ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010 இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுபியுள்ளார். இந்த கடிதத்தில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசியதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அக்கடிதத்தில், எனது இலங்கை பயணத்தின் போது இலங்கை தமிழர்கள் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் விவாதித்தேன். என்றே குறிப்பிடபட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும். இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகளை தொடங்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த…
-
- 0 replies
- 618 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாக, இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் அவ்டாஸ் கௌஷல் தெரிவித்துள்ளார். டேராடூனைத் தளமாக கொண்டு செயற்படும், அவ்டாஸ் கௌஷல், இந்தியன் எக்ஸ்பிரசுக்கு தொலைபேசி மூலம் அளித்த செவ்வியிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். எனினும், சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து இன்னமும் எழுத்து மூலமான எந்த வேண்டுகோளும்…
-
- 3 replies
- 427 views
-
-
கண்டியில் முப்படைகளும் குவிப்பு – திரும்பிய திசையெங்கும் கவசவாகனங்கள் கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். “சிறிலங்கா இராணுவத்தினர் 2500 பேரும், கடற்படையினர் 600 பேரும், விமானப்படையினர் 30 பேரும், பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு உதவத் தயார் நிலையில் மேலும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். படையினர் பாதுகாப்புக்கு நிறுது்தப்பட்ட பின்னர் வன்முறைகள் தணிந்துள்ளன. சட்டத்தை மீறுகின்ற எவர் மீதும் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம். …
-
- 3 replies
- 548 views
-
-
அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை! அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போதே, 2ஆம் திகதி எதிர்ப்பில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1304807
-
- 0 replies
- 484 views
-
-
வவுனியா நாவற்குளம் பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி முன்னேற முற்பட்ட சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பீரங்கி குண்டுத் தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை நண்பகல் நடத்தியவாறு படையினர் முன்னேற முற்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் தமது நடவடிக்கையினைக் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளனர்.
-
- 0 replies
- 956 views
-
-
சனி, ஆகஸ்ட் 16, 2014 - 05:29 மணி தமிழீழம் | அகக்கீரன், ஐரோப்பா சாட்சியங்கள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விகள் உள்ளடக்கிய கேள்விக்கொத்துப் படிவங்கள் உள்ளே! இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழுவின் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர். தற்போது சாட்சியங்கள் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து. அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முக…
-
- 0 replies
- 280 views
-
-
ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது: உலக சுகாதார நிறுவனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைFACEBOOK அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த …
-
- 1 reply
- 425 views
-
-
மகிந்த ராஜபக்சவின் இங்கிலாந்து பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயருக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகிந்தவின் இங்கிலாந்து பயணமானது இந்தியாவின் உதவியைப் பெறுவதற்கானது என்று ஜோன் ஹன்சன் பெயளர் கூறியதாக நோர்வே அரச வானொலி கருத்து தெரிவித்திருந்து. இது குறித்து சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: எமது அரச தலைவரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த பௌயருக்கு உரிமை இல்லை. அனுசரணையாளர்களுக்குரிய வரம்புகள் மீறப்படுகின்றன. இருநாட்டு தலைவர்களிடையே விவாதிக்கப்பட்ட விடயம் குறித்து எமக்கு எதுவும் தெரியாது என்றார் கேகலிய ரம்புக்வெல. ஊடக அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்…
-
- 0 replies
- 843 views
-
-
யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே விநோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுத…
-
- 12 replies
- 1.2k views
-
-
இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் பொருட்டு சமாதானப் பேச்சுக்களை உடன் ஆரம்பிக்க வேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும். ஆயுதங்களை கீழே வைக்காமல் சமாதானப் பேச்சுவார்த்தை சாத்தியமாகாது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்சமாதானம் என்ற சொல்லை நான் கூற மாட்டேன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாம் கடல், தரை, வான் வழிகளில் செல்கின்ற போது எமக்கு அச்சுறுத்தலோ இடையூறோ இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். எம்மை தாக்குகின்ற போது நாம் மீண்டும் தாக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த பூமியும் இல்லை நாடும் இல்லை. ஆனால் பல உயிர்களைப் பலி கொடுத்து நாம் அதனை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோ…
-
- 5 replies
- 1.6k views
-
-
பலாலி விமான நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த உத்தேசம்:- 29 டிசம்பர் 2010 Bookmark and Share உள்நாட்டு விமான சேவைகளை விரிவுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான சேவைகளை விரிவுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை தண்ணீர்pல் இறங்கும் முதலாவது விமான சேவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் புத்தளம் களப்பில் ஆரம்பிக்கப்படும். எதிர்காலத்தில் நுவரெலியா, கொக…
-
- 0 replies
- 231 views
-
-
ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – உறுப்பினரை நீக்க முடிவு? அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையில் ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொத்துவில் பிரதேசசபையில் ஐதேக ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு அளித்திருந்தனர். பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ஐதேகவுக்கு விட்டுக் கொடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதி தவிசாளர் பதவியை பெற்றிருந்தது. சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இ…
-
- 0 replies
- 219 views
-
-
புனர்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது! செவ்வாய், 04 ஜனவரி 2011 11:05 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சமூகத்தில் மீண்டும் கலப்பதில் தாம் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பி.பி.ஸி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகள் சிலர் பொலிஸாரின் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதேநேரம் இவ்வாறு மீண்டும் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு கூறுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் 11 ஆயிரம் வி…
-
- 0 replies
- 873 views
-
-
கடந்த வருடம் 05.09.2013 அன்று தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக ஜெனிவாவில் தீயினில் தன்னையே ஆகுதியாக்கினார் .http://youtu.be/2cVbbTDjIkw சுவிஸ் சிசன் நகரில் வசித்து வந்த 35 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்த காலந்தொட்டு இவர் எந்தவொரு ஒரு தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும் தவறவிட்டதில்லை. அவரிடம் எந்த நேரத்திலும் தலைவரின் படமும், தேசியக் கொடியும் எப்பொழும் இருக்கும். அவர் தீக்குளிப்பதற்கு முன்னதாக தந்தையுடன் கைபேசியில் …
-
- 6 replies
- 458 views
-
-
சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றியது!! சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றியது!! சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது. புதிய தவிசாளராகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கந்தையா வாமதேவன் 23 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனியைச் சேர்ந்த கந்தையா சதீஸ்வரன் 6 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். …
-
- 1 reply
- 390 views
-
-
யாழ். கோட்டை அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் சின்னங்கள் மீட்பு * Sunday, January 9, 2011, 2:52 * சிறீலங்கா யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருவதாக யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர்- பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் : போர்த்துக்கேயர், சேர, சோழர் காலத் தொல்பொருட்களும்- யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத் தொல்பொருட்களும், பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த நாணங்கள் கோட்டை வாணிபத் தலமாக இருந்ததை நிரூபிக்கின்றன. இப்போது கோட்டை வாசல் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
புத்த ஜயந்தி கணிப்பீட்டு முறையில் பிழையிருப்பதாக மல்வத்து பீடாதிபதி அதிருப்தி:- 15 ஜனவரி 2011 புத்த ஜயந்தி ஆண்டு கணிப்பீட்டு முறையில் பிழையிருப்பதாக கண்டி மல்வத்து பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த ஆண்டு கணிப்பீட்டு நடவடிக்கைகளை பௌத்தர்கள் சரியான முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். கௌதம புத்தர் முக்தி அடைந்த நாள் முதல் பௌத்த ஆண்டு கணிப்பீடு செய்யப்படுவதாகவும், உண்மையில் கௌதம புத்தர் துறவறத்தை ஆரம்பித்த காலம் முதல் பௌத்த ஆண்டு கணிப்பீடு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். குருணாகலில் நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இத…
-
- 0 replies
- 372 views
-
-
Fighters from the Karuna group on patrol in eastern Sri Lanka. The organisation is blamed for abducting children as young as 12 and forcing them into battle (Julia Drapkin/AP) Men in black arrive in a white truck and children disappear - By Jeremy Page A shadowy group is blamed for forcing young people to fight in Sri Lanka THE white van came in broad daylight, as it always does, cruising through the village like a hungry predator to claim another part of Sri Lanka's youth. Sundari knew that she would never see her 15-year-old son again after the men in black dragged him into the vehicle and sped away from her home near the eastern city of Battical…
-
- 1 reply
- 1.2k views
-
-
கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை புதிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள், சாதி வெறியர்கள், பிள்ளை பிடிகாரர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் சித்தரிப்பதில் புலியெதிர்ப்பாளர்கள் வெகுவாக முயன்று அதில் ஓரளவு வெற்றியுங் கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய உரையாடல்கள் அவசியமாகின்றன. புலிகள் தங்கள் மீதான விமர்சனங்களை எதேச்சாதிகாரப் போக்குடன் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து புலியெதிர்ப்புத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வந்த புலம்பெயர்ந்த, பெயராத “அறிவுஜீவிகள்” புலிகளின் வீழ்ச்சியுடன் அதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ”ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கமாட்டா”என்பதற்க…
-
- 6 replies
- 2.9k views
-
-
மக்கள் நம்பும் வகையில் புதிய அமைச்சரவை ஒவ்வொருவரதும் தகுதியை ஆராய்வேன் என்கிறார் ஜனாதிபதி நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையிலான புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். புதிய அமைச்சரவையை நியமிக்கும்போது அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்றவர்களின் சர்வதேச பிரதிபலிப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு பி.பி. சி. சிங்கள செய்தி சேவைக்கு நேற்று முன்தினம் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 250 views
-
-
ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு கிடைக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD SRI LANKA இலங்கையின் 75வது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.…
-
- 6 replies
- 530 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “வியாபாரத்துக்கான திறவுகோல்” எனும் வர்த்தகக் கண்காட்சியை 40,000 க்கும் அதிகமானோர் கண்டுகளித்ததாக, யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத் தலைவர் பூரணச்சந்திரன் தெரிவித்தார்.
-
- 0 replies
- 693 views
-
-
வடக்கு மாகாணசபையில் சிங்களத்திலும் நடந்த விவாதம்! [Friday 2014-09-26 10:00] வடக்கு மாகாணசபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் விவாதத்தின் போது அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அன்ரனி ஜெகநாதன், அஸ்மின், ஆனோல்ட், லிங்கநாதன் , ஜெயதிலக, தர்மபால மற்றும் முதலமைச்சர், அவைத்தவைலர் ஆகியோருக்கு இடையில் பல விடயங்கள் தொடர்பில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. மாகாணசபை எதிர்க்கட்சியினர் கேள்விகளைக் கேட்டு மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு தேடிக்கொண்டிருந்தனர். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கொதித்தெழுந்து பதில்களை வழங்கினர். இவர்கள் அனைவரும் தமிழில்…
-
- 0 replies
- 327 views
-
-
சுதந்திரக் கட்சியின் ‘16 பேர் அணி’க்கு அழைப்பு இல்லை கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்புகள் அனுப்பப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஐதேக கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களுக்கும் நேற்று அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அண்மையில் கூட்டு அரசாங்கத்தை விட்டு விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்றைய நிகழ்வில் பங்கேற்பர் என்று அந்தக் கட்சியின் அமைச்சரான மகிந்த அமரவீர கூறியிருந்தார். …
-
- 0 replies
- 276 views
-
-
சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் – சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய சிக்கல் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லை குறிக்கும் வகையில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய தொடர்ந்து போராடிவரும் உறவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. முல்லைத்தீவு இராணுவ முகாமில் பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் சரணடைந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரையாவது இராணுவம் காணாமல் ஆக்கியுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமையை சட்டத்தரணிகளினால் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு கிடைத்து மூன்று நாட்களுக்குப் பின்னர் முல்லைத்தீவுக்குச் சென்ற காணா…
-
- 0 replies
- 491 views
-