Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படையினரைத் தமிழ்மக்கள் ஒருபோதும் மீட்பர்களாக கருதியதில்லை! - விவசாய அமைச்சர் ஐங்கரநேசன். [saturday 2014-10-04 08:00] இலங்கைப் படையினரை தமிழ்மக்கள் ஒருபோதும் மீட்பர்களாக கருதியதில்லை, தங்களது சொந்த நிலங்களில் நிலை கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவமாகவே கருதுகிறார்கள் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்ப…

  2. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி| கோப்புப் படம். மனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில், அண்மையில் ஐ.நா. பொதுச்சபை வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களில் வெளியாகின. இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா, இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை சற்று தளர்த்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது, அந்நா…

    • 3 replies
    • 1.1k views
  3. கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில், யாழ்ப்பாண மஹாஜனா கல்லூரி மாணவி ஒருவர் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். ஜெகதீஸ்வரன் அனிதா என்ற மாணவியே அகில இலங்கை தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்று சாதனையை படைத்துள்ளார். 2012ம் ஆண்டு தேசிய பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் அனோமா கருணாசேன என்ற மாணவி 19 வயதுக்கு உட்பட்ட கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில் 3.0 மீற்றர் பாய்ந்து சாதனை படைத்திருந்தார். இந்த ஆண்டு குறித்த சாதனையை அனிதா 3.32 மீற்றர் உயரம் பாய்ந்து முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=152443507803369752

  4. தமிழ்மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடிக்கிறது – பொ.ஐங்கரநேசன் வடக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டால் தமிழ்மக்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்கா தெரிவித்திருக்கிறார். இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேறவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரம் சொல்லவில்லை. தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுதான். ஆனால், தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறது என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட விவ…

  5. யாழில் உண்ணாவிரதம் இருந்த கட்சியினர் திருட்டுக்குற்றச்சாட்டில் கைது!? தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழ்.குடாநாட்டில் புதிதாக உருவாகியிருக்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்னும் கட்சியினரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு திருட்டு மின்சாரம் பெற்றதாகவும் பொலிஸார் குற்றம்சாட்டியிருக்கின்றனர். ஈ.பி.டி.பி அமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினராக இருந்து, பின்னர் திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜயகாந்த் என்பவர் முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி என்ற ஒன்றை உருவாக்கி அதன் செயலாளர் நாயகமாக இருக்கின்றார். இந்நிலையில் இவர் தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அதிகம் பேசுவதும…

    • 0 replies
    • 415 views
  6. யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆவது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் நடைபெற்றது. இந்தநிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கல்லூரியின் கே.கே.எஸ் வீதி நுழைவாயில்களினூடாக பிரார்த்தனை மண்டபத்துக்கு விருந்தினர்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் அங்கு விஜயதசமி நிகழ்வின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்த நிகழ்வில் …

  7. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தின் தமிழ் குடும்பங்களை சிறிலங்கா இராணுவம் அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. படுவான்கரை – பட்டிப்பலை – கச்சற்கொடி கிராமத்தில் உள்ள சுமார் 97 தமிழ் குடும்பங்கள் இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பில் இயங்கும் சிவில் அமைப்புகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் சிங்கள குடியேற்றங்கள் மௌனமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், கச்சற்கொடி கிராமத்திலும் சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி இராணுவத்தின் உதவியுடன் விவசாயம் செய்து வருகின்ற அதேநேரம், மீன்பிடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தமிழ் குடும்பங்களுக்கு விவசாயத்தில்…

    • 0 replies
    • 300 views
  8. "சஜின் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பதவி விலகினேன்":- இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் கிறிஸ் நோனிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனாவினால் நியுயோர்க்கில் வைத்து தாக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஏம்டீவி-எம்பி.சி நிறுவனங்களின் நியுஸ்பெர்ஸ்ட் செய்திச்சேவைக்கு அவர் அதனை தெரிவித்துள்ளார் சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தே பதவிவிலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112240/language/ta-IN/article.aspx

    • 2 replies
    • 952 views
  9. வணக்கம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பிரான்சில் பாரிசில் இயங்கி வந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது கடந்த 2014 யூலை மாதம் முதல் செப்ரெம்பர் வரை பணியகச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெற முடியாது போய் இருந்ததுஇ இதனால் மக்கள் உங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு எமது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் புதிய பணியக முகவரி:- CCT-F 260, RUE DU FAUBOURG SAINT MARTIN - 75010 – PARIS ,FRANCE. Métro / LINE 7 ( Louis Blanc ) - Bus ( 54 , 26 ) பணியக நேரம்:- காலை 9.30 முதல் மாலை 18.00 மணிவரை தற்பொழுது மேற்குறிப்பிட்ட முகவரியில் 01.10.2014 புதன்கிழமை முதல் எமது பணியகமானது மக்களினதும்இ உணர்வாளர்கள்இ மற்றும் உறுப்பினர்களி…

    • 0 replies
    • 327 views
  10. -ரஸீன் ரஸ்மின் முல்லைத்தீவு நந்திக்கடலில் தொடர்ந்தும் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்கள் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கிக் கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிலாப்பி, கெளிறு, மணல், மன்னா, கூறல் உள்ளிட்ட மீன்களே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமையுடன் ஐந்தாவது நாளாகவும் சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு கரையொதுங்கி வரும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து கறைத்துறைப்பற்று பிரதேச சபை …

  11. எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக் கிடைக்காது என்றும் சந்திரக் கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மாத்திரம் மாலை நேரத்தில் இலங்கையில் காணலாம் என்றும் வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திரக்கிரகணத்தை முழுமையாக காணலாம் என்று வானவியல் நிபுணர் அநுர சீ.பெரேரா தெரிவித்தார். இந்த சந்திரக்கிரணகம் காரணமாக, பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு 'ரெட் மூன்' …

  12. கறவை மாடுகளைத் தவிர வேறெந்த சொத்துக்களும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு இல்லையாம்! – நம்பச் சொல்கிறார் பசில். [Friday 2014-10-03 09:00] ராஜபக்ச குடும்பத்திற்கு கறவை மாடுகளைத் தவிர வேறெந்தச் சொத்துக்களும் கிடையாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நெஸ்லே நிறுவனம் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “என்னைப் போன்றே எனது தந்தையும் ஒர் பால் பண்ணையாளர். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் தோட்டங்கள், ஹோட்டல்கள் மற்றும் கம்பனிகள் காணப்படுவதாக சிலர் குற்றம்சுமத்தி வருகின்றனர். …

  13. தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - ஈசா:- சஜின் - நோனிஸ் மோதல் ராஜபக்ச அரசாங்கத்தின் வன் முறை வாழ்க்கைமுறையையும் பிரதிபலிக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சஜினால் தூதுவரை பலரின் முன்னிலையில் தாக்கமுடிந்தது என்றால் அதற்க்கு காரணம்- தான் அவ்வாறு நடந்துகொண்டாலும் தண்டனையிலிருந்து தப்பலாம் என சஜினிற்க்கு தெரிந்திருந்ததே. ராஜபக்சாக்களின் உலகில் ஒரேயொரு பாரிய குற்றம்மாத்திரமேயுள்ளது- அது விசுவாசமின்மை-அல்லது ராஜபக்சாக்களை எதிர்ப்பது. அதுவே அவர்களை பொறுத்தவரை குற்றச்செயலாகும்-அவாகளால் மன்னிக்க முடியாத விடயமும் அதுவே. ஏனைய குற்றங்கள் அனைத்தையும்,குற்றவாளிகள் தங்களுடைய விசுவாசிகளாக இருந்தால் ராஜபக்சாக்கள் மன்னிக்க தயாராகவுள்ளார்கள். சர்வதேச சமூகத்தின் அழுத்தம் க…

  14. ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதா? – 6ம் திகதி முடிவு செய்கிறது கூட்டமைப்பு. [Friday 2014-10-03 08:00] வடக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து வரும் 6ம் திகதி முடிவு செய்யப்படவுள்ளது. எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் வட பகுதிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பல்வேறு செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வுகளில் வட மாகாண முதலமைச்சர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்தே வரும் 6ம் திகதி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த கூட்டமைப்பின…

  15. கே.சஞ்சயன் 'பர்மாவின் பின்லேடன்' என்று வர்ணிக்கப்படும், மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான அஸின் விராது தேரருக்கு, இலங்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பு வெளியுலகில் கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது. சர்வதேச ஊடகங்களில் அஸின் விராது தேரருக்கு இலங்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் அவரது உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. பொது பல சேனா அமைப்பு கடந்த 28ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அஸின் விராது தேரர் இலங்கை வந்திருந்தார். அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அறிந்து முஸ்லிம் அமைப்புகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அவரது வருகை இலங்கையில் இன ரீதியான பதற்றத்தை ஏற்படுத்துமென்று சுட்டி…

  16. மீனவரின் தாடியை வெட்டி விட்டார் அமைச்சர் ராஜித சேனாரத்ன! [Thursday 2014-10-02 19:00] மீனவர்களுக்கு இறங்குதுறையொன்று நிர்மாணிக்கப்படும் வரை தனது தாடியை வெட்டமாட்டேன் என்று கடந்த 9 வருடங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரின் ஒருவரின் தாடியை மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வெட்டினார். தெல்வத்த, பெராலிய பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மீனவர், தனது போராட்டத்தை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தார். அந்தப் பிரதேசத்தில் இறங்குதுறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று மீன்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, குறித்த மீனவரை சந்தித்த அமைச்சர், இறங்குதுறை அமைப்பதான தனது உறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்…

  17. பருத்தித்துறையில் மீண்டும் மகாத்மா காந்தி சிலை! [Friday 2014-10-03 09:00] பருத்தித்துறையில் மகாத்மா காந்தி சிலை நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. பருத்தித்துறை நகர மத்தியில் நவீன சந்தைப் பகுதியில் அமைந்திருந்த மகாத்மா காந்தி சிலை போரின் போது படையினரால் அழிக்கப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்ட புதிய சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. நகர சபைத் தலைவர் சபா. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதகரத்தின் பிரதி துணைத் தூதுவர் தட்சணாமூர்த்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிலையை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இந்த விழாவில் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த.ஜெயசீல…

    • 2 replies
    • 590 views
  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்த சந்திப்பு நடத்தப்படவிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த சந்திப்பு நடத்தப்படவில்லை. எதிர்வரும் வாரத்தில் கொழும்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. அதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தமிழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் காணி மற்றும் பாடசாலை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை…

    • 1 reply
    • 825 views
  19. மொழிபெயர்ப்புத் தவறுகளால் ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கையிழப்பு! – ஏஎவ்பி [Friday 2014-10-03 09:00] காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது மொழிபெயர்ப்பு தவறுகள் ஏற்பட்டுள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி, ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணையில் ஆங்கிலத்தில் பேசும் அதிகாரிகள் தமிழ் பேசும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வாக்குமூலங்களை பெறுகின்றனர். இதன்போது மொழிபெயர்ப்புக்காக நியமிக்கப்படுகின்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை சரியாக மொழிபெயர்க்கவில்லை என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. உதாரணமாக. போரின் போது ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றனவா? என்று ஆங்கிலத்தில் ஆணைக்குழுவினர் பாத…

  20. வடக்கில் அனைத்தையும் இராணுவம் கண்காணிப்பது உண்மை தான்! – ஒப்புக்கொள்கிறார் கிளிநொச்சிப் படைத் தளபதி. [Thursday 2014-10-02 19:00] வடக்கில், இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதை மக்கள் எதிர்க்கவில்லை என்றும், இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இராணுவத்தினர் வட மாகாணத்தில் இருக்க வேண்டும் என்றே மக்கள் வாக்களிப்பாளர்கள் என்றும் கிளிநொச்சி இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கைப் பொறுத்தவரையில் மக்களுக்கு தெரியக் கூடிய வகையிலேயே உளவு மற்றும் புலனாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …

    • 1 reply
    • 770 views
  21. தென்னமரவாடி தமிழ் மக்களின் பூர்வீக வயல் காணிகளில் பலவந்தமாக பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு அக்காணியை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடம் முறையிட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தென்னைமரவாடிக் கிராமத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டனர். இம்மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஆராயும் பொருட்டு இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி. தண்டாயுதபாணி தெரிவித்தார். இதன்போதே மேற்படி கிராம மக்கள் இம்முறைப்பாட்டை தெரிவித்தனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே. ஜனார்த்…

  22. தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடிய இலங்கை அரசை எதிர்த்து புதுக்கோட்டை தோப்புக்கொல்லை முகாமிலுள்ள இலங்கைத் தமிழர்கள், கறுப்புக்கொடி ஏந்தி இன்று(02) போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 27ஆம் திகதி, ரூ.100 கோடி இந்திய ரூபாய் அபாரதமும் 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தண்டனைக்கு இலங்கை அரசு ஆதரவு தெரிவித்ததாக செய்தி வெளியாகியது. இந்நிலையில் தோப்புக்கொல்லை முகாம்வாசிகள், புதன்கிழமை காலையில் ஒன்று திரண்டு கறுப்புக்கொடிகளை ஏந்தி, தமிழக முதல்வருக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பா…

  23. நவம்பரில் வடமாகாணசபை மகிந்தவை சந்திப்பதா? முடிவு சம்பந்தர் கையில்!! PRINT EMAIL எதிர்வரும் 11,12,13 ம் திகதிகள் சிறிலங்கா அரசஅதிபர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நிலையில் அவர் பங்கெடுக்கும் நிகழ்வுகளில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கெடுப்பதா இல்லையா என்பது பற்றி ஆராயும் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனது காரியாலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தனர். எனினும் இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கிய சம்பந்தர் அவருடனான சந்திப்புகள் அல்லது நிகழ்வுகளில் கலந்துகொள்வது தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்கவுள்ளார். நாடாளுமன்…

    • 5 replies
    • 555 views
  24. முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்மட்டக் குழுவின் இன்றைய கூட்டம். கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண அவைத் தலைவர், மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். கூட்டமைப்பைப் பதிவு செய்தல், கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், மாகாண சபையின் தற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.