Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' ஆரம்பித்துள்ளது. இலங்கை வானொலி நிலையத்துக்கென தனி வரலாறு உண்டு. 1925-ல் 'கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்தநிலையத்துக்கு உலகின் இரண்டாவது வானொலி நிலையம் (முதலாவது - 'பிபிசி' - 1922) என்ற பெருமையும் ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. காலப்போக்கில் எத்தனையோ மாற்றங்களைக் கண்ட இந்நிலையம், 1972-ம் ஆண்டிலிருந்து 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில் ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டுவருகிறது. இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலைவரிசையில் ஒலிப்பரப்பாகிவந்த 'கொழு…

  2. வடமாகாண சபையின் உறுப்பினர்கள் ஆவதன் முன்பே கட்டுக்கடங்காத அடாவடித்தனம் என்றால் உறுப்பினரானால்??? இலங்கைத் தொலைத் தொடர்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டு உள்ளார். இன்று வியாழக்கிழமை (12.08.13) காலை யாழ்.கஸ்தூரியார் வீதியில் தொலைபேசித் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த கட்சி சார்பாக சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜனின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் அவர் தாக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொலைத் தொடர்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த இந்த ஊழியர் எதுவித காரணமுமின்றி அங்கஜனின் அடியாட்களால் தாக்கப்பட்டுள்ளதை தொடர்புடைய அவரது அலுவலக வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்…

  3.  'அங்கவீனமடைந்த எவரையும் கட்டாயப்படுத்தி விலக்கவில்லை' -ஜே.ஏ.ஜோர்ஜ் அங்கவீனமடைந்த எந்தவொரு இராணுவ வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்லவில்லை, தொடர்ந்தும் சேவையில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள அங்கவீனமடைந்த வீரர்கள் தங்களது சுயவிருப்பத்தின் பேரிலேயே விலகிச்சென்றனர். அவர்கள் விலகிச்செல்லும் போது கடிதம் கொடுத்துவிட்டே சென்றனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்கவீனமடைந்த வீரர்கள் முப்படைகளிலும் தற்போதும் சேவையில் உள்ளனர். அவர்கள் விரும்பும் வரை சேவையில் இருக்கமுடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஓய்வுபெற்ற, அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் ஓய்வூதியம்…

  4. இலங்கை காவல்துறையினரால் நேற்று முன்தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்- முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி கொழும்பு மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் மூன்றாவது நாளாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அசாத் சாலியின் உடல்நிலை மோசமடைந்துவருவதாக அவரை சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். இதற்கிடையே, அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன, சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும்படி கோரும் அமைப்பொன்றை உருவாக்…

  5.  'அஞ்சலி'யை தேடிச் சென்றார் பிரதமர் நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒக்லன்டிலுள்ள அஞ்சலி என்ற யானைக் குட்டியை தேடிச் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கைக்கு வந்திருந்தபோது, அஞ்சலி என்ற யானைக் குட்டியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்பளிப்பாக வழங்கினார். குறித்த யானைக் குட்டி, ஒக்லன்ட் விலங்குகள் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பின்னவலயில் பிறந்த அஞ்சலிக்கு இப்போது 9 வயதாகின்றது. இப்போது அது பூரண நலத்துடன் மகிழ்ச்சியாக உள்ள…

  6. Published By: DIGITAL DESK 5 02 JUN, 2023 | 09:33 PM தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை (02) வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை ச…

  7. 'அடித்து கொன்று விடுவேன்' : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர் 'பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்" என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முயற்சி செய்ததோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். குறித்த ஊடகவியலாளர் வினவியதையடுத்து, அமைச்சர் ஜோன் அமரதுங்க அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக ப…

  8. 'அடுத்த முதலமைச்சர் தொடர்பில் என்னால் முடிவெடுக்க முடியாது' -எஸ்.ஜெகநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு தொடர்பில், மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், “வட மாகாண ஆளுநர் விடுத்த அழைப்பின் பிரகாரம் நான் அவரை சந்தித்திருந்தேன். முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக அவர் அழைத்திருந்தார். “அடுத்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சியின் தலைவரான என்னால் முடிவுகளை எடுக்க முடியாது. கட்சியின் செயலாளரே அம்முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். …

  9. 'அண்ணா களஞ்சியசாலை வெடித்து கொண்டிருக்கின்றது. நான் காணில் பதுங்கியிருக்கின்றேன்" மரணித்த வீரரின் இறுதி வார்த்தைகள் : கொஸ்கம சம்பவத்தில் நிகழ்ந்த சோகம் அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த இராணுவ வீரர் இறுதியாக தனது அண்ணா மற்றும் மனைவிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உரையாடியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த உயிரிழந்த இராணுவ வீரரின் அண்ணா, ' நேற்று முன்தினம் மாலை 6.29 மணியளவில் தனது தம்பியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, அப்போது தம்பி என்னிடம் அண்ணா இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் தீ பற்றி வெடித்துக் கொண்டிருக்கின்றது. நான் தற்போது காணில் பதுங்கியுள்ளேன். நான…

  10. அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வேண்டு கோள் விடுத்துள்ளார். முதற் பிரஜையுடன் முதலாவது உரையாடல் என்னும் தலைப்பில் அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது இலங்கை ஜனநாயகச் சோ­லிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி என இதுவரை காலமும் ஊடகங்கள் உட்பட அரச சேவைகளில் உபயோகிக்கப்பட்டு வந்தது. என்றாலும் இன்று முதல் எனது பெயருக்கு முன்னால் அதிமேதகு என்ற சொல்லை உபயோகிக்கவேண்டாம் இலங்கை ஜனநாயக சோ­லிசக் குடியரசின் ஜனாதிபதி என உபயோகித்தால் போதுமானது. அதேபோன்று எனது மனைவிக்கும் ஜனாதிபதியின்…

  11. இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல பங்காளி கட்சிகள் அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை நீக்க இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் அனுப்படவுள்ள ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தின்போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் முக்கிய இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்கவேண்டும் என்று பிரச்சார…

    • 0 replies
    • 678 views
  12. [size=4]இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கடிதமொன்றை எழுதியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங்கினால் எழுதப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் இறுதிகட்ட போர் முடிவுற்றப் பின்னர் இலங்கை தமிழர்களின் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழர்களின் மற…

  13. 'அதிகாரிகளுக்கு நல்லிணக்கம் இல்லை' -செல்வநாயகம் கபிலன் “கீரிமலையில் பகுதியில் மீள்குடியேற்றம் செய்துவைக்கப்பட்ட நல்லிணக்கபுரம் பகுதி மக்களுக்கு இதுவரை காணி உறுதிகள் வழங்கி வைக்கப்படவில்லை” என மீள்குடியேறிய மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன், இராணுவத்தின் மனிதவலுவுடனும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் காணப்பட்ட அரச காணியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் 100 குடும்பங்களுக்கு காணியுடன் வீடு வழங்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி, கடந்த வருடம் விஜயம் செய்த போது வீடுகளை பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார். ஆனால், மீள்குடியேற்றம் செய்து…

  14. 'அதிர்ச்சித் தாக்குதல்களால் ஆட்டம் காணும் சிறிலங்கா" -கிளிநொச்சியிலிருந்து இ.தமிழ்நேசன்- சிறிலங்கா கடற்படையின் தாக்குதல் கலமான பி-438 முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் 22.03.08 அன்று தாக்கியழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அனைத்தையுமே தகர்;த்தெறிந்து விட்டோம், கடற்புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம், கடற்புலிகளால் இனிமேல் எந்தவொரு தாக்குதல்களையும் நடத்த முடியாது, அவர்களின் ஆயுதப்பாதை - வழங்கல் பாதை - முழுமையாகவே துண்டிக்கப்பட்டது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டிருந்தது சிறிலங்கா கடற்படை. அந்தப் பெருமிதத்துடன் தனது 60 ஆவது ஆண்டு விழாவையும் கோலாகலமாகக் கொண்டாடியது. அந்த நிகழ்வில் கடற்படையின் பெருமை பேசிய கடற்படை தளபதி ரியல் அட்மிரல் வ…

  15.  -எம்.றொசாந்த் இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக நபர் ஒருவர், நீதிமன்றத்துக்கு வந்தார். அவரின் தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்கும், முன்னர் தாபரிப்புப் பெற்ற அதே பெண்ணே வந்தார். …

  16. 'அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்' இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சுமார் 60 பேர் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து தமிழோசையிடம் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், சுமார் 30 அதிகாரிகளால், இந்தக் கைதிகள் கொட்டும் மழையில் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக தனக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார். விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் ஞாயிறன்று அனுட்டிக்கப்படும் நிலையில், அதனைக் கூறியே தாம் தாக்கப்பட்டதாக கைதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். கால் ஊனமுற்ற கைதிகளின் ஊன்றுகோல்கள் பறிக்கப்…

    • 6 replies
    • 1.2k views
  17. இலங்கையின் அநுராதபுரத்தில் அமைந்திருந்த ஒரு முஸ்லீம் தர்காவை சில பொளத்த பிக்குகள் அடங்கிய குழு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் இடித்து தரைமட்டமாக்கியதாக சில ஊடகச் செய்திகள் கூறியுள்ளன. இந்தச் சம்பவம் போலிசாரின் முன்னிலையிலேயே நடந்ததாகவும் அந்தச் செய்திகள் கூறின. இந்தத் தர்கா , பௌத்தர்கள் புனிதமான இடமாகக் கருதும் சிங்கள மன்னன் துட்டகெமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே அமைந்திருப்பதால் அது இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தமிழோசையிடம் பேசிய அனுராதபுரம் மொய்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக் அவர்கள், இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகவும், பிக்குமார் அடங்கலாக சுமார் 60 பேர் கொண்ட …

  18. 'அந்த போர் பற்றியோ அனுபவித்த வேதனைகள் பற்றியோ சிந்திக்கவே விரும்பவில்லை': ஒரு சிறுவனின் குமுறல்கள் [ சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010, 08:53 GMT ] [ கி.வேணி ] விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்திற்கும் இடையேயான போர் உச்ச கட்டத்தை அடைந்த காலமான அக்டோபர் 2008ம் ஆண்டில், தங்கள் குடும்பமே மொத்தமாக வீடுகளை கைவிட்டு வேறு வழியின்றி முல்லைத்தீவு காடுகளுக்குள் சென்றதை துயரத்துடன் குறிப்பிடுகிறான் தற்போது கிளிநொச்சியில் மீள் குடியேறி வசித்து வரும் 15 வயதுச் சிறுவன் ராகவன் சின்னதுரை. அச்சிறுவனது உணர்வுகளை பதிவு செய்துள்ளது ஐ.நா.சபையின் மனிதார்ந்த திட்டங்களுக்கான பணியகம். அதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் கி.வேணி . ராகவன் சின்னதுரை என்ற சிறுவன் மேலும் கூறி…

    • 7 replies
    • 1.1k views
  19. "வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 333 views
  20. "வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 400 views
  21. 'அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் இன்றைய அவலத்துக்குக் காரணம்': செ.பத்மநாதன் அவசர அறிக்கை [ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 03:32 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] "வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். "கடந்த 24 மணி நேரத்தில் 3,000 மக்கள் வீதிகளில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாகக் காணமடைந்த 25,000 பேர் மருத்துவ பராமரிப்புக்கள் …

    • 1 reply
    • 1.3k views
  22. "வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 364 views
  23. ஆடி அசைந்து வந்தாலும் வருவது யானையானால் அதன் கழுத்திலுள்ள மணியோசை அதன் வரவைப் பகிரங்கப்படுத்துவதுபோல தனது அடுத்தமாத இலங்கைப் பயணத்துக்கு முன்னர் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்ற மணியை நவிபிள்ளை ஒலிக்கவிட்டுள்ளார். நவிபிள்ளை ஒலிக்கவிட்டுள்ள இந்த மணி நிச்சயமாக கொழும்பு அதிகார மையத்துக்கு ஒரு நாராச காண்டாமணியாக ஒலித்திருப்பதை அங்கிருந்து வெளிவரும் காட்டுக்கத்தல்கள் புலப்படுத்துகின்றன. செய்தி வீச்சு... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21319

  24. 'அன்பு' இல்லம் 'பாரதி' 'செஞ்சோலை' இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கிழக்கிற்கு சுற்றுலா 09 செப்டம்பர் 2014 வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு (நெர்டோ) அமைப்பினால் நடாத்தப்பட்டு வரும் ஆண்களுக்கான 'அன்பு' இல்லம், பெண்களுக்கான 'பாரதி', 'செஞ்சோலை' இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுலாப் பயணத்தினை மேற்கொண்டு இருந்தனர். ஓகஸ்ட் மாதம் 19, 20, 21 ஆம் நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக 215-க்கும் அதிகமான சிறுவர்கள் மூன்று பேருந்துகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கிய பூரண நிதி உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர். சுற்றுலாவின் தொடக்கத…

  25. Published By: Priyatharshan 01 Oct, 2025 | 08:23 PM இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் நிறைவு விழா மற்றும் உலக சிறுவர்கள் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 01) அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இதன்போது, உலக சிறுவர்கள் தின நினைவு முத்திரை மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது. உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியப் போட்டிகளின் தொகுப்பாகிய "க்ஷேம பூமி" (Ksh…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.