Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பி…

    • 13 replies
    • 1.5k views
  2. யாழ்ப்பாணம் ஆரியகுளத்துக்குள் 3 வயது தென்பகுதிச் சிறுவன் ஒருவர் இன்று திங்கள் கிழமை காலையில் தவறி வீழ்ந்துள்ளார். தேடுதல் மேற்கொண்டு மீட்ப்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.குறித்த சிறுவன் மயக்கமுற்ற நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். அருகில் உள்ள நாகவிகாரையில் புரண பர்ணமி தினமான இன்றுதென்பகுதியிலிருந்து வழிபாட்டை மேற்கொள்ள வந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் பிள்ளையே தவறி வீழ்ந்துள்ளது காப்பற்றப்பட்ட சிறுவன் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். http://ttnnews.com/othernews/593-2013-07-22-12-02-00

  3. 23/06/2009, 16:49 [செய்தியாளர் தாயகன்] சிறீலங்காவின் பொருணமிய வீழ்ச்சி – புலம்பெயர்ந்த தமிழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் சிறீலங்கா அரசு பாரிய பொருண்மிய நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைத் தடுத்த…

  4. தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தேர்தல் விதிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், யாழ்ப்பாணத்தின் முதன்மை வேட்பாளரும் வடமாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சீ.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் த. குருகுலராஜா, ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=…

    • 1 reply
    • 655 views
  5. வவுனியா முகாம்களில் 2.5 இலட்சம் மக்களுக்கு வைத்தியர்கள் 50 பேர் மட்டுமே இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வைத்தியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் குணசேகரா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி ராஜபட்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா மற்றும் செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 வைத்தியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டியுள்ளது. 300 தாதிகள் பணியாற்ற வேண்டிய நிலையில் 10 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், வைத்த…

  6. சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு கீரிமலையில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்தோரிற்கான ஆத்ம சாந்திவேண்டி பிராத்தனைகள் நாளை செவ்வாய்க்கிழமை இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. கீரிமலையில் நாளை இடம்பெறும் இப்பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வுகளின் உறவினர்களினால் வன்னியில் மரணித்தவா்களுக்கான பிதிர்கடன் மற்றும் ஈமைக்கிரியைகள் செலுத்ததாவர்களுக்குமாக இந்த ஆத்மசாந்திப்பிராத்தனை நடைபெறவுள்ளது. இந்த ஆத்மாசாந்திப் பிரார்த்தனைக்காக இதுவரையில் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் “இடம்பெயர்ந்து” வந்து தங்கியுள்ளவர்களிடம் இருந்து 127 பேரின் பெயர்கள் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்து …

  7. -எஸ்.கே.பிரசாத் இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் வருகை தந்துள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப்பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன. http://tamil.dailymirror.lk/--main/78429-2013-08-11-08-58-26.html

    • 33 replies
    • 2.2k views
  8. ஒருவாரமாக குப்பை அகற்றப்படாமையினால் வீதிகளில் துர்நாற்றம் ; மக்கள் கடும் விசனம் எம்.எம்.மின்ஹாஜ் மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை அகற்றல் நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன்காரணமாக நகர வீதியோரங்களில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயமும் தோன்றியுள்ளன. கொழும்பு நகரின் குப்பைகள் பிலியந்தல கரதியான பகுதியில் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அப்பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக குறித்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. கொழும்பு நகர குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளமையினால் மக்கள் கடுமையான விசனங்களை தெரி…

  9. சிங்களக்கைக்கூலி இந்து ராமே தமிழகத்தைவிட்டு ஓடு – புஇமு பரப்புரை சிங்களர்களுக்கு கைக்கூலியாக இந்தியாவில் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வரும் இந்து ராமை கண்டித்து தமிழகத்திலுள்ள புரட்சிகர இளைஞர் முன்னணியினர் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். சிங்கள இனவெறியன் பாசிசக்கொடுங்கோலன் ராசபக்சே அரசு, இந்திய, சீன, பாக்கிஸ்தான், மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களை கூண்டோடு அழித்து தாயகநிலத்தை பறித்து, ஈழத்தமிழர்களை ராசபக்சேவின் வதை முகாம்களில் சித்திரவதை,படுகொலை செய்துவருகின்றனர். முள்கம்பி வேலிகளில் விலங்குகள்போல் அடைத்தும் உண்ண உணவின்றி, குடிநீரின்றி, ‘ஆட்டுமந்தை’போல் கட்டாந்தரையில் தமிழீழமக்கள் அல்லல் படுகின்றனர், இதை உலக ஏகாதிபத்திய நாடுகள் கைகட்டி …

    • 9 replies
    • 1.4k views
  10. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் அ.நிக்ஸன் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களும் பிடிங்கி எடுக்கப்பட்டு வரும் நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் தெரிவித்தார். சட்ட ஆட்சி, ஜனநாயகம் இல்லாத ஒரு சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பேசுவது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமெரிக்க மூத்த ஊடகவியலாளரும் தகவல் அறியும் சட்டத்தை உருவாக்கும் நிபுணரும் சட்டத்தரணியுமான கேவின் குலோட்பேக் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக இராஜதந்திரிகளுடன் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில்…

    • 1 reply
    • 349 views
  11. இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்( James Dauris ) க்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம…

  12. முடியாட்சி மன்னர் காலம் முதல் பொற் கிளி பெறுவதற்காக மன்னர் புகழ்பாடிய அரச அவைக் கவிஞர்களின் கதை தமிழர் சரித்திரத்தில் தொடர்கதையாக இருக்கிறது.அண்டிப் பிழைப்பவர்கள் என்றும் அதிகாரம் சார்ந்தே இயங்குவர்.தமிழர்கள் பூரண விடுதலை பெறும் நோக்கில் சமரசம் அற்று தனது உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் கொடுத்து ,வாழ் நாள் முழுவதும் போராடிய ஒரு மாமனிதனை ,தேவன் ஆக்கி 'பப்பாவில்' ஏற்றிய துதிபாடிகள் இன்று அட்டைகளைப் போலக் களர ஆரம்பித்துவிட்டனர்.இந்த சந்தர்ப்பவாதிகள் இதற்குக் கறுப்பு,வெள்ளை,சாம்பல் என்று நியாயாம் வேறு கற்பிக்கின்றனர்.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். தலைவன் என்பதும் முன்னணிப் போராட்டச் சக்தி என்பதும் போராட்ட அரசியலைக் குவிமையப்படுதுவதற்கான யுக்தியாக அன்றி அதை ஒரு தனிமனித…

  13. தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தார். (படஙகள் : தீப அதிகாரி) http://tamil.dailymirror.lk/--main/79315-2013-08-19-04-34-26.html

  14. வடக்கு – கிழக்கு இணைப்பு; நழுவிச் சென்ற அநுரகுமார வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் கருத்துக் கேட்டதும், ‘‘அது தொடர்பில் கருத்துக் கூறமுடியாது’’ என்று தெரிவித்து நழுவிச் சென்றார் மக்கள் விடு தலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்றுமாலை இடம்பெற்ற மேதின நிகழ்வில் இடம் பெற்றது. ‘‘வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?’’ என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதன்போது “இந்த விடயம் தொடர்பாக இப்போது எவ்வித கருத்துக்களையும் என்னால் கூற முடியாது. நான் இன்றைய கூட்டத் தில் பேசியதை மட்டும் நீங்கள் கவனத்தில் எடுங் கள்” என்று கூறிய…

    • 1 reply
    • 541 views
  15. எரிபொருள் விநியோகத்துக்கான... பொறுப்பு, சீனாவுக்கு வழங்கப்படாது – கம்மன்பில! எரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பை சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கோ வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கே எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஒப்படைப்பது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இது தொடர்பில் கலந்துரையாடல்கூட இடம்பெறவில்லை. இதனை மிகவும் பொறுப்புடனேயே கூறுகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavann…

  16. செல்வராஜா பத்மநாதன் (கே.பி)-ஐ விசாரணை செய்ய இந்தியா அனுமதி கோரும் on 08-08-2009 17:26 Published in : செய்திகள், இந்தியா கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட புலிகளின் புதிய தலைவர் கே.பி ஐ விசாரிப்பதற்கான அனுமதியை இந்தியா இலங்கையரசிடம் கேட்கவுள்ளதாக உள்துறை விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தனது பெயரை வெளிவிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பின்னர் தெரிவித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை பற்றிய வழக்கு கிட்டத்தட்ட 11 வருடங்களாக, இந்திய மத்திய புலனாய்வுத் துறையால் நடாத்தப்படுகிறது. இந்த கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களை விநியோகம் செய்தவர் …

  17. கிளிநொச்சி ஆகஸ்ட்-24: கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்த., சகலரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென, இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடுமையான யுத்தப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும், பெற்றோரை இழந்த நிலையிலும், உறவினர்களின் பராமரிப்பில் இருந்து வருகின்ற சிறுவர்களும், பாதுகாவலர்களின் பராமரிப்பில் இருந்துவருகின்ற சிறுவர்களுமே அதிகமாகத் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அண்மை நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இவ்வாறே இடம்பெற்றுள்ளன. பரந்தன் பகுதில் சிறுமி ஒருவர் தீயினால் சுடப்பட்டமை, ஜெயந்தி நகர் பகுதியில் இடம்பெற்ற துஷ்பிரயோகச் சம்பவம், பரந்தன் சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் போன்றன உறவினர்கள…

  18. இடமாற்றங்கள் எதற்கும் அஞ்சாத யாழில் யாழில் உள்ள பிரதேச செயலர் – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:- மாகாண சபையில் முறைகேடாக நடந்து கொண்ட அரச அதிகாரிகள் பலர் பூலில் போடப்பட்டுள்ளனர். இவர்களை பூலில் போடாமல் பூசாவில் போட்டால் மட்டுமே அலுவலகங்களில் இடம்பெறும் பல பிரச்சினைகளை இல்லாமல் செய்யலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் வேலைகளைச் செய்யாமல் தமது தேவைகளை மட்டும் முறைகேடாக நிறைவேற்றி வரும் இவர்களால் எப்படி யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் முன்னேறும் என்பது கேள்விக்குறியே. இவர்களை காப்பாற்றுவதற்காக சில தமிழ் அரசியல்வாதிகளும் முயற்சி செய்வது தான் கேவலமான செயற்பாடாகும். பிரதேச செயலர்களாக பதவி கிடைத்ததும் கண் மண் தெரியாமல் பல செயலர்கள்…

  19. சர்வாதிகாரிகள் எவரும் ஜனநாயக முறையிலான தேர்தல்களை நடத்துவதில்லை மாறாக தமது விருப்பங்களுக்கேற்பவே செயலாற்றுவர். ஆனால் எமது அரசாங்கம் வடக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மகாணசபை தேர்தலை நடத்துகின்றது. சர்வதிகார ஆட்சி நடக்கின்றது என எவரும் எம் மீது குற்றம் சுமத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகலில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 62 ஆவது ஆண்டுவிழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கோ, உள்நாட்டு சதிகளுக்கோ தாம் அடிபணியப் போவதில்லை. ஜனநாயகத்தை காக்கவும், வெளிநாட்டு அழுத்தங்களை முறியடிக்கவும் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான பாதையிலோ, எதேச்சாதிக்காரப் பாதையி…

  20. கிளிநொச்சியில் திருப்பி அனுப்பப்பட்ட இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள்...! கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதற்கு சென்ற 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யூலை மாதம் 06 திகதியும் அதனை அண்டிய சில நாட்களும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாம் கட்ட சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் போது இரண்டாவது தடுப்பூசி இன்றைய தினத்திற்கு திகதி குறிப்பிட்டது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசியி…

  21. கொழும்பு: இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது. திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், எஸ்.எல்.என்.எஸ். சயுரலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையால், இரு நாடுகளின் உறவுகளும் மேம்படும் என்றார். இந்திய கடலோரக் காவல் படை இந்தக் கப்பலை விக்ரஹா என்ற பெயரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்தது. மும்பையில் இந்தக் கப்பல்…

  22. இலங்கைக்கான மிகப் பெரும் ஹெரோயின் கடத்தலுடன் அரசியலுக்கும் நிழல் உலகத்திற்கும் தொடர்பு : 08 செப்டம்பர் 2013 இலங்கையில் அண்;மையில் கைப்பற்றப்பட்ட பிரவுண் சுகர் ஹெரோயின் போதைப் பொருளின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருக்கின்றதா என்பதை அறிய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தெற்காசியவில் இதுவரை கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஹெரோயின் அண்மையில் கொழும்பில் கைப்பற்றப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கொள்கலன் ஒன்றை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 03 ஆம் திகதி கைப்பற்றியதுடன் கடந்த மாதம் 30 ஆம் திகதி அதனை சோதனையிட்ட போது அதில் இருந்து 260 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்…

  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதன் முன்னர் கூறப்பட்டது போன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 6 ஆம் நாள், சிறிலங்காப் படையினரும் அதன் புலனாய்வுத்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்படவில்லை என்று கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 419 views
  24. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும’ என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். ‘எதிர்கால சந்ததியினர் துப்பாக்கியும் சயனைட்டும் ஏந்தும் நிலைக்கு அவர்களை தள்ளாதீர்கள். அவர்களின கைகளில் புத்தகமும் கொப்பியும் கொடுத்து வளவான எதிர்கால சந்ததியினரை உருவாக்க முன்வாருங்கள்’ என்றும் அவர் வேண்டுகோள் விடுததார். வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடம் சுபியான் மௌலவியின் ஏற்பாட்டில் யாழ். மாணிப்பாய் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிய…

  25. தினமும்... சுமார் 15 பில்லியன், ரூபாய் நட்டம் – விரைவில் நாட்டை திறக்க வேண்டும்: கப்ரால் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால், அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். எனவே நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது, நாட்டின் வளர்ச்சி வீதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நாட்டை முடக்குவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க வேண்டுமாயின், நாம் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் மேலும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.