ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா தலைமையக முன்றலில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் உரிமை முழக்கத்துடன் ஒன்று கூடியுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=128417&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 615 views
-
-
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். “சிறிலங்காப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய – சிறிலங்கா உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைய, தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அது தான் நரேந்திர மோடி கொடுத்த ஆலோசனை. அந்த ஆலோசனையை சிறிலங்கா புரிந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.…
-
- 9 replies
- 803 views
-
-
இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயம் எதிர்பார்த்ததை போலவே அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைத்தீவுக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திரமோடியின் பயணம் பல்வேறு வகையில் முக்கியமானதாக அமைந்திருந்தது. இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்து பிராந்திய வல்லரசு என்ற பெரியண்ணன் அந்தஸ்தை நிலைநிறுத்தவேண்டிய தேவை இந்தியாவுக்கு எப்போதுமே இருந்துவந்தது. பிராந்திய ஒத்துழைப்பு என ஆரம்பிக்கும் இந்த உறவுநிலை பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கே எப்போதும் முன்னுரிமை கொடுத்துவந்தது. சிறிலங்காவைப் பொறுத்தவரை இந்தியாவை கையிற்குள் வைத்திருப்பதன் மூலமே சர்வதேசத்தை தனது கையிற்குள் கொண்டுவரலாம் என்பது தெரிந்தவிடயம். இந்தியாவின் கையை மீறி சர்வதேச …
-
- 1 reply
- 788 views
-
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர்மட்டக்குழுவினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்றிரவு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து அதிகாரப் பகிர்வு, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் என்பன உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். கிழக்கு மாகாணத்தில் விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவித்தல், தென்கிழக்கு, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பீடங்களை நிறுவதற்கும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் உதவி வழங்கள் போன்றவற்றுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைக்குமென்று தூதுக்குழுவினரின் வேண்டுகோள் சிலவற்றுக்கு பதிலளிக்கும் போது பிர…
-
- 3 replies
- 639 views
-
-
"அரசியல்வாதிகள் என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அத்துடன் சிலர் உயிர் அச்சுறுத்தலும் விடுத்து வருகின்றனர். என்னிடம் அமெரிக்கக் குடியுரிமை உள்ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலிகளின் ஆதரவாளர்கள் கொன்று விடுவார்கள் என்று முன்னாள் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; "நான் எந்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் என்னைக் கைது செய்யப்போகின்றனர் என அரசியல்வாதிகள் மிரட்டுகின்றனர். அத்துடன் என்னைக் கொலை செய்யப் போகின்றனர் எனவும் அவர்களில் சிலர் மிரட்டுகின்…
-
- 5 replies
- 977 views
-
-
குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று அங்கு பிறந்த ஆறு குழந்தைகளுடன் ஆறு இலங்கைப் பெண்களும் அந் நாடுகளில் கர்ப்பிணிகளான மூன்று பெண்களும் மார்ச் மாதம் முதல் ஆறு நாட்களில் இலங்கை திரும்பியுள்ளனர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி தெரிவித்தார். குவைத்திலிருந்து நான்கு குழந்தைகளும் சவூதி அரேபியாவிலிருந்து இரண்டு குழந்தைகளும் தாய்மாருடன் எடுத்து கொண்டு வரப்பட்டதுடன் சவூதி அரேபியாவிலிருந்து இண்டு கர்ப்பிணிப் பெண்களும் குவைத்திலிருந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். சகல குழந்தைகளும் ஆறு மாதங்களுக்கு உட்பட்டதாகும். இக் குழந்தைகளில் ஒன்று கடந்த பெப்…
-
- 0 replies
- 649 views
-
-
நல்லாட்சி என்ற பெயரில் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தும் நாட்டுக்கு இதுவரை எந்த நன்மையும் ஏற்படவில்லை என ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மிரிஜ்ஜவில என்ற பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கும் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள் மற்றும் அயோக்கியர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை அனைவரும் பொருளாதாரத்தில் புலி என எண்ணியிருந்தனர். எனினும் ரணில் விக்ரமசிங்கவிடம் எந்த பொருளாதார திட்டங்களும் இல்லை. கொழும்பு மக்கள் அவரை சரதியல் என்றே கூறுகின்றனர். ஒரு பக்கத்தில் வரிகளை அதிகரித்து அடுத்த பக்கத்திற்கு கொடுப்பதன் காரணமாக கொழும்பு மக்கள் அவ்வாறு கூறுகின்றனர். இதனால் அவரத…
-
- 0 replies
- 428 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் இருநாட்டு உறவில் புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்திய பிரதமரின் பாராளுமன்ற உரையை தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, பழமை வாய்ந்த ஜனநாயக முறை இலங்கையில் காணப்படுகிறது. 1835ல் அரசியலமைப்பு சபை இருந்தது. அதில் அங்கம் வகித்த ஆறுமுகம்பிள்ளை குமாரசாமியின் பரம்பரையில் வந்தவரே இன்று எமது மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கிறார். வெஸ்ட் மினிஸ்ட் முறை அமுல்படுத்தப்பட்ட நீண்ட வரலாறு எமக்கிருக்கிறது. மீண்டும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். எமது மொழி, கலாசாரம் என்பவற்றுக்கிடையில் நெருக்கம் காணப்படுகிறது. மன்னர் ஆட்சிக்காலம் முதல் பல்வேறு…
-
- 60 replies
- 3k views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வௌியிடுகையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நேற்று) பாராளுமன்றில் உரையாற்றுகையில் கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார். அவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கருத்துக்களை பரிமாறியிருந்தார். அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். அதன்போது இந்தியப்பிரதமர் இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் உறுதிபடத் தெரிவித்தார். அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்ப…
-
- 34 replies
- 2.7k views
-
-
தமிழ்மக்களின் வாக்குப் பலத்தை ஒஸ்திரேலியாவின் இரு பெரும்கட்சிகளுக்கு உணர்த்துவதற்கே நியுசவுத்வேல்ஸ் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதாக சுஜன் செல்வன் தெரிவித்தார். கிறீன் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் சுஜன், அரசியல் பிரவேசத்தின் மூலம் மக்களுக்கு சொல்லவிரும்பும் செய்தி, கிறின் கட்சியைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம், தமிழ்மக்கள் தவிர்ந்த மற்றை சமூகத்தவரின் ஆதரவு, தேர்தல் வெற்றிவாய்பு மற்றும் அகதிகள் விவகாரம் உட்பட பலவிடயங்கள் தொடர்பாக தமிழ்லீடருக்கு வழங்கிய நேர்காணலில் பதிலளித்துள்ளார். http://tamilleader.com/?p=47647
-
- 0 replies
- 598 views
-
-
உரிமைக்கான போராட்டம் எக்கட்டத்திலும் கைவிடப்படமுடியாதது. போராடுவோம்! இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தை தொடர்வோம்; போராடுவோம்! விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ, துரோகங்களால் துவண்டுவிடுவதோ அல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல. மாறாக, தடைகளைத் தகர்த்து விழ விழ விடாமுயற்சியுடன் எழுவது. தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும் செய்திகள் விரைவில் http://www.pathivu.com/news/38523/57//d,article_full.aspx
-
- 0 replies
- 413 views
-
-
பாரியளவில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மகிந்தவின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/news/38512/57//d,article_full.aspx நியானி: தலைப்பு திருத்தப்பட்டுள்ளது
-
- 4 replies
- 742 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமராட்சி கிழக்கிற்கான பணிமனையான நெய்தலகம் இன்று தாளையடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கட்சியின் அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா மற்றும் பா.உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், சயந்தன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், வடமராட்சி கிழக்கு மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாவீரரின் தாயார் மங்கள விளக்கேற்றியதை தொடர்ந்து நெய்தலகம் பெயர்பலகையினை பா.உறுப்பினர் …
-
- 1 reply
- 545 views
-
-
இந்தியாவின் தேவைக்கு இலங்கையில் அதிகாரத்தை பரவலாக்கவும் முடியாது. அந்நாட்டுக்கு எமது நாட்டின் இறையாண்மையை தாரை வார்க்கவும் முடியாது என கடுமையாக இந்தியாவை சாடும் முன்னாள் அமைச்சரும் சமசமாஜ கட்சித் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்குமென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்.பி. மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தம் இந்தியாவின் தேவைக்காக எம் மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டது. அந்த நாட்டைப் போன்று இங்கு அதிகாரத்தை பரவலாக்க முடியாது.எமது நாட்டுக்கென ஒரு அரசியல் வரையறை உள்ளது. அத…
-
- 1 reply
- 362 views
-
-
தமிழர்களின் முன்னெடுப்பான நிகழ்வுகள் இன்று கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட கனடிய மனிதவுரிமை மையத்துடன் இணைந்து பணியாற்ற ஐக்கியநாடுகள் அவையின் அமைப்புக்கள் விரும்பம் தெரிவித்துள்ளன. அதன் முன்மாதிரியான நிகழ்வாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் கனடாக்கிளை கனடிய மனிதவுரிமை மையத்துடன் [CHRV] இணைந்து 2015ல் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது. சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒன்றாரியோ சட்டசபையில் கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 22 அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும், 16ற்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், பற்றிக் பிரவுன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 483 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிற் கட்சியில் போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைத் தொழிற் கட்சியின் தலை வராக ஏ.எஸ்.பி.லியனகே திகழ்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதி யளிக்கப்படாவிட்டால், தமது கட்சியின் கீழ் அவரைப் போட்டியிடச் செய்யப் போவதாக லியனகே தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து பகிரங்கமாக அறி விக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னணி வர்த்தகரான லியனகே கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதிலும்இ முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவாகவே தேர்தல் காலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டி ருந்தார் என்பது …
-
- 0 replies
- 1.1k views
-
-
உள்ளகவிசாரணையே மக்களின் விருப்பம்; அதையே அரசு நடைமுறைப்படுத்தும் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா யுத்தக் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு எதிராக இலங்கை ஐக்கியப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். பிரிட்டனின் 'இன்ரநசனல் பிஸ்னஸ் ரைம்ஸி'ற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விசாரணை பொறிமுறையை முன்னெடுக்க முடியாது என வெளியாகும் கருத்துக்கள் இலங்கையை அவமானப்படுத்துவதாகவே மக்களும் அரசியல்வாதிகளும் கருதுகின்றனர். இலங்கை உள்நாட்டு விசாரணையையே முன்னெடுக்கும். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையிடம் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கோரும். சனல் - 4 தொடர்பாக சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்க…
-
- 1 reply
- 266 views
-
-
பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தால் மானிப்பாய் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கற்றுவரும் மாணவி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காணாமல் போயிருந்தார். பாடசாலையில் நடக்கவுள்ள விளையாட்டுப் போட்டிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த மாணவியை அவரது ஒன்று விட்ட சகோதரன் ஒருவர் ஓட்டோவில் அழைத்துச் சென்றிருந்தார் என்றும், இதன்பின்னர் மாணவி குறித்த தகவல் எதுவும் தெரியாத நிலை காணப்பட்டதாவும் கூறிப்பட்டது. இந்நிலையில் குறித்த மாணவி மயக்கமடைந்து அநாதரவாக யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையான வீதியில் கிடந்துள்ளார். அநாதரவாகக் கிடந்த மாணவியை அப்பகுதிக்கு சென்றவர்கள் கண்டு யாழ்ப்…
-
- 0 replies
- 405 views
-
-
ஐந்து நாள் அரசு முறை பயணமாக சீசெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி நள்ளிரவில் புதுடெல்லி திரும்பினார். முதலில் சீசெல்ஸ் சென்ற மோடி அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி 4 முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மொரீஷியஸ் சென்ற அவர், அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கை சென்றடைந்த அவருக்கு கொழும்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நேற்று தமிழர்களின் தாயகமான யாழ்ப்பாணத்திற்கு சென்று, தமிழ்…
-
- 2 replies
- 573 views
-
-
தமிழருக்கு ஒரு தீர்வு கிட்டுவதானால் நீங்கள் ஆகக் குறைந்தது எதை எதிர் பார்க்கிறீர்கள், என்னைப் பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பவை. 1.இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம். 2.காணி அதிகாரம். 3.பொலீஸ் மற்றும் சட்ட நிர்வாக அதிகாரம். 4.வரி ஏய்ப்பு செய்வதற்க்ஜான அதிகாரம். 5.வெளி நாட்டு முதலீடுகளை ஈர்பதற்கான உரிமை. இதை விட வேறு என்ன தேவை என உங்கள் எண்ணங்களை பகிரவும்
-
- 23 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு வருகை தந்து தாம் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விஜயங்களில் யாழில் மக்களிடம் வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வு தம்மை நெகிழவைத்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாசார முறைபடி, பால்பொங்கி வீடுகளை கையளித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்.. நான் இலங்கைக்கு வருகை தந்து இரண்டு தினங்களாக பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டேன். எனினும், தற்போது இந்திய மத்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் இங்கு நிர்மாணிக்கப்…
-
- 10 replies
- 908 views
-
-
கழிவு ஒயில் பீதியை அடுத்து குடாநாட்டில் போத்தல் தண்ணீர் பாவனை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதனால் சகல வர்த்தக நிலையங்களிலும் தண்ணீர் போத்தல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வலிகாமம் பகுதியில் ஆரம்பத்தில் வலி. தெற்கு பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் காணப்பட்ட கழிவு ஒயில் படலம் வலி. வடக்கு பிரதேசத்திற்கும் பரவியுள்ளதுடன் தற்போது வலி தென்மேற்கு, வலிகாமம் மேற்கு ஆகிய நான்கு பிரதேசங்களிலுமுள்ள பல கிணறுகளிலும் பரவியுள்ளது. கழிவு ஒயில் கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே கழிவு ஒயில் கலந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கழிவு ஒயில் கலந்த நீரை பாவிப்பதனால் கொடிய நோய்கள் ஏற்படக்கூடுமென்று தெரிவ…
-
- 3 replies
- 480 views
-
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளும் உரிமையுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்த கருத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளியிட்டு உள்ளதாக இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயத்தின் பின்னர் சிஎன்என்- ஐபிஎன்னிற்கு விசேடமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறன கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்பு நாடொன்று குறித்து அரசாங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள ஓருவர் கருத்து வெளியிடும் முறையிதுவல்ல,மீனவர்களை பொறுத்தவரை அனைத்து ஆழ்கடல் டிரோலர் படகுகளையும், வங்காள விரிகுடாவிற்கோ அல்லது அராபிய…
-
- 6 replies
- 452 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்பு விடுத்திருக்கிறார். வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனவே, இவர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்? என்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தவை வருமாறு: "புதிய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நாம் முக்கிய சில நடவடிக்கைகளை முன்ன…
-
- 0 replies
- 465 views
-
-
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கோரியுள்ளார். வெளிநாடு சென்றிருந்த சந்திரிகா நாடு திரும்பிய பின்னர், நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பற்றி விசாரித்துள்ளார். மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கில் நடைபெறும் கூட்டங்கள் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மஹிந்தவிற்கு அரசாங்கம் எவ்வாறான சலுகைகளை வழங்குகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்துள்ளார். இதன் போது பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மஹிந்தவின் பாதுகாப்பிற்காக கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதனை தெரிந்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்திய அவர் எனக்கு அவ்வளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை, மஹிந…
-
- 2 replies
- 488 views
-