ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு தழுவிய 14ஆவது சனத்தொகை மதிப்பீடு ஆரம்பம் [ Wed, Mar 30, 2011, 05:40 pm ] 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் 14ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் முதலில் நாடு முழுவதும் காணப்படும் கட்டடங்கள் கணக்கிடப்படுவதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள நிறைவேற்றுப் பணிப்பாளர் சுரங்ஜனா வித்யாரட்ன தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிவரை இந்த நடவடிக்கை இடம்பெறுவதால் அதிகாரிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 2011ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் மதிப்பீடு என்பன 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளன…
-
- 0 replies
- 777 views
-
-
வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோற்கடித்து கொப்பேக்கடுவவை வெற்றி பெறச் செய்தவர்கள் என்றுதெரிவித்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்று ஜனாதிபதியானார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ தோல்வியடைந்தார். இதே தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ரோஹண விஜேவீர, கொல்வின் ஆர். டி. சில்வா, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் போட்டியிட்டனர். குமார் பொன்னம்பலம் நான்காவது இடத்தைப் பிடித்தார். ரோஹண மூன்றாம் இடத்தைப் ப…
-
- 2 replies
- 911 views
-
-
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகளின் விளைவாகவே பிரபாகரன் உருவானார்! அப்பாத்துரை எம்.பி நாடாளுமன்றில் உரை! புதன், 08 டிசம்பர் 2010 17:45 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப் படுகொலைகளின் விளைவாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவானார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூறினார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார். 1983ஆம் ஆண்டின் படுகொலைகளைத் தொடர்ந்தே தமிழ் மக்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்றும் இவர் குறிப்பிட்டார். tamilcnn
-
- 0 replies
- 971 views
-
-
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப் படுகொலைகளின் விளைவாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவானார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூறினார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார். 1983ஆம் ஆண்டின் படுகொலைகளைத் தொடர்ந்தே தமிழ் மக்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்றும் இவர் குறிப்பிட்டார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15340:1983-----------&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 2 replies
- 792 views
-
-
1983 ஆம் ஆண்டு கலவரத்தில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற கலவரங்களில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் வகையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு இதனை அறிவித்தது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் இறந்த, காயமடைந்த மற்றும் காணாமற்போன தமிழர்களின் எண்ணிக்கையை அவர்கள் வசித்த மாவட்டங்களின்படி தனித்தனியாக தெளிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடம் கோரியிருந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு …
-
- 11 replies
- 646 views
-
-
இதுவரை காலமும் சிறீ லங்காவில நடைபெறும் போரினால ஆக 70,000 பேர்தான் இறந்து உள்ளார்கள் என்று சர்வதேச ஊடகங்களில சொல்லப்பட்டு வருகிது. ஆனால் Washington and Harvard Medical School செய்த ஆய்வுகளின்படி இந்த எண்ணிக்கை ஆகக்குறைஞ்சது 215,000 இருக்கும் எண்டு சொல்லப்படுகிதாம். மேலும் இந்த எண்ணிக்கை 338,000 வரை கூட இருக்கலாம் எண்டு கூறப்பட்டு இருக்கிதாம். பி/கு: இந்த செய்தி Asiantribune.com, Sunday Leader, TamilCanadian.com ஆகிய ஊடகங்களில எழுதப்பட்டு இருக்கிது. யாழில ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கிதோ தெரியாது.
-
- 2 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 23 JUL, 2023 | 06:22 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது. ஒரு சில அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தோளில் சுமந்து இனக்கலவரத்தை தோற்றுவித்தார்கள் என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் 'மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார…
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
1983 கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் - அரசாங்கம்: 16 அக்டோபர் 2015 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். திகன ரஜவல்ல பிரதேசத்தில் 83ம் ஆண்டு கலவரத்தில் இடம்பெயர்ந்த 134 குடும்பங்கள் அம்பலோட் தோட்டத்தில் வசித்து வருகின்ற போதிலும், கடந்த கால அரசாங்கங்கள் அவர்களுக்கு சட்ட ரீதியாக காணி உறுதிகளை வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காணி உறுதிகள் வழங்கப்படாத காரணத்தினால் இவர்களினால் நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள…
-
- 1 reply
- 451 views
-
-
1983 ஜுலை நெஞ்சில் காயாத இரத்தம் -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தேசப்பிரியன் கறுப்பு ஜீலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து இருப்பத்தி எட்டு வருடங்களாகின்றன. கறுப்பு ஜீலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜீலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜீலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது. இலங்கைத்தீவும் ஈழமும் வெடித்து இ…
-
- 0 replies
- 489 views
-
-
இதேபோலொரு ஜூலையில்தான் 1983இல் ஈழப்போராளிகளான குட்டிமணி மற்றும் தங்கத்துரை வெலிக்கடை சிறையில் வைத்து கண்கள் பிடுங்கி சித்திரைவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். அந்தப் படுகொலை நடந்ததின் பின்னர் ஈழப்போராட்டத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் உருவாகின. எழுச்சிகளும் வீழ்சிகளும் மாறிமாறி நிகழ்ந்திருக்கின்றன. இதைப்போலவே இந்த வருட ஜூலையில் விடுதலை கோரி போராடிய நிமலரூபன் சிறைச்சாலைக்குள் வைத்து நாராய் கிழிக்கப்பட்டு மிகக்கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். சிங்கள அரசின் தொடரும் அநீதி ஆட்சியில் ஜூலை மாதங்கள் எல்லாமே ஈழத் தமிழினத்திற்கு படுகொலை மாதங்களாக மனவடுவை தருகின்றன. கறுப்பு ஜூலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து இந்த ஜூலையுடன் முப்பது வருடங்களாகின்றன. கறுப்பு லை…
-
- 0 replies
- 415 views
-
-
1983 முதல் 2012 ஜுன் வரை 98 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுரேஷ் எம்.பி. தகவல் 983 ஆம் ஆண்டு முதல் 2012 ஜுன் 29 ஆம் திகதி வரையில் 98 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களை எட்டுகின்ற நிலையில் இதுவரையிலும் விடுவிக்கப்படாத 810 தமிழ் அரசியல் கைதிகள் நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இயலாவிட்டாலும் பிணையில் விடுவிப்பதற்காவது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று சபையில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். 1983 ஆம் ஆண்டு முதல் 2012 ஜுன் 29 …
-
- 0 replies
- 404 views
-
-
[size=4]யூலை 1983ஐ விட மே 2009ல் என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆழமாகப் பார்க்கவேண்டும். அதாவது இவ்வாறானதொரு இனப்படுகொலை இடம்பெறவேயில்லை என சிலர் பரப்புரை மேற்கொள்கின்றனர். அத்துடன் இதில் எவரும் கொல்லப்படவில்லை எனவும் உறுதியாகக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது முற்றிலும் பொய்யானதாகும். இவ்வாறு COLOMBO TELEGRAPH என்னும் ஊடகத்தில் Dr. Pradeep Jeganathan எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 1983 யூலையில் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறிலங்கா இராணுவப் படைகளால் மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை ஆகிய இரு மிகப் பெரிய நிகழ்வுகளால் சிறிலங்காவின் நவீன …
-
- 1 reply
- 586 views
-
-
1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் வீரகேசரி நாளேடு 7/23/2008 9:30:23 AM - எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்…
-
- 0 replies
- 623 views
-
-
1983ம்ஆண்டுமுதல் யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு 1983ம் ஆண்டு முதல் யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மட்டுமே விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு முதலே யுத்தம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 615 views
-
-
1983ல் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் தானே? அது தான் இன்று எங்களுக்கு நடக்கின்றது என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கண்டி, அக்குறனையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து அக்குறனை, 8ம் கட்டையிலுள்ள முஸ்லிம் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”அக்குறனைப் பிரதான சந்தியில் உள்ள கடைத் தொகுதித் தொடர் நெருப்பூட்டபட்டதை ஆயுதம் தரத்தவர்கள் பாரத்துக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில முஸ்லிம் இளைஞர்கள் கற்களை வீசத் தொடங்கியதுடன் அவ்வாயுதம் தரித்தவர்கள் நெருப்பூட்டியவர்களை நோக்கி ” அவர்கள் தாக்குகின்றார்கள், நீங்களும் ஆயுதங்களை எடுத்து வாருங்கள்” என துவேசமூட்டுகின்றனர். இது தான இந்த…
-
- 9 replies
- 1.2k views
-
-
[size=6]கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு[/size] [size=3][size=4] [/size] [size=4]வடபகுதியில் உள்ள இராணுவப்படையணிகள் 1983 ஆம் ஆண்டில் நிலைக்கொண்டிருந்த இடங்களில் மாத்திரமே வரையறுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.[/size] [size=4]நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கை கூட்டமைப்பின் உள்நோக்கத்தை வெளிகாட்டியுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக திவயின தெரிவித்துள்ளது.[/size] [size=4]1983 ஆம் ஆண்டு வவுனியா, பலாலி இராணுவ முகாம்களை தவிர ஏனைய முகாம்கள் அகற்றப்பட்டதால், விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலைய…
-
- 0 replies
- 702 views
-
-
[size=4]By V.Priyatharshan 2012-11-06 14:10:47[/size] [size=4]இலங்கைக்கும் தென் கொரியாவின் தலைநகர் சியோலுக்குமிடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற தென் கொரியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொழும்பிற்கும் தென் கொரியத் தலைநகர் சியோலுக்குமிடையிலான நேரடி விமான சேவையை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். கடந்த 28வருடங்களுக்கு முன் கொழும்பிற்கும் சியோலிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இடம்பெற்றது. எனினும் சில காரணங்களினால் 1984ஆம் ஆண்டுடன் இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது. …
-
- 1 reply
- 565 views
-
-
1984இல் மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றி கப்டன். லிங்கத்தின் வீரவணக நாள் Friday, April 29, 2011, 3:26 வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார். 1980ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராக செய்ற்பட ஆரம்பித்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத வேளையில், விடுதலைப் புலிகளை வேட்டையாடவென இரகசியப்பொலிசார் மோப்பமிட்டுக் கொண்டிருந்தவேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிக்க சிரமங்களுக்கிடையில் செய்தார். 1981இல் முழு நேர உறுப்பனராக இணைந்து கொண்டார்.…
-
- 3 replies
- 1.2k views
-
-
1987 அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் [sunday, 2011-02-27 12:24:57] இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசிடம் இந்தியா அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1987ல் செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை இலங்கை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக இந்தியா கருதுகிறது. வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வ…
-
- 1 reply
- 953 views
-
-
-
- 0 replies
- 891 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை திருத்தம் ஏதுமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 8-ந் தேதி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைக்கான ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவின் கூட்டம் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைமை நிர்வாகி சுப. வீரபாண்டியன், திமுகவின் மு.க. ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …
-
- 1 reply
- 441 views
-
-
1987ஆம்ஆண்டு ஈகைக்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் வீரச்சாவைத் தழுவியபின்னர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரை http://astra.lunarpages.com/~tamiln2/VOTRA...dar%20urai.smil நன்றி: புலிகளின்குரல்
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான், இஸ்ரேல், பிரித்தானிய சிறப்புப்படை அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வந்து கொடுத்த பயிற்சி மற்றும் வகுத்துக் கொடுத்த தந்திரோபாயத்தினால் தான், 1987ல் வடமராட்சியில் சிறிலங்கா படைகளால் 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையில் வெற்றி பெற முடிந்தது. இவ்வாறு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். “ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் பருத்தித்துறையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இந்தியா தலையீடு செய்திருக்கா விட்டால், சிறிலங்கா இராணுவத்தினால் யாழ்ப்பாண நகரத்தில் இருந்தும் விடுதலைப் புலிகளை அகற்றியிருக்க முடியும். துரதிஸ்டவசமாக நட்புநாடு ஒன்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா விடுதலைப்…
-
- 7 replies
- 939 views
-
-
1988ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் கொழும்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் சக மாணவன் ஒருவனது உடலைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். பின்னிரவு. சற்றுச் சில்லென்ற காற்று. "பத்மசிறி த்ரிமாவிதனாவின்" உயிரற்ற உடல் ஒரு பெஞ்சின் மிது கிடத்தப்பட்டிருந்தது. இருபது வயதான அவ்விளைஞன் கடுமையாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் என்று நன்றாகவே தெரிந்தது. ஏகப்பட்ட காயங்கள். பார்க்கப் பார்க்க வேதனைதான் கூடியது. மிகக் கவனமாக மென்மையாக அவனது வயிற்றைத் தடவிப் பார்த்தனர். வேதனைதான் கூடியது. மிகக் கவனமாக மென்மையாக அவனது வயிற்றைத் தடவிப் பார்த்தனர். விலாவெலும்பெல்லாம் நொறுங்கிப் போயிருந்தன. உடலின் பல இணைப்புக்கள் முறிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிகரெட்டை வைத்துத் தீய்த்திருந்தார்கள். தலையி…
-
- 0 replies
- 605 views
-
-
தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். http://www.meenagam.org/?p=17390 http://www.meenagam.org/?p=17390
-
- 0 replies
- 1.2k views
-