Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரான்ஸ் பிரஜைகளான தமிழ்ச் சிறுமியும், தாயும் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் நேற்றுக் காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் விமானநிலையத்தில் பயணிப்பதற்கான சூட்கேஸ்களை ஒப்படைத்து விட்டு, போர்டிங் எடுப்பதற்கென அவர்களது கடவுச்சீட்டுக்களைக் கொடுத்தபோது விமான நிலையத்திலுள்ள புலனாய்வுப் பிரிவினரால் குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தாய் பகீரதி என்றும், மகள் பகல்வி (8 வயது) என்றும் தெரிய வந்துள்ளது. h…

    • 79 replies
    • 6.7k views
  2. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சாதாரண தரத்தில்கணிதப் பாடத்தில் சித்தியடையாதவர்களும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/02/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88

    • 20 replies
    • 1.7k views
  3. 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் வலுவாலன ஓர் அதிகாரப் பகிர்வு முறைமை அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமைய வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் இலங்கை தமிழர் விவகாரத்தில் காண்பித்து வரும் கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் பொருத்தமற்றது என்பதனை மோடி புரிந்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மாதிரியில் இலங்கையில் அதிகாரப் பகிர்வில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் வட மாகாணச…

    • 33 replies
    • 1.4k views
  4. மலையக மக்களை மறந்து இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையானது வேதனையளிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனையளிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வருந்துகிறேன். இது அவர், எமது சமூகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக நாம் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்ததுடன் அவரது உரையை கேட்பதற்காக நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தோம். ஆனால்,…

  5. போர்க் குற்றங்கள் தொடர்பான யுத்த சூனிய வலயம் (நோ பயர் சோன்) ஆவணப் படத்தின் சிங்கள மொழியாக்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கையளிப்பதற்கு கெலும் மக்ரே முயன்றபோது மைத்திரிபால சிறிசேன அதனைக் கண்டு கொள்ளாது காரில் ஏறிச் சென்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு சென்ற வேளை, சனல் - 4 ஊடக ஆவணப் படத் தயாரிப்பாளரான கெலும் மக்ரேயால் இயக்கப்பட்ட, இலங்கையின் இறுதிக் கட்டப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் அடங்கிய "யுத்த சூனிய வலயம்' (நோ பயர் சோன்) ஆவணப் படம் சிங்கள மொழியில் திரையிடப்பட்டது. ஆயினும் ஜனாதிபதி மைத்திரிபால இதனைப் பார்வையிடவில்லை. இந்த நிலையில், சிங்கள மொழியாக்க ஆவணப்…

    • 6 replies
    • 819 views
  6. போர்க் குற்றச்சாட்டுக்களின் பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கம் பின்நிற்கக் கூடாது. இலங்கை இராணுவத்தை குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாப்பது அவசியம் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் யுத்தத்திற்குப் பின்னராக நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை உள்நாட்டில் செய்யாதிருந்தமையும் சர்வதேசம் அவ்வாறானதொரு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கோரிய நிலைமையில் அதனை உதாசீனப்படுத்தியமையுமே இலங்கையின் கடந்த காலங்களில் இன ரீதியான மற்றும் சர்வதேச உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டது. இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சர்வதேசம் சுமத்தியுள்…

  7. இலங்கையில் கடந்த ஆண்டு சிறியளவிலான முன்னேற்றங்களுடன் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக, பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.2014ம் ஆண்டுக்கான மனித உரிமை நிலை தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுதந்திரமான கருத்துக்கூறல், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், கொலைகள், சித்திரவதைகள், வடக்கின் தமிழர்கள் மீதான கட்டுப்பாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது தாக்குதல்கள் என்பன தொடர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதித்துறை பலவீனப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்ட போதும் ஐக்கிய நாடுகள் விசார…

  8. நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளமை தொடர்பில் பரிசோதித்து அறியக்கூடிய 4000 என்ற நவீன கருவி அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என வடக்கு மாகாண சுற்றுச்சூலல் அமைச்சர் தெரிவித்தார். ரூபா 20 இலட்சம் பெறுமதிமிக்க இந்த நவீனகருவியை தான் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளது தொடர்பாக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. எனினும், தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால் ஆய்வு முடிவுகளைப் பெற…

  9. இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=510703915813206207

  10. ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, ஜனநாயகம் என்பவற்றைப் பெற்று வாழ வேண்டும். அதற்கு 13வது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இந்தியா எதிர்பார்க்கிறது. இவ்விடயங்களில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார். - இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை ஜனாதிபதிக்கு இடையில் இன்று காலை விசேட சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோ இலங்கைக்கு 28 வருடங்களின் பின்னர் விஜயம் செய்தமை எனக்கு பெருமையளிக்கிறது. இறுதியாக இந்திய பிரதமர் ஒருவர் அரசுமுறைப் பயணமாக 1987 ஆம் ஆண்டே இலங்கை வந்தார். இந்தக்கால இடைவெளிக்குப் பின்னர்…

  11. உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இன்று காலை இலங்கையை வந்தடைந்த மோடிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றன. அதன்போதே இரு நாடுகளும் முக்கிய 4 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன. அந்தவகையில், 1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம். 2.சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம். 3.இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம். 4.ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந…

  12. கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி MAR 13, 2015 | 1:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து வாகனப் பேரணியாக அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்பில் இன்று தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் மற்றும், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவு…

  13. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா நடுவராக வேண்டும் – மோடியிடம் வலியுறுத்துமாம் கூட்டமைப்பு MAR 13, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது தரப்பு நடுநிலையாளராக இந்தியாவின் தலையீடு அவசியம், என்று உணர்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்கா வந்தடைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். இதன்போதே, மூன்றாந்தரப்பு நடுவராக இந்தியா செயற்பட வேண்டும் என்று கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார…

  14. ‘உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது’ – ராஜீவைத் தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாய் MAR 13, 2015 | 1:49by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணம் குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் விரும்புகிறேன். அவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் அவர், எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய…

    • 0 replies
    • 553 views
  15. விடுதலைப்புலிகளது முன்னாள் பெண்போராளியொருவர் இன்று காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே குறித்த யுவதியான முன்னாள் பெண்போராளியினை கடத்தி சென்றுள்ளனர்.அவ்வாறு கடத்தப்பட்டவர் கைவேலி பகுதியினை சேர்ந்தவரான விசுவலிங்கம் வினோதினி(வயது 26) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்துள்ளார். இன்று காலை வழமை போலவே முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர்கள் தாக்கிய பின் தமது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றுள்ளனர்.மயக்கமுற்ற நிலையில் காலை வேளை குறித…

    • 9 replies
    • 995 views
  16. இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் மோடி உலங்குவானூர்தி மூலமே வருகைதரவுள்ளார்.அதற்கான ஒத்திகையினை இன்று பிற்பகல் இந்திய விமானப்படையினரும் இலங்கை விமானப்படையினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு உலங்குவானூர்தி மூலம் வருகைதரும் மோடி யாழ். மத்திய கல்லூரியின் மைதானத்தில் இறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=687613914212699690#sthash.zCQHKoWW.dpuf

    • 7 replies
    • 699 views
  17. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் பிரித்தானியா விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்ர ஜனாதிபதி தனது வாகணத்திலிருந்து இரங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வாழ்த்திய முறை மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே முன்றலில் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக காமன்வெல்த் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் தமிழ் இளையோர் அமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை …

  18. குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படாமல் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிடவேண்டும். எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரை இன்று பிணையில் விடுவித்தது. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஜெயக்குமாரிரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் …

    • 108 replies
    • 5.7k views
  19. சிறிலங்காவில் மத சுதந்திரம் எனும் கருப்பொருளில் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த உப மாநாடு இலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களுக்கே என்ற நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக ஜெனீவாத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா மனித உரிமைச்சபையில் வியாழன் (12-03-2015 )காலை இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டில், ஐ.நாவின் மத சுதந்திர விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி (special Rapportur) Mr Heiner Bielefeldt அவர்கள் பங்கெடுத்து கருத்துரை வழங்கியிருந்தார். இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரசின் உப செயலரும் கல்முனை நகரபிதாவுமாகிய முகமெட் நிசாம் காரியப்பர் அவர்களும் பங்கெடுத்துள்ளார். இஸ்லாமிய மக்களது வழிபாட்ட…

  20. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம், தமிழர்களுக்கு கிடைத்த அருமையான இறுதிச் சந்தர்ப்பம் ஆகும். மோடியின் வருகையின் போது, தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். ஆனந்த சங்கரியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 'தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியப் பிரதமர் மோடியின் வருகை உற்சாகமூட்டும் புதிய திருப்புமுனையாக அமைகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பல தடைகளும் சந்தர்ப்பங்களும் வந்து போனதை நாம் அறிவோம். அவற்றில் நாம், சில காரணங்களினால் நழுவவிட்ட சந்தரப்பங்களும் உண்டு. இன்று தென்…

    • 3 replies
    • 668 views
  21. சுப்பிரமணியம் பாஸ்கரன் பாலேந்திரன் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்திலிருந்து நீதிமன்றத்தினூடாக விடுவிப்பதற்கு அவரது தாயார் ஜெயக்குமாரி கிளிநொச்சிக்கு வருகைதர வேண்டும் என கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி கூறினார். விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவிப்பதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (12) மனுத்தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'விபூசிகாவின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்னமும் அவர் கிளிநொச்சிக்கு வரவில்லை. ஓமந்தையூடாக இங்கு வருவதற்கு அவருக்கு ஆள் அடையாள அட்டை தேவையாகவுள்ளது. அவரது அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை…

  22. நாளை கொழும்பு வரும் மோடிக்கு 2 விமானந்தாங்கிக் கப்பல்கள், 7 போர்க்கப்பல்கள் பாதுகாப்பு MAR 12, 2015 | 12:22by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக தனது இரண்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் மற்றும், 7 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சீஷெல்ஸ் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மொறிசியஸ் சென்றுள்ளார். அங்கிருந்து இன்றிரவு புறப்படும் அவர், நாளை அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். சிறிலங்காவில் அவர், இரண்டு நாட்கள் தங்கியிருப்பார். இந்த…

    • 0 replies
    • 483 views
  23. அமைச்சர் அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு MAR 12, 2015 | 11:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை வரும் 22 ஆம் நாள் முதல் மீண்டும், சேவையில் இணைத்துக் கொண்டு, அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அனுமதியை வழங்கியுள்ளார். நாடு இரண்டாக பிளவுபடுவதை தடுத்து, நாட்டைப் பாதுகாப்பதற்கு தலைமைத்துவம் வழங்…

    • 0 replies
    • 453 views
  24. இந்தியாவையும் விக்னேஸ்வரனையும் எதற்காகத் தாக்குகிறார் ரணில்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ MAR 12, 2015 | 6:25by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என ரணில் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை. இவ்வாறு ‘சிலான் ருடே’ நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள செய்திஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகம் ஒன்றுக்கு …

    • 0 replies
    • 276 views
  25. யாழ்ப்பாணத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக மாற்றும் செயற்றிட்டத்துக்கான நீர்த்தாங்கிகள் அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடிகாலமைப்புச் சபையின் சமூக அணி திரட்டல் விசேடத்தூதுவர் ரி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை (12), தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, ஆசிய அபிவிருத்தி வங்கி, பிரான்ஸ் நாட்டின் அபிவிருத்தி முகவர் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் 9,100 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், மருதங்கேணி - தாளையடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. கடல்நீரை நன்னீராக்கி அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.