ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இடங்கள் தவிர்ந்து, ஏனைய இடங்களில் உள்ள ஆயிரத்து 33 காணிகள் மற்றும் வீடுகளை முப்படையினரும் சுவீகரிக்கவுள்ளனர். இதில் 29 காணிகளே அரச நிலங்கள். ஏனையவை தனியார் பொதுமக்களின் காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் தனியார் மற்றும் அரச காணிகளில் நிலைகொண்டுள்ளனர். தற்போது தாம் நிலை கொண்டுள்ள நிலங்களைத் தமக்கே வழங்க வேண்டும் என்று கோரி சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். கடந்த டிசெம்பர் மாதம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்களுக்கு பிரதேச செயலர்கள் உரிய பதில் வழங்காததைத் தொடர்ந்து, வடமாகாண ஆளுநரினால் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொ…
-
- 0 replies
- 618 views
-
-
விற்பனை செய்ய வைத்திருந்ததாக கூறப்படும் 1,200 போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் , நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணும் 45 வயதுடைய ஆணுமாவர். சந்தேக நபர்கள் மன்னார் , சிலாவத்துறை , நானாட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் கடற்படை அதிகாரிகளால் சிலாவத்துறை , நானாட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 1,200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 262 views
-
-
(நா.தனுஜா) அரசாங்கம் கடந்த 20 மாதகாலத்திற்குள் 1,25,747 கோடி ரூபா பணத்தை அச்சடித்திருக்கின்றது. இவ்வாறு எவ்வித மட்டுப்பாடுகளுமின்றி பணத்தை அச்சிடுவதானது வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான மிகப்பாரிய நிதிநெருக்கடியை நோக்கி இலங்கை தள்ளப்படுவதற்கு வழிவகுத்திருப்பதாக ஊவா, மத்திய மற்றும் தென்மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்களிடமிருந்து உதவிகளைப் பெறுவதனைவிடுத்து, நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனைசெய்தல், தமக்கு நெருக்கமானவர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு திறைசேரியை வெற்றிடமாக்கல் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாட்…
-
- 2 replies
- 399 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 04:43 PM 1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (17) விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையில் 24,000 பேர் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள். வெகுவிரைவில் 3,500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேர் வைத்தியர்களாக வெளியேறுகின…
-
- 1 reply
- 265 views
- 1 follower
-
-
1,321 சந்தேக நபர்கள் இதுவரையில் கைது இதுவரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனையின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155,502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் 44,777 லீற்றர் பெற்றோல் மற்றும் 20,208 லீற்றர் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொத்தம் 1,387 சோதனைகளில், 1,321 சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். http://tamil.adaderana.lk/news.php?ni…
-
- 0 replies
- 142 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 FEB, 2025 | 09:29 AM 1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3% - 4% ஆக அதிகரிக்க முடியுமெனவும், பொருளாதாரத்தை கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்தவும், புதிய வாய்ப்புக்களை அறிந்துகொள்வதற்குமான அவசியத்தையும் ஜனாதிபதி தௌிவுபடுத்தினார். மேலும் அரச சேவை தொடர்…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
1,406 ஏக்கர் சுவீகரிக்கப்படும்; நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு news கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 406 ஏக்கர் (1,406.94) காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் காணிகளுக்காக காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளது அரசு. நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, காணி அபிவிருத்தி அமைச்சரிடம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதில்களிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காணிகள் அரசியல் …
-
- 1 reply
- 599 views
-
-
[size=4]வன்னி மக்கள் தொடர்பில் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னரும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் பதியப்பட்ட தரவுகளை ஒப்பிட்டு பார்க்குமிடத்து 1 இலட்சத்து 46ஆயிரத்து 676பேர் கணக்கில் அடங்கவில்லை என்று ஐ.நா உள்ளக பரிசீலனைக் குழு, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் யுத்தத்துக்கு முன்னர் வன்னியில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடு தொடர்பில் குழுவின் உறுப்பினர்களிடையே வாதவிவாதங்கள் இடம்பெற்றதாகவும் இவ்வாறு கணக்கில் வராத மக்கள் தொகையினர் யுத்த காலகட்டத்தின் போது உயிரிழந்தி…
-
- 1 reply
- 1.9k views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44, 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் 12,021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்தார். தேர்தலில் மாவட்டங்களின் ரீதியில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்…
-
- 0 replies
- 315 views
-
-
1,500 பனைகள் தீயில் எரிந்து நாசம் – மன்னார் ஓலைத்தொடுவாயில் சம்பவம்!! மன்னார் மாவட்டத் ஓலைத் தொடுவாய் பகுதியில் ஆயிரத்து 500 பனைகள் தீயில் எரிந்து நாசமாகியது. தீபற்றியதை அடுத்து, மக்களும் மாவட்டத்தில் இருந்த படையினரும் பல மணிநேரம் தண்ணீர் பவுசர்களின் துணையுடன் தீயைக் கட்டுப்படுத்த போராடினர். இதன் காரணமாக சுமார் ஆயிரத்து 500 பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பனைகள் மூலம் பரவிய தீ இறுதியில் இரு வீடுகள் மீதும் பரவியது. இதன் இறுதியில் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தீ அணைக்கப்பட்டதுஎனத் தெரிவிக்கப்படு…
-
- 0 replies
- 429 views
-
-
"1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாமில் இருந்து சுமார் 300-க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா படையினரால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பெற்றோர்களுக்கு தெரியாது என்றும் கூட்டமைப்பு எடுத்துக் கூறியுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார…
-
- 0 replies
- 754 views
-
-
1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை! அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் குறித்த நடவடிக்கைகளினால் ”தற்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் இது தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பெரும் அநீதி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சுமார் பத்தாயிரம் …
-
- 1 reply
- 132 views
-
-
1,60,000 பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்:மாவை எம்.பி _ வீரகேசரி நாளேடு 12/8/2010 9:00:28 AM மீள்குடியேற்றப்படுவதற்கு இன்னும் 23 ஆயிரம் பேரே எஞ்சியிருப்பதாக அரசு கூறியிருக்கின்றபோதிலும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தற்காலிக தங்குமிடங்களிலோ அல்லது உறவினர்,நண்பர்களது வீடுகளிலோ தங்கியிருக்கின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார். மோசமான காலநிலை மழை வெள்ளம் ஆகியவற்றால் மீள்குடியேற்ற பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மக்கள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பசியிலும் பட்டினியிலும் அவல நிலைக்குள்ளாகியுள்ளனர். பாதுகா…
-
- 0 replies
- 299 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 APR, 2024 | 09:58 AM பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இன்று சம்பள நிர்ணய சபையின் தலைமையில் தொழில் அமைச்சில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையிலேயே முதலாளிமார் சம்மேளனம் இவ்வாறு அறிவித்துள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தித்தின் நிலைப்பாட்டை அதன் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடு குறித்த…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
1,700 ரூபாய் வேதனத்தைக் கொடுக்க அரசாங்கம் முன்வருமாயின் ஆதரவு வழங்கத் தயார் – ஜீவன் ”மலையக பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு இந்த வருட பாதீட்டில் அரசாங்கம் நிதி ஒதுக்காமைக்கு உரிய வகையில் பதிலொன்றை எதிர்பார்ப்பதாக” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தங்களது கட்சியின் வேட்பாளர்களுடன் கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ” தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாவினை வேதன நிர்ணய சபையின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் முன்வருமாயி…
-
- 0 replies
- 122 views
-
-
1,710,146 சதுரமீற்றர் பரப்பளவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 1,710,146 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29,403 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி உள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளரும் ஓய்வுபெற்ற கெப்டனும் ஆன பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். அவர் நேற்று (28) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி கற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடி கற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரையான…
-
- 1 reply
- 516 views
-
-
மலையக பெருந்தோட்டத் துறையைச் செர்ந்த பெண்ணொருவர் ஒரு மாத சம்பளமாக 57,375 ரூபாவினைப் பெற்றுச் சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார் .கொட்டகல பிளான்டேசனுக்குச் சொந்தமான மவுண்ட் வேணன் தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான தனலஷ்மி என்பவரே பெருந்தோட்டத்துறை வரலாற்றில் இவ்வாறதொரு பெருந் தாகையைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். கொழுந்து பறிக்கும் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவர் ஒருநாள் வேதனத்தைப் பெறுவதற்காக 18 கிலோ தேயிலைக் கொழுந்தினை பறிக்க வேண்டும். ஆனால் 1899 கிலோ தேயிலைக் கொழுந்தினை தான் பறித்ததன் மூலமே இந்தக் தொகை தனக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தனது கணவன் சுகவீனமுற்றவர் என்றும் கூறியுள்ளார். இதேவேளை மேலும் சில தொழிலா…
-
- 0 replies
- 656 views
-
-
1.15 பில்லியன் டொலர்களுக்கு 99 வீத குத்தகையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்படும் ஜனவரியில் ஒப்பந்தம் கைச்சாத்து; அமைச்சர் மலிக் சமரவிக்ரம அறிவிப்பு (ஆர்.யசி) அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சீனாவுடன் முதற்கட்ட உடன்படிக்கையை செய்துகொள்ளவுள்ளோம். சீனாவின் 1.15 பில்லியன் டொலர் முதலீட்டுடன் இலங்கைக்கு 20 வீத பங்கு மற்றும் சீனாவுக்கு 80 வீத பங்கு என்ற அடிப்படையில் 99 ஆண்டுகால குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் வழங்கப்படும் என்று அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம …
-
- 0 replies
- 290 views
-
-
1.15 மில்லியனை விஞ்சிய பொது, அரை அரசு துறை வேலைவாய்ப்பு! இலங்கையில் உள்ள அனைத்து பொது மற்றும் அரை அரசு துறை நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை 1,156,018 ஐ கடந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் உள்ள அனைத்து பொது மற்றும் அரை அரசு துறை நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டுக்குள் 1,156,018 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 46,543 அதிகமாகும். அவர்களில், வேலை செய்யும் ஆண்களின் விகிதம் 50.5% ஆகும். இது பெண்களை விட (49.5%) சற்று அதிகம். பெரும்பாலான ஊழியர்கள் மத்திய அரசில் உள்ளனர், மொத்த பணியாளர்களில் 59.5% பேர் இதில் அடங்குவர். இர…
-
- 0 replies
- 142 views
-
-
1.2 டிரில்லியன் ரூபாய்க்கு அரசாங்கம் ஒப்புதல் – நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தில் எவ்வாறு சாத்தியம் என்கின்றது ஜே.வி.பி. by : Jeyachandran Vithushan நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தில் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி 1.2 டிரில்லியன் ரூபாய் கணக்கீட்டு அறிக்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது என்று ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அரச நிதி தொடர்பான அறிக்கையில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன என்றார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது நிதி எவ்…
-
- 2 replies
- 446 views
-
-
Published By: VISHNU 04 AUG, 2024 | 06:35 PM நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்கலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். VFS கொடுக்கல் வாங்கள் மூலம் தமது சொந்த நலனையே இந்த திருடர்கள் முன்னெடுத்தனர். ரவூப் ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க ர…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
http://www.expressbuzz.com/edition/story.a...=rSY%7C6QYp3kQ=
-
- 1 reply
- 858 views
-
-
1.4 மில்லியன் ரூபா கப்பம் வசூலித்த 4 பொலிஸார் கைது! கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி 1.4 மில்லியன் ரூபாவை கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும், கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இது தொடர்பான மேலதிக விசாரணையினை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1399894
-
- 0 replies
- 294 views
-
-
1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயை இழந்தது ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் சுமார் 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தினை இழந்துள்ளதாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரெஹான் லக்கானி தெரிவிக்கையில், சீனாவில் ஊற்றெடுத்த கொரோனா வைரஸ் மேற்குலகத்தினையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் இலங்கை ஆடை ஏற்றுமதித்துறையானது மிகுந்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக மார்ச் முதல் எதிர்வரும் ஜூன் வரையில் எமக்கு வருமானமாக கிடைக்கவிருந்த 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் முழுமையாக சீர்குலைந்துள்ளது. இதனைவிடவும் தற்போதைய நிலையில் 200 முதல் 500பில்லின் அமெரிக்க டொல…
-
- 3 replies
- 469 views
-
-
1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் இணையவளியில் சந்திப்பொன்று இடமபெற்றுள்ளது. இதன்போது மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் ஊடக 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் கடன் மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொல…
-
- 6 replies
- 759 views
-