Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மொழியினால் பாராளுமன்ற நடவடிக்கைகள் நேற்றைய தினம் தடுமாறிப் போயிருந்த நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தடுமாறிப் போயிருந்தனர். நேற்றைய தினம் சபைக்குத் தலைமை தாங்கியிருந்த பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தனது பெரும்பாலான அறிவிப்பு மற்றும் கட்டளைகளை தமிழ் மொழியிலேயே பிறப்பித்திருந்தார். அத்துடன், இடைக்கிடையே ஆங்கிலம் மற்றும் சிங்களம் கலந்த அறிவிப்புகளையும் விடுத்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திகைத்து போயிருந்தனர். இந்நிலையில், சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல வினா விடைக்கான நேரம் ஆரம்பமானது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவை கேள்…

    • 0 replies
    • 426 views
  2. ருமேனிய ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஏழு இலங்கையர்களிற்கு கொரோனா – இலங்கையர்கள் பணிநீக்கம்! ருமேனியாவின் ஆடைதொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனைவரும் வேலைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவே குறித்த இலங்கையர்கள் வேலைக்கு செல்ல மறுப்பு தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ருமேனிய மக்களிற்…

  3. யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை! Dec 28, 2025 - 05:05 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடி…

  4. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என கூறியதாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழைச் சேர்ந்த பெண்ணெருவர் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் மதனிக்கு என்பவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கேகாலை பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்ய முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கேகாலை மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்…

  5. அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 1 மணிவரை நடந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில், கோவிந்தம் கருணா…

    • 2 replies
    • 383 views
  6. 07 Jan, 2026 | 05:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் எனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள், இல்லையேல் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது. ஒழுக்கமற்ற வகையில் பேசும் அவருக்கு பக்கம் என்னால் அமரமுடியாது என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூ…

  7. வெலிக்கடை சிறைக் கைதிகளின் கொல்லப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. படுகொலைப் படங்களை பிரசுரிப்பது ஊடக விதிகளுக்கு முரணானதாயினும் சிங்கள அதிகார வர்க்கத்தின் வக்கிரங்களை காட்டுவதற்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றன. Sri Lanka Opposition Calls Prison Deaths Massacre; photos show the way they killed see more photos below NEWS: Sri Lanka’s main opposition party described the deaths of 27 inmates after a prison riot as a “cold-blooded massacre” and demanded a parliamentary investigation. Authorities have said the prisoners died in a shootout. Mangala Samaraweera, a lawmaker for United National party, said that he had information that …

  8. 'கல்வீச்சு காட்டுமிராண்டித்தனமானது' -சண்முகம் தவசீலன் யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவுக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது உரும்பிராய் சந்நிதியிலும், மற்றய பேரூந்து சண்டிலிப்பாய்ப் பகுதியிலும் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறித்த சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை எமது மாகாணத்தில் உள்ள ஒருசிலரே செய்கின்றார்கள் என்றால் எமது …

  9. விவசாய நடவடிக்கைகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் . வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, மாமுனையைச் சேர்ந்த எண்மருக்கே இவ்வாறு வயரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி தொடக்கம் 7.30 மணிவரையிலேயே குறித்த சம்பவம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த கடற்படையை ஒத்த சீருடை தரித்த மற்றும் சிவில் உடையில் நின்றவர்களாலேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களது உடல்களில் பலத்த கண்டல்கள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல…

    • 0 replies
    • 646 views
  10. ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அனைவரும் ஈனத்தனமானவர்கள்: நடிகர் சத்யராஜ் [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 08:54 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அனைவரும் ஈனத்தனமானவர்கள் ஆவர் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று சனிக்கிழமை நடிகர்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்று நடிகர் சத்தியராஜ் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் யாரும் குண்டுவீசி கொல்லப்படவில்லை. எல்லோரும் சர்க்கரை நோய் போன்ற உடல்நலம் இல்லாமல்தான் இறந்து போயிருக்கிறார்கள். செஞ்சோலை என்கிற இடத்தில் பள்ளிக்கூடத்தின் மீது குண்டுவீசியபோது கூட போராளிகள் பதுங்கியிருந்ததால் குண்டு வீசினோம் என்று சிங்கள அரசு தெரிவித்தது. அதைக…

    • 0 replies
    • 676 views
  11. மட்டக்களப்பில் 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு 29 Jan, 2026 | 03:40 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம் அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதையடுத்து இவ் வீதியியை ஜேசி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடும்பணி புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதி பொதுமக்கள் பிரதேச சபையின் இந்த ச…

  12. கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (மேற்கு மாகாணம்) தேசபந்து தென்னக்கூன் தெரிவித்தார். "வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இல்லாதவர்கள் காவல்துறையில் பதிவு செய்ய வேண்டும்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.. கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் குறித்த தரவு தளத்தை பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கி பராமரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். "சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள், போதைப்பொருள், பாதாள உலக செயற்பாடுகளை அடையாளம் காணவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் …

    • 0 replies
    • 350 views
  13. வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம ச…

  14. மங்களவிற்கு நெருக்கமான பிக்கு மீது இனந் தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் : http://www.globaltamilnews.net/tamil_news....=2106&cat=1 தலதா மாளிகையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை வெளிகொண்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் பிக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் பலாங்கொட உடஹெல்லேபொல ஸ்ரீபோதி மாலகராயவின் விகாரதிபதி கொலன்னே ஸ்ரீஷாந்த விஜய தேரர் மீது நேற்றிரவு(11) இனந் தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12 .30 அளவில் தங்குமிடத்திற்கு வெளியில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, மறைந்திருந்த நபர் ஒருவர்,இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் தனது தங்குமிடத்திற்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டதாகவும் தெரிவி…

  15.  'வீரவசனங்களுக்கு இடமில்லை' பொருளாதார வர்த்தக மையம் வவுனியா மாவட்டத்துக்கு அரசாங்கம் வழங்குகின்ற விடயத்தில் தனிப்பட்ட அரசியலுக்கோ கட்சி பேதத்துக்கோ பிரதேசவாதத்துக்கோ கௌரவப் பிரச்சினைகளுக்கோ அல்லது வீரவசனங்களுக்கோ இடமில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வியக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பாரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கும் இந்த வர்த்தக மையம் விடயத்தின் பின்னணியை புரிந்து கொள்வது அவசியமாகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்ற பொழுது எமது பிரதேச மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அபிவிரு…

  16. பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம். adminFebruary 21, 2026 மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன் னெடுத்ததோடு,மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட தோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்…

  17. ராஜீவ் கொலைக்கு தடை - 600 மீனவர்களின் கொலைக்கு தடை இல்லையா? சிறிலங்காவிற்கு இராணுவத்துக்கு மத்திய அரசு உதவி செய்யக்கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்கு திகதி: 18.11.2008 // தமிழீழம் // [சோழன்] சிறிலங்கா இராணுவத்துக்கு, மத்திய அரசு உதவி செய்வதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ராணிபேட்டையை சேர்ந்த எஸ்.மோகனசுகுமார் பொதுநலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறிலங்கா இராணுவம் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை சுட்டு கொன்றுள்ளன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் அவர்களது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர். மத்திய அரசு இந்த விடயத்தில்…

  18. பிரதம நீதியரசருக்கே தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை அங்கு தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வுகிடைக்கும் 07 டிசம்பர் 2012 அருட்தந்தை சக்திவேல் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதம நீதியரசரே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை என்று கூறும் போது, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அழைக்கும் அந்த தெரிவுக்குழுவிலும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா? என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்புகின்றார். கடந்த 4ம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட யாழ் மாணவர்களை விடுவிப்பதற்கான அமைப்பினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அத்துடன் இலங்கையில் இரு…

  19.  பசிலுக்கு முதுகு வலி திவிநெகும திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முதுகு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/177453/பச-ல-க-க-ம-த-க-வல-#sthash.P8xMLjU8.dpuf

  20. (எம்.ஆர்.எம்.வஸீம்) சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் அதிகமானவர்கள் செயற்பட்டு வருகின்றனர். ஒருசிலரின் பொறுப்பற்ற இந்த செயலால் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார். கொரோனா தொற்று எச்சரிக்கை பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வராதநிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா தொற்று தாக்கம் குறைவட…

  21. அம்பாறை மாவட்டம் பொத்துவில் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற நேரடி மோதலில் 4 விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் . மேலும் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மு.பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளிள் சார்பாக நிலவன் என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸ் வட்டாரங்களிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  22. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ராஜபக்சர்கள், உகண்டா, தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் பின்னர் பெருந்தொகை பணத்தை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளிலுள்ள இலங்கை மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பல மில்லியன் டொலர்கள் பணமாக கிடைப்பதாக காட்டிக் கொள்ளப்படுகிறது. இந்த பணம் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக ராஜபக்ஷர்களால் காரணம் சொல்லப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது தவறான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பணம், வெளிநாடுகளில் வைப்பு செய்து மீண்டும், அதனை சட்டரீதியான பணமாக …

  23. அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை June 19, 2020 அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனைகாவல் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார். கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (…

  24. வவுனியா மருத்துவமனையில் கடைமையாற்றும் தமிழ் மருத்துவர்களை தொலைபேசியில் மிரட்டி கப்பம் வசூலிக்கும் முயர்ச்சியில் வவுனியாவில் இயங்கும் துணைப்படை ஆயுதக்குழுவொன்று முயர்ச்சித்து வருகின்றது. துணைப்படைக் குழுக்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், மற்றும் மேலதிக பணிநேரம் போன்ற விடயங்களை முன்னிறுத்தியும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனக்கோரியும் நேற்று புதன்கிழமை மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியாவில் மருத்துவர்கள், வைப்பக பணியாளர்கள், நீதித்துறையினர் என பலரையும் மிரட்டி, கப்பம் வசூலிக்கும் செயலில் வவுனியாவில் இயங்கும் துணைப்படைக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றமை பல தடைகள் நிரூபிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தண்டனைக்கு …

  25. யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் அச்சுறுத்தல்களை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்பாணத்தில் இடம்பெறும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில்லண்டனில் அடையாள உண்ணாநிலைப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓருங்குசெய்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை No. 10 Downing Street, Westminster, London பிரித்தானியப் பிரதமர்வாசல்தளத்தின் முன் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தாயக கவனயீர்ப்பு போராட்த்திற்கு புலம்பெயர் தமிழர்களின் தோழமையுணர்வினைத் தாயக மக்களுக்கு தெரிவிக்கவும் , போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், இக்கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.