ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
கடந்த காலங்களில் இடம்பெற்ற போரில் இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள்.அவ்வாறு போரினால் அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாக இடம் பெயர கூடாது என வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு கடற்கரை சார் சூழலியல் திட்டங்கள் குறித்த முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் தரை மயோசின் காலத்துச் சுண்ணாம்புப் பாறைகளாலானது. நொய…
-
- 1 reply
- 346 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் மூலமாக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ள தலைமன்னார் -இராமேஸ்வரம் படகுச்சேவைக்கு மீண்டும் புத்துயுர் கொடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இலங்கையில் இன மோதல் தீவிரமடைந்ததன் பின்னர் நிறுத்தப்பட்ட குறிப்பிட்ட படகுச்சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்தியா ஆர்வமாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமன்னாரில் படகுகள் நிற்பதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து இந்திய கப்பல்துறை அமைச்சு, இலங்கையின் வடபகுதி புகையிரத பாதை அமைப்பிளை முன்னெடுத்த ஐர்கோன் இன்டநசனல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளது. இராமேஸ்வரத்தில் அ…
-
- 0 replies
- 394 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளா் மன்னாா் விடுதலைப் போராட்டத்துக்காக தங்களை அர்ப்பணித்து தற்போது புனர்வாழ்வு பெற்று குடும்பங்களுடன் வாழும் முன்னாள் போராளிகளுக்கும், போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கும், அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கும் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பல்வேறு உதவித்திட்டங்கள் மேற்கொள்ளுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். -உதவித் திட்டங்களை வழங்குவதற்காக தற்போது தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.இதன் ஒரு கட்டமாக கடந்த 6 ஆம் திகதி முல்லைத்திவு புதுக்குடியிருப்பில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மாவீரர்களின் குடும்பங்க…
-
- 0 replies
- 329 views
-
-
மன்னார் மடு ரயில் நிலையத்திலிருந்து தலைமன்னார் வரையிலான பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10:55 மணியளவில் மடுவிலிருந்து பரீட்சார்தமாக புறப்பட்ட ரயில் 11:44 மணியளவில் தலைமன்னார் ரயில் நிலையத்தை அடைந்தது. இந்த நிகழ்வில் மன்னார் அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசபிரிய, யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் தட்சணாமூர்த்தி, இர்கோன் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேவேளை, மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரையான ரயில் பாதை புனரமைப்பு வேலைகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றிருந்தன. . மதவாச்சியிலிருந்து மடுவரை ஒரு பிரிவாகவும், மடு த…
-
- 0 replies
- 301 views
-
-
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய்ப்பகுதியில் முதற்கட்ட மீள்குடியேற்றம் இம்மாதம் இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் ஹரின் பிரிஸ் தெரிவித்தார். மீள்குடியேற்றம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. அதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கலந்துரையாடலை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மீள்குடியேற்றம் முதற்கட்டமாக வலி.கிழக்கு வளலாயில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது. அதன்படி 272 குடும்பங்கள் 232 ஏக்கர் நிலப்பகுதியில் குடியமரத்தப்படவுள்ளனர். எனவே அதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தும் பொருட்டு ந…
-
- 0 replies
- 304 views
-
-
முதல் முறையாக மொறிசியசிற்கு யுத்த கப்பலொன்றை வழங்கியுள்ள இந்தியா இலங்கைக்கு இரு யுத்தகப்பல்களை ஏற்றுமதி செய்யவுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திகளுக்கான இணையமைச்சர் ராவே இந்தெர்ஜித் சிங் இதனை கொல்கத்தாவில் குறி;ப்பிட்டுள்ளார். இலங்கை இரு கடலோர கண்காணிப்பு கப்பல்களை வழங்குமாறு எங்களை கேட்டுக்கொண்டுள்ளது. கோவாவில் அதனை தற்போது தயாரித்துக்கொண்டிருக்கிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மொறிசியசிற்கு கப்பலை வழங்கும் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கப்பல்களை இந்தியா முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கின்றது. வெளிநாடு எதனுடனும்,தொழில்நுட்ப ஓத்துழைப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleT…
-
- 0 replies
- 282 views
-
-
சிறிலங்காவின் உள்நாட்டு பொறிமுறை அனைத்துலக தரம் வாய்ந்தாக இருக்க வேண்டும் – ஐ.நா அதிகாரி MAR 11, 2015 | 1:06by கார்வண்ணன்in செய்திகள் தேர்தலை அடுத்து, நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கத்தக்க அனைத்துலக விதிமுறைகள், மற்றும் தரம்வாய்ந்த நம்பகமான, பொறுப்புக்கூறும் உள்நாட்டுச் செயல்முறை ஒன்றை உருவாக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. அண்மையில் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இந்தக் கருத்தை நேற்று வெளியிட்டுள்ளார். நியுயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மற்றும் ஒத்துழைப்புக…
-
- 1 reply
- 508 views
-
-
859f782c5ad8d52de41b046ce0576245
-
- 1 reply
- 454 views
-
-
மகிந்த நடத்தியது சர்வாதிகார ஆட்சி – அமெரிக்க உயரதிகாரியின் கருத்து MAR 11, 2015 | 0:09 by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீளமைப்பதற்கும், இனப்பதற்றத்தின் காயங்களை ஆற்றுவதற்கும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கொல்கத்தா நகரில், நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிராந்திய விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நீல் குரோமஸ், இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில், சிறிலங்காவில் நீண்டகாலமாக இருந்து வந்த சர்வாதிகார ஆட்சி தூக்கியெறியப்பட்டு புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து அங்…
-
- 2 replies
- 559 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் போர்க்குற்ற ஆவணப்படம் – மைத்திரிக்கு நெருக்கடி MAR 10, 2015 | 1:12by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது. பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் பேச்சுக்களை நடத்தவுள்ள நிலையிலும், நாளை பிரித்தானிய மகாராணி ஏற்பாடு செய்துள்ள இராப்பாசன விருந்திலும் பங்கேற்கவுள்ள நிலையிலும் இந்தக் காணொளி வெளியிடப்படவுள்ளது. இதனால் சிறிலங்கா பிரித்தானியா இ…
-
- 3 replies
- 544 views
-
-
கொடிகாமம் போக்கட்டி கிராமத்தில் இடம்பெற்ற பாடசாலை விளைபாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது......
-
- 0 replies
- 449 views
-
-
மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மினிஸ்டர் அபே முன்றலில் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, காமன்வெல்த் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் தமிழ் இளையோர் அமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் ஆட்சி மாறினாலும் ஆட்சியாளர்கள் மாறவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். முன்னைய அரசாங்கத்தின் இருந்த அதே தலைவர்களே புதிய அரசாங்கத்திலும…
-
- 2 replies
- 625 views
-
-
சீன நிறுவனங்களுக்கு இனி முன்னுரிமைச் சலுகைகள் கிடையாது – சிறிலங்கா நிதியமைச்சர் MAR 10, 2015 | 9:28by கார்வண்ணன்in செய்திகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் சிறிலங்காவில் வழங்கப்படாது என்று, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் என்ற ஹொங்கொங் நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திடம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த எந்த பதிவுகளோ, சாத்திய ஆய்வு குறித்த அறிக்கைகளோ, அரசாங்கம் அங்கீகாரம் அளித்தமைக்கான ஆவணங்களோ இல்லை. இவற்றை அவர்கள் செய்யத் தவறியதால் தான்,…
-
- 0 replies
- 437 views
-
-
சிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு ஊக்கமளிப்போம்- இந்திய வெளிவிவகாரச் செயலர் MAR 10, 2015 | 10:43 by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஊக்கமளிக்கும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “நல்லிணக்க செயல்முறைகளை ஊக்குவிப்பது எமது உண்மையான பங்காகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு சென்றிருந்த போது, வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்தனர். பல்வேறு அரசாங்க தலைவர்கள் வந்து இதுதொடர்பாக கலந்துரையாடினர். நாம் தொடர்ந்து அவர்களுக்…
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் - சுமந்திரன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள் காணொலியாக, - http://www.malarum.com/article/tam/2015/03/09/9001/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF…
-
- 66 replies
- 3.9k views
-
-
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹமோன்டியை லண்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, மனித உரிமை விவகாரங்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கருத்துரைத்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹமோன்ட், இலங்கை ஜனாதிபதியையும் வெளிவிவகார அமைச்சரையும் வரவேற்பதாக கூறினார். அத்துடன், இலங்கையுடன் மிக நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புகள் பேணப்பட்டு வருவதாகவும், புதிய அரசாங்கத்திற்கு பூரண உதவிகளை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 434 views
-
-
நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. மாறாக மிகவும் செல்வாக்கு வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளது வெளியுறவுத் துறை அமைச்சரின் எதையும் செய்ய முடியாத நிலையை காண்பிக்கிறது. ஒபாமா இந்தியா வந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சரை மேடையில் கூட அமரவிடவில்லை என ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா தெரிவித்தார். சுக்லாவின் பேச்சுக்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. நான் செல்வாக்குமிக்க வெளியுறவுத் துறை அமைச்சர…
-
- 3 replies
- 1.8k views
-
-
Channel 4 film director Callum Macrae who exposed Sri Lanka's alleged war crimes and took the famous picture of LTTE supremo Velupillai Prabhakaran's son eating a snack just before he was shot dead will release a new Sinhala version of his award winning documentary "No Fire Zone" in the premises of the House of Commons possibly souring Britain's relation with Sri Lanka. According to the Times of India, The launch will be attended by director Callum Macrae and will have the presence of British MPs—Labour MP Siobhain McDonagh, Conservative MP Lee Scott and others from parliament. The documentary was nominated for the prestigious Emmy award. India refused the film a censorsh…
-
- 0 replies
- 544 views
-
-
வடமாகாணம் இந்திய அரசால் எவ்வாறு கவனிக்கப்படுகின்றதோ, அதுபோன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடினார். இதற்கான சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதன்போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் சுகா…
-
- 28 replies
- 2.6k views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் இடத்தில் சம்பந்தனும், ரணில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிட வேண்டுமென்பதே எமது நோக்கம். அதற்கான முயற்சிகளையே இப்போது பங்காளிக்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மீண்டும் எமது ஆட்சியினை தக்க வைக்க வேண்டும். எமது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பதும் முன்னாள் ஜனாதிபதி அதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருப்பதும் கட்சியினை பலப்படுத்…
-
- 2 replies
- 666 views
-
-
மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 23 ஆம் தேதி மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்கிறார். அதிலும் குறிப்பாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் செல்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு செல்வது வரலாற்றில் முதல் தடவையாக அமைந்துள்ளது. மோடியின் தமிழர் பகுதிக்கான பயணம் பல்வேறு எதிர்பார்ப்புக்களை கிளப்பி விட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஆட்சி மாறி இருந்தாலும் இன்னமும் தமிழர் பகுதிகளில் இராணுவம் குடிகொண்டுள்ளது, இராணுவத் தேவைகளுக்காக காணி அபகரிக்கும் செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது, தமிழ்மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு குறித்து மைத்திரி அரசாங்கமும் பேச மறுத்து வருகின்றது. இந்த நே…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய ராஜ்ய சபாவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கருத்து தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்கள் சுட்டுக் கொலை செய்வதனை நியாயப்படுத்தினால் இரு தரப்பும் பரஸ்பர துப்பாக…
-
- 18 replies
- 1.4k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முயற்சித்த போதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனைத் தடுத்துள்ளார். அவரைக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்குப் பதிலாக ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரணில் அறிவுறுத்தினார் இவ்வாறு கொழும்பு ரெலிக்கிராப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு காலி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோத்தபாய ராஜபக்வை மூன்று நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக …
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ் அமைப்புக்களின் மீது மகிந்த ராஜபக்ச அரசினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு , இலங்கைக்கு பிரிட்டன் அழுத்தம் கொடுக்க வேண்டுமென உலகத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண.இமானுவெல் அடிடிகளார், பிரிட்டன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகார ராஜாங்கச் செயலாளர் பிலிப் ஹமென்டிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிட்டன் விஜயம் செய்துள்ள நிலையில் உலகத் தமிழர் பேரவையினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட சுமார் 30 அமைப்புக்களை கடந்த அரசாங்கம் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=127994&category=TamilNews&am…
-
- 0 replies
- 552 views
-
-
அணிசேரா நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் புதிய அரசின் வெளிநாட்டு கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மைக்கல் ஃபலோனை நேற்று சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். பொதுநலவாய தின விழாவில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரச குழுவினர், இலங்கை நேரப்படி நேற்றுமாலை 5 மணிக்கு அந்நாட்டு பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டனின் ஆதரவு இலங்கைக்கு அவசியமானது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் மக்களுக்காக தற்போதை…
-
- 0 replies
- 323 views
-