ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம்! இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம் ஏன் இன்னும் அமைக்காமல் இருக்கின்றது என்று பிபிசி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதில் அரசாங்கத்திற்கு சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார். இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாத் தீர்மானங்களையும் நிறைவேற்று…
-
- 0 replies
- 233 views
-
-
விடுதலைக் கனவுகளுடன் உயிர் நீத்தவர்களின் கனவு நனவாகும்- – எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை!! விடுதலைக் கனவுடன் ஆயிரமாயிரம் வேங்கைகளும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் தங்களின் உயிர்களை முள்ளி வாய்க்கால் மண்ணில் ஆகுதியாக்கியுள்ளார்கள். அவர்களின் கனவு என்றோ ஒரு நாள் நனவாகும் என்பதை முள்ளிவாய்க்கால் மண்ணில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ‘நினைவேந்தல்’ நிகழ்வில் பெருந்திரளான தமிழர்கள் ஓரணியில் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றமை எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 0 replies
- 267 views
-
-
புதன் 06-12-2006 07:44 மணி தமிழீழம் (சிறீதரன்) யாழ்பாணத்தில் அண்மைக்காலத்தில் சிறீலங்கா படையினரால் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களாலும்இ இளைஞர்கள் தாம் சிறீலங்கா இராணுவத்தால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுவோம் என்ற பயம் காரணமாக மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடைந்து வருவதல் அதிகரித்து வருவதாக மனிதஉரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த இரு மாதத்தில் மாத்திரம் யாழ்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 இளைஞர்கள் இவ்வாறாக சரணடைந்துள்ளதாகவும் பின் இவர்கள் யாழ் நீதிவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு யாழ் சிறையால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை ஒரு இளைஞனும், செவ்வாய் கிழமை ஒரு பாடசாலை மாணவன் உட்பட இருவர் ச…
-
- 1 reply
- 1k views
-
-
நெடுங்கேணி ப.நோ.கூட்டுறவுச் சங்க ஊழல்களுக்கு எதிராக உண்ணாவிரதிகள் இருந்த கொட்டில்களை பிரித்தெறிந்த இராணுவம்! * Thursday, February 17, 2011, 13:14 வவுனியா வடக்கு நெடுங்கேணி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமர்ந்திருந்த கொட்டில் இரவானதும் பிரித்தெறியப்பட்டுள்ளது. உழவு இயந்திப் பெட்டியொன்றை மூடி அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்குள் இருந்து இரண்டு பேர் இந்த உண்ணாவிரதத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டிருந்தனர். இருள் சூழ்ந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் அவர்கள் கட்டியிருந்த பதாதையை அகற்றிவிட்டு இருக்குமாறு முதலில் அறிவுறுத்தினராம். அதற்கு உண்ணாவிரதமிருந்தவர்கள் உடன்படாததையடுத்து சிற…
-
- 0 replies
- 672 views
-
-
முல்லைத்தீவு நிலம் பறிக்க புதுமுறையில் வியூகம்- தொல்பொருள் திணைக்களம் களத்தில்!! முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் நாயாற்றுப் பாலத்திலிருந்து, கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தை தொல்பொ ருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். தொல்பொருள் திணைக்களத்துக்கு என்று அடையாளப்படுத்தும் நடுகல் அங்கு நேற்று முன்தினம் நடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்…
-
- 0 replies
- 389 views
-
-
தேசத்தின்குரலின் இறுதி வீரவணக்க நாளன்று யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுஸ்டிப்பு. யாழ் குடாநாட்டில் மறைந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு இன்று யாழ் குடாநாட்டு மக்கள் துக்கம் அனுஸ்டித்தார்கள். இன்று வர்த்தக நிலையங்கள் தனியார் கல்வி நிலையங்கள் உட்பட பல நிறுவனங்களும் பூட்டப்பட்டதுடன் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகளும் மட்டுப்படுத்திய அளவிலேயே இடம் பெற்றன. காலையில் வர்த்தக நிலையங்களைப் பூட்டிய உரிமையாளர்கள் இராணுவத்தனரால் அழைக்கப்பட்டு வர்த்தக நிலையங்களை திறக்கும்படி வற்புறுத்தி திறப்பித்தும் உள்ளார்கள். இத்தகைய சம்பவங்கள் சங்கானை, சுன்னாகம், யாழ்ப்பாணம், கைதடி உட்பட பல பகுதிகளிலும் இடம் பெற்றள்ளன. இத்துடன் வர்த்தகர்கள் சல இடங்களில் இராணு…
-
- 1 reply
- 850 views
-
-
வவுனியாவில் இளம்பெண் வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்! Posted by admin On March 4th, 2011 at 9:24 am / No Comments வவுனியா தடுப்புமுகாமில் வைத்திருந்த இந்து மதகுரு ஒருவருக்கு உணவு எடுத்துச் சென்ற அவரது மனைவி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரஸ்தாப மதகுரு கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வளிப்பதற்காக வவுனியாவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அவரது மனைவி உணவு எடுத்துச்சென்ற தாகவும் அதன்போது வாகனத்தில் வந்த சிலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து வவுனியா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப…
-
- 0 replies
- 952 views
-
-
டென்மார்க்கிலுள்ள ஒருவரால் பணம் அனுப்பி யாழில் வன்முறை : முக்கிய சந்தேக நபர் கைது By Digital Desk 5 02 Feb, 2023 | 10:46 AM யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு ஒன்று காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்த வன்முறையை வழி நடத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். …
-
- 0 replies
- 510 views
-
-
அடுத்த மாதம் சிறிலங்கா அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது [புதன்கிழமை, 27 டிசெம்பர் 2006, 13:24 ஈழம்] [பா.பார்த்தீபன்](eelampage.com) இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை முன்வைக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை அடுத்த மாதம் முன்வைக்கவுள்ளதாக அனைத்து கட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த திட்டம் மாகாணங்களுக்கான தனியான அதிகாரங்களை கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரம் அனைத்து கட்சிக்குழு கூடவுள்ளது. அதன் போது மேலும் விவாதங்கள் நடத்தப்படும…
-
- 4 replies
- 1.2k views
-
-
முறிகண்டிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் 30 லட்சம் ரூபா செலவில் கடைத் தொகுதி முறிகண்டிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் யு.என்.டி.பி. நிதியுதவியுடன் முப்பது இலட்சம் ரூபா செலவில் 10 கடைத் தொகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.வர்த்தகர்களினதும் மக்களினதும் நலன்கருதி அமைக்கப்பட்டு வரும் இக்கடைகள் முன்பு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்படும் என்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அ.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழ்நிலையைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் வன்னியில் மீளக்குடியமர்த்தப் படுவதுடன் குடாநாட்டையும் தென்னிலங்கையையும் இணைக்கும் ஏ9 தரைப்பாதையில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இடம் பெற்று வருகின்றன.இ…
-
- 1 reply
- 987 views
-
-
சன் சீ கப்பல் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு : 18 மார்ச் 2011 எம்.வீ சன் சீ கப்பல் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்துமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்ததாகவும், போராட்டங்களில் ஈடுபடவில்லை எனவும் குறித்த நபர் தெரிவி;த்துள்ளார். எனினும், தடை செய்யப்பட்ட இயக்கமொன்றில் அங்கம் வகித்த காரணத்தினால் குறி;த்த நபரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளரின் சட்…
-
- 0 replies
- 720 views
-
-
போயா தினத்தை முன்னிட்டு யாழில் 100 பயனாளிகளுக்கு பசு மாடுகள் வழங்கப்பட்டன. யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.. ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ஒமல்பே சோபிததேரர் மற்றும் யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா ஆகியோரின் ஏற்பாட்டில் வறிய மக்கள் 100 பேருக்கு பசுமாடுகள் வழங்கிவைக்கப்பட்டன. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இவ்வாறு பசுக்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த பசு மாடுகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=845543614106100070#sthash.nva0fTxL.dpuf
-
- 0 replies
- 306 views
-
-
ஸ்ரீலங்கன் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SRI LANKAN AIRLINES இயந்திர கோளாறு ஏற்பட்ட 3 விமானங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக, தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் …
-
- 2 replies
- 947 views
- 1 follower
-
-
Friday, March 25th, 2011 | Posted by admin நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க லண்டனுக்கு விரையும் சிறிலங்கா புலனாய்வாளர்கள் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாரிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்.மாநகரசவை தீயணைப்பு சேவைக்கு புதிய கட்டடம்-திறந்து வைத்தார் முதல்வர் ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு சேவைக்கு என 15 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்டால் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சால் 90 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா நிதியையும் மாநகர சபைக்கு கிடைத்த முத்திரை வருமானம் ரூபா 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா நிதியையும் கொண்டு அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான தீயணைப்புச் சேவையை வழங்கிவரும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இதுவரை காலமும் ந…
-
- 0 replies
- 290 views
-
-
எலி ஹவுஸ் லேனில் ஆட்டோ சாரதி சுட்டுகொலை நிஷாந்தி கொழும்பு மோதரை எலி ஹவுஸ் லேனில் இன்று வியாழக்கிழமை காலை 7:55 மணியளவில் ஆட்டோ சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ சாரதியின் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.. இன்று காலை மோதர எலி ஹவுஸ் லேனில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஜெகத் சுசந்த பெரேரா (36) என இனங்காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தனதுபிள்ளைகளை பாடசாலையில் விட்டு திரும்பும் வழியில் இவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.. ஆட்டோ சாரதியான இவர் கிம்புலாவில் பகுதியில் வசித்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாவட்ட நீதவான்…
-
- 0 replies
- 703 views
-
-
நோக்கன் திருவிளையாடல் புராணத்தில் நாரதரின் பங்கு அளப்பரியது. கலகத்தை உண்டாக்கி அதனூடாக தமது நோக்கத்தை நிறைவேற்றவென சிவபெருமான் நாரதரைப் படைத்திருந்தார். கலகங்களின் மூலம் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் நடைபெறுவதாகக் கணக்கெடுப்பு ஒன்று உண்டு. இது ஒரு புராணக் கதையாக இருந்தாலும் தற்போதைய நடைமுறைகளுக்கும் அது பொருந்தக்கூடியதே. தேவலோகத்தில் கலகம் என்றால் நாரத முனி போல பூலோகத்தில் இருப்பவர் சுமந்திர முனி. அதுவும் அவர் ஒருவரால் எய்யப்பட்ட அம்பு என்பது தற்போது உலகறிந்த விடயம். எய்தவன் என்ன நோக்கத்தோடு எய்தானோ? அந்த அளப்பரிய பணியை அம்பாகிய சுமந்திர முனி செய்து முடித்திருக்கிறார். இதற்குப் பலிக்கடாவாகிப் போனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஒழிய தமிழ் மக்கள் அல்ல என்பதையும் அனை…
-
- 0 replies
- 403 views
-
-
எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம்? Published By: RAJEEBAN 06 MAR, 2023 | 04:32 PM எதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிவாயுவிலைகளும் …
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான உணவு விநியோகம் தொடர்பில் பிரச்சினைகைள எதிர் நோக்குவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதினாயிரம் பேர் இம்மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள போதிலும் அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மாத்திரமே இடைத்தரிப்பு முகாம்களிலும், தற்காலிக முகாம்களிலுமே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்டப்டுள்ளோரை பொறுத்த வரை தங்களை பராமரித்து வரும் அரச சார்பற்ற அமைப்பகளினால் தொடர்ந்தும் சமைத்த உணவு வழங்கப்படுவது குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். உணவு போதாது என்றும் சிலர…
-
- 0 replies
- 876 views
-
-
வவுனியா, தவசிக்குளம் பகுதியில் பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- நேற்று வியாழக்கிழமை இரவு தனது மாட்டைத் தேடி வீட்டின் பின்புறமாகவுள்ள காட்டை நோக்கி சென்ற போது பன்றிக்கு வைத்த சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.மோகன் (வயது 43) என்பவரே உயிரிழந்தவராவர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://malarum.com/article/tam/2014/11/21/6978/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF…
-
- 0 replies
- 276 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது Published By: RAJEEBAN 14 MAR, 2023 | 03:43 PM முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க பெண்போராளியொருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த குறிப்பிட்ட தான் வெள்ளவத்தையில் வசிப்பதாக போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் உதவியதாக அவரை கைதுசெய்த பயங்கரவாத விசேட பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
- 5 replies
- 2.3k views
-
-
கடந்த 9 வருட கால ஆட்சியில் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான வெளிப்படையான மக்கள் எதிர்ப்பு - பௌத்த துறவிகள் - மற்றும் மதகுமாரின் எதிர்ப்பு இந்த அளவில் உருப்பெற்றதை நான் அவதானிக்கவில்லை.... http://www.bbc.co.uk/sinhala/sri_lanka/2014/11/141125_colombo_disappeared_protest http://www.bbc.co.uk/sinhala/sri_lanka/2014/11/141125_colombo_disappeared_protest BBC Sinhala - සංදේශය අඩුම ගානේ ජාත්යන්තරයේ තියන මිනී මරණ රටක්, අතුරුදහන් කරන රටක්, පොලිසියේදී මිනී මරණ රටක්, නීතිය කඩා වැටිච්ච රටක්, මිනිස්සුන්ට කතා කරන බැරි රටක්. ඒ අපේ රටට විරුද්ධව තියන දේ නැති කරන්න නම් යහපාලනය සහිත ක්රමයක් හදන්න වෙනවා - බ්රිටෝ ප්රනාන්දු
-
- 0 replies
- 498 views
-
-
ஆளுநர், அவைத் தலைவருடன் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்திப்பு – விக்கியின் உரைக்கு எதிர்க்கட்சி தலைவரும் இன்று பதிலடி வடக்கு மாகாண சபையின் இன்றைய சிறப்பு அமர்வு தொடர்பாக, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆளுநருடனும், அவைத் தலைவருடனும் சந்திப்பு நடத்தியுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சர் கடந்த அமர்வில் ஆற்றிய உரைக்கு, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் இன்று பதிலடி கொடுக்கவுள்ளார். வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் இன்று சிறப்பு அமர்வு நடைபெறவ…
-
- 0 replies
- 210 views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் எதிர்த்துள்ளன. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிராக பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. அவற்றில் வீட்டோ அதிகாரமுள்ள ரஸ்யா, சீனா ஆகிய நாடுகளும், தற்காலிக உறுப்புரிமை கொண்ட இந்தியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. பாதுகாப்புச் சபையின் மொத்த உறுப்பினர் நாடுகளான பதினைந்து நாடுகளில் ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்டவையாகவும், மேலும் பத்து நாடுகள் இரண்டு வருட உறுப்புரிமை அடிப்படையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் இணைத்துக் கொள்ளப்படும் நாடுகளாகவும் உள்ளன. இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் நிபுண…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-