெளிப்படையாக தொலைக்காட்சியில் தோன்றி தெரிவித்தமை அக்கட்சி மட்டத்தில் கடும் அதிருப்தியை தோற்றுவித்திருப்பதாக நம்பகமாக அறியமுடிகின்றது. 625.500.560.350.160.300.053.800.900.160.90 இதில் சுமந்திரனின் தீடிர் வளர்ச்சியும் பேரினவாத அரசுகளின் கைப்பொம்மையாக தமிழரசுக்கட்சி செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார் அருந்தவபாலன். வாக்குமோசடி மூலமே தான் தோற்கடிக்கப்பட்டேன் என்பதை மீண்டும் கோடிகாட்டிய அருந்தவபாலன் சம்பந்தன் சுமந்திரன் மாவை ஆகியோரின் தனிப்பட்ட நலன்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் எனவும் தெரிவிக்கின்றார். …
-
- 1 reply
- 790 views
-
-
போரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி சிறப்புச் செய்தியாளர்Sep 28, 2018 by in செய்திகள் போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நியூயோர்க்கில், சிறிலங்கா சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார். ‘போரின் இறுதி இரண்டு வாரங்களில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்ப…
-
- 4 replies
- 882 views
-
-
சவுதி அரேபிய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் வலுவான இராஜதந்திர தொடர்பு காரணமாகவே சவுதி அரசாங்கம் இந்த நன்கொடையினை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நன்கொடையானது விவசாய மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டார். எனினும் மொரகஹகந்த நீரத்தேக்க கட்டுமானப்பணிகளுக்கு சவுதி அரசு நிதியுதவி செய்திருந்தும்கூட இலங்கை அரசு அது பற்றி எவ்விதத்திலும் தகவல்களை வௌியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. http://metronews.lk/article/33423
-
- 2 replies
- 826 views
-
-
இலங்கையில் அதிகரிக்கும் யானை-மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை - மனித மோதல் இலங்கையில் த…
-
- 1 reply
- 628 views
-
-
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இன்று இந்தக் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் கையளிக்கவுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தி…
-
- 1 reply
- 2k views
-
-
தமிழர்கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்களத் தலைவர் மைத்திரியே – சிவாஜிலிங்கம் !! தமிழ் பேசும் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரிபாலவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிக்காட்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடரில் அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் உள்ளதாவது, – இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் தொடர்பாக மைத்திரி தனது உரையில்…
-
- 2 replies
- 1k views
-
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பயணிகளை காக்க வைத்து முகபுத்தகத்தில் இருந்த அதிகாரிகளிடம் சற்றே உறைப்பாக கேள்வி கேட்ட பயணியை வழக்கம் போல அதற்டினார்கள் அதிகாரிகள். முகப்புத்தகம் பார்பதா, இல்லையா என்பது எமது தனிப்பட்ட விவகாரம் அதில தலையிட நீ யாரு என்று அதிகாரி எகிற, நீஙகள் முகபுத்தகத்தில் இருந்ததை பதிவேற்றி இருக்கிறேன். அதையும் வடிவா பார்த்திட்டு, அரசாங்கம் கேள்வி கேட்க்கும் அதுக்கும் எனக்கு சொன்ன பதிலையே சொல்லுங்க என்று அதிர வைத்தார் பயணி. நிலைமையின் தீவிரம் புரிந்த பின்னர், அரக்க, பரக்க ஓடி வந்து வேலை பார்த்தனர் அதிகாரிகள். ஆனாலும் வீடியோ வைரலாகி விட்டது. ? அதிகாரி நரி முகத்தில் முழித்து இருப்பாரோ.? ?
-
- 3 replies
- 721 views
-
-
தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம் தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த உலக சுற்றுலா நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”வடக்கு மாகாணத்துக்குப் பயனளிக்கும் என்பதால், இந்தத் திட்டம் குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. பலாலியில் இருந்து கட்டுநாயக்கவுக்கு உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால், யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு சுற்று…
-
- 1 reply
- 1.2k views
-
-
டக்ளஸின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞர்களுக்கு மிரட்டல்? யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிக்கு வரவிருந்த இந்திய இசைக் கலைஞர்கள் சிலர் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடப்பட்டது என்றும், தாம் அந்த இசை நிகழ்சிக்கு வரப் போவதில்லை என்றும் சமூக வலைத் தளங்களில் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தமக்குத் தெரியப்படுத்தாது சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும், நிகழ்வைப் பின்தள்ளி வைத்தனர் என்றும் தெரிவித்துள்ள இந்தியக் கலைஞர்கள், விமானப் பயணச் சீட்டுக்கான பணத்தையும் ஏற்பாட்டாளர்கள் தரவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். அவை தொடர்பி…
-
- 2 replies
- 845 views
-
-
வடமாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க 215 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன…. வடமாகாணத்தில் இதுவரை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாக 215 விடயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 176 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 88 இடங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 64 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 33 இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 50 இடங்களும் யாழ் மாவட்டத்தில் 79 இடங்களும் கிளிநொச்சியில் 18 இடங்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழிலேயே அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ; ஏன் விசாரணை இடம்பெறவில்லை - சுமந்திரன் கேள்வி (நா.தனுஜா) ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியே பேசப்படுகின்றது. அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த 20 வருட காலப்பகுதியில் அதிக ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்டத்திலேயே கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஊடக நிறுவனம் மீது 33 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் இடம்பெறாமை வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது…
-
- 6 replies
- 1.4k views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் – செவ்வாயன்று மற்றொரு கலந்துரையாடல் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். அதேவ…
-
- 3 replies
- 832 views
-
-
குடி தண்ணீர் விவகாரத்தில் வடக்கில் அரசியல்- யாழ். மாநகர முதல்வர்!! வடக்கு மாகாணத்தின் குடி தண்ணீர் பிரச்சினையில் அரசியலே ஓடுகின்றது. இதை நான் பகிரங்கமாகத் தெரிவிக்கின்றேன் என்று கூறினார் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்துக்களையும் கேட்டறியும் கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-, எங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளை நாங்கள் எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய…
-
- 0 replies
- 636 views
-
-
பன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது!! இலங்கை விவகாரத்தில் பன்னாட்டுச் சமூகத்தின் தலையீடு தேவையில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்க முடியாது. பொறுப்புக் கூறல் விவகாரத்தில் பன்னாட்டுச் சமூகத்தின் பங்கு எப்படியிருக்கவேண்டும் என்று இலங்கை அரசே இணை அனுசரணை வழங்கி இரண்டு தீர்மானங்களை ஐ.நா. மன்றத்தில் நிறைவேற்றியிருக்கின்றது. அது பன்னாட்டுச் சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி. அதிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் பின்வாங்க முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 73ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய அரச…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்க வேண்டும் - சம்பந்தன் ஜே.வி.பி. கலவரங்களிலும், 1983 கலவரங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை பொது மன்னிப்பில் விடுவித்ததை போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் - நீதி அமைச்சர் -சட்டமா அதிபர் ஆகியோருடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நேற்று பிரதமர் ரணில்…
-
- 7 replies
- 927 views
-
-
இலங்கை தலைவர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு: இந்தியரை 3 மாதம் விசாரிக்க அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை அரச தலைவர்களைக் கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக வெளியான தகவல் குறித்த விசாரணையின்போது கைது செய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரிக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. Image captionகைதான இந்தியர். கைத…
-
- 0 replies
- 513 views
-
-
வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு – live வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. September 27, 2018 6:11 am LIVE Latest update 20 mins ago 12:34 யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு கிராமிய திணைக்களத்தின் சீமெந்து விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பது என்ற தீர்மானம் எதிர்கட்சித் தலைவர் தவராசாவால் இன்றையதினம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 749 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்து நாட்டின் சமூக அபிவிருத்தியில் நேரடி தாக்கங்களை செலுத்தும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்துடனான புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமெரிக்க விஜயத்தின்போது நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இதற்கமைய, சமூக முன்னேற்றத்திற்கான நிதியம் மற்றும் சமூக தொழில் முயற்சியாண்மைக்கான நிதியம் ஆகியவற்றை தாபித்தலுடன் தொடர்பான புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டங்…
-
- 1 reply
- 447 views
-
-
கொக்குவில் வாள்களுடன் அட்டகாசம்! – வீட்டின் மீது தாக்குதல்! கொக்குவில் சம்பியன் வீதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் மீது குழுவொன்று இன்று மாலை தாக்குதல் நடந்தியுள்ளது. வாள்களுடன் வந்த குழுவொன்றே தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் வீடும், உடமைகளும் சேதமடைந்துள்ளன. https://newuthayan.com/story/18/கொக்குவில்-வாள்களுடன்-அட்டகாசம்-வீட்டின்-மீது-தாக்குதல்.html
-
- 0 replies
- 516 views
-
-
சீனாவிடமிருந்து இலங்கைக்கு எந்த அரசியல் அழுத்தமும் வராது- மலிக் சமரவிக்கிரம இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக உறவுகளே காணப்படுகின்றன எதிர்காலத்திலும் இந்த நிலையே காணப்படும் என இலங்கையின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பேர்ளினை சேர்ந்த ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். நியுயோர்க் டைம்ஸ் சமீபத்தில் இலங்கை சீனா உறவுகள் குறித்து வெளியிட்டிருந்த செய்திகள் ஆதாரமற்றவை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபத்தில் இயங்குவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளது என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் கீழ் துறைமுகத்தை இலாபகரமானதாக்குவதற்கான …
-
- 0 replies
- 373 views
-