ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது! - முன்னாள் எம்.பி அப்பாத்துரை விநாயகமூர்த்தி[Sunday 2015-08-30 09:00] உள்ளக விசாரணைப் பொறிமுறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது- உள்ளக விசாரணையை எதிர்க்கின்றோம். போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னமும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வரை காலமும் அரசாங்கம் பொய்யாக நடித்து வந்தது. சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பும் போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு …
-
- 2 replies
- 610 views
-
-
விசாரணையைத் தவிர்க்க அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றாரா சுசில் பிரேமஜெயந்த?AUG 30, 2015by கி.தவசீலன்in செய்திகள் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த திடீரென அமெரிக்காவுக்குச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், பெற்றோலியக் கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபா மோசடி குறித்து நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில், சக்தி, மின்வலு அமைச்சராக இருந்தவர் சுசில் பிரேமஜெயந்த. இந்த மோசடி குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்த…
-
- 3 replies
- 644 views
-
-
காணாமல்ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் மன்னாரில் அனுஸ்டிப்பு! - ஓலமிட்டு அழுத உறவுகள் [Sunday 2015-08-30 20:00] காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்கம், வட கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியன இணைந்து குறித்த தினத்தை அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்திருந்தது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி. செபமாலை அடிகளாரின் தலைமையில் நடைபெற நிகழ்வில் காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தப்பட்டது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலய மண்டபத்தில் நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த போதும் தவிர்க்கமுடியாத காரணத்தால் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள டிலாசால…
-
- 2 replies
- 375 views
-
-
-
- 4 replies
- 579 views
-
-
ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்பட்டது ஏ-9 வீதியின் ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1997ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஓமந்தையின் பிரதான வீதி ஊடான பாதை மறிக்கப்பட்டு வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மாற்று வழியூடாக இதுவரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை பொருள்களுடன் வரும் வாகனங்கள் அவற்றை சோதனைக்குட்படுத்தும் இடமாகவும் ஓமந்தை சோதனைச் சாவடி செயற்பட்டிருந்தது. மேலும் நள்ளிரவு வேளைகளில் பயணிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிர…
-
- 3 replies
- 1.2k views
-
-
சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கமாட்டார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்! [Sunday 2015-08-30 20:00] இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்ற போதிலும், மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு எதிராக எந்த சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுக்கமாட்டார் என ஜெனிவா ராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் சம்பந்தமாக வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டு வந்த யோசனைக…
-
- 0 replies
- 329 views
-
-
செப்ரெம்பர் 17ஆம் திகதி ஜெனிவாவில் உப மாநாட்டைக் கூட்டுகிறது அமெரிக்கா! [Sunday 2015-08-30 20:00] ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கைக்கு ஆதரவை திரட்டும் வகையில் செப்டம்பர் 17ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் கட்டிடத்தில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆதரவான பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ள அமெரிக்கா, செப்டம்பர் 17ஆம் திகதி ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு உத்தியோகபூர்வமற்ற இந்தக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஏற்பாடுகள் குறித்து ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரேரணையானது, இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பேரவை நடத்திய விச…
-
- 0 replies
- 254 views
-
-
சீனாவுடன் மகிந்த அரசு செய்த இரகசிய பாதுகாப்பு உடன்பாடு! - அமெரிக்கா, இந்தியா விசாரணை[Sunday 2015-08-30 09:00] மகிந்த ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவும் இந்தியாவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உயர்மட்ட ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த உடன்படிக்கையின் நோக்கம் என்ன? இதனால் தென்னாசியப் பிராந்திய வலயத்தில் அரசியல் பாதுகாப்பு அதிகார சமனிலைத்தன்மை எவ்வாறு அமையும் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் சீன நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களினால் பிராந்திய வலயத்தின் பாதுகாப்பிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் நம்புவதாக…
-
- 2 replies
- 488 views
-
-
மட்டக்களப்பைச் சேர்ந்த குறுந்திரைப்படக் கலைஞர் ரயிலில் அடிபட்டு மரணம்! [Saturday 2015-08-29 19:00] கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞர் உயிரிழந்தார். வெள்ளவத்தையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு குடும்பத்தாருடன் சென்ற இவர், வெள்ளிக்கிழமை மாலை பொழுது போக்காக தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஊடாக நடந்து சென்றுள்ளார். ரயில் இவரை மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட இவர் பாரதூரமான உட்காயங்களுக்குள்ளாகி அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு போதனா வ…
-
- 6 replies
- 819 views
-
-
ஜெனிவா அமர்வுக்கு முன்னர் மூன்று முக்கிய அறிக்கைகளை தயார்படுத்துகிறது சிறிலங்காAug 30, 2015 | ஜெனிவாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர், மூன்று முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போகச்செய்யப்பட்டது, ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளே ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன. தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்படும் இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாக விசாரணை அறிக்கைகளும், செப்ரெப…
-
- 0 replies
- 368 views
-
-
லால்காந்தவை பின்கதவால் நாடாளுமன்றம் அனுப்புகிறது ஜேவிபி! [Sunday 2015-08-30 09:00] ஜே.வி.பி.யின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னே பதவி விலகியவுடன் ஏற்படும் வெற்றிடத்துக்கு கே.டி.லால்காந்த நியமிக்கப்படவுள்ளார். ஜே.வி.பி. கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத்சந்திர மாயாதுன்னே நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்க அவர் விரும்பவில்லை என்று தெரியவருகின்றது. இதன் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் அவர், பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்துக்கு ஜே.வி.பி.யின்…
-
- 0 replies
- 442 views
-
-
இனஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சராகிறார் மைத்திரிபால சிறிசேன! [Sunday 2015-08-30 09:00] தேசிய அரசாங்கத்தில் இன ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தேசிய அரசாங்க அமைச்சரவை பெரும்பாலும் எதிர்வரும் 4 ஆம் திகதி பதவியேற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, ஜோன் செனவிரட்ன, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இவர்களுக்கு முக்கியமான சமூர்தி, நீர்வடிகால் அமைப்பு உட்பட்ட அமைச்சுக்கள் வழ…
-
- 0 replies
- 385 views
-
-
உள்ளகப் பொறிமுறை குறித்த ஆலோசனைக்காக தென்னாபிரிக்கா செல்கிறார் மங்கள! [Sunday 2015-08-30 09:00] உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமைப்பது குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தென்ஆபிரிக்கா செல்லவுள்ளார். போர்க்குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை நடத்தும் நோக்கில் உள்ளகப் விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட உள்ளது. எவ்வாறு இந்த விசாரணைப் பொறிமுறைமையை உருவாக்குவது என்பது குறித்து ஆராயும் நோக்கிலேயே விரைவில் அமைச்சர் மங்கள தென்ஆபிரிக்கா செல்லவுள்ளார். ஏற்கனவே போர்க் குற்றச் செயல் குறித்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமை தொடர்பிலான விபரங்கள் உள்ளடக்கிய ஆரம்பகட்ட அறிக்கை ஒன்றை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் ஒப்படைத்துள்ளது. போர்…
-
- 0 replies
- 306 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள். நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்புரிமைகள் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதச் சம்பளம் 54 ஆயிரத்து 525 ரூபாவாகும். அமைச்சர் ஒருவரின் சம்பளம் 65 ஆயிரம் ரூபாவாகும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் கொடுப்பனவுகள். அடிப்படைச் சம்பளம் – 54,525 போக்குவரத்து கொடுப்பனவு-10,000 உபசரிப்பு கொடுப்பனவு -1,000 செல்போன் கொடுப்பனவு – 2,000 நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் கொடுப்பனவு(ஒரு கூட்டத்திற்கு)- 500 அமைச்சர்களுக்கான கொடுப்பனவு. மாதச் சம்பளம் 65,000 பிரதியமைச்சரின் மாதச் சம்பளம்-63,500 அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு மாதாந…
-
- 1 reply
- 488 views
-
-
சர்வதேச விசாரணை நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – சம்பந்தன் கூறுகிறார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில், சர்வதேச பொறிமுறை ஒன்றே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வால், உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவான வகையில் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். Audio Player 00:00 00:29 http://www.kuriyeed…
-
- 1 reply
- 314 views
-
-
பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக, காணாமல்போன தமிழ் உறவுகளுக்கு நீதிகோரும் போராட்டம்! [Saturday 2015-08-29 20:00] ஐ.நாவின் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணாமல்போனோருக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற் 30ம் நாளன்று இலங்கைத் தீவில் காணாமல் போன தமிழ் உறவுகளுக்கான நீதிகோரு கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் இக்கவனயீர்ப்பு போராடம் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இடம்பெறுகின்றது. உலக அளவில் இந்நாளையொட்டி பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு அனைத்துலக அமைப்புகளினாலும் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கைத்தீவின் தமிழர் தாயகப்பகுதிகளிலும் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளினது பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற…
-
- 3 replies
- 500 views
-
-
தனிநாட்டுக்கான போராட்டம் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து தனிநாட்டுக்கான போராட்டத்தை புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் முன்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கைச் செய்திகளை வழங்கும் தனியார் செய்திச் சேவை நிறுவனமான கொழும்பு நியூஸ் டுடே செய்திச் சேவையின் இணையத்தளத்தில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளை அமைப்புகள் ஒன்றிணைந்து தனிநாட்டுக்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.அதன் ஒரு கட்டமாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின…
-
- 0 replies
- 360 views
-
-
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார். வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம் செய்து வைத்துள்ளார். தனது திருமணநாளை முன்னிட்டே இந்த முன்னுதாரணமான காரியம் செய்துள்ளார். இன்று புலம் பெயா் நாடுகளில் பல வாழும் 100 வீதத்தில் நுாறு வீதத்தில் 95 வீதமானவா்கள் தமது குடும்பம் தமது உறவுகள் என வாழும் நிலையில் அன்னலவாக 5 வீதத்தினா் இப்படியான நல் உள்ளங்களும் இருப்பது மனதிற்கு ஆறுதல் எனக் கூறும் தாயக மக்கள். வெளிநாடு சென்றது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவாகளும் 5 வீதத்தினரே ஏனையவா்கள் எல்லாம் பாதிக்கப் பட்டவா்களின் கதையையே வெளிநாடுகளில் கூறி வதிவிடம் பெறுவது வழமை இதை யாரும் மறுப்…
-
- 6 replies
- 979 views
-
-
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உற்சாகமாக இருக்கிறார். மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளினூடே அவரைப் பார்க்கிறார்கள். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல சவால்கள் அவர் முன் நிற்கின்றன. ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலின்போது, இந்தச் சவால்களை அவரும் உணர்ந்திருப்பது புரிந்தது. நேர்காணலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே. இலங்கைக்குப் புதிய அரசியல் சட்டம் வகுக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள்; கடைசியாக 1978-ல் இயற்றப்பட்டது, அதிலும் உங்களுடைய பங்களிப்பு இருந்தது. அதற்கும் முன்னால் 1972. இதில் உங்களுக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது. இதை இயற்ற நீண்ட காலம் பிடிக்காதா? இலங்கை சுதந்திரக் கட்சி இதற்கு ஓராண்டு பிடிக்கும் என்று நினைக்கிறது. நாங்கள் (ஐக்கிய தேச…
-
- 0 replies
- 313 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருகிறது தமிழரசுக் கட்சி! - இலச்சினையற்ற அறிக்கையால் சர்ச்சை[Saturday 2015-08-29 20:00] புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் இலச்சினையின்றி ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும் அமைச்சுப் பதவிகளை ஏற்று கொள்ளவுள்ளது. …
-
- 1 reply
- 486 views
-
-
தனது பாராளுமன்ற மாதாந்த சம்பளம் அனைத்தும் அம்பாறை மாவட்ட கல்வி வளர்ச்சிக்கே !! எனக் கூறிய றொபின் என அழைக்கப்படும் கவீந்திரன் கோடீஸ்வரன் தமிழ் தேசியகூட்டமைப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்... தான் பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவாகி சென்றால் எப்படியான வேலைத்திட்டங்களை மேற்கொள்வேன் என்பதை ஏற்கனவே துண்டுப்பிரசுரம்மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தி இருந்தார். 1) தனது பாராளுமன்ற மாதாந்த முழுச்சம்பளத்தையும் அம்பாறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துவேன் 2) பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு. 3) தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு கல்விச்செலவுக்கான மாதாந்தக்கொடுப்பனவு 4) அரசியல் கைதிகளின் விடுதலை. 5) அரசாங்கத்தினா…
-
- 1 reply
- 713 views
-
-
-
- 1 reply
- 435 views
-
-
சர்வதேச விசாரணையைத் திசை திருப்பவே நிதியுதவி! - ஜேடிஎஸ் குற்றச்சாட்டு [Saturday 2015-08-29 20:00] போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் வகையிலேயே ஐ.நா. வின் மீள்குடியேற்ற நிதி அமைந்துள்ளதாக இலங்கையில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஊடகவியலாளர் அமைப்பு ஜே.டி.எஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஜேடிஎஸ் அமைப்பு கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றார்கள். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றத்துடன், சர்வதேச விசாரணை என்ற விடயம் பின்தள்ளப்பட்டு, உள்ளக விசாரணை என்ற புதிய விடயம்…
-
- 0 replies
- 377 views
-
-
சர்வதேச விசாரணை நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறது பிரித்தானியா! [Saturday 2015-08-29 20:00] இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை நிறைவடைந்து அதன் அறிக்கை அடுத்த மாதம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பட்டிலேயே பிரித்தானியா தொடர்ந்தும் இருக்கிறது. அதேநேரம் மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் பரிந்துரைகளையும் இலங்கை அரசாங்கம் அமுலாக்க வே…
-
- 0 replies
- 469 views
-
-
தென்னிலங்கை அரசியல் சமூகம் நேரடியாகவும் தனது முகவர்கள் மூலமாகவும் வேட்பாளர்களைக் களமிறக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைப் பறிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை எமது மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து தகர்த்தெறிந்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு மகத்தான வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். இதற்காக வடக்கு-கிழக்கு வாழ் சகல தமிழ் மக்களுக்கும் நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் குறிப்பாக எனது வெற்றிக்காகவும் பலநூறு இளைஞர்களும் யுவதிகளும் நண்பர்களும் தோழர்களும் கல்விச்சமூகத்தினரும் பொது அமைப்பைச் சேர்ந்தவர்களும் கடுமையாக உழைத்தனர். எனது வெற்றிக்கான …
-
- 11 replies
- 1.1k views
-