ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143475 topics in this forum
-
நாடு கடந்த தமிழீழ அரசின் விளக்க கோவை வெளியீடு: ஜெனீவாவில் செயலகம்; புதிய இணையத் தளம்; ஏப்ரலில் தேர்தல் ......புதினப்பலகை.... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான 135 பிரதிநிதிகள், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக அதற்கென அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளோம் என்பதனை ஏற்கனவே தங்களுக்க…
-
- 11 replies
- 1.2k views
-
-
ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடிஞ்சா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம்.ஒருக்கா ஏசியன் டீமுல கப்டினாக கூட இருந்தன். ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினா இருந்தன். கப்டினா ஆக முடியேல்ல. பட் அதுக்கு வன் ரீசன் எனக்கு நல்லா சிங்களம் தெரியும். டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கோணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடனும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு , தமிழன் சிங்களத்திலயும் சிங்க…
-
- 0 replies
- 551 views
-
-
கொழும்பு - செட்டியார் தெரு விநாயகர் ஆலயத்தில் விஸ்வ இந்து பரிசத்தின் ஆவணி சதுர்த்தி விழா ஆரம்பமாகியது. குறித்த விழாவின் பூஜை வழிபாடுகள் நேற்று காலை இடம்பெற்றதுடன்,தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் நடத்தப்படட்டது. அத்துடன் தொடர்ந்தும் 5 நாட்கள் பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளது. மேலும், இந்த இறைவழிபாட்டில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர். http://www.tamilwin.com/religion/01/156212?ref=home-feed
-
- 7 replies
- 896 views
-
-
அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்! அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீதி அமைச்சரின் வடக்கு வருகையானது தங்களது ஆட்பலத்தின் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்தினுடைய மக்களையும் தரிசித்து வருகின்றார்கள். வடக்கு க…
-
- 0 replies
- 230 views
-
-
காணாமற்போனோர் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்க இந்தமாத நடுப்பகுதியில் விசேட இணையத்தளம் ஒன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது என காணாமற் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்தார். அத்தோடு, இம்மாத இறுதிக்குள் வடக்கு, கிழக்கு போன்ற பகுதிகளுக்கு நேரடியாக பயணத்தை மேற்கொண்டு தகவல் திரட்டப்படவுள்ளதாகவும், காணாமற்போனோரது உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துக் கொண்டு வருகின்றன. முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றுடன் (நேற்றுடன்) முடிவடைந்த…
-
- 1 reply
- 340 views
-
-
கீதா குமாரசிங்க தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தனியார் வைத்தியசாலையின் அவர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் திடீரேன ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் எரிவாயு சிலிண்டரின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தீ விபத்தில் கீதா குமாரசிங்கவின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/23915
-
- 0 replies
- 378 views
-
-
சர்வதேசத்தை நாடினால்... வரும் விளைவுகளை, அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கர்தினால் எச்சரிக்கை வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை எடுத்துவருகின்றது. குறித்த நடவடிக்கை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மேலும் தாம் சர்வதேச உதவியை நாடினால், இலங்கை அனுபவிக்க வேண்டிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அத்தோடு ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு அவர் கண்டனம் வெளியிட்டார். சட்டமா …
-
- 2 replies
- 575 views
-
-
‘அலோசியஸ் தொடர்பில் தகவல் இல்லை’ பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பில் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லையென, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஆணைக்குழுவின் கவனத்துக்கு நேற்று (06) கொண்டுவந்தார். திறைச்சேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நேற்றைய விசாரணையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு, ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல நாட்கள் முயற்சிகளை மேற்கொண்டனர், அவருடைய காரியாலயத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் சென்றிருந்…
-
- 2 replies
- 863 views
-
-
ட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது கண்டி டிரினிடி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவிற்கு கடந்த 9ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைப்பெற்ற சிங்க இரவு விருது விழாவின் போது “டிரினிடி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். 125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் டிரினிடி கல்லூரி பழைய மாணவர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்க இரவு நிகழ்ச்சியின் போதே பல்வேறு துறைகளிலும் சிறந்த சேவைகளை ஆற்றிய ட்ராவிஸ் சின்னையா உட்பட கல்லூரியின் 14 பழைய மாணவர்களுக்கு "டிரினிடி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்படை தளபதி கூறுகையில், குறித…
-
- 0 replies
- 259 views
-
-
யாழ் இந்துக்கல்லூரியில் சிங்கள பாடத்திற்கு பெளத்த துறவி நியமனம் Posted on February 22nd, 2010 in செய்திகள் சிங்களபாடம் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருந்த பொழுதிலும் கடந்தகாலங்களில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் இந்தப்பாடம் கற்பிக்கப்படுவதில்லை தற்போது மீண்டும் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான ஆசிரியர் நியமனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு தற்போது சிங்கள பாடக்கற்பித்தலுக்காக பெளத்ததுறவி ஒருவர் நியமனம் பெற்றிருக்கிறார் குறித்த ஆசிரியர் நேற்று அதிபரை சந்தித்து தமது நியமனம் குறித்தும் தங்குமிட வசதி தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக தெரியவருகிறது. சிங்களபாடம் கற்பிக்க ஆசிரியர் நியமிக்கப்படுவது சாதாரண விடயம் என்றபொழுதிலும் வரலற்று…
-
- 9 replies
- 1.3k views
-
-
மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழர்களுக்கு இருக்கின்றதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இவ் விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும். அரசாங்கத்தின் கபடத்தனத்தினை தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவத்தில் அரசாங்கம் சுயாதீனமான பரிசோதனைகளை நடத்துவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் விடயத்தில் அரசாங்கம் ஏன் இவ்வாறாக நடந்து கொள்கின்றது. இன்று தமிழர்களு…
-
- 0 replies
- 312 views
-
-
அகில இலங்கைச் சைவ மா நாடு யாழ்ப்பாணத்தில் இன்று அரம்பம்! அகில இலங்கைச் சைவ மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று யாழ்.சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் ஆரம்பமாகியது. சைவபரிபாலன சபையின் ஏற்பாட்டில், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பல சமயப் பெரியார்கள் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் ஆசியுரை, சிறப்புரை, கலைநிகழ்வுகள் கௌரவிப்புக்கள் என்பன இடம்பெற்றன. இந்த சைவ மாநாடு நாளையும் நாளை மறுதினமும் இட…
-
- 1 reply
- 860 views
-
-
எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு – அகில இலங்கையில் முதல் இடம் பிடித்த யாழ் மாணவன் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்த தமிழ்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா, அப்பா மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமே தனது வெற்றிக்கு காரணம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் க…
-
- 5 replies
- 403 views
- 1 follower
-
-
அமைச்சர்களை குறைக்க ஏன் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவேண்டும்? ரணில் கேள்வி அரசாங்கத்தில் 106 அமைச்சர்களும், அமைச்சரவையில் 50 அமைச்சர்களும் இருப்பதாகவும் ஏனையவர்கள் அமைச்சரவை உரிமையற்ற அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த 106பேரும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் ஒருவருக்கு 5 வாகனங்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற அனுமதி இன்றி மாதாந்தம் தங்களது சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவால் அதிகரித்துக்கொண்டுள்ளதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இவற்றை குறைக்க ஏன் அடுத்த தேர்தல் முடியும் வரை இருக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அதிபர் பிரேமதாஸ செய்தத…
-
- 0 replies
- 534 views
-
-
வடக்கு - தெற்கு இனவாதிகளிடையே இரகசிய தொடர்பை அம்பலப்படுத்திய மனோ நாட்டில் இனவாதத்திற்கு உரமூட்டுவதற்காக வடக்கிலுள்ள இனவாதிகளுக்கும், தெற்கிலுள்ள இனவாதிகளுக்கும் இடையே உத்தியோகபூர்வற்ற உடன்படிக்கைகள் காணப்படுவதாக தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சகவாழ்வு பற்றி தெரியாத இனவாதிகளே ஐ.நா பொதுச் சபை அமர்வில் ஸ்ரீலங்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் உரை நிகழ்த்தவுள்ள நிலையில் அங்குகூடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையர் எம் அடையாளம், பல இனங்கள் எம் சக்தி என்ற தொனிப்பொருளில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க விழிப்புணர்வு நடவடிக்கை பதுளை…
-
- 0 replies
- 366 views
-
-
விடுதலைப் புலிகளை அழித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது முழு நாட்டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், ஜெனீவா அழுத்தங்களையும் நாட்டில் பிரிவினை வாதத்தினையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே ஏற்படுத்துகின்றது. சர்வதேச பிரச்சினைகள…
-
- 5 replies
- 605 views
-
-
''பரம இரகசியம்'' மஹிந்த வீட்டில் கத்தியுடன் கைதானவர் நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கொழும்பு - விஜேராம வீட்டுக்குள் கத்தியுடன் பலாத்காரமாக உள் நுழைய முயன்ற இளைஞரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார். பலாங்கொடையை சேர்ந்த 24 வயதுடைய ஜயமால் வீரசிங்க எனும் இளைஞரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று முன் தினம் கொழும்பு விஜேராம - பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் உள் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அங்க…
-
- 0 replies
- 254 views
-
-
புத்தாண்டுக்கு நிவாரணம் – இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை, முன்வைக்க தயாராகின்றது அரசாங்கம்? தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்காக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச செலவினத்தை அதிகபட்சமாக குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது. அரச செலவினத்தில் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் செலவினங்களும் இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சர்வ கட்சி மாநாட்டில் புதிய வரவு செலவுத் திட்டம் கு…
-
- 0 replies
- 164 views
-
-
19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தது பிழை என்று இப்போது உணர்கின்றோம் மகிந்த அணி உறுப்பினரின் ஆதங்கம் இது மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு இந்த அரசால் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் நாம் மகிந்தவுக்கு எதிராக மிகப் பெரிய பிழையைச் செய்துவிட்டோம். இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: மக்களின் ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாம் நீதிமன்றம் சென்றோம். உள்ளூராட்சி சபைத் தேர்தலி…
-
- 0 replies
- 548 views
-
-
வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம்... உள்ளிட்டவற்றில், நடமாட தடை – அதி விசேட வர்த்தமானி வெளியானது! ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாடுவதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் பொது வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம் உள்ளிட்டவற்றில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதிகளில் நடமாடுவதாயின், பாதுகாப்பு அமைச்சின் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரின் அனும…
-
- 0 replies
- 158 views
-
-
மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்பு மட்டக்களப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் தேர்தல் பரப்புரை நிகழ்வும் பேர் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்ற நிகழ்வில் தமிழ் தேசிய ஆதரவாளர் பேர்எழுச்சியுடன் ஆர்வங்காட்டி பங்கெடுத்து வருகின்றனர். அங்கு உரையாற்றிய இரா. சம்பந்தன் இலட்சக்கணக்கான உயிர்களின் விலைகொடுப்பினை அடுத்து இன்றைய காலகட்டத்தின் தமிழ் தேசிய இனம் தமது விடுதலைக்கான மற்றொரு கட்டத்தில் கால் வைத்துள்ளது என தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற நிகழ்வு தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் ராசமாணிக்கம் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. மு…
-
- 1 reply
- 953 views
-
-
யாழ்.குடாநாட்டுப் பகுதியில் வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சமூக விரோதக் குழுவான டில்லுக் குழுவினரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படிக் குழுவினரில் கொக்குவில், தலையாழி, கேணியடி, பிடாரி கோவிலடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயதிற்கும் 25 வயதிற்கும் உட்பட்ட 9 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இராணுவச் சீருடைய, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும் தொகையான ஆயுதங்களும் மீட்கப்படுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை முளாய்ப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இச் சம்பவத்தில் அதிகமானவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். மேற்படிச் சம்பவ…
-
- 0 replies
- 560 views
-
-
சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்ற சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்ற 'பிக் மீ' என்கின்ற நிறுவனம், மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு பெரும் த…
-
- 0 replies
- 362 views
-
-
26 அமைச்சர்களின் இராஜினாமா.... வர்த்தமானி, மூலம் அறிவிப்பு! 26 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வெளிவிவகார, கல்வி, நெடுஞ்சாலைகள் மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளுக்கு நான்கு அமைச்சர்களை நியமிப்பதற்கான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275696
-
- 0 replies
- 181 views
-
-
விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் களமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க முயற்சிக்கும் பாதை குறித்த சந்தேகம் தமிழ் மக்களிடம் அதிகரித்தே வருகின்றது. இந்திய நிகழ்ச்சி நிரலுடன் களம் இறங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முன்னுக்குப் பின் முரணாக எத்தனையோ கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இன்றுவரை இந்தியா குறித்த தமது கருத்துக்களை மாற்ற முடியாதவர்களாகவே உள்ளனர். «தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயம் பற்றி குறிப்பிட்டதை இந்தியா விரும்பாது. இந்தியாவை நிராகரித்து அரசியல் தீர்வை சிந்திப்பது ஆரோக்கியமானதாக இருக்காது» என்ற கருத்தை தமிழ் தேசிய கூட…
-
- 9 replies
- 958 views
-