Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொடரும் தேர்தல் வன்முறைகள்; நேற்று ஒருவர் பலி;15 பேர் காயம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று இடம் பெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். மதுரன்குளிய மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. மதுரன்குளிய பிரதேசத்தில் இடம் பெற்ற மோதலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பத்து பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷகலந்து கொள்ளவிருந்த பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு பயணித்துக் கொண…

    • 0 replies
    • 453 views
  2. போதைப்­பொ­ருட்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் கொடுக்கும் நிலைக்கு முஸ்லிம் தீவி­ர­வாதம் : பொது­ப­ல­சேனா போதைப்­பொ­ருட்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் கொடுக்கும் நிலைக்கு இன்று நாட்டில் முஸ்லிம் தீவி­ர­வாதம் பர­வி­யுள்­ளது. இதைக் கவ­னத்தில் கொள்­ளாத அர­சாங்கம் தாமும் இணைந்து குற்றம் செய்­கின்­றனர் என பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது. பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்­பினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்­தனர். இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர் தெரி­விக்­கையில், இலங்­கையில் இடம்­பெற்று வரும் மோச­மான செயற்­பா­ட…

  3. எட்டுப் பாலங்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை வடக்கு மாகா­ணத்­தில் புதி­தாக எட்­டுப் பாலங்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­ற­போ­தும் மாகாண சாலை அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­ன­ரின் எவ்­வித பங்­கு­பற்­ற­லும் இல்­லாது அதி­கார சபை­யின் கொழும்பு அதி­கா­ரி­களே வடக்­குக்கு வந்து அவற்­றின் பணி­களை முன்­னெ­டுக்­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகா­ணத்­தில் அமைக்­கப்­பட்டு வரும் பாலங்­கள் தொடர்­பில் சாலை யின் பொறுப்­பா­ளி­கள் என்ற வகை­யில் நாம் இணைந் துள்­ளோமே தவிர கட்­டு­மா­னம் சார்ந்த எந்­த­வொரு விட­ யங்­க­ளுக்­கும் எமக்கும் தொடர்­பில்லை என்று மாகாண சாலை அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. இது­பற்றி மேலும் தெரி­விக்­கப…

  4. "வடக்கில் பொலிஸார் தொடர்ந்தும் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில பொலிஸ் நிலையங்களில் இன்னும் தமிழில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. பொலிஸாரினால் அனுப்பப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே உள்ளன. இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலர்கள் நேற்று பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. இதனால் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்…

  5. இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே பீரிஸின் இந்திய விஜயம் என்கின்றார் விக்னேஸ்வரன் இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனவே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட இந்தியாவிற்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் இலங்கை அர…

  6. விடுதலைப் பின்னர் சமூக சேவை புரிய விரும்பும் நளினி ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 31, 2010, 11:30[iST] டெல்லி: விடுதலை கிடைத்தால், தனது வாழ்நாளை சமூக சேவை செய்து கழிக்கப் போவதாக நளினி விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆண்டு காலமாக வேலூர் மகளிர் சிறையில் அடைபட்டுள்ளார் நளினி. தான் இத்தனை காலம் பட்ட சித்திரவதை போதும், இனியாவது கருணை காட்டி விடுவியுங்கள் என்று அவர் கோரி வருகிறார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என சிறை ஆலோசனைக் கமிட்டி தமிழக அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இதுவரை நளினி விடுதலை குறித்து உறுதியாகத் தெரியவில்லை. சோனியா காந்தியின் கருத்துக்காக தமிழக அரசு காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செய்தி நிறுவனம…

  7. ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார் ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் வர்த்தக திணைக்கள செயலாளருமான ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்துள்ளார். கடற்படை தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஃபிரான்ஸிஸ் அடம்ஸனை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக பூரண மரியாதையுடன் வரவேற்றனர். புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அடம்ஸன் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டதன் பின்னர் இரு தரப்பினரும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக சுமுகமான விவாதங்களில் ஈடுப்பட்டனர். இச் சந்திப்பில் அவுஸ்திரேலியவிற்கான இலங்கை…

  8. மாத்தளன் மீனவர்களுடைய படகு நேற்றுக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது முல்லைத்தீவு மாத்தளன் மீனவர்களுடைய படகு மாத்தளன் கடற்பரப்பில் சேதப்படுத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்து. தென்னிலங்கை மீனவர்களே படகை மோதி மூழ்கச் செய்தனர் என மாத்தளன் மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. சம்பவத்தை வடக்கு மாணசபை உறுப்பினர் து.ரவிகரன் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மீனவர்களின் படகினை தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே விஷமத்தனமாக மோதித் தள்ளியுள்ளனர். இதனால் படகு கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளத…

  9. கூட்டமைப்பினால் தமிழர் விடுதலை கூட்டணியுடனும் PLOTE உடனும் கூட்டமைபில் இணைந்து போட்டியிட கோரி பேச்சுகள் நடை பெறுவதாக கூட்டமைப்பின் சுரோஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தாராம்.. ஆனால் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஆனந்தசங்கரி மறுத்து இருக்கிறார்... ஆதாரம் http://www.dailymirror.lk/print/index.php/news/news/3819-tulf-wont-join-tna-for-polls.html TULF won’t join TNA for polls Tuesday, 16 February 2010 01:02 By Kelum Bandara The Tamil United Liberation Front (TULF) led by V. Anandasangari has declined overtures by the Tamil National Alliance (TNA) to contest the upcoming general election as a single group in the Northern and Eastern Provinces. …

  10. அம்பாறை மாவட்டத்திற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கல்முனைக் காரியாலயம் நற்பிட்டிமுனை தாளவட்டான் வீதியில் அமைந்துள்ளது. இந்த காரியாலயத்திலுள்ள யன்னல் கண்ணாடி, நீர் விநியோக மீற்றர், நீர் தாங்கி என்பன கடந்த 06.01.2014ந் திகதி இரவு இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த காரியாலயம் இயங்கும் காணியும் வீடும் அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கல்முனை பொலிசில் முறையிட்டபோது பொலிசார் அவ்விடத்திற்கு சென்று சேத விபரங்களை பார்வை இட்டதோடு தொடர்ந்து விசாரனை செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக தெரிவித்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.. …

  11. அபாயகரமான ஆயதங்களுடன் இருவர் கைது மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளனர். கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி செய்ததாக பொலிஸார் கூறினர். இவர்கள் மொட்டைசிவா கெட்டசிவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கைதான இரண்டு இளைஞர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www…

  12. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என தென், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, தேசிய மீள் இணக்கம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறினார். இதேவேளை, இராணுவப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து கொழும்பு சட்ட ஒழுங்குகளை பின்பற்ற வேண்டும் எனவும் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தினார். ht…

  13. தனது வீடியோ கமராவின் ஒளிநாடாவை முள்ளியவளையில் வைத்து பொலிஸாரால் கடந்த 12 ஆம் திகதி அபகரித்து சென்றுவிட்டதாக வடமாகாணசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளியவளை கணுக்கேணி கிழக்கில் இலவச கண்ணாடி வழங்குவதற்கான பரிசோதனைகளை வவுனியாவிலுள்ள வைத்தியசாலை மற்றும் கொழும்பிலுள்ள விஷன் கெயாருடன் இணைந்து கடந்த ஞாயிறன்று மேற்கொண்டிருந்தோம். அதில் 150 பேர் பங்குபற்றியதுடன் 93 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். இதேவேளை, அழிந்துபோகின்ற எமது கலைகளை கட்டிக்காக்கும் நோக்கில் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தில் கலைநிகழ்ச்சியொன்றையும் அதே தினத்தில் நடத்தினோம். இந்த …

  14. 20 ஐ அமுல்படுத்த பாரளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் 20 ஆவது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உரியது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் தெரிவித்தார். அதன்பிரகாரம், சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணாக காணப்படுவதாகவும் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் பாரளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்றைய அமர்விலேயே மேற்கண்டவாறு சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்தார். http://www.virakesari.lk/article/24631

  15. இலங்கையில் சீன முதலீடுகளும் நிதியுதவிகளும் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமானநிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதியுதவிகளை சீனா வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது. அதிகரித்துவரும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் சீனாவிடமிருந்து இருநூறு மில்லியன் டொலர்கள் வரையான நிதி கிடைக்கின்றது. விம…

    • 4 replies
    • 653 views
  16. அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய நாடாளுமன்றக் குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்றுக்காலை இந்தக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தது.இதன்போது போருக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தக்குழு தமது மகிழ்ச்சியை வெளியிட்டது. அத்துடன், இலங்கைக்கு, அவுஸ்ரேலியா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என்று இந்தக்குழு தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களான விக்டோரியா எலிசபெத், ஜீன் பெற்றி, ஜோன் பண்டாசொபொலஸ் மற்றும் மார்ஸா ரோஸ் தோம்சன் ஆகியோரே தற்போது இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டுள…

  17. வெலிக்கடை சிறைச்சாலை கலவரம்: விசாரணைகளை தொடங்கியது சி.ஐ.டி. இரு நாட்களில் 12 பேர் விசாரணைக்கு (எம்.எப்.எம்.பஸீர்) வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதன் போது கொலை செய்­யப்பட்ட 27 கைதிகள் தொ­டர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. அதன்­படி நேற்று முன் தினமும் நேற்றும் 12 சிறைச்­சாலை அதி­கா­ரிகள் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் சிறப்புக் குழு விசா­ர­ணைக்குட்­ப­டுத்தி வாக்கு மூலம் பதிவு செய்­துள்­ளது. நேற்று முன்தினம் ஓய்­வு­பெற்ற சிறை உதவி அத்­தி­யட்சகர் ஒருவர், சிறைச்­சாலை சார்ஜன்ட், இரு சிறைக்­கா­வ­லர்கள் அடங்­கிய நால்­வ­ரி­டமும் நேற்று 8 சிறைச்­சால…

  18. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர் கொழும்பின் புறநகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்ததாக இலங்கை வந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். முகாமைத்துவப்பணிப்பாளர் மனோஜ் குப்தா எரிபொருள் விநியோக நிலைமை குறித்து தன்னிடம் தெரிவித்ததாவும் அவர் தெரிவித்துள்ளார். 500 மில்லியன் USD இந்திய கடனுதவி இலங்கை மக்களின் அன்றாட வாழ்வுக்கு உதவுவதாகவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர் (adaderana.lk)

  19. நாடு கடந்த அரசு எல்லோருடைய உள்ளக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து செயற்பட இருக்கிறது, அதனுடைய அடித்தளம் 1976ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான கனடிய செயற்பாட்டுக்குழுவின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பான தமிழீழத்தின் குரல் நிகழ்ச்சியின் போது வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் சில கேள்விகளுக்கான பதிலில் அவர் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தைக…

  20. சிறீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடும் சிங்கள மக்களுக்கு தமிழீழ மகனின் கடிதம், அறுபத்திஆறாவது சுதந்திரதின கொண்டாட்டங்களில் மூழ்கிப்போய் இருக்கும் சிங்கள தேசத்தவனே உன் பக்கத்து தேசத்தவனின் மடல் இது. வாழேந்திய சிங்கக் கொடியை தூக்கிஆட்டுவதில் காட்டும் களிப்பை கொஞ்சம்குறைத்து இந்த மடலை படிப்பாய் என்றே நம்புகிறேன். ஜெயவேவா சத்ததையும் கொஞ்சம் குறை..அப்போதுதான் எல்லாம் புரியும் உனக்கு. உயிரினங்கள் அனைத்தும் பிரியமான- மிகமிக விருப்பமான ஒரு சொல் இருக்குமாக இருந்தால் அதுதான் “சுதந்திரம்” விடுதலை” என்பன. உன் தேசசுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருப்பாய். காலிமுகக் கடற்கரையில் உன் முப்படைகளையும் கொண்டு நிலமதிர அணிவகுப்பிடு. கறுப்புகண்ணாடியும் சிவப்பு தோள் துண்டும் அணிந்த உன் தேச…

  21. மருந்துவ பொருட்களுக்காக... நிதியமைச்சினால், 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது! தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மருந்து விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 22 மில்லியன் டொலர் தேவையாக இருந்ததாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரையில் அத்தியாவசிய மற்றும் அவசர மருந்து பொருட்கள் 14 இல் 9 மருந்து ப…

  22. ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை: அ.மார்க்ஸ் 15 நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், புத்தளம் என இலங்கை முழுவதும் சென்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் அமைப்பு ஒன்று நடத்திய சமய நல்லிணக்கக் கருத்த ரங்கத்துக்காக அழைக்கப்பட்ட நான், அது முடிந்தவுடன் சொந்த முயற்சியில் நண்பர்களின் உதவியோடு பிற இடங்களுக்கும் சென்று வந்தேன். ஏ-9 சாலை திறக்கப்பட்ட பின் யாழ்ப்பாணம் செல்வது எளிதாகி உள்ளது. சாலையும் மோசம் இல்லை. அரசு பஸ்கள் தவிர, தனியார் பேருந்துகளும் போகின்றன. அப்படி ஒரு பேருந்தில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது, வன்னியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டேன். இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஒரு கணம் ப…

    • 2 replies
    • 1.3k views
  23. பஷில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் : திஸ்ஸ விதாரண (இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பொருளாதார நிபுணர்கள் அடங்கிய பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளமை காலம் கடந்த தீர்மானமாக காணப்பட்டாலும் வரவேற்கத்தக்கது. பொருளாதார மீட்சி தொடர்பிலான தீர்மானங்களில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழு தொடர்பில் வினவிய…

  24. பாயும் புலிச் சின்னத்துடன் "நாம் தமிழர்" அரசியல் கட்சி தமிழின உணர்வாளர் சீமான் அவர்களால் தொடங்கிவைப்பு தனியீழமே தமது ஒரே குறிக்கோள் என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இக்கட்சி தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழக தலைவர்கள் ஈழத்தமிழர் தொடர்பாக அசமந்தப் போக்கையே கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார். சோழர்களின் தலைநகரான தஞ்சாவூரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சினை ஒத்த பாயும் புலியுடனும், ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை ஒத்த வர்ணங்களுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31531 நன்றி தமிழ்நெட்.

    • 12 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.